Tuesday, January 13, 2009

பொங்கல் வாழ்த்துக்கள்

ஞாயிறு போற்றுதும் ! ஞாயிறு போற்றுதும் !

ஞாலம் முழுதும் ஞானம் பொங்கிட வந்தது இந் நாள் !,

முழுப்பெரும் ஞானம் பூத்திட ,ஆதியில் அமர்ந்த மாயிருள் நீங்கிட வந்தது முதல் "போகி" ,
போகிதனில் போன மாசெல்லாம் பெற்ற இடம் தனில் பொங்கியது புதுப் புனல் ,"பொங்கலேனப்"பெயர்பெற்றே !,
வந்தது புதுப்புது அறிவெல்லாம் , மாறியது வாழ்க்கைபாதை ,

பாதை மாறியது ஞாயிறுக்கு மட்டுமா ?நமக்கும் தானே !
தை பிறந்தால் வழியுன்று புதிதாய் பிறக்குமென்று தைக்கு காத்திருக்கும் தரணியெல்லாம் , இது நம் தமிழ்ர்க்கு தலைமுறை வழக்கமன்றோ ?
வளரட்டும் புதிய பட்டறிவு ! பிறக்கட்டும் புதியப் பாதை !

வளம் தான் பெற்றவுடன் , தன்னை அடுத்துள்ள ஆநிரை செல்வம் அதை பேணிட ஒரு" மாட்டுப் பொங்கல்" ।


மாடு மட்டுமா செல்வம் , தான் அறிந்த மனிதர்களும் செலவம்தானே !அதற்க்கு ஒரு பொங்கல் "காணும் பொங்கல்" !

கண்டிடுவோம் நட்புதனை , பெருக்கிடுவோம் அதன் வலயம் தனை !
மெயயறிவுடன் மேதகு வாழ்வு கிட்டிட , மேன்மையுறு தமிழ் தழைத்திட ,வாழ்தி ! நீ வாழ்தி ! நீ வாழ்தி ! வாழிய அகிலமெல்லாம் ।!அன்புடன் ,ஏ। சுகுமாரன்


No comments: