Tuesday, August 26, 2008

தமிழ் செய்தி ஆக் 26

காங்கிரஸ் கூட்டணியில் விஜயகாந்துக்கு வாய்ப்பு ! ?: தங்கபாலு நம்பிக்கை !! ஏ.சுகுமாரன்
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசியபோது காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட மதச் சார்பற்ற கட்சிகள் சேரும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் அமைதியும், வளர்ச்சியும் நிலைக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம். தமிழகத்துக்கும் இது பொருந்தும். தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வலுப்பெறும். பாமக உள்ளிட்ட கட்சிகளிடையே தற்போதுள்ள கருத்துவேறுபாடுகள் விரைவில் நீங்கிவிடும். தேர்தல் நேரத்தில் தேமுதிக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளும் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இணைய வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், காமராஜரின் திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இடம் பெயர்ந்த இடதுசாரிகள்: மக்களைக் கரைசேர்க்கும் கப்பலாக காங்கிரஸ் உள்ளது. ஆனால், காங்கிரûஸ மூழ்கும் கப்பலாக தவறாக நினைத்த இடதுசாரிகள் கடலில் குதித்து விட்டனர். அவர்கள் மூழ்கிக் கொண்டிருப்பது அவர்களுக்கே தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியை தோல்வியுறச் செய்வதற்காகவே பாஜகவும், இடதுசாரிகளும் இணைந்து செயல்படுகின்றனர். எனினும், மதச்சார்பற்ற கட்சிகள் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து ஆதரிக்கின்றன. இடதுசாரிகள் தற்போது இடம் பெயர்ந்து சென்று விட்டனர். மேற்கு வங்கத்தில் பேரவைத் தேர்தல் கருதியே இடதுசாரிகளின் செயல்பாடு உள்ளது. இது வெறும் பாவனையே. 3-வது அணி கற்பனையே!: இடதுசாரிகள் உள்ளிட்ட 3-வது அணி என்பது வெறும் கற்பனையே. எப்போதுமே அந்த அணி சாதித்தது எதுவும் இல்லை. மீண்டும் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும். என்றார் தங்கபாலு

உஷார் ! செப்.15 முதல் ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் கிடையாது ! நேரம் காலை 6 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே - முகவர்கள் சங்கம் முடிவு: ஏ.சுகுமாரன்
சேலத்தில் திங்கள்கிழமை நடந்த தமிழ்நாடு பெட்ரோல் முகவர் சங்க மகாசபைக் கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.கண்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்கள் செயல்படாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக சென்னை போன்ற நகரங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகளவில் டீசலை கொள்முதல் செய்து வருகின்றன. தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக ரிலையன்ஸ், ஷெல், எஸ்ஸôர் போன்ற நிறுவனங்கள் தங்களது பெட்ரோல் விநியோகத்தை நிறுத்தி விட்டன. இதன் காரணமாகவும் அதன் வாடிக்கையாளர்கள் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த பெட்ரோல் நிலையத்துக்கு வரத்தொடங்கியதால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் நிறுவனங்கள் கடந்தாண்டு வழங்கிய அதே அளவையே நடப்பாண்டும் வழங்கி வருகின்றன. நுகர்வுக்கு ஏற்றவாறு பெட்ரோல், டீசலை அதிகரித்து வழங்க மறுத்து வறுகின்றன. இதன் காரணமாக பெட்ரோல் நிலைய முகவர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் விதத்தில் கேரளத்தில் உள்ளதுபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதுமுள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக வார நாள்களில் காலை 6 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பெட்ரோல் நிலையங்கள் செயல்படும். எண்ணெய் நிறுவனங்கள் போதிய அளவு டீசல், பெட்ரோல் ஆகியவற்றை வழங்காததால் தவிர்க்க முடியாத சூழலில் இம்முடிவை எடுத்துள்ளோம். என்றார்.
மறைமுகமாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த திட்டம் ! ஜெயலலிதா தகவல் ஏ.சுகுமாரன்
.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் பெட்ரோலிய பொருட்களின் விலைகளை மத்திய அரசு மறைமுகமாக உயர்த்துவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார் மேலும் கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கு மீண்டும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டீசலுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்க வேண்டியிருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக விவசாய உற்பத்தி, தொழில் வளம் என அனைத்து வளங்களும் குன்றிப் போயுள்ளன. மீனவர்கள் தங்கள் படகுகளில் மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து, எண்ணை நிறுவனங்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவிதமான பயனும் இல்லை.எண்ணை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தலைமைச் செயலாளர் "டீசல் தட்டுப்பாட்டிற்குக் காரணம் மின் பற்றாக்குறையே'' என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும், மின்சாரப் பற்றாக்குறை காரணமாக, தகவல் தொழில்நுட்பம் உட்பட, அனைத்துத் துறைகளைச் சார்ந்த நிறுவனங்களும் 24 மணி நேரமும் இயங்க டீசல் தேவைப்படுகிறது என்றும், இதன் விளைவாக டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் தலைமைச் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.சாதாரண டீசலுக்கு தட்டுப்பாட்டை உருவாக்கினால், பிரீமியம் டீசலை அதிகம் விற்கலாம் என்ற நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் புகார் கூறுகின்றனர். கச்சா எண்ணையின் விலை ஒரு பேரலுக்கு 35 டாலர் அளவுக்குக் குறைந்திருக்கும் இந்த வேளையில், இதுபோன்ற செயலில் மத்திய அரசு ஈடுபடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற முயற்சிகளில் எண்ணை நிறுவனங்கள் ஈடுபட்டால், இது மேலும் விலைவாசி உயர வழிவகுக்கும்.என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஒரிசாவில் பயங்கரம ! 2 பேர் எரித்துக் கொலை; பாதிரியாருக்கு பலத்த தீக்காயம்! ஏ.சுகுமாரன்
.ஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் ஜலஸ்பேட்டாவில் உள்ள ஆசிரமத்துக்குள் கடந்த சனிக்கிழமை இரவு, ஆயுதம் தாங்கிய மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் அங்கிருந்த விசுவ இந்து பரிஷத் தலைவர் சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இக்கொலையை கண்டித்து, விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பினர், வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், பதட்டம் மிகுந்த கந்தமால் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி கொலையை கண்டித்து, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் நேற்று 12 மணி நேர பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு பா.ஜனதாவும் ஆதரவு தெரிவித்தது. இதையொட்டி, ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. பர்கார் மாவட்டத்தில் புட்பாலி என்ற இடத்தில் கிறிஸ்தவ அமைப்பு நடத்தி வரும் அனாதை ஆசிரமத்துக்கு ஒரு மர்ம கும்பல் தீவைத்தது.
இதில் அங்கிருந்த ஒரு பெண், தீயில் கருகி பலியானார். ஒரு கிறிஸ்தவ பாதிரியார் பலத்த தீக்காயம் அடைந்தார். அவர் பர்காரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த 20 குழந்தைகள் உயிர் தப்பின. பலியான பெண்ணைப் பற்றிய அடையாளம் கண்டறியப்படவில்லை. அனாதை ஆசிரமத்தில் இருந்த மரச்சாமான்களையும் கும்பல் அடித்து நொறுக்கியது.
இதற்கிடையே, சுட்டுக் கொல்லப்பட்ட சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதியின் உடல், ஜலஸ்பேட்டா ஆசிரம பள்ளியில் இருந்து சாகபடாவில் உள்ள அவரது ஆசிரமத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. முன்னதாக, அவரது உடலுடன் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் நடந்து சென்றனர். அப்போது அவர்களில் பலர் வன்முறையில் ஈடுபட்டனர்.
வழியில் தென்பட்ட தேவாலயங்களுக்கு தீவைத்தனர். கிறிஸ்தவ பள்ளிகளையும், வீடுகளையும், கடைகளையும், போலீஸ் சோதனை சாவடிகளையும் அடித்து நொறுக்கினர். 12 தேவாலயங்களும், 40 வீடுகளும் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறையை தடுக்க முயன்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.பந்த்தையொட்டி, தலைநகர் புவனேஸ்வரத்தில் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பினர், முக்கிய சாலைகளில் டயர்களை எரித்து, போக்குவரத்தை தடை செய்தனர். இதனால் பஸ், டாக்சி, ஆட்டோக்கள் ஓடவில்லை. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. .. கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.

ரிலையன்ஸ் புதிய பிரிபெய்டு ஜாது 135 பேக் திட்டம் ! சிறிய நிறுவன உபயோகிப்பாளருக்கு லாபம் !
ஏ.சுகுமாரன்
சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், சிறு மற்றும் நடுத்தர நிறுவன செல்போன் வாடிக்கையாளர்களுக்காக பிசினஸ் ஜாது 135 பேக் என்ற பிரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனத்தின் தமிழகப் பிரிவு தலைமைச் செயல் அதிகாரி அஜய் அவஸ்தி நிருபர்களிடம் கூறியதாவது:
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக பிசினஸ் ஜாது 135 பேக் என்ற பிரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்கிறது.
மாதம் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம்வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்காக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் இணைந்து கொள்ள விரும்புவோர் மாதாமாதம் ரூ.135க்கு ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். 5 பேர் கொண்ட ஒரு நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் இதில் இணைந்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் அழைத்துக்கொள்ளும் அழைப்புகள் அனைத்தும் இலவசம். இதர செல்போன்கள் மற்றும் லேண்ட் லைன் போன்களுக்கு அழைப்பு விடுத்தால் ஒரு நிமிடத்திற்கு 49 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும்.
பிசினஸ் ஜாது 135 திட்ட வாடிக்கையாளர்கள் இதர ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு விடுக்கும் அழைப்புளும் இலவசம்தான். அதேபோல டாப் அப் ரீசார்ஜ் செய்யும் தொகை முழுவதையும் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பேசலாம். இத்திட்டம் சென்னை உட்பட தமிழக வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பொருந்தும்.
இத்திட்ட வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் கட்டணத்தில் 35 சதவீதம்வரை சேமிக்க முடியும்.
தற்போது தமிழகத்தில் 40 லட்சத்து 50 ஆயிரம் வாடிக்கையாளர்களை ரிலையன்ஸ் பெற்றுள்ளது. இதில் 92 சதவீதம்பேர் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள். தமிழகத்தில் 90 சதவீத கிராமங்களில் ரிலையன்ஸ் சேவை வழங்கப்படுகிறது.
தற்போது மாநிலம் முழுவதிலும் 1400 இடங்களில் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

Monday, August 25, 2008

செய்திகள் ஆக்ஸ் 25 மணி ௭.௪0 அம்

ஸ்ரீபுரம் பொற்கோயில் முதல் ஆண்டு நிறைவு விழா! கோலாகலமான ஆன்மிக ஊர்வலம் !! ஏ.சுகுமாரன்
ஸ்ரீபுரம் பொற்கோயிலின் முதலாம் ஆண்டு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக வேலூரில் நடந்த ஆன்மிக ஊர்வலத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். உலக மக்கள் அனைத்து வளங்களும் பெற்று அமைதியாக வாழ சிறப்பு யாகங்கள் காலை 8 முதல் மாலை 4 மணி வரை மண்டித் தெருவில் நடைபெற்றது. இதில் 50 வேத விற்பன்னர்கள் யாகம் நடத்தினர். மாலையில் பக்தர்கள் பேரணி: மாலை 4 மணிக்கு யாக சாலைக்கு ஸ்ரீசக்தி அம்மா வருகை தந்து அருளாசி வழங்கினார். பிறகு வேலூர் மண்டித் தெருவில் இருந்து யாக கலசங்களுடன் ஆன்மிக ஊர்வலம் புறப்பட்டது.
ஊர்வலத்தில் இடம்பெற்ற மயில் வாகனத்தில் ஸ்ரீசக்தி அம்மா அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
9 யானைகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலத்தின் முன்பு செல்ல, கலசம், முளைப்பாரி, தீச்சட்டிகள் ஏந்திய பெண்கள் பின்தொடர்ந்தனர். அலங்கரிக்கப்பட்ட 9 குதிரைகள், 9 ஒட்டகங்கள், கரகாட்டம், மயிலாட்டம், கொக்கலியாட்டம், சிலம்பம், பறையிசை ஆகியன இடம்பெற்றன. பேண்டு வாத்தியத்துக்கு ஏற்ப நடனமாடியபடி குதிரை ஒன்று ஊர்வலத்தில் பங்கேற்றது. சிங்கப்பூரில் பிரபலமான சிங்க நடனம் ஊர்வலத்தில் இடம்பெற்றது. நமது நாட்டின் கலை, கலாசாரம் பண்பாட்டை விளக்கும் வகையில் பரதநாட்டியம் (தமிழ்நாடு), குச்சுப்புடி (ஆந்திரம்), யட்சகானம் (கர்நாடகம்), கதகளி (கேரளம்), கதக் (உ.பி.), ஒடிசி (ஒரிசா), மணிப்புரி (மணிப்பூர்), பாங்கரா (பஞ்சாப்) உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் நடனமாடிச் சென்றனர். கிராமிய கலைகளை சிறப்பிக்கும் வகையில் பம்பை, உடுக்கை, சிலம்பு, சிலம்பாட்டம், கரகாட்டம், கோலாட்டம், பொய்க்கால் ஆட்டம், காவடி, நாகசுர கலைஞர்கள், திருமுறை பாராயணமும், வேதபாராயணமும் ஊர்வலத்தில் இடம்பெற்றன. தசாவதாரம், அஷ்டலட்சுமி, மும்மூர்த்திகள், அன்னை நாராயணி ஆகிய திருஉருவங்களின் அலங்காரத்தில் ஸ்ரீநாராயணி வித்யாலயா பள்ளிக் குழந்தைகள் அலங்கார வாகனத்தில் வந்தனர். சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஊர்வலம் மண்டித் தெருவில் இருந்து பழைய பஸ்நிலையம், ஆபீஸர்ஸ் லைன் வழியாக ஸ்ரீபுரத்தை அடைந்தது. நிறைவாக அன்னை ஸ்ரீலட்சுமி நாராயணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சாலையில் இருபுறமும் பக்தர்கள் திரளானோர் காத்திருந்து ஆன்மிக ஊர்வலத்தை கண்டு களித்தனர்.
"காங்கிரஸ்சா மூழ்கிய கப்பல் ? தேர்தல் முடிவில் தெரியும்: ஜி.கே. வாசன் ஆவேசம்-- ஏ.சுகுமாரன்
"காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்; அதில் திமுக பயணம் செய்கிறது' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் என். வரதராஜன் தெரிவித்தக் கருத்துக்கு ஜி.கே. வாசன் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டிஅளித்தார்.
மூழ்கும் கப்பல் என காங்கிரûஸ குறிப்பிட்டுள்ள மார்க்சிஸ்ட் மூழ்கி, கவிழ்ந்த கப்பல். நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்ததன் மூலம், மக்களின் நம்பிக்கையை இழந்த கட்சிகளாக இடதுசாரிக் கட்சிகள் செயல்படுகின்றன.
ஆட்சியில் பங்கு... திமுக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும் என தொண்டர்களின் கோஷம் தற்போது அதிகரித்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி எப்போதுமே தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. தற்போது தீவிரமாக எழுந்துள்ள இந்த கோஷங்கள் குறித்தும் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு எடுத்துக் கூறியுள்ளோம். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி என்பதே காங்கிரஸின் லட்சியம்.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளன.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 2007-2008-ம் ஆண்டில் 3.4 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளன.
ரூ.71 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பாரத் நிர்மான் திட்டத்தின் கீழ் 49,250 வீடுகளும், கடந்த 4 ஆண்டுகளில் 2.4 லட்சம் பள்ளிகளும் கட்டப்பட்டுள்ளன. மத்திய அரசு சார்பில் 8 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் தேர்தலில் இது வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார்.
மக்களவைத் தேர்தல் வரும்போது, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை ஆதரிக்கும் ஒத்தக் கருத்துள்ள கட்சிகள் எதுவாக இருந்தாலும், காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும். மதவாத சக்திகளுக்கு காங்கிரஸ் ஒருபோதும் இடம் அளிக்காது.
நாங்கள்தான் முதல் அணி; நாங்கள்தான் வெல்லும் அணி என்றார் ஜி.கே. வாசன்.
புதுவையில் இன்று பலபரிசை ! பலத்த போலீஸ் பாதுகாப்பு !! மேலிடப் பார்வையாளர்கள் ஆளுநரை சந்திகிறார்கள் --ஏ.சுகுமாரன்
காங்கிரஸ் கட்சியின் மேலிடப்பார்வையாளர்கள் வயலார் ரவி, அருண்குமார், கே.பி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் புதுச்சேரிக்கு திங்கள்கிழமை வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து 3 பேரும் ஒன்றாக கார் மூலம் புதுச்சேரி வருகின்றனர். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு நேரடியாகச் செல்கின்றனர். அங்கு துணைநிலை ஆளுநர் கோவிந்த்சிங் குர்ஜாரை சந்தித்துப் பேசுகின்றனர். அதன் பிறகு காலாப்பட்டு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடக்கும் காங்கிரஸ் எம்.எல்..ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் வி.நாராயணசாமியும், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியனும் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு: காங்கிரஸ் எம்..எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் ஹோட்டலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படையைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட போலீஸôர் பல்வேறு இடங்களிலும் கண்காணிப்புப் பணியில் இறக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி முழுவதும் 7 போலீஸ் கண்காணிப்பாளர்கள் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக முதுநிலை போலீஸ் கண்காணிப்பாளர் (சட்டம்-ஒழுங்கு) அகர்வால் தலைமையில் நடந்தக் கூட்டத்தில் இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன.
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. மீண்டும் சேரும் ! ப.சிதம்பரம் நம்பிக்கை !!--ஏ.சுகுமாரன்
மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் முதல்-அமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடம் நீடித்தது. கருணாநிதியை சந்தித்து விட்டு வெளியே வந்த மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், நிருபர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் பேசினேன். காட்டுப்பள்ளியில் எல் அண்ட் டி நிறுவனம் கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகம் அமைப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அந்த திட்டத்தில் இன்னும் சில முடிவுகள் எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதை தீர்ப்பதற்காக எல் அண்ட் டி நிறுவனத்தினரும் முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து விவாதித்தனர். நானும் அதைப்பற்றி பேசினேன்.
இது பற்றி செப்டம்பர் 15-ந் தேதிக்குள் முடிவுகள் எடுக்கப்பட்டு பணிகள் தொடங்க இருக்கிறது. இந்த திட்டம் 4 ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்த இருக்கிறது. இந்த திட்டத்தால் 12 முதல் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
பணிகள் தொடங்குவதற்கான ஒப்பந்தம் செப்டம்பர் 8-ந் தேதி முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தாக இருக்கிறது.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் கடன் பெறுவதற்கு உலக வங்கியிடம் மனு கொடுத்து இருக்கிறோம். இது சம்பந்தமாகவும் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் பேசினேன்.
சிவங்கையில் வாசனை பொருள் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 77 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கி கொடுத்துள்ளது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தேன். இந்த பணிகள் 18 மாதத்தில் முடிவடையும். அதன் பின்னர் இந்த பூங்காவை முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைப்பார்.
சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு இடம் பார்க்கப்பட்டுள்ளது. தேர்வு செய்த இடம் உயர் கல்வித்துறை வசம் இருப்பதால், அதை சுகாதாரத்துறைக்கு மாற்றுவதற்கு முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிதி மந்திரி ப.சிதம்பரத்திடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:-காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. தொடர்கிறதா?
பதில்:- இன்றைக்கும் மத்திய அரசியலில் பா.ம.க. அங்கம் வகித்துக்கொண்டு தான் இருக்கிறது. தொடர்ந்து ஆதரவும் அளித்து வருகிறது. இடையில் தமிழக அரசியலில் ஏற்பட்ட வேறுபாடுகளால் அவர்கள் விலகி இருப்பது போல ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்கள் ஆதரவு தர மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. நாளைக்கே அவர்கள் தமிழகத்தில், ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் தொடர கூடிய வாய்ப்பு உருவகலாம்.
கேள்வி:-கம்ïனிஸ்டுகள் தமிழகத்தில் 3-வது அணி அமையும் என்று கூறுகிறார்களே?
பதில்:-அவர்கள் சொல்வதை பார்த்தால் 3-வது அணியல்ல. 5-வது அணியே வரும்.
சிறு பிள்ளைதனமானது
கேள்வி:-காங்கிரஸ் மூழ்கும் கப்பல் என்று கம்ïனிஸ்டுகள் விமர்சனம் செய்து வருகிறதே?
பதில்:-கடந்த 50 ஆண்டுகளாக இதை பலரும் சொல்லி வருகிறார்கள். கம்ïனிஸ்டுகள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. நாட்டிற்கு சங்கடம் வரும்போதெல்லாம், நாடு என்ற கப்பலை செலுத்தும் மாலுமியாகத் தான் காங்கிரஸ் இருந்திருக்கிறது. இதை புரிந்துகொள்ளாமல் கம்ïனிஸ்டுகள் பேசுவது சிறுபிள்ளைதனமானது.இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
தி.மு.க. வின் 2 ஆண்டு ஆட்சியில் ௨,34 ,000 பேருக்கு அரசுப் பணி.ஸ்டாலின் பெருமிதம் --ஏ.சுகுமாரன்
சென்னை மாநகராட்சியில், பணியின்போது இறந்த 240 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியும், 15 வருடங்களாக விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய 229 டிரைவர்களுக்கு கைக்கடிகாரங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியும் சென்னையில் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பயனாளிகள் அனைவருக்கும் பணி நியமன ஆணை மற்றும் பரிசுகளை வழங்கினார்.அபோது ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழகத்தில் 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருந்தது. அப்போது சென்னை மாநகராட்சி மேயராக நான் இருந்தபோது, கருணை அடிப்படையில் வேலை என்பது உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 412 பேர் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.ஆனால், அதன் பின்னர் 2-வது முறையாக நான் மேயராக பொறுப்பேற்றபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது நடந்த பல கொடுமைகள், அவலநிலை உங்களுக்கே தெரியும். அப்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் கருணை அடிப்படை வேலைக்கு தடை, பணி நியமனத்திற்கு தடை போன்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
2006-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கை, புத்தகமாகவே மக்களிடம் வழங்கப்பட்டது. 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, விவசாயிகளின் கூட்டுறவு கடன் ரத்து, சத்துணவில் 2 முட்டை, டி.வி. இல்லாதவர்களுக்கு இலவச கலர் டி.வி., கருணை அடிப்படையிலான வேலை மீண்டும் கொண்டு வரப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உறுதிமொழியாகவே கூறப்பட்டது.
அது இன்று நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சி காலத்தில் புதிய வேலைகள் கூட வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து போராட்டம் நடத்தக்கூட முடியவில்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். போராட்டம் அறிவித்தால் இரவு நேரத்திலேயே கைது செய்து சிறையில் அடைத்தனர். சிலர் அதிர்ச்சியில் தற்கொலை கூட செய்துகொண்டனர்.முதல்-அமைச்சராக கருணாநிதி பொறுப்பேற்ற உடன் வேலை நியமன தடை சட்டம் நீக்கப்பட்டது. 18-3-2008 அன்று சென்னை தியாகராய அரங்கில் நடந்த விழாவில் 500 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று 240 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் மட்டும் இன்றி, உள்ளாட்சித்துறையிலும் 307 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, 1098 பேர் பெற்றுள்ளனர். இதன் மூலம் 1098 குடும்பங்களில் விளக்கேற்றப்பட்டுள்ளது. கால முறை ஊதியம் மூலம் 12 ஆயிரத்து 618 பேர் பயன் பெற்றுள்ளனர்.
விரைவில் நிரப்பப்படும் கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 276 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசு வேலைவாய்ப்பு எங்கே? என்று கேட்டவர்களுக்காகத்தான் இந்த பதில்.ஏனைய காலி இடங்களையும் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையை போல் எந்த ஒரு பெரிய மாநகராட்சியிலும் மேம்பாலங்கள் கட்டிய வரலாறு கிடையாது. 9 மேம்பாலங்களை மாநகராட்சியே குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடித்துள்ளது. மேலும், மேம்பாலங்கள் கட்டுவதற்கான தொகையில் ரூ.30 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சிரஞ்சீவியின் புதிய கட்சி நாளை ஆரம்பம் ! திருப்பதியில் தொண்டர்கள் 8 லட்சம் பேர் குவிகிறார்கள் !!----ஏ.சுகுமாரன்



தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் சிரஞ்சீவி, புதிய கட்சி தொடங்கி அரசியலில் இறங்குகிறார் நடிகர் சிரஞ்சீவியின் புதிய கட்சி வரும் செவ்வாய்க்கிழமை உதயமாகிறது. திருப்பதியில் நடைபெறும் பிரமாண்ட தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக விசேஷ ரெயில்கள், பஸ்களில் தொண்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். கட்சியின் தொடக்க விழாவை நடத்துவதற்காக, திருப்பதியின் புறநகர் பகுதியான அவிலாலா கிராமம் ராஜீவ்காந்தி நகரில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 122 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தில் மாநாடு போல் நடைபெறும் இந்த கூட்டத்தில் சிரஞ்சீவியின் ரசிகர்கள் 5 முதல் 8 லட்சம் பேர் வரை கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்தும் சிரஞ்சீவியின் ரசிகர்கள் விழாவில் பங்கேற்கிறார்கள்.ரசிகர்களின் வசதிக்காக இன்று முதல் 17 விசேஷ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஐதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா, குண்டூர், நெல்லூர், காக்கிநாடா, மசூலிப்பட்டினம் உள்பட ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த விசேஷ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
.இதுதவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சுமார் 3 ஆயிரத்து 500 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.விழாவில் பங்கேற்க வரும் ரசிகர்கள், திருப்பதியில் உள்ள தங்கும் விடுதிகளை முன்கூட்டியே பதிவு செய்து கொண்டுள்ளனர். . திருப்பதியில் உள்ள திருமண மண்டபங்கள் சிரஞ்சீவி ரசிகர் மன்ற நிர்வாகிகளால் முன்பதிவு செய்யப்பட்டு, அவற்றில் நேற்று முதல் ரசிகர்கள் தங்கியுள்ளனர்.தேவஸ்தான தங்கும் விடுதிகளிலும் அறைகள் அனைத்தும் நிரம்பி விட்டன.
.
நடிகர் சிரஞ்சீவியின் புதிய கட்சி தொடக்க விழாவையொட்டி, திருப்பதி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நகர் முழுவதும் பலவண்ண மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. திரும்பும் திசையெல்லாம் பலவித கோணங்களில் சிரஞ்சீவியின் பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. நகர் முழுவதும் நூற்றுக்கணக்கான வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
ரசிகர்களுக்கு இன்றும், நாளையும் லட்சக்கணக்கான இலவச உணவு பொட்டலங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.சிரஞ்சீவி புதிய கட்சி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருவதால், போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
உயர் அதிகாரிகள் தலைமையில் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று, சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
புதுவை பகுதியை சேர்த்த கேப்டன் முஸ்தபாவின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் ! ஜம்முவில் விபத்தில் பலியானர !!----ஏ.சுகுமாரன்

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து கிஸ்த்வார் நோக்கி சென்ற ராணுவ ஜீப் படோடே-தாத்திரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ரிக்கி நுல்லா என்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் இருந்த பள்ளத்தில் ஜிப் கவிழ்ந்தது இந்த விபத்தில் ராணுவ மேஜர் ஏ.கே.ஜெயின், கேப்டன்கள் முஸ்தபா, ஹன்ஸ்ராஜ், மற்றும் ராணுவ வீரர்கள் மனோஜ்குமார், மைத்தி ஆகியோர் உயிரிழந்தனர். இதில் கேப்டன் முஸ்தபா புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான வசந்தபுரத்தை சேர்ந்தவர்.அவரது உடல் நேற்று காலை வசந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. சென்னை ரெஜிமண்ட் பிரிவினை சேர்ந்த மேஜர் ஜெனரல் சுசில் சவுதாகர் தலைமையில் 26பேர் இந்த உடலை எடுத்து வந்தனர்.வீட்டிலிருந்து அவரது உடல் தேசியக்கொடி போர்த்தப்பட்டு உப்பளத்திலுள்ள முஸ்லீம்கள் கல்லறைக்கு எடுத்துவரப்பட்டது. அங்கு ராணுவ வீரர்களின் மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க முஸ்தபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பெய்ஜிங் ஒலிம்பிக் நிறைவடைதது ! கோலாகலமான நிறைவு விழா !1---ஏ.சுகுமாரன்
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் உலக விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு பெய்ஜிங் நகரில் நடந்தன.பெய்ஜிங்: கடந்த 16 நாட்களாக உலகின் கவனத்தை தன் பக்கம் இழுத்து வைத்திருந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவடைந்தன. இதையடுத்து கோலாகலமான நிறைவு விழா நிகழ்ச்சிகள் பெய்ஜிங்கில் நடந்தன.
204 நாடுகளைச் சேர்ந்த 10,500 விளையாட்டு வீர வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.
நிறைவு விழாவின்போது மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியும் இடம் பெற்றது. நிறைவு விழாவின்போது இந்திய கொடியை ஏந்தி சென்றார் குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த விஜேந்தர் குமார்.

Saturday, August 23, 2008

செய்திகள் ஆக்ஸ் 23 மணி 7.45AM

ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலம் ! இந்தியா இதுவரை 3 பதக்கங்களை பெற்று சாதனை ! !-----ஏ.சுகுமாரன்
பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்குமார் வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம் 3-வது பதக்கத்தை கைப்பற்றிய இந்தியா புதிய வரலாறு படைத்திருக்கிறது.மேலும் ஒலிம்பிக் குத்துச்சண்டை பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை விஜேந்தர் பெற்றார்சீனத் தலைநகர் பீஜிங்கில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டி நாளையுடன் நிறைவடைகிறது.முந்தைய வரலாற்றுடன் ஒப்பிடும் போது இந்த ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்கு தித்திப்பு நிறைந்தது என்று சொல்ல வேண்டும். துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கமும், மல்யுத்த வீரர் சுஷில்குமார் வெண்கல பதக்கமும் வென்று நமது நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்.112 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில், இந்தியா ஒரு ஒலிம்பிக்கில் 3 பதக்கங்கள் வெல்வது இதுவே முதல் தடவையாகும்.
"
"திமுக அணியில் நீடிப்பதில்லை என்று மார்க்சிஸ்ட்கள் ஏற்கெனவே திட்டமிட்டு விட்டார்கள்; சுருண்டிருந்த சூழ்ச்சித்திரை விரிகிறது, " கருணாநிதி கருத்து !-----ஏ.சுகுமாரன்
-
மார்க்சிஸ்டுகள் குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அவர் பாணி கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கேள்வி:- "கர்நாடகம், இமாசலப்பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் கூட்டணியின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் காங்கிரஸ் கட்சி மண்ணைக் கவ்வியுள்ளது என்பது வரலாறு; அதுபோல வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன், தி.மு.க. கூட்டணி தொடருமானால் அதே மண்ணைக் கவ்வும் நிலை தான் அவர்களுக்கும் ஏற்படும். காங்கிரஸ் என்கிற மூழ்கும் கப்பலில் தி.மு.க. பயணம் செய்ய விரும்பினால், அது அவர்களின் முடிவு'' என்று மார்க்சிஸ்ட் தலைவர் என்.வரதராசன் அரசியல் ஆரூடம் கணித்துள்ளாரே?
பதில்:- காங்கிரஸ் என்பது மூழ்கும் கப்பல் என்பது தெரிந்த பிறகும் - அணு ஒப்பந்தம் நிறைவடையும் வரையில் அந்த மூழ்கும் (?) கப்பலைவிட்டு இறங்காமல் இருப்பதற்காக எத்தனை முறை டெல்லியிலே காங்கிரஸ் தலைவர்களுடன் கம்ïனிஸ்டு உயர்மட்டத் தலைவர்கள் "சம்பாஷணை'' நடத்தினார்கள் என்பதும்; எத்தனை முறை சென்னைக்கு "விஜயம்'' செய்தார்கள் என்பதும்; நாடும், ஏடும் நன்கு அறிந்த ரகசியங்களாயிற்றே!
அப்போதெல்லாம் மாநிலங்கள் சிலவற்றில் காங்கிரஸ் தோற்றது இவர்கள் கவனத்துக்கு வரவில்லையா? சில மாநிலங்களில் காங்கிரஸ் தோற்றது தான், மார்க்சிஸ்ட்டுகள் விலகுவதற்கு உண்மையான காரணமா? அணு ஒப்பந்தம் என்று கூறியதெல்லாம் அதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு காரணமா?
அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான ஆற்காடு வீராசாமியின் கம்ïனிஸ்டு பற்றிய பேச்சுக்கு நான் மறுப்பு தெரிவித்து விளக்க அறிக்கை வெளியிட்ட பிறகும்; "காங்கிரஸ் கப்பலுடன் சேர்ந்து தி.மு.க. மூழ்கிவிடப் போகிறது'' என்று தோழர் வரதராசனைப் போன்றவர்கள்; "ஆரூடம்'' கணிப்பதைப் பார்க்கும்போது; அவர்கள் தி.மு.க. தோழமை அணியில் இருப்பதில்லையென்று ஏற்கனவே திட்டமிட்டுவிட்டார்கள் என்பதும்; அதனால்தான் ஒரு மாத காலத்துக்கு முந்தியே அவர்கள் ஏடுகளிலும், மேடைகளிலும் தி.மு.க. எதிர்ப்புப் பிரசாரத்தை மெல்ல மெல்லத் தொடங்கி விட்டார்கள் என்பதும் தெளிவாகிறது!
எது, எப்படியிருப்பினும் காங்கிரஸ் கப்பலில் ஏறி தி.மு.க. மூழ்கிவிடும் என்ற வரதராசனின் ஆரூடத்தை; என்னைப் பொறுத்தமட்டில் "அருளாசி''யாகவே கருதிக் கொள்கிறேன்.
எப்படியோ சுருண்டு கிடந்த "சூழ்ச்சித்திரை'' விரிந்து விட்டதைக் கண்ட பிறகாவது "விழிப்போடிருப்போம்'' என்று பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன்.கேள்வி:- 1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன் பிறகு 1999-ல் அதே பா.ஜ.க.வுடன் இணைந்து மத்திய அரசில் இணைந்து ஆட்சி நடத்தியது தி.மு.க. என்று மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சித் தலைவர் ஒருவர் சொல்லியிருக்கிறாரே; பா.ஜ.க.வுடன் மார்க்சிஸ்ட் கட்சி எந்த காலத்திலும், எந்த மாநிலத்திலும் உறவு கொண்டது உண்டா இல்லையா?
பதில்:- இந்த கேள்விக்கு இப்போது நான் நேரடியாகப் பதில் அளிப்பதைவிட, 9.3.2000 அன்று சட்டப் பேரவையில் கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றியபோது, நான் பேசிய ஒரு குறிப்பிட்ட பகுதியை இங்கே விளக்கினால், அதுவே இந்த கேள்விக்கு பொருத்தமான பதிலாக அமையுமென்று கருதுகிறேன்.
"1967-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் தேர்தல் முடிவுக்கு பிறகு பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மூன்று மாநிலங்களிலும் அகாலி தளம், பாரதீய கிராந்தி தளம், ஜனசங்கம் அடங்கிய கூட்டணி அரசில் இந்திய கம்ïனிஸ்டு கட்சி அங்கம் வகித்தது. ஆர்.எஸ்.எஸ். கட்சியினுடைய நிழல் என்று சொல்லப்படுகின்ற ஜனசங்கம், பாரதீய கிரந்தி தளம், அகாலி தளம் ஆகிய இந்த கட்சிகள் எல்லாம் பங்கு பெற்ற அரசில் சி.பி.ஐ. கட்சி அங்கம் வகித்தது. மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி அந்த அணியிலே பங்கு பெற மறுத்துவிட்டது. ஆனால், அந்த அரசுகளுக்கு நிபந்தனையோடு கூடிய ஆதரவை அளிக்க மார்க்சிஸ்ட் கட்சி ஒப்புக் கொண்டது.
கே.சுப்பராயன்:- முதல்-அமைச்சர் சொல்வது உண்மை தான். ஆனால் இந்திய கம்ïனிஸ்டு கட்சியினுடைய ஒரு மாநிலக் குழு தீர்மானித்து, அப்படி பங்கு பெற்றது தவறு என்று மத்திய தலைமை சுட்டிக்காட்டியிருக்கிறது. எனவே, அதை இந்திய கம்ïனிஸ்டு கட்சியினுடைய அதிகாரபூர்வமான கருத்தாக எடுத்துக் கொள்ள இயலாது.
கருணாநிதி:- நான் அந்த அரசில் அங்கம் வகித்தார்கள் என்று தான் சொன்னேன். அது மாநிலக் குழுவா, மத்தியக் குழுவா என்பதெல்லாம் அல்ல. அப்படிப்பட்ட அரசில் ஜனசங்கம் இருந்த அரசில், சி.பி.ஐ. அங்கம் வகித்தது என்பது தான். பிறகு, 1977-ல் நடந்த தேர்தலில் மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையிலே ஜனதா அரசு அமைந்தது. ஜனதாவிலே இடம் பெற்ற கட்சிகளில் ஒன்று ஜனசங்கம். அந்த அரசில் வாஜ்பாய், அத்வானி, நானாஜி தேஷ்முக் ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள். மார்க்சிஸ்ட் கட்சி வெளியே இருந்து அரசுக்கு ஆதரவு கொடுத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
1989-90-ல் வி.பி.சிங் தலைமையிலே மத்தியில் ஆட்சி. அப்போது சி.பி.எம்., பா.ஜ.க., இரண்டுமே வெளியே இருந்து வி.பி.சிங் ஆட்சியை ஆதரித்தார்கள்'' என்று சட்டப் பேரவையில் அப்போதே நான் பேசியிருக்கிறேன்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
தீயவை அகன்று, நன்மை செழித்து அனைவரும் ஆனந்தவாழ்வு வாழ வேண்டும் --ஜெயலலிதா கிருஷ்ண ஜெயந்திவாழ்த்து செய்தி !-----ஏ.சுகுமாரன்

அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள கிருஷ்ண ஜெயந்திவாழ்த்து வாழ்த்து செய்தியில் ஆனந்த வாழ்வு
கோகுலத்து கோமகனாம் கண்ணன் அவதரித்த நன்னாளான கிருஷ்ண ஜெயந்தி திருநாளை ஆர்வத்தோடும், மகிழ்வோடும் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனம், மொழி, மதம் மற்றும் சாதியற்ற பாதையின் மூலம் பாமர மக்களுக்கு வாழ்க்கை முறையை வகுத்துக் கொடுத்து, துன்பத்தில் இன்பம் காண வைக்கும் ஞானரசமாம் பகவத் கீதையை இந்த உலகத்திற்கு உபதேசித்தவர் பகவான் கிருஷ்ணர்.
கிருஷ்ணர் அவதரித்த இந்த நன்னாளில், மண்ணைத் தின்ற வாயில் விண்ணை காண்பித்த கண்ணனின் திருவருளால், தீயவை அகன்று நன்மை செழித்து அனைவரும் ஆனந்த வாழ்வு வாழ வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் தி.மு.க. இளைஞரணி பேரணி : 50 ஆயிரம் பேர் பேரணி! புதுவையில் வரவேற்பு ! !-----ஏ.சுகுமாரன்
விழுப்புரம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் அண்ணா நூற்றாண்டையொட்டியும், தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நேற்று மாலை நடை பெற்றது. 50 ஆயிரம் பேர் கலந்து கொண்ட தி.மு.க. இளைஞரணி பேரணி நடைபெற்றது. அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி மேடையில் அமர்ந்து பேரணியை பார்வையிட்டார்.மாலை 5 மணியளவில் விழுப்புரம் கே.கே.ரோடு அண்ணா நகர் அருகே, தி.மு.க. மாவட்ட மு.க.ஸ்டாலின் நற்பணி மன்றத்தலைவர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். மாலை 5 மணிக்கு புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு 7.30 மணிக்கு முடிவடைந்தது. பேரணி புறப்பட்டது முதல் முடிவடையும் வரை இளைஞரணியினரை பார்த்து மகிழ்ச்சியுடன் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையசைத்த படி இருந்தார்மு.க.ஸ்டாலினுடன் மத்திய மந்திரி வேங்கடபதி, அமைச்சர்கள் பொன்முடி, வேலு ஆகியோரும் மேடையில் அமர்ந்தபடி இளைஞரணி பேரணியை பார்வையிட்டனர்.
புதுவையில் வரவேற்பு !
விழுப்புரம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. துணைபொதுச்செயலாளரும், அமைச்சருமான மு.க. ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்தார்.புதுச்சேரி மாநில எல்லை பகுதியான கனகசெட்டிகுளத்திற்கு வந்த மு.க.ஸ்டாலினுக்கு புதுச்சேரி மாநில தி.மு.க. சார்பில் மாநில அமைப்பாளர் ஜானகிராமன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதில் சட்டசபை எதிர்கட்சி தலைவர் நாஜிம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி. சிவக்குமார், சிவா, ராஜாராமன், டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன், நந்தா. சரவணன், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் அனிபால்கென்னடி, வில்லியனூர் கொம்ïன் பஞ்சாயத்து தலைவர் நடராஜன், துணை தலைவர் ஏ.கே. குமார் , மற்றும் நிர்வாகிகள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுவையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம் !-----ஏ.சுகுமாரன்
புதுவையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர்களை இடம் மாற்றி போலீஸ் டி.ஜி.பி. கான் உத்தரவிட்டு உள்ளார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு புறக்காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பால்ராஜ் சிக்மா செக்ïரிட்டி பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஏனாம் தாரிகல்தப்பா புறக்காவல் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் சிக்மா நுண்ணறிவு பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதே போல் காரைக்கால் அம்பகரத்தூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் புதுச்சேரி ஆயுதப்படை பிரிவிற்கு மாற்றப்பட்டார். மங்கலம் புறக்காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தமிழரசன் சிக்மா செக்ïரிட்டிக்கு மாற்றப்பட்டார். மாகி ஸ்பெஷல் பிராஞ்ச் பிரிவில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் வல்சராஜ், பள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
சிக்மா செக்ïரிட்டி பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த விஜயன், பந்தகல் புறக்காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். கவர்னர் மாளிகையில் பணியாற்றி வந்த லட்சுமணன் ஏனாம் தாரிகல்தப்பா புறக்காவல்நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். புதுச்சேரி போலீஸ் பயிற்சி பள்ளியில் பணியாற்றி வரும் துரைராஜ், அம்பகரத்தூர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த முத்துசாமி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பு புறக்காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். கவர்னர் மாளிகையில் பணியாற்றி வரும் ராஜ்மனோகர், கோர்க்காடு புறக்காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சட்டசபையில் பணியாற்றி வரும் தயாளன் மங்கலம் புறக்காவல் நிலையத்திற்கும், முதலியார்பேட்டையில் பணியாற்றி வரும் முருகையன் சோலைநகர் புறக்காவல்நிலையத்திற்கும் மாற்றப்பட்டனர்.இந்த உத்தரவை டி.ஜி.பி. கான் வியாழன் இரவு பிறப்பித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் வர்த்தகம் ரூ.37,800 கோடி உயரும்--அசோசெம் மதிப்பீடு !-----ஏ.சுகுமாரன்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்படும் பரஸ்பர வர்த்தகத்தின் மதிப்பு அடுத்த சில ஆண்டுகளில் சுமார் ரூ.37,800 கோடிஉயரும் என அசோசெம் அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது. தற்போது இவ்விரு நாடுகளுக்கு மிடையே மேற்கொள்ளப்படும் வர்த்தகத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.8,400 கோடிஉள்ளது.வங்கி, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட சில துறைகளில் இரு நாடுகளுக்கிடையே நல்ல ஒத்துழைப்பு நிலவி வருவதும், இரு நாடுகளுக்கிடையே சாலை மற்றும் ரயில் போக்கு வரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தி வரு வதாக அசோசெம் தெரிவித்துள்ளது.
புதுவையில் கோளரங்கம் வேண்டும்--தமிழர் திராவிடர் கழகம் தீர்மானம் ----ஏ.சுகுமாரன்
தமிழர் திராவிடர் கழகச் செயல்வீரர்கள் கூட்டம் பொதுச்செயலர் மு.அ.குப்புசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
புதுச்சேரியில் கோளரங்கம் அமைக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். அதை விரைவில் ஏற்படுத்த வேண்டும். அந்தக் கோளரங்கத்துக்கு பெரியார் அறிவியல் கோளரங்கம் என்று பெயர் சூட்ட வேண்டும்.
அண்ணா நூற்றாண்டு விழாவை தமிழர் திராவிடர் கழகம் சார்பில் ஆண்டு முழுவதும் கொண்டாடுவது, அரசு சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா கலையரங்கம் கட்ட வேண்டும். தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவையொட்டி புதுச்சேரி முழுவதும் கொள்கை விளக்கப் பிரசாரம் நடத்துவது, சேது சமுத்திரத் திட்டம் குறித்து விளக்கக் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Friday, August 22, 2008

செய்திகள் ஆக்ஸ் 22 மணி 8.00 AM

தன்னிச்சையான தனியார் பஸ் கட்டண உயர்வு ! புமுகா போராட்டதில் இறங்கும் ! லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ தகவல் ! !-----ஏ.சுகுமாரன்
புதுச்சேரியில் தன்னிச்சையாக தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.இதை கண்டித்து புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் எம்.எல்.ஏவுமான க.லட்சுமிநாராயணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் : புதுச்சேரியில் திடீரென்று பஸ் கட்டணத்தை தனியார் பஸ் உரிமையாளர்கள் தாங்களாகவே உயர்த்தியுள்ளனர். இதை எங்கள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். புதுச்சேரியைப் பொறுத்தவரை பொதுமக்களுக்குப் பெரிதும் பயன்படும் போக்குவரத்து சாதனம் பஸ்கள்தான். பொதுமக்களுக்கு எந்தச் சிரமும் ஏற்படக் கூடாது என்பதற்காகதான் அரசு சட்டம் இயற்றி தனியார் பஸ்களுக்கு பர்மிட் கொடுத்துள்ளது. பொதுமக்களிடம் வசூலிக்கும் கட்டணத்துக்கும், சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் சிரமத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் முன்னறிவிப்பு இன்றி திடீரென்று பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டினாலும் மற்ற மாநிலங்களில் இப்படிப்பட்ட திடீர் பஸ் கட்டண உயர்வு ஏற்படுவதில்லை. இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் புதுச்சேரியில் அனைவரும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்படும் நிலை ஏற்படும்.
எனவே தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட இந்த பஸ் கட்டண உயர்வைத் தடுத்து நிறுத்தாத அரசைக் கண்டிப்பதோடு உடனே பஸ் உரிமையாளர்கள் அறிவித்த இந்த பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பார்த்துவிட்டு எங்கள் கட்சியின் சார்பில் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்துவது பற்றி முடிவு செய்ய உள்ளோம் என்று கூறியுள்ளார் லட்சுமிநாராயணன்.
சென்னை , புதுச்சேரியில் தொடரும் டீசல், கியாஸ் தட்டுப்பாடு ! மக்கள் திண்டாடுகின்றனர் ! !-----ஏ.சுகுமாரன்
சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது, கியாஸ் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் கியாஸ் மூலம் இயங்கும் ஆட்டோக்களும் ஓடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய டீசல் தட்டுப்பாடு நேற்று 5-வது நாளாக தொடர்ந்தது. இதனால் டீசலால் ஓடும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்தனர். சரக்குகளை ஏற்றிக் கொண்டு வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் புறநகர்களில் உள்ள பெட்ரோல் `பங்க்'களில் நீண்ட வரிசையில் டீசல் போடுவதற்காக காத்திருந்தன.சில `பங்க்'களில் குறைந்த அளவே டீசல் இருந்ததால், லாரியை வரிசையில் நிறுத்திய டிரைவர்கள் கேன்கள் மற்றும் குடங்களை கையில் எடுத்துக்கொண்டு டீசல் வாங்க முண்டியடித்தனர். சென்னை மற்றும் புறநகரங்களில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் `பங்க்'களில் நேற்று டீசல் இல்லை.இதனால், பலர் மண்எண்ணெய் ஊற்றி லாரியை ஓட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் தொழிற்சாலைகள் பல ஜெனரேட்டர் மூலம் இயங்கிவந்தன.ஆனால், ஜெனரேட்டர் இயக்குவதற்கு டீசல் தேவைப்படுவதால் கடந்த வாரம் வரை டீசல் கொண்டு இயங்கிவந்தன. தற்போது, டீசல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால், பல தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பலர் வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர். புதுச்சேரியில் இதே நிலை தான் ! மக்ககள் ஒவொரு பங்க்' வாசலிலும் காத்து கிடக்கின்றனர்
ஐ.டி. நிறுவனங்களின் பெருக்கம் காரணமாய் டீசல் தேவை 35 சதவீதம் அதிகரித்துள்ளது:--தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி புதிய தகவல் !-----ஏ.சுகுமாரன்
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து, டீசலை அதிகம் உபயோகிக்கும் சாப்ட்வேர் நிறுவனங்கள், ஜவுளி ஆலைகளையும், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணை நிறுவனங்களை அழைத்து தலைமைச் செயலாளர் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு தமிழகத்தில் நிலவி வரும் டீசல் தட்டுப்பாட்டை சரிசெய்ய அரசு பெட்ரோலிய நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பெருக்கம் காரணமாக, தமிழகத்தில் 35 சதவீதம் டீசல் தேவை அதிகரித்துள்ளது என்று தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி கூறினார்.தமிழகத்தில் தற்போது டீசல் தேவை, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 35 சதவீதம் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.டி.) பெருகியுள்ளதே இதற்கு காரணம். அவர்கள் வாரமுழுவதும், 24 மணி நேரமும் தொடர்ந்து டீசலை பயன்படுத்துகிறார்கள். எண்ணை நிறுவனங்கள் தற்போது, கடந்த ஆண்டு எவ்வளவு டீசலை வழங்கினவோ, அதைவிட 15 சதவீதம் அதிக டீசலை சப்ளை செய்து வருகின்றன. தமிழகத்துக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது, 42 கோடி லிட்டர் டீசலை எண்ணை நிறுவனங்கள் சப்ளை செய்கின்றன. இதில், அரசு போக்குவரத்துக் கழகங்கள், துறைமுகம், ரெயில்வே, ராணுவம் ஆகியவற்றுக்கு 25 சதவீதம் கொடுக்கப்பட்டு விடுகிறது. இவர்களின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் டீசலை விட தமிழகத்தின் தேவை மிகவும் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம். இந்த பிரச்சினை பற்றியெல்லாம் மத்திய அரசிடம் பேசி, தமிழகத்துக்கு அதிக டீசலை ஒதுக்கி தரும்படி கேட்போம்.இவ்வாறு எல்.கே. திரிபாதி கூறினார்.

இடதுசாரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்'' என்று தி.மு.க. பொருளாளர் ஆற்காடு வீராசாமி பேசியிருப்பது சற்று அளவுக்கு மீறியது மட்டுமல்ல; நாம் கடைப்பிடித்து வரும் அணுகுமுறைக்கும் முரணானது என்று கருதுகிறேன்.--கருணாநிதி கேள்வி-பதில் அறிக்கை !-----ஏ.சுகுமாரன்

இடதுசாரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்'' என்று தி.மு.க. பொருளாளர் ஆற்காடு வீராசாமி பேசியிருப்பது பற்றி முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- "இடதுசாரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்'' என்று தி.மு.க. பொருளாளர் ஆற்காடு வீராசாமி பேசியதாக சில ஏடுகளில் வந்துள்ள செய்தி பற்றி?
பதில்:- தி.மு.க.வுடன் உறவு குறித்து தங்கள் கட்சியின் மாநிலக்குழுவை கலந்து கொண்டுதான் முடிவு அறிவிக்கப்படும் என்று இடதுசாரி கட்சித்தலைவர்கள் தெரிவித்துள்ள நிலையில்; தி.மு.க. பொருளாளர் ஆற்காடு வீராசாமி பேசியிருப்பது சற்று அளவுக்கு மீறியது மட்டுமல்ல; நாம் கடைப்பிடித்து வரும் அணுகுமுறைக்கும் முரணானது என்று கருதுகிறேன்.
அண்மைக்காலமாக குறிப்பாக சில நாட்களாகவே இடதுசாரிகளான கம்ïனிஸ்டு கட்சிகள் இரண்டுமே; நாம் கொண்டிருந்த தோழமைக்கு முற்றிலும் மாறாக செய்திகளை வெளியிடுவதும்- கேலிச்சித்திரங்கள் வரைவதும் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் - "நந்திக்கிராமம்'' பிரச்சினையில்- மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி உறுப்பினர் பாலபாரதி கூறியதை போல- நாம் கடைப்பிடித்த அணுகுமுறைக்கும்- "ரெட்டனை'' கிராமத்து பிரச்சினையை அவர்கள் ஊதிவிடுவதற்கும் உள்ள வேறுபாட்டை அவர்களே சிந்தித்து செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.
இவற்றையன்னியில் நமது கழகத்தினர் யாராயினும்- குறிப்பாக நம்முடன் தோழமை கொண்ட கட்சிகளை பற்றி- அவர்கள் எடுக்கும் முடிவினை அறிந்து, அதன் பின்னர் நாம் நமது தலைமைக்குழுவில் ஒரு முடிவெடுத்து அறிவிக்கும் வரையில் அவசரப்பட்டு விமர்சனங்களில் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கூட்டணி கட்சிகளாயிருந்த போது கொண்டிருந்த நட்பையும்- ஒருவருக்கொருவர் துணையாக இருந்து உதவிக் கொண்ட நன்றியுணர்வையும்- திடீர் மாற்றங்கள் எனும் தீயில் கருகிவிட விட்டு விடக்கூடாது.
கேள்வி:- பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை தமிழகத்தில் கொண்டு வர வாய்ப்பில்லை என்று பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணைய தலைவர் சின்கா தெரிவித்துள்ளது பற்றி?
பதில்: முதல்-அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு அருமை நண்பர் எம்.ஜி.ஆரே, இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் அமல்படுத்த முயற்சி செய்து ஆணை பிறப்பித்த போது, அதை எதிர்த்து தமிழகத்தில் எரிமலையே வெடித்ததையும் அந்த ஆணையை திரும்ப பெறுவதை தவிர எம்.ஜி.ஆருக்கு வேறு வழியில்லாமல் போனதையும் தமிழகத்தின் "சமூகநீதி வரலாறு'' கோடிட்டு காட்டுகிறதே!
பிற்படுத்தப்பட்டோர் அல்லாத மாணவர்களுக்கு கூட இடஒதுக்கீடு வாய்ப்பு வழங்க; அந்த மாணவர்களுடைய வீட்டில் அதுவரை யாரும் பட்டதாரியாக இல்லாமல் இருந்து, அந்த மாணவர்தான் தொழில் கல்விக்கு விண்ணப்பிக்கும் முதல் மாணவராக இருக்க வேண்டும் என்று தி.மு.க. ஆட்சியில் ஓர் அரசாணை பிறப்பித்தோம்- அதுவும் நீதிமன்றத்தில் நிற்கவில்லை.
கேள்வி:- "பாபர் மசூதி'' இடிக்கப்பட்ட பிறகும்; பா.ஜ.க.வுடன் தி.மு.க. தேர்தல் உறவு கொண்டது நியாயமா? என்று மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர் டி.கே.ரங்கராஜன் கேட்டிருக்கிறாரே?
பதில்: காலத்திற்கு காலம் இடத்துக்கு இடம்- மாநிலத்துக்கு மாநிலம்- முரண்பாடு கொண்ட அணிகள் எவை எவை? அவை எப்போது? நேரடி விவாதத்துக்கு கூட நான் தயார்- ஆனால் பா.ஜ.க.வுடன் தி.மு.க. தேர்தல் அணி சேர்ந்த போது "குறைந்தபட்ச செயல்திட்டம்'' என ஒன்று தயாரிக்கப்பட்டு, அதில் இருசாராரும் கையெழுத்திட்டுள்ளோம். அத்திட்டத்தில் "மதச்சார்பு'' அரசியலுக்கு இடமில்லை. அதை பா.ஜ.க. மீறிய போது, அதை விடுத்து அமைச்சர்கள் பதவி விலகி, தி.மு.க. வெளியேறியது என்பது வரலாறு!கேள்வி:- டி.வி. நிறுவன உரிமை பெற்றவர்கள், தங்களின் "டி.வி. சேனல்'' காட்டும் உரிமையை வேறு ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தினர் கேட்டால் தர வேண்டும் என்று சட்டரீதியான விதிமுறையே இருக்கும் போது, "திருமண வீட்டில் சீப்பை ஒளித்து வைத்துக் கொண்டால், திருமணமே நின்று விடும்'' என்று நினைப்பதை போல, தனியாருக்கு கூட அல்ல, அரசு கேபிள் டி.வி நிறுவனத்துக்கே சன் டி.வி. சேனல்கள் தருவதற்கு மறுக்கப்படுகிறதே ஏன்?
பதில்:- இதுபற்றி அரசு டி.வி. சார்பில் வழக்கு தொடருவதால் நான் எதுவும் சொல்வதற்கில்லை.
கேள்வி:- விசைத்தறி வேலை நிறுத்தம் காரணமாக இலவச வேட்டி சேலை உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?
பதில்:- விசைத்தறியாளரின் வேலை நிறுத்தம் குறித்து தமிழக அரசின் சார்பில் 2 அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்த வேலை நிறுத்தம் காரணமாக இலவச வேட்டி சேலை வழங்குவதில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார்.
இந்தியாவுக்கு அணு எரிபொருள் தர ஆஸ்திரியா, அயர்லாந்து, நிïசிலாந்து தொடர்ந்து எதிர்ப்பு ! அணு எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் !-----ஏ.சுகுமாரன்
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுக்கு, 45 நாடுகள் அடங்கிய அணு எரிபொருள் வினியோக நாடுகள் அமைப்பு, அணு எரிபொருளை வினியோகம் செய்து வருகிறது. இந்தியா கடந்த 1974-ம் ஆண்டு, முதன்முறையாக பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதனால், இந்தியாவுக்கு அணு எரிபொருள் வினியோகிக்க தடை விதிக்கப்பட்டது. 34 ஆண்டுகளாக இத்தடை அமலில் உள்ளது. மேலும், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திடாமல் இருக்கிறது. அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்ட போதிலும், அணு எரிபொருளை மேற்கண்ட 45 நாடுகள்தான், வினியோகம் செய்ய வேண்டும்.எனவே, இந்தியாவுக்கு அணு எரிபொருள் வினியோகிப்பதற்கான தடையை நீக்குமாறு, இந்த அமைப்பை இந்தியா வற்புறுத்தி வருகிறது. ஏற்கனவே, கடந்த மாதம் 18-ந் தேதி இந்த அமைப்பின் பிரதிநிதிகளிடம் இந்தியா விளக்கம் அளித்தது.
இந்தியா இரண்டாவது முறையாக, அணு எரிபொருள் வினியோக அமைப்பின் 45 நாட்டு பிரதிநிதிகளிடம் நேற்று விளக்கம் அளித்தது. ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னா நகரில் இக்கூட்டம் நடைபெற்றது. வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் தலைமையிலான இந்திய குழு, அனைத்து பிரதிநிதிகளுக்கும் கூட்டாக 30 நிமிடங்கள் விளக்கம் அளித்தது. பிரதிநிதிகள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்தது.
உலக அளவில் அணு ஆயுத பரவல் தடைக்கு இந்தியா எடுத்துக்கொண்ட உறுதியை எடுத்துரைத்தது. இந்தியா மீதான தடையை நீக்கினால், அணு ஆயுத பரவல் தடைக்கு எத்தகைய பலவீனமும் ஏற்படாது என்று இந்தியா உறுதி அளித்தது.
பின்னர், அணு எரிபொருள் வினியோக அமைப்பின் பிரதிநிதிகளை சிவசங்கர் மேனனும், பிரதமரின் விசேஷ தூதர் ஷியாம் சரணும் தனித்தனியாக சந்தித்து விளக்கம் அளித்தனர். பின்னர், சிவசங்கர் மேனன் நிருபர்களிடம் எதுவும் கூற மறுத்து விட்டார்.
ஆனால் இந்தியா அளித்த விளக்கம் சாதகமான வகையில் இருந்ததாகவும், பயனுள்ளதாக இருந்ததாகவும் ஒரு பிரதிநிதி தெரிவித்தார்.

அணு எரிபொருள் வினியோக அமைப்பை பொறுத்தவரை, எந்த பிரச்சினையிலும் ஒருமித்த முடிவையே எடுக்கும். ஏதாவது ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தாலும், அந்த பிரச்சினைக்கு ஒப்புதல் அளிக்கப்படாது. இந்தியா மீதான தடையை நீக்கும் பிரச்சினையில், ஆஸ்திரியா, அயர்லாந்து, நிïசிலாந்து ஆகிய நாடுகள், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அத்தகைய நாடுகளின் கவலையையும், பயத்தையும் போக்குவதற்குத்தான் இந்தியா நேற்று விளக்கம் அளித்தது. ஆனால் இந்த நாடுகள் இறுதிவரை எதிர்ப்பு தெரிவித்தால், இந்தியாவுக்கு அணு எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
பாமகவின் மது ஒழிப்பு மாநாடு ! திருவண்ணாமலையில் ஆகஸ்டு 24ஆம் தேதி ! !-----ஏ.சுகுமாரன்

பாமகவின் திருவண்ணாமலை மாவட்ட மகளிர் சங்கம் சார்பில் ஆகஸ்டு 24ஆம் தேதி திருவண்ணா மலை அரசு கலைக் கல்லூரி அருகே சந்தை மைதானத்தில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படுகிறது. மது ஒழிப்பு மாநாட்டில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்கிறார் பாமக எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகின்றனர்.மாநாட்டிற்கான ஏற்பாடுகளைப் பாமக மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.காளிதாஸ், மாவட்டச் செயலாளர்கள் பாபு நாயுடு, மன்னப்பன், சரவணன், பாண்டியன் ஆகியோர் கவனித்து வருகிறார்கள்.
இனி ரத்ததானம் தேவையில்லை ! செயற்கை ரத்தம் தயார் ! விஞ்ஞானிகள் சாதனை! !-----ஏ.சுகுமாரன்
செயற்கை ரத்தத்தை உருவாக்க பரிசோதனைக் கூடங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி உருவாக்கப்பட்ட செயற்கை ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் இயற்கையான சிவப்பணுக்களை போல செயல்படுவதற்கு பதிலாக புற்றுநோய் செல்களாக மாறி பேராபத்தை ஏற்படுத்தின. இதனால் செயற்கை ரத்தம் உருவாக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன.
இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக் கழகம்- ரோசெஸ்டரில் உள்ள மயோ கிளினிக் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்து செயற்கை ரத்தம் தயாரித்து சாதனைப் படைத்துள்ளனர்.
கருவை உருவாக்கும் செல்களிலிருந்து ரத்த அணுக்களை உற்பத்தி செய்து, அதன் மூலம் செயற்கை ரத்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது, மனித ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை போலவே, செயற்கை ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களுக்கும் ஆக்சிஜனை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம் விபத்து, அறுவைச் சிகிச்சை போன்ற இக்கட்டான காலங்களில் செயற்கை ரத்தத்தை பயன்படுத்தி உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்.
"அவசரக் காலங்களில் பரிசோதனை செய்யப்படாமல் செலுத்தப்படும் ரத்தத்தின் மூலம் பல்வேறு நோய் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது. ஆனால், செயற்கை ரத்தத்தில் அதுபோன்ற அபாயம் இருக்காது" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Thursday, August 21, 2008

செய்திகள் ஆக்ஸ் 21 மணி 8.00AM

சபாஷ் இந்தயா ! ஒலிம்பிக்கில் 2-வது பதக்கம்: !-----ஏ.சுகுமாரன்


1952-ம் ஆண்டு ஹெல்சிங்கியில் நடந்த போட்டியில் மல்யுத்தத்தில் கஷபா ஜாதவ் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார் டெல்லியைச் சேர்ந்த மல்யுத்த விளையாட்டு வீரர் சுஷில் குமார். முன்னதாக, துப்பாக்கி சுடுதல் பிரிவில் அபிநவ் பிந்த்ரா 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தது நினைவிருக்கலாம். இதற்கு முன்பு 1952-ம் ஆண்டு ஹெல்சிங்கியில் நடந்த போட்டியில் மல்யுத்தத்தில் கஷபா ஜாதவ் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். அதன்பிறகு இப் பிரிவில் இந்தியா கைப்பற்றும் பதக்கம் ஒரே ஒலிம்பிக்கில் தனிநபர் போட்டிகள் இரண்டில் இந்தியா பதக்கம் சேர்ப்பது இதுவே முதல்முறை. வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த சுஷில் குமாருக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ். கில், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாதி, ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.சுஷில் குமாருக்கு பரிசுகள் குவிந்தவண்ணம் உள்ளது
ராஜீவ் 64 வது பிறந்த நாள்: வீர பூமியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி!-----ஏ.சுகுமாரன்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 64-வது பிறந்த நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ராஜீவ் காந்தியின் நினைவிடமான வீர பூமியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் அவரது இரு குழந்தைகளும் புதன்கிழமை காலை முதலில் வந்து அஞ்சலி செலுத்தினர். நினைவிடத்தில் பக்தி இசைப் பாடல்களும் இசைக்கப்பட்டன. மேலும் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தேவ்ரா, தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.
ஒகேனக்கல் விவகாரம்: மிரட்டுகிறது கர்நாடகம் !-----ஏ.சுகுமாரன்
முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸின் 93-வது பிறந்த நாள் விழாவில் புதன்கிழமை கலந்துகொண்ட பின்னர் பெங்களூரில் நிருபர்களிடம் பசவராஜ் பொம்மைபேசும்போது ஒகேனக்கல் விவகாரத்தில் சுமுகத் தீர்வு ஏற்படவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்று தெரிவித்தார்.
: மேலும் ஒகேனக்கல் பகுதி கர்நாடகத்துக்குச் சொந்தமானது. எனவே அங்கு இரு மாநிலமும் கூட்டு சர்வே நடத்த வேண்டும். அப் பகுதியில் தமிழக அரசு செயல்படுத்த உள்ள குடிநீர்த் திட்டத்தை நிறுத்த வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசிடம் பிரதமர் மன்மோகன் சிங் பேச வேண்டும். இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரதமர் ஆவன செய்ய வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சைபுதீன் சோஸýக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஒகேனக்கல் திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடுமாறு அதில் கோரியுள்ளேன். இந்த விவகாரத்தில் இன்னும் 10 நாள்களில் மத்திய அரசு தனது முடிவை எடுக்காவிட்டால் அனைத்துக் கட்சியினருடன் டெல்லி செல்வோம். இப் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசு முன்வராவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம். காவிரி நதிநீரைப் பங்கீட்டுக்கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு நிலுவையில் உள்ளதால், காவிரியில் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட எந்தப் புதிய திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்த முடியாது என்றார்..
பொது வேலைநிறுத்ததால் தமிழகம் , புதுவையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை ! !-----ஏ.சுகுமாரன்
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரையில் உள்ள பாதகமான அம்சங்களை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய அளவில் புதன்கிழமை பொதுவேலைநிறுத்தம் நடத்த அறிவிப்பு வெளியிட்டிருந்தன. இதையொட்டி புதுச்சேரியிலும் பொதுவேலைநிறுத்தம் செய்ய தொழிற்சங்கங்கள் ஏற்பாடுகள் செய்து வந்தன. இருப்பினும் இப்போராட்டம் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.புதுச்சேரி கொக்கு பார்க் அருகில் இக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர்.விசுவநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் விசுவநாதன் உள்பட 77 பேர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி அஜந்தா சிக்னல் அருகே நடந்த மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் செயலர் சோ.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் 102 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதிய சிறையை முதல்வர் என்.ரங்கசாமி திறந்து வைத்தார் ! புதிய சிறை மனிதநேயத்துடன் சீர்திருத்தப் பள்ளியாக விளங்கும் --முதல்வர் விருப்பம் !-----ஏ.சுகுமாரன்

காலாப்பட்டில் ரூ.12 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய சிறையை புதன்கிழமை திறந்து வைத்து பேசியபோது புதிய சிறையை மேம்படுத்த மேலும் ரூ.15 கோடி ஒதுக்கப்படும் என்று முதல்வர் என்.ரங்கசாமி கூறினார்.
மேலும் இந்தப் புதிய சிறை மனிதநேயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளுடன் கூடிய சிறையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இது வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இதை சிறை என்பதைக் காட்டிலும் சீர்திருத்தப் பள்ளியாக கைதிகள் நினைக்க வேண்டும். நல்ல கல்வியைக் கொடுக்கும் சூழ்நிலையை இந்தச் சிறை உண்டாக்க வேண்டும். பல பட்டதாரிகள் இங்கிருந்து வெளியேற வேண்டும். நல்ல தரமான நூலகம் அமைக்கவும் ஆவன செய்ய உள்ளோம். புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. பொருளாதார வளர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு இருந்தாலே குற்றங்கள் குறையும். இச் சிறையில் இன்னும் சில வசதிகளை மேம்படுத்த ரூ.15 கோடி செலவில் பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதல்வர் ரங்கசாமி.
மு.ராமதாஸ் எம்.பி., , சிறைத்துறைத் தலைவர் வாசுதேவராவ், காவல்துறைத் தலைவர் கான், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சந்திரபால் சிங் மற்றும் பலர் பங்கேற்றனர்.
புதுவையில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா: தலைவர்கள் அஞ்சலி!-----ஏ.சுகுமாரன்

முருகா அருகில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி மாலை அணிவித்தார்புதுச்சேரி அரசு மற்றும் செய்தி விளம்பரத்துறை சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கந்தசாமி, சபாநாயகர் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன்பேராசிரியர் ராமதாஸ் எம்.பி., தலைமை செயலாளர் நைனீ. ஜெயசீலன், , பொது செயலாளர் காந்திராஜ், அங்காளன் எம்.எல்.ஏ., உழவர்கரை நகராட்சி தலைவர் ஜெயபால், சேவாதள தலைவர் தாமோதரன், மகளிர் அணி தலைவி ழான்.பூரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.பிறகு மகளிர் காங்கிரஸ் சார்பில் வாகன பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மகளிர் காங்கிரஸ் தலைவர் ழான்.பூரணி தலைமை தாங்கினார். பேரணியில் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கந்தசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி. சுப்ரமணியன், மகளிர் ஆணைய தலைவி கமலினி, மேரிதெரசா, மார்க்ரேட், மணிமேகலை, கவுன்சிலர் பிரேமலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.பேரணி ராஜீவ்காந்தி சிலையில் இருந்து புறப்பட்டு காமராஜர் சாலை, நேருவீதி, மிஷன்வீதி, காந்தி வீதி, அண்ணாசாலை, வெங்கடசுப்பாரெட்டியார் சிலை, இந்திராகாந்தி சிலை வழியாக மீண்டும் ராஜீவ்காந்தி சிலை அருகே சென்று முடிவடைந்தது

திடீர் திருப்பம் ! பாகிஸ்தான் மீது தான் என் முதல் காதல் ,வெளியேற மாட்டேன்முஷரப் அறிவிப்பு --!-----ஏ.சுகுமாரன்
பாகிஸ்தான் ஜனாதிபதியாக இருந்தவர் முஷரப். அவர் பதவி விலகவேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டுவருவோம் என்றும் ஆளும் கூட்டணி அறிவித்தது. கண்டன தீர்மானத்தை தவிர்க்கும் வகையில் முஷரப் பதவி விலகினார். அவர் அமெரிக்கா செல்லப்போகிறார் என்றும், இங்கிலாந்தில் வசிக்கப்போகிறார் என்றும் வதந்திகள் உலா வந்தனர். இந்த வதந்திகளை முஷரப் மறுத்தார்.பாகிஸ்தான் மீது தான் என் முதல் காதல் என்றும், அதை விட்டு வெளியேற மாட்டேன் என்றும் முஷரப் அறிவித்து இருக்கிறார்.
இந்தி சினிமா பாடகர் முகமது ரபியின் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் பாடிய பாடல்களில் ஒன்று, ஓ பறவையே வா, பறந்து செல்வோம் (சல் உர் ஜா ரே பஞ்சி) என்பது ஆகும். நான் பறவை அல்ல. பறந்து செல்வதற்கு. நான் பாகிஸ்தான் நாட்டையும், மக்களையும் நான் மிக அதிகமான அளவில் நேசிக்கிறேன். எனவே நான் பாகிஸ்தானை விட்டு வெளியேற மாட்டேன் என்று கூறியதாக ஒரு சேனல் பேட்டியில் தெரிவித்து உள்ளது.

Wednesday, August 20, 2008

செய்திகள் ஆக்ஸ் 20 மணி 7.40 AM

நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தம -----தொ.மு.ச.கலந்துகொள்ளவில்லை : அரசு பஸ்கள் ஓடும் !-----ஏ.சுகுமாரன்
விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும், 6-வது ஊதியக் குழுவில் ஊழியர்களுக்குப் பாதகமாக உள்ள பரிந்துரைகளைக் களைய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தைத் தொடர வேண்டும், பொதுவைப்பு நிதி வட்டி விகிதத்தை 12 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இடதுசாரி கட்சிகளின் துணை அமைப்புகளான சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் புதன்கிழமை நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு தமிழக அரசு தார்மிக ஆதரவு தெரிவித்துள்ளது. எனினும் இப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்துக்கு தார்மிக ஆதரவு உண்டு. ஆனால், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதில்லை. எனவே, அரசு பஸ்கள் வழக்கம் போல புதன்கிழமை ஓடும்'' என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. என். நேரு அறிவித்துள்ளார்.
போக்குவரத்துத் துறையைப் பொறுத்தவரை தொ.மு.ச. பேரவைதான் வலிமை வாய்ந்தது. அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலான பஸ்கள் வழக்கம் போல இயங்கும் எனத் தெரிகிறது.
"சென்னை நகரில், 50 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்குகின்றன. அதில், பாதிக்கும் மேற்பட்டவை புதன்கிழமை இயங்காது என ஆட்டோ தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. ரயில் மறியல் போராட்டத்தில் இறங்குவோம்' என இடதுசாரி கட்சிகளின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
வங்கிப் பணிகள் பாதிக்கும்... அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதால் வங்கிப் பணிகள் பாதிப்படையும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிர்ச்சி செய்தி ! இந்தியாவில் லட்சம் கோடிக்கு கள்ளநோட்டு: !மத்திய அரசுன் வெள்ளை அறிக்கை கோருகிறது பா.ஜ.க. !--ஏ.சுகுமாரன்

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ போன்ற இந்திய எதிர்ப்பு சக்திகள், இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்தில் பல நூறு கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகளை இந்தியச் சந்தையில் புழக்கத்தில் விட்டிருக்கின்றன. வங்கதேசம், நேபாளம் ஆகியவற்றின் எல்லை வழியாக இந்தக் கள்ளநோட்டுகள் இந்தியச் சந்தைக்குள் புகுத்தப்பட்டுள்ளனஇந்தியாவுக்குள் ரூ.1,69,000 கோடி அளவுக்கு கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டு இருக்கலாம் என்று அரசு அதிகாரிகள் குழுவொன்று மதிப்பிட்டுள்ளது. எனவே அப் பிரச்னை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். நாட்டின் பல பகுதிகளில் இந்தக் கள்ளநோட்டுகள் பிடிபட்டுள்ளன. பாரத ஸ்டேட் வங்கியிலேயே இந்தக் கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. . . என்றார்.பெங்களூரில் நிருபர்களிடம் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்

புதுவையில் மின்வெட்டு ! தொழிற்பேட்டையில் 65 சதம் ! தொழில்முனைவோர் பாடாய்படுகின்றனர் !----ஏ.சுகுமாரன்

புதுச்சேரி மேட்டுப்பாளையம், சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் 65 சதம் மின்வெட்டு நிலவுவதாக புதுச்சேரி மாநில தொழில் முனைவோர் கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் புதுச்சேரி சேம்பர் ஆப் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் கனகசபாபதி செய்தியாளர்களிடம் பேசும்போது புதுச்சேரியில் அமைந்துள்ள மிகப்பெரிய தொழிற்பேட்டைகளான மேட்டுப்பாளையம், சேதராப்பட்டில் உள்ள சிறு மற்றும் குறுந்தொழில்கள் வரலாறு காணாத வகையில் மோசமான மின்வெட்டைச் சந்தித்து வருகின்றன. இதனால் 50 சதவீத தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மின்வெட்டு தொடங்கியவுடன் மின் பற்றாக்குறையைப் போக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி, மின்துறை அமைச்சர் வைத்திலிங்கம், மக்களவை உறுப்பினர் மு.ராமதாஸ், தொழிற்சங்கத் தலைவர் விசுவநாதன், கண்காணிப்புப் பொறியாளர் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோருக்கு மே மாதமே கோரிக்கை வைத்தோம். புதிய ஆளுநராகப் பொறுப்பேற்ற கோவிந்த்சிங் குர்ஜாரிடமும் இக் கோரிக்கையை வைத்தோம். விரைவில் தீர்வு காண்பதாக அவர் கூறியது ஆறுதலாக இருக்கிறது. பெரிய நுகர்வோருக்கு மின்வெட்டு செய்யாமல் சிறு தொழில்கள் மீது முழுமையாகத் திணிப்பது சிறு தொழில் முனைவோருக்குப் பெரிய பாதிப்பை உருவாக்கியுள்ளது.
சிறு மற்றும் குறுந்தொழில்கள் மீது விதிக்கப்பட்டுள்ள மின்வெட்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் 14 மணி நேரம் என்பது எங்கும் காண முடியாத மின்வெட்டாகும். பத்து நாள்களில் நிலைமை சீராகும் என்று மின்துறை சமாதான வார்த்தை கூறியிருந்தது. இருப்பினும் மூன்று மாதங்களுக்கு மேலாக சிறு தொழில்கள் மின் வெட்டால் தவித்துக் கொண்டிருக்கின்றன.
உற்பத்தியில்லாமலும், சப்ளை தாமதத்தாலும் சிறு தொழில்கள் ஆர்டர்கள் இழந்தன. அபராதங்கள் ஏற்றன. பணப்பட்டுவாடா தடைப்பட்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலை மேலும் தொடர்ந்தால் தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பது தவிர்க்க முடியாததாகி விடும்.
எனவே புதுச்சேரி அரசு இனியும் காலம் கடத்தாமல் மின்வெட்டை குறைக்க வேண்டும் என்றார் அவர்.
ஊனமுற்றோருக்கு பல சலுகைகள்--கருணாநிதி அறிவிப்பு ! இனி அரசு பஸ்களில் 25 சதவீத கட்டணம !---ஏ.சுகுமாரன்

தமிழக அரசு பஸ்களில் அனைத்து ஊனமுற்றவர்களும் நான்கில் ஒரு பங்கு கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்பது உள்பட பல்வேறு சலுகைகளை முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் நேற்று (19.8.2008) சந்தித்து, ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான கோரிக்கைகளை அளித்தனர். ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அரசாணைகள் வெளியிடப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார்.
கடந்த 2 ஆண்டுகளில் நிரப்பப்பட்ட சுமார் 3 லட்சம் அரசுப் பணியிடங்களில் 3 சதவீதம் அதாவது ஏறத்தாழ 9 ஆயிரம் பணியிடங்கள் ஊனமுற்றோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இப்பணியிடங்களில் ஊனமுற்றோர் பணி நியமனம் பெறுவதை உறுதி செய்யும் வகையில் சமூக நலத்துறை அமைச்சரின் தலைமையில் செயலாளர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு கண்காணிக்கும்.
* அனைத்து வகை ஊனமுற்றோருக்கும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் ரெயில் கட்டணச் சலுகை போல் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி பயணம் செய்ய சலுகை அளிக்கப்படும். பெருந்தொழிற்சாலைகளை தமிழகத்தில் நிறுவ முன்வரும் தொழில்முனைவோருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் போது ஊனமுற்றோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டுகோள் விடுக்கப்படும்.
* ஊனமுற்றோர் சுயவேலைவாய்ப்பு பெறும் வகையில், அண்மையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஊனமுற்றோர் செலுத்த வேண்டிய 5 சதவிகித பங்குத் தொகையினையும் (ஓன் காண்டிரிபூஷன்) தமிழக அரசே ஏற்று மத்திய அரசின் மானியத்துடன் வங்கிக் கடன் பெற்று சுயவேலைவாய்ப்புகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இரண்டாண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றி வரும் ஊனமுற்றோருக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிலையங்கள் மற்றும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் ஊனமுற்றோருக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழுவிலக்கு அளிக்கப்படும்.

* பார்வையற்றோருக்கு வழங்கப்படுவது போன்றே அனைத்து வகை ஊனமுற்றோருக்கும் வேலைவாய்ப்பற்றோர் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
* ஊனமுற்றோருக்கு வேலைவாய்ப்பு பெறும் தகுதியை மேம்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் தங்கும் விடுதியுடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையம் மூன்றாண்டுத் திட்டமாக அரசு நிதி உதவியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் தொடங்கப்படும். ஊனமுற்றோர் நலனுக்கான ஒரு தனி கொள்கை உருவாக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங்-சோனியா-கருணாநிதிக்கு கவுரவ டாக்டர் பட்டம்----சென்னை பல்கலைக்கழகம் வழங்குகிறது ----ஏ.சுகுமாரன்

சென்னை பல்கலைக்கழக 150-வது ஆண்டுவிழா நிறைவு விழா செப்டம்பர் மாதம் 5-ந் தேதி நடக்க உள்ளது. விழாவுக்கு கவர்னரும் சென்னை பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித் சிங் பர்னாலா தலைமை தாங்குகிறார். உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி முன்னிலை வகிக்கிறார்.விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பிரதமர் மன்மோகன்சிங், சோனியாக காந்தி, முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் 3 பேருக்கும் அவர்களின் அரசியல் மற்றும் பொதுநலச்சேவையை பாராட்டி சென்னை பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டங்களை கவர்னர் பர்னாலா வழங்குகிறார்.
விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், உயர் கல்வித்துறை செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி சென்னை பல்கலைக்கழகம் விழாக்கோலம் காணஉள்ளது. தமிழ்நாட்டில், புதுவையில்

கடுமையான டீசல் தட்டுப்பாடு ! பொதுமக்க்ள் அவதி ! காரணத்தை விளக்குகிறார் மத்திய மந்திரி !

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. விற்பனை நிலையங்களில் குறைந்த அளவே டீசல் வினியோகம் செய்யப்படுகிறது.பெரும்பாலான விற்பனை நிலையங்களில் டீசல் இருப்பு இல்லை என்ற அறிவிப்பும் காணப்படுகிறது. சில விற்பனை நிலையங்கள் மூடப்பட்டும் விட்டன.
இதனால் லாரி, கார், ஆட்டோ போன்ற வாகனங்களை வைத்திருப்போர் டீசல் கிடைக்காமல் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மேலும், மாநிலத்தின் சில பகுதிகளில் சரக்கு வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடுக்கு காரணம் என்ன? என்பது குறித்து மத்திய மந்திரி விளக்கம் அளித்தார்.
, நாட்டின் பல்வேறு பகுதியில் ஏற்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வது குறித்தும், பொது மக்களுக்கு காலதாமதம் இன்றி சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பாகவும் மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி முரளி தியோரா, எண்ணை நிறுவன அதிகாரிகளுடன் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார்.3 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.பின் மத்திய மந்திரி முரளி தியோரா கூறியதாவது:-தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாத காரணத்தால் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக எண்ணை நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு எரிபொருட்களை எடுத்துச் செல்லும் லாரிகளால் ஏற்படும் காலதாமதம்தான் தமிழகத்தின் டீசல் தட்டுப்பாட்டிற்கு காரணம். இப்பிரச்சினை தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் டீசல் தட்டுப்பாடு எதுவும் ஏற்பட வாய்ப்பே இல்லை.தொழிற்சாலைகள் தேவைக்காக டீசலை அதிக அளவில் கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு டீசல் விலையை அதிகரிப்பது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதனை மத்திய அரசு விரைவில் அமலுக்கு கொண்டு வரும்.இவாறு முரளி தியோரா கூறினார்.

குப்பை கூடை ஆகிறது டெல்லி ! தினமும் டெல்லியில் குவியும் 12,000 டன் எலக்டிரானிக் குப்பை ! சுற்றுச்சூழல் பாதிப்பு !----ஏ.சுகுமாரன்

நாடு முழுவதும் எலக்டிரானிக் கழிவுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. சுற்றுச்சூழல் சீர்கேடுக்கு காரணமாக எலக்டிரானிக் குப்பை கருதப்படுகிறது. செல்போன், டிவி, கம்ப்யூட்டர் உட்பட எலக்டிரானிக் பொருட்கள் கைவிடப்படுவதே எலக்டிரானிக் குப்பை எனப்படுகிறது. எலக்டிரானிக் கழிவுகள் குவிக்கப்படும் நகராக டெல்லி மாறி வருவதாக அசோசேம் அறிக்கை தெரிவிக்கிறது. அங்கு தினமும் 2,000 லாரிகளில் 12,000 டன் எலக்டிரானிக் குப்பைகள் குவிக்கப்படுகின்றன
மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடக மாநிலங்களில் மட்டும் தினமும் 25,000 டன் எலக்டிரானிக் கழிவுகள் ஏற்படுகின்றன. மும்பை, சென்னை, பெங்களூர் நகரங்களுக்கு அனுப்பப்படும் ஆயிரக்கணக்கான டன் கழிவுகள் கடைசியில் டெல்லியை அடைகின்றன. அங்கு துர்க்மன் கேட், சாஸ்திரி பார்க், லோனி, சீலாம்பூர் ஆகிய பகுதிகளில் கழிவுப் பொருட்கள் வர்த்தகர்கள் மூலம் அதிகளவில் வாங்கப்படுகின்றன. இதுபோல, மும்பையில் இருந்து மட்டும் தினமும் 70 டன் வரை கழிவுகள் கொண்டு சேர்க்கப்படுகின்றன. அவற்றைத் தரம் பிரிப்பது, மறுசுழற்சி செய்வது ஆகிய பணிகளில் டெல்லியில் உரிய அங்கீகாரம் இல்லாமல் சுமார் 30,000 பேர் பணியாற்றுகின்றனர். வளர்ந்த நாடுகளில் உருவாகும் மொத்த எலக்டிரானிக் கழிவுகளில் சுமார் 25 சதவீதம் மலிவான இறக்குமதிகள் மூலம் டெல்லிக்கு வந்து சேர்கிறது.

Tuesday, August 19, 2008

செய்திகள் ஆக்ஸ் 19 மணி 7.50 AM

அசோசேம்' தரும் அதிர்ச்சி தகவல்கள் : ஆண்டுக்கு ரூ. 50,000 கோடி நஷ்டம் -- ஏ.சுகுமாரன்
தொழில்துறை சம்மேளனங்களின் கூட்டமைப்பான "அசோசேம்' தொழில்துறை தலைமை நிர்வாகிகள் 400 பேரிடம் நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரியவந்துள்ளதுஇந்திய உணவுக் கார்ப்பரேஷன் (எஃப்சிஐ) கிடங்குகளில் 6 கோடி டன் உணவுப் பொருள் முறையான ஒருங்கிணைப்பு இல்லாததால் முடங்கிக் கிடக்கிறது. இதைப் பராமரிக்க ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் கோடியைஅரசுசெலவிடுவதாகவும் "அசோசேம்' குறிப்பிட்டுள்ளதுகாய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. ஆனாலும் 40 சதவீத உற்பத்தி அழுகி வீணாவதாக "அசோசேம்' தலைவர் சஜன் ஜின்டால் தெரிவித்துள்ளார்மாநில அரசு மற்றும் மத்திய அரசுகள் கொண்டு வரும் திட்டப் பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்படும் கால தாமதம்வும் , கண்காணிக்கும் அமைப்பு இல்லாதது காரணமாகவும் ரூ. 40 ஆயிரம் கோடி முதல் 50 ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. .

புதுவையில் தனியார் பஸ்களில் மட்டும் கட்டணம் உயர்வு-----ஏ.சுகுமாரன்

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம், கடலூர், திண்டிவனம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் தனியார் பஸ்களின் கட்டணங்களும் உயர்ந்துள்ளன. புதுச்சேரி அரசின் பர்மிட்டில் இந்த ஊர்களுக்குச் செல்லும் பஸ்களில் இக் கட்டண உயர்வை தனியார் பஸ் உரிமையாளர்கள் அமல்படுத்தியுள்ளனர். புதுச்சேரியில் அரசின் அனுமதியின்றி தனியார் பஸ் கட்டணம் திடீரென்று திங்கள்கிழமை முதல் உயர்த்தப்பட்டுள்ளது அதே சமயம் இந்த ஊர்களில் இருந்து தமிழக அரசின் பர்மிட்டில் புதுச்சேரிக்கு வரும் பஸ்களில் பழைய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் செல்லும் தனியார் பஸ்களில் கட்டணம் ரூ.11-லிருந்து ரூ.12-ஆக வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரியில் பஸ் கட்டணத்தை உயர்த்தக் கோரி தனியார் பஸ் உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். முதல்வர் ரங்கசாமி முதலியவர்களிடம் மனு அளித்தனர். ஒரு நாள் பஸ்ûஸ நிறுத்தி போராட்டமும் நடத்தினர். கட்டணஉயர்வு குறித்து புதுச்சேரி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பா.கண்ணன்கடந்த 6 ஆண்டுகளாக புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் டீசல் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. இது தொடர்பாக அரசிடம் பலமுறை முறையிட்டுள்ளோம். எங்களால் மேற்கொண்டு தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்த கட்டண உயர்வை அமல் செய்துள்ளோம். குறைந்தபட்சம் 50 பைசா உயர்வும், அதிகபட்சம் ரூ.1 என்ற அளவில்தான் உயர்த்தியுள்ளோம். இந்த கட்டண உயர்வும் போதாது. மேலும் அரசு கூடுதலாக ரூ.1 உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்றார்.

நாளை நாடு முழுவதும் பஸ், லாரி, ஆட்டோக்கள் ஓடாது ! தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு ! --ஏ.சுகுமாரன்

விலை உயர்வை கட்டுப்படுத்துதல், பொதுவிநியோக முறையை விரிவுபடுத்துதல், குறைந்தபட்ச கூலி, வேலைநேரம், சமூகப் பாதுகாப்பு, பணியிட பாதுகாப்பு போன்ற தொழிலாளர் நல சட்டங்களை கடுமையாக அமல்படுத்துதல், 6-வது சம்பள கமிஷனில் உள்ள பாதகமான அம்சங்களை நீக்குதல், வராக்கடனை வசூலித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (20-ந் தேதி) பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன பொது வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது தமிழ்நாட்டில் பஸ், லாரி, ஆட்டோக்கள் ஓடாது என்று சி.ஐ.டி.ï., ஏ.ஐ.டி.ï.சி. தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் 7 கோடி பேர் கலந்துகொள்கின்றனர். தமிழ்நாட்டில் 70 லட்சம் பேர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். வேலைநிறுத்தம் காரணமாக பஸ், லாரி, ஆட்டோக்கள் ஓடாது. சென்னையில் உள்ள 80 ஆயிரம் ஆட்டோக்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடாது.சென்னையில் திருவொற்றிïர், மணலி, ஆவடி, அம்பத்தூர், குறளகம், பனகல் மாளிகை ஆகிய 6 இடங்களில் சாலை மறியலும், ஆவடியில் ரெயில் மறியல் போராட்டமும் நடைபெறும். இதுபோல மாவட்டங்களிலும் சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும். இதற்கு பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்.இவ்வாறு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன், ஏ.ஐ.டி.யு.சி. மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.தியாகராஜன் ஆகியோர் கூறினர்.

திண்டிவனம் அருகே நடந்தபோலீஸ் தடியடி : கருணாநிதி நீதி விசாரணைக்கு உத்தரவு ! காயம் அடைந்த சிறுவனுக்கு நிதி உதவி ! ஏ.சுகுமாரன்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ரெட்டணை என்ற கிராமத்தில் `தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்' கீழ் வேலை செய்த அனைவருக்கும் தலா ரூ.80 ஊதியம் வழங்கக்கோரி கடந்த 16-ந் தேதி மறியல் போராட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. அப்போது, போலீசார் தடியடி நடத்தினார்கள்.இதில், சிறுவன் ஒருவன் படுகாயம் அடைந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த முதல்-அமைச்சர் கருணாநிதி, உண்மை நிலையை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். அமைச்சர் பொன்முடி, மத்திய மந்திரி வேங்கடபதி மற்றும் மாவட்ட கலெக்டர் பழனிசாமி, போலீஸ் சூப்பிரண்டு அமல்ராஜ் ஆகியோர் ரெட்டணை கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி, .அறிக்கை சமர்ப்பித்தனர்மேலும் திண்டிவனம் அருகே நடந்த போலீஸ் தடியடி குறித்து நீதி விசாரணை நடத்த முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். மேலும், காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டார்.

திடீர் பஸ் கட்டண உயர்வுக்கு கடும் நடவடிக்கை எடுக்க ஷாஜகான் உத்தரவு --ஏ.சுகுமாரன்

புதுச்சேரியில் உள்ள தனியார் பஸ்களில் கட்டணம் திடீர் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று காலை முதல் அமலுக்கு வந்தது. இதில் கடலூருக்கு 50 பைசாவும், விழுப்புரத்திற்கு ரூ. 1 உயர்த்தப்பட்டு உள்ளது. "அரசு அனுமதி பெறாமல் பஸ் கட்டணத்தை உயர்த்த கூடாது. இதையும் மீறி பஸ் உரிமையாளர்கள் பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் படி போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டு உள்ளேன். அவர்களும் தங்களது பணியில் இறங்கி விட்டனர்.இவ்வாறு அமைச்சர் ஷாஜகான் கூறினார்.

கம்ப்ïட்டரில் இருந்து செல்போனை தொடர்பு கொள்ள இன்டர்நெட் தொலைபேசிக்கு அனுமதி---ஏ.சுகுமாரன்

தற்போது இரண்டு கம்ப்ïட்டர்களுக்கு இடையே மட்டும் `வாய்ஸ் மெயில்' மூலமாக தொடர்பு கொள்ள முடியும். செல்போன் அல்லது சாதாரண தொலைபேசியில் இருந்து கம்ப்ïட்டரை தொடர்பு கொள்ள முடியாது. ஆனால் `டிராய்' அனுமதியை தொடர்ந்து இனிமேல் தனிப்பட்ட கம்ப்ïட்டரில் இருந்து சாதாரண தொலைபேசி மற்றும் செல்போன்களை தொடர்பு கொள்ளலாம்.இன்டர்நெட் தொலைபேசி வசதிக்கு `டிராய்' (தகவல் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்) நேற்று அனுமதி அளித்தது. இதனால் எஸ்.டி.டி. பேசுவதற்கான கட்டணங்கள் பெரிய அளவில் குறையும்

நேபாள முதல் பிரதமராக பிரசாந்தா பதவி ஏற்றார் ! குடியரசு மலர்ந்தது ! ---ஏ.சுகுமாரன்

நேபாள குடியரசின் முதல் பிரதமராக பிரசாந்தா என்கிற புஷ்ப கமல் டஹல் நேற்று பதவி ஏற்றார். ஜனாதிபதி மாளிகையில் பதவி ஏற்பு விழா நடந்தது. அவருக்கு ஜனாதிபதி ராம் பரண் யாதவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இந்த விழாவில் வெளிநாட்டு தூதர்கள், கட்சித்தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்திய அரசியல் கட்சி தலைவர் சரத் யாதவ் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

வங்கிகள் சிறு தொழில் கடன்களை அள்ளி வழங்குகிறது ! இரு மாதத்தில் ரூ.60,000 கோடி --ஏ.சுகுமாரன்

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் சிறு தொழில்களுக்கு வழங்கப்பட்ட கடன் அளவு 52 சதவீதம் அதாவது ரூ.60,398 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. 2007ம் ஆண்டில் இதே காலத்தில் கடனின் அளவு 29.5 சதவீதம்தான் அதிகரித்தது. மே மாதம் 23ம தேதி நிலவரப்படி சிறு தொழில்களுக்கு வழங்கப்பட்டு நிலுவையில் உள்ள கடனின் மொத்த அளவு ரூ.1,76,282 கோடி ஆகும்.
நடப்பு ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங் சிறுதொழில்களுக்கு வழங்கப்படும் கடனின் அளவை 29 சதவீதம் உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ ஏற்கெனவே சென்ற ஆண்டைவிட 30 சதவீதம் கூடுதலாக சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடனவழங்கி இருப்பதாக அந்த வங்கியின் அதிகாரி ஒருவர் கூறினார். யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் சிறுதொழில் கடன் வளர்ச்சி இலக்கு 35 சதவீதம் ஆகும். ஆனால் 2008 ஜூன் மாதத்திற்குள் சிறு தொழில் கடன் 41 சதவீதம் அதிகரித்துள்ளது. இக்காலத்தில் வழங்கப்பட்ட கடன் தொகை அளவு ரூ 12,630 கோடி. ஆனால் 2007 ஜூன் மாத இறுதிவரை வழங்கப்பட்ட கடன் அளவு ரூ 8,962 கோடிதான். பரோடா வங்கி நடப்பு ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு ரூ.13,000 கோடி கடன் வழங்கி உள்ளது. இது சென்ற ஆண்டைவிட 18 சதவீதம் கூடுதலாகும். ஆனால் தமிழ் நாட்டில் எத்தனை பெயர் பயன் பெற்றனர் என்ற விபரம் தெரியவில்லை

Monday, August 18, 2008

செய்திகள் ஆக்ஸ் 18 மணி 8.05 AM

கள்ள நோட்டுகளை தடுக்க செயற்கை பாலிமரால் ஆன ரூபாய் நோட்டுகள் ஏ.சுகுமாரன்
ஆஸ்திரேலிய அரசின் தொழில்நுட்ப உதவியுடன் பாலிமரால் ஆன ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. கள்ள ரூபாய் நோட்டுப் புழக்கத்தைத் தடுக்க முடியும் என்பதால் இதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இது காகித நோட்டுகளை விட நான்கு மடங்கு அதிக காலம் நீடித்திருக்கக் கூடியது.காகித ரூபாய் நோட்டுகளை மறு சுழற்சி செய்வதைப் போல பாலிமர் நோட்டுகளை மறு சுழற்சி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லை அதே நேரத்தில் காகித நோட்டுகளை விட நான்கு மடங்கு அதிக காலம் நீடித்திருக்கக் கூடியது.
ஏர் இந்தியா சாதனை -ரூ. 2,100 கோடி நஷ்டம் ஏ.சுகுமாரன்

ஏர் இந்தியா நிறுவனத்தின் நஷ்டம் ரூ. 2,100 கோடியாக உயர்ந்துள்ளது. விமான எரிபொருள் விலையேற்றம் காரணமாக இது மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதுஅதிகரித்து வரும் நஷ்டத்தைக் கட்டுப்படுத்த ஏர் இந்தியா நிறுவனம் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது. செலவுக் குறைப்பு ஆலோசனைகளை ஏர் இந்தியாவின் நிதித்துறை பரிந்துரைத்துள்ளது. அதைத் தீவிரமாக அமல்படுத்த ஏர் இந்தியா நிர்வாகம் முடிவு செய்துள்ளதுமுதல் கட்டமாக ஏர் இந்தியா அதிகாரிகள் அடிக்கடி வெளிநாடு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்ல வேண்டுமெனில் அதற்கு ஏர் இந்தியா தலைவரின் அனுமதி பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. விமான பைலட்டுகள் மற்றும்பணிப்பெண்கள் தவிர மற்றவர்கள் யாரும் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது. அவ்விதம் செல்லும் விமான ஊழியர்கள், ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான அறைகள் அல்லது குறைந்த வாடகை ஹோட்டல்களில் மட்டுமே தங்கவேண்டும். இவாறு பலசிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
சனிக்கிழமையும் பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்க கோரிக்கை ஏ.சுகுமாரன்
புதுச்சேரி ஆசிரியர் சங்கம் தலைவர் வாசுதேவன்,
பொதுச்செயலர் நா. சந்திரசேகரன் ஆகியோர்
வெளியிட்ட அறிக்கையில் ஷிப்ட் முறையில் இயங்கும்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமையும் சிற்றுண்டி
வழங்க வேண்டும் என்று புதுச்சேரி ஆசிரியர் சங்கம்
வலியுறுத்தியுள்ளது. தவிர்க்க இயலாத காரணத்தால் சில அரசுப்
பள்ளிகள் ஷிப்ட் முறையில் இயங்கி வருகின்றன.
அதனால் அப் பள்ளி மாணவர்கள் சனிக்கிழமையும்
பள்ளிக்கு வருகின்றனர். மற்ற நாள்களில் பள்ளியில் காலைச் சிற்றுண்டி
வழங்கப்படுவதால் வீட்டில் சாப்பிடாமலேயே வரும்
மாணவர்கள், சனிக்கிழமையும் அதுபோலவே வந்து வாடி
வதங்குகின்றனர். மேலும் சனிக்கிழமைகளில் மாணவர் வருகை குறைந்து வருகிறது. இதைப் போக்க ஷிப்ட் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை
காலை, மாலை சிற்றுண்டி மற்றும் பால் வழங்கும்
வகையில் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கல்வியமைச்சர், இயக்குநரிடம் மனு
அளித்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.

முரசொலி மாறன் 74-வது பிறந்த நாள்-- மலரஞ்சலி ஏ.சுகுமாரன்
மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 74வது
பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர்
கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் மலரஞ்சலி
செலுத்தினர்.சென்னை கோடம்பாக்கத்தில்
முரசொலி அலுவலக வளாகத்தில் உள்ள முரசொலிமாறன் முழு
உருவச்சிலை வண்ணமலர்களால்
அலங்கரிக்கப்பட்டு, ஆளுயர மாலையும் அணிவிக்கப்பட்டிருந்தது.முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று காலை 9.30 மணிக்கு
முரசொலி அலுவலகம் வந்தார். அங்குள்ள முரசொலி மாறன் சிலைக்கு மலர்தூவி
வணங்கினார். அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு
வீராசாமி, பரிதி இளம்வழுதி, கீதா ஜீவன், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு,
ராஜா, ராதிகா செல்வி உள்ளிட்டோரும், திமுக தலைவர்களும் மாறனுக்கு
அஞ்சலி செலுத்தினர்.விடுதலைச் சிறுத்தைகள்
கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் மாறனுக்கு
அஞ்சலி செலுத்தினர்.உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சியில்
முரசொலி மாறன் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
கன்னியாகுமரியில் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன், மாறன் படத்திற்கு அஞ்சலி
செலுத்தினார். சன் பௌண்டேசின் ஒரு கோடி ரூபாய்க்கு நல உதவி
திட்டங்களை அறிவித்து
உள்ளது
அரசியலில் 3-வது அணிக்கு இடம் இல்லை ! காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேட்டி -ஏ.சுகுமாரன்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு கட்சியின் செயல்வீரர்கள்
கூட்டத்தில் கலந்து கொள்ள விருதுநகர் வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி
அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-பெருந்தலைவர் காமராஜரின் வாரிசுகள் யாரும் சிரமப்படாமல் காங்கிரஸ்
கட்சி பார்த்துக்கொள்ளும். தமிழகத்தில் எந்த காங்கிரஸ்காரருக்கு எந்த பிரச்சினை வந்தாலும் காங்கிரஸ் கட்சி அவர்களுக்கு தேவையான உதவிகளை
செய்ய தயாராக உள்ளது.அவரது தங்கை மகள் கமலாதேவி அம்மையாரின்
மருத்துவ செலவுக்காக ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று அவரிடம் நேரடியாக ரூ.3 ஆயிரம்
உதவித்தொகை வழங்கப்படும்.
இன்னும் 10 மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில்
பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் பிரதமராகி ஆட்சி
அமைக்க, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி உழைக்க வேண்டும் என்பது முதல் கடமை.என்றார்


சட்டம்- ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் --புதுச்சேரி கவர்னர் கோவிந்த்சிங் குர்ஜார் நடத்தினார்.ஏ.சுகுமாரன்
புதுச்சேரி மாநில கவர்னராக கோவிந்த்சிங் குர்ஜார் பொறுப்பேற்ற பின்பு, புதுச்சேரி மாநில சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்க கவர்னர் கோவிந்த்சிங் குர்ஜார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் கவர்னர் கோவிந்த்சிங் குர்ஜார் தலைமையில் நடந்தது இந்த கூட்டத்திற்கு கவர்னர் கோவிந்த்சிங் குர்ஜார் தலைமை தாங்கினார். தலைமை செயலாளர் (பொறுப்பு) நைனீ ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் டி.ஜி.பி. கான், ஐ.ஜி. வாசுதேவராவ், டி.ஐ.ஜி. ஏ.கே.சிங், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திண்டிவனம் அருகே சாலைமறியல்-- துப்பாக்கி சூடு: ஏ.சுகுமாரன்

திண்டிவனம் அருகே உள்ள ரெட்டணையில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தியபோது போலீசார் தடியடியும் துப்பாக்கி சூடும் நடத்தினார்கள். இந்த சம்பவத்தில் ரெட்டணை கிராம பஞ்சாயத்து தலைவர் கலைச்செல்வன், அவருடைய தம்பி தமிழ்ச்செல்வன் உள்பட பலர் காயம் அடைந்தனர்.போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியபோது துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு மூர்த்தி (15) என்பவரின் தோளில் பாய்ந்தது. இதில் காயமடைந்த மூர்த்திக்கு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதுஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மூர்த்தியை திண்டிவனம் எம்.பி. தன்ராஜ் பார்த்து நலம் விசாரித்தார். பின் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மூர்த்திக்கு தமிழக அரசு ரூ.1லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்கவேண்டும்.என்று தன்ராஜ் எம்.பி. கூறினார்.

Saturday, August 16, 2008

செய்திகள் ஆக்ஸ் 16 மணி 8.10 AM

விரைவில் சந்திரனுக்கு செயற்கை கோள்-- சந்திராயண்-௧ விண்ணுக்கு அனுப்பப்படும் : பிரதமர் ஏ.சுகுமாரன்
62-வது சுதந்திர தின உரையில் பிரதமர் இந்த ஆண்டுக்குள் சந்திராயண்-1 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்படும் என தெரிவித்தார். சந்திராயண் விண்கலத்தை அனுப்புவது இந்திய விண்வெளித்துறையில் முக்கிய மைல்கல்லாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். இந்தியாவிலேயே தயாரான ஆளில்லாத விண்கலமான சந்திராயண்-1, வரும் அக்டோபர் மாதத்தில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவாண் விண்வெளி மையத்திலிருந்து அது ஏவப்பட இருக்கிறது.
சந்திரனுக்கு நெருக்கமாக 2 ஆண்டுகள் சுற்றிவந்து, தெளிவான படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும் பணியை சந்திராயண் மேற்கொள்ளும். சந்திரனைச் சுற்றி வரும் பாதையில் உள்ள அதிகமான வெப்பம் மற்றும் வெற்றிட சூழல் ஆகியவற்றில் சந்திராயாணின் செயல்பாட்டுத் திறன் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றது இதனிடையே, சந்திரனில் இறங்கி அங்குள்ள பாறைகளை சேகரிக்கும் சந்திராயண்-2 விண்கலத்தை உருவாக்கும் பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணியில் ரஷியாவும் இந்தியாவும் கூட்டாகச் செயல்படுகின்றன
7,172 விவசாயிகள் கடன் ரத்து ! விவசாயக் கடனுக்கான வட்டியை 4 சதவீதமாகக் போகிறது : ரங்கசாமி சுதந்திர தினவிழா உரை ஏ.சுகுமாரன்

புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீஸôரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ரங்கசாமி ஏற்றுக் கொண்டார். பின்னர் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்களை அவர் வழங்கினார். அபோது அவர் ஆற்றிய உரை புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடந்த சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் ரங்கசாமி உரைஆற்றுகையில் விவசாயக் கடன் வழங்க 2008-09-ம் ஆண்டுக்கு ரூ.20 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிராம விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக வழங்கப்படும் விவசாயக் கடனுக்கான வட்டியை 7 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்க அரசு உத்தேசித்துள்ளது. மத்திய அரசு அறிவித்த 2008-ம் ஆண்டு விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் நிவாரணத் திட்டத்தை புதுச்சேரி மாநிலக் கூட்டுறவு வங்கியும் புதுச்சேரி மத்திய நிலவள வங்கியும் நடைமுறைப்படுத்தியுள்ளன. சுமார் ரூ.16.12 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 7,172 விவசாயிகள் பயன் பெற்றனர். விவசாயிகள் ஓர் ஏக்கரில் பசுந்தாள் தீவனம் வளர்க்கவும், பத்து கறவை மாடுகள் வாங்கவும் வங்கியிலிருந்து கடன் பெறவும் விவசாயிகள் வருமான உத்தரவாதத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஆண்டு ஒன்றுக்கு ஒரு விவசாயி குறைந்தபட்சம் ரூ.60 ஆயிரம் வரை வருமானம் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் இதுவரை 500 உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருவதால் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காரைக்கால் கீழவாஞ்சூரில் தனியார் முதலீட்டின் மூலம் முதல் கட்டப் பணியாக ரூ.350 கோடி செலவில் துறைமுகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. காரைக்காலின் சுற்றுலா வளத்தையும் பொருளாதார வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு இந்திய விமான ஊர்தி ஆணையர், பசுமை நில விமான நிலையம் அமைக்க சிபாரிசு செய்துள்ளார். இதற்கான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழ்வாழும் குடும்பங்களுக்கு அடுப்புடன் கூடிய சமையல் எரிவாயு இணைப்பு இலவசமாக வழங்கும் திட்டம் அமல் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 10 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறும் வகையில் 10.2.2006-ல் இத் திட்டம் தொடங்கப்பட்டது. இத் திட்டத்தின் கீழ் இதுவரை 24,434 சிகப்பு அட்டைதாரர்களுக்கு முழு அளவில் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் 22 ஆயிரம் சிகப்பு ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு இணைப்புகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் 12 ஆயிரம் அட்டைதாரர்கள் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்கள். தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்திச் செலவைக் குறைத்து உற்பத்தியைப் பெருமளவில் அதிகரிப்பதன் வாயிலாக விவசாயிகள் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வழிவகுக்கும். இத் திட்டத்துக்காக நடப்பு ஆண்டுக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2008-09-ம் ஆண்டுக்கான மின்விசை மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ரூ.37.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2008-09-ம் ஆண்டுக்காக பெற்றுள்ள திட்ட ஒதுக்கீடு ரூ.1,750 கோடி முழுவதும் புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சிக்காகச் செலவிடப்படும் என்றார் முதல்வர் ரங்கசாமி

வீராம்பட்டினம் தேர்த் திருவிழா ! ஆளுநர் வடம் பிடித்து தேரை இழுத்தார் ! ஏ.சுகுமாரன்
: புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயிலில் தேர்த்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கோவிந்த்சிங் குர்ஜார் வடம் பிடித்து தேரை இழுத்து தொடங்கி வைத்தார். புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி, மக்களவை உறுப்பினர் பேராசிரியர் மு.ராமதாஸ், எம்.எல்.ஏ. அனந்தராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இக் கோயிலில் ஆடிப் பெருவிழா ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் நடந்து வருகிறது. . தொடர்ச்சியாக பல்வேறு விழாக்கள் நடைபெறவுள்ளன. இம் மாதம் 22-ம் தேதி முத்துப் பல்லக்குடன் இந்தத் திருவிழா நடைபெறவுள்ளது.
10 லட்சம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 21% சதவீகித சம்பள உயர்வு --கருணாநிதி அறிவிப்பு ! ஏ.சுகுமாரன்
இந்தியாவின் 61-வது சுதந்திர தினவிழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.சென்னை கோட்டையில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.முதல்-அமைச்சர் கருணாநிதி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து திறந்த `ஜீப்` மூலம் வலம் வந்து, அங்கு கூடி இருந்த பொது மக்களுக்கு கையசைத்தபடி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார்.பின்பு முதல்-அமைச்சர் கருணாநிதி, கோட்டை கொத்தளத்திற்கு சென்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். . அதைத் தொடர்ந்து அவர் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். அப்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழக அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படுவதாக முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார் அரசு நிறைவேற்றிடும் திட்டப் பணிகளிலும் வளர்ச்சிப் பணிகளிலும் அரசு அலுவலர்களின் ஒத்துழைப்பும் கணிசமான பங்காக இருப்பதால் அந்தப் பங்கின் விகிதத்தையே அவர்களுக்கு பகிர்ந்து தருகிறோம் என்ற கொள்கையுடைய இந்த அரசு, மத்திய அரசு அலுவலர்களுக்கான 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் மத்திய அரசு 14-ந் தேதி அறிவித்துள்ள ஆணைகளையொட்டி, அந்த ஊதிய உயர்வினை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழக அரசு அலுவலர்களுக்கும் மனநிறைவளிக்கும் வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆணைகளை விரைவில் வெளியிடும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்
மேட்டூர் அணை நீர்மட்டம் கிடு கிடு உயர்வு ! ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது ஏ.சுகுமாரன்
கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பிவிட்டன. இதன் காரணமாக அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் அப்படியே தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. .ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம், ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது. அணைக்கு வரும் தண்ணீர் இதே அளவில் நீடித்தால் இன்னும் 3 நாட்களில் மேட்டூர் அணை மீண்டும் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இன்று ரக்ஷா பந்தன் --சகோதர- சகோதரிகளிடையே அன்பு, பாசம் வெளிப்படுத்தும் விழா ! ஏ.சுகுமாரன்
இன்று நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜனாதிபதி பிரதீபா பட்டீல், வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், `சகோதர- சகோதரிகளிடையே அன்பு, பாசம், பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்துவது ரக்ஷா பந்தன் விழாவாகும். தனிச்சிறப்பும், முக்கியத்துவமும் வாய்ந்த இந்த திருநாளில் சமூகம் நலம் பெறும் பொருட்டு சகோதரத்துவமும், ஒற்றுமையும் நிலவிட நாம் ஒருங்கிணைந்து செயல்படுவோம்' என்று கூறியுள்ளார்.துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், `அன்பு, அமைதி ஆகிய உணர்வுகளையும், சமூக நல்லிணக்க வாழ்க்கையையும், இத்திருநாள் உறுதி செய்கிறது. நமது கலாசாரத்தின் பெருமைகளையும் நம்பிக்கையுடன் ஒருசேர வெளிப்படுத்துவதாக இந்த திருநாள் அமைந்திருக்கிறது' என்று கூறி இருக்கிறார்.

Friday, August 15, 2008

இன்று புதுவைக்கு இன்னொரு சுதந்திர நாள் ! Aug 16







இன்று புதுவைக்கு இன்னொரு சுதந்திர நாள் ! ஏ.சுகுமாரன்
சுதந்திரம் ஒரு உரிமை அல்ல

அது ஒரு உணர்வு !



சுதந்திரமாய் இருப்பதில் பெருமை படுவோம் !

இந்தியர் என்று உரக்க சொல்லுவோம் ! ஒன்றாகசொல்லுவோம் !

வாழ்க சுதந்திரம் ! வெல்க மனித நேயம் !
அரிய பல புகை படங்கள் 1947 நிகழ்வுகளை
அளிக்கிறது புதுவை தமிழர்கள் ஆன் லைன் ஏ.சுகுமாரன்

செய்திகள் ஆக்ஸ் 15 மணி 7.45 AM

குடியரசுத் தலைவர் பிரதிபா சுதந்திர தின உரை :: வன்முறைக்கு இடமில்லை -- ஏ.சுகுமாரன்
62-வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் பேசும்போது வன்முறையைக் கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்றும் கருத்து வேறுபாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்றும் . கேட்டுக் கொண்டார். ஜம்மு - காஷ்மீர் போராட்டத்தை அவர் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும் அதைக் கருத்தில் கொண்டுதான் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்தார். என்ன பிரச்னையானாலும், எந்த காரணமாக இருந்தாலும் நமது சமூகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்று அவர் கூறினார். எல்லாப் பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணவேண்டும். அமைதி மற்றும் சமரசத்துக்கான பாதை கரடுமுரடானதுதான். ஆனால் அதை சாதித்தாக வேண்டும் என்றார் அவர். அமைதி மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் உதவும். சில இடங்களில் நமது மக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படுத்துவதோடு பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்து வருகின்றனர் என்றார் நாட்டின் அமைதிக்கும் உலக அமைதிக்கும் தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. தீவிரவாதத்துக்குத் தொடர்ந்து ஆதரவும் அடைக்கலமும் கிடைத்து வருவது வருந்தத்தக்கது. தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு எதிராக நாம் ஓர் அணியில் நின்று போராட வேண்டும். வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்கிற நமது உயரிய லட்சியம் தீவிரவாதிகளின் அழிவுச் செயல்களால் துவண்டுவிடாது. அண்டை நாடுகளுடன் இணைந்து தீவிரவாதம் என்னும் கொடூரத்தை இந்த பிராந்தியத்திலிருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்றார் அவர். நாட்டின் வளர்ச்சிக்கு எரிசக்தி உற்பத்தியைப் பெருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் பிரதிபா பாட்டீல். இந்தியா போன்ற வளரும் நாட்டின் எரிசக்தி தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எரிசக்தி உற்பத்தியை பெருக்காவிட்டால் நமது வளர்ச்சி முடக்கப்படும் என்று அவர் எச்சரித்தார். பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு புவி வெப்பநிலை மாற்றம் ஆகியவை நம் முன்னே உள்ளே சவால்கள். எனவே வருங் காலத்தைக் கருத்தில் கொண்டு குறைந்த செலவில் சுற்றுப்புற சூழலை மாசுப்படுத்தாத அளவில் எரிசக்தியை உற்பத்தி செய்வது அவசியம் என்றார் அவர். அரசின் நலத்திட்டங்களை அமல்படுத்தும் பணியில் ஈடுபடுவோர் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். நலத் திட்டங்கள் உரியவர்களை உரிய நேரத்தில் சென்றடைய வேண்டுமானால் திட்டங்கள் வெளிப்படையான முறையிலும் பொறுப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பிரதிபா கேட்டுக்கொண்டார். வேளாண்மையை மேம்படுத்துவதிலும் கிராமப்புறங்களை முன்னேற்றுவதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். நமது உணவு கையிருப்பு வேளாண் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டுதான் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்றார் அவர். 70 சதவீதம் மக்கள் கிராமப்புறங்களில் விவசாயத்தை நம்பித்தான் உள்ளனர். எனவே இந்தியாவின் வளர்ச்சி என்பது கிராமப்புறங்களின் வளர்ச்சியில்தான் உள்ளது என்றார் அவர். வரதட்சிணை, பெண் சிசுக் கொலை, பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடுமை, புகைப் பழக்கம், குடிப் பழக்கம் போன்ற சமூக தீங்குகள் நமது வளர்ச்சிக்குப் பெரும் தடையாக உள்ளன. எனவே சமூக தீங்குகளை எதிர்த்துப் போராட வேண்டும். பெண்கள் முன்னேற்றம் இன்றி நாட்டின் முன்னேற்றம் இல்லை. சமூக மேம்பாட்டில் பெண்களின் பங்கு முக்கியமானது என்று அவர் கூறினார்.

சுதந்திர தின விழா வாழ்த்து : புதுவை துணைநிலை ஆளுநர் கோவிந்த்சிங் குர்ஜார்: -- ஏ.சுகுமாரன்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒலிம்பிக் தனி நபர் போட்டியில் நம் நாடு தங்கம் வென்றுள்ளது.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வை நாம் பாதுகாக்க வேண்டும். புதுச்சேரி மக்கள் அமைதி, வளம், மகிழ்ச்சி பெற இந்த நன்னாளில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திர தின விழா வாழ்த்து : முதல்வர் என். ரங்கசாமி:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒலிம்பிக் தனி நபர் போட்டியில் நம் நாடு தங்கம் வென்றுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வை நாம் பாதுகாக்க வேண்டும். புதுச்சேரி மக்கள் அமைதி, வளம், மகிழ்ச்சி பெற இந்த நன்னாளில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் விடுதலை வேள்வியில் பங்கேற்று தன்னுடைய உடல், பொருள், ஆவி, அனைத்தையும் ஈந்த ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நன்றியோடு போற்ற வேண்டும். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை அனைத்து துறைகளிலும் முன்னோடி பிரதேசமாக உயர்த்தப் பாடுபடுவதே என்னுடைய அரசின் தலையாய நோக்கமாக இருக்கும். அனைத்து வகையிலும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை புதுச்சேரி மக்களுக்குக் கொடுக்க அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. புதுச்சேரியின் ஒட்டு மொத்த வளர்ச்சியும், அனைத்துப் பிரிவு மக்களின் சமுதாய, பொருளாதார மேம்பாடும் இந்த அரசின் குறிக்கோள். பொதுமக்களின் ஒத்துழைப்பும், ஆதரவு மட்டுமே அரசின் செயல்திட்டங்களைச் செழுமைப்படுத்தும். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்கும் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற இந்த நன்னாளில் உறுதி ஏற்க வேண்டும்

தமிழ் நாடு முதல்- அமைச்சர் கருணாநிதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
நமது நாட்டின் சுதந்திரத் தினவிழா மிகுந்த எழுச்சி யோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படுகிறது.
ஏறத்தாழ 200 ஆண்டு காலம் இந்தியத் திருநாட்டை அடிமைப்படுத்தி ஆண்ட அந்நிய ஆதிக்கத்தைக் தகர்த்து நமது நாடு விடுதலை பெற்ற திருநாள் 1947 ஆகஸ்டு 15.
நாம் பெற்ற சுதந்திரத்தால் அடைந்துள்ள பயன்கள் பலப்பல. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்னும் பெருமையுடன் இந்தியத் திருநாடு திகழ்கிறது.
பெற்ற சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்பட நாம் அனைவரும் சாதி, மத, இன பேதங்கள் கடந்து ஒன்று பட்டுப் பாடுபட வேண்டும் என்பதை நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது இந்த சுதந்திரத் திருநாள்! இந்த உணர்வோடு, தமிழக மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
அள்ளி கொடுக்குது மத்திய அரசு ! 21% சம்பள உயர்வு ! -- ஏ.சுகுமாரன்
ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றது நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் அமைக்கப்பட்ட ஆறாவது ஊதியக் குழு தனது பரிந்துரைகளை கடந்த மார்ச் மாதம் அரசுக்கு அளித்தது. பரிந்துரைப்படி உயர்த்தப்பட்ட சம்பளம் செப்டம்பர் மாதத்திலிருந்து வழங்கப்படும். ஊதியம் சராசரியாக 21 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் ஊதிய உயர்வு கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது.
வியாழக்கிழமை தில்லியில் கூடிய மத்திய அமைச்சரவை ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று ஒப்புதல் அளித்தது.
ஆறாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைப்படி துவக்க நிலை ஊதியம் ரூ. 6660-லிருந்து ரூ.7000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி கடைநிலை ஊழியரின் மாதச் சம்பளம், படிகள் எல்லாம் சேர்த்து ரூ. 10,000-க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுபோல் ஆண்டு ஊதிய உயர்வு 2.5 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தப்படுள்ளது.
முதல் முறையாக முப்படை அதிகாரிகளுக்கு ஊதியத்துக்கு மேலாக மாதந்தோறும் ரூ. 6,000 வழங்கப்படும். அதுபோல் ஊனமுற்ற ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச உதவித் தொகை மாதம் ரூ. 3100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதால் அரசுக்கு கூடுதலாக ரூ. 15,717 கோடி இந்த ஆண்டு செலவாகும். ரயில்வே துறைக்கு ரூ. 6414 கோடி கூடுதலாக செலவாகும். மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்துக்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் தொகை ரூ. 70,000 கோடி. ஓய்வூதியத்துக்காக ஒதுக்கப்படும் தொகை ரூ. 30,000 கோடி ஆகும்.. ஜமாயுங்க ! ஆனால் வேலையும் செய்து கொண்டே !

தமிழகத்தின் புதிய சிறப்பு தலைமைச் செயலாளர :கே.எஸ்.ஸ்ரீபதி -- ஏ.சுகுமாரன்

தமிழகத்தின் புதிய சிறப்பு தலைமைச் செயலாளராக கே.எஸ்.ஸ்ரீபதி நியமிக்கப்பட்டு உள்ளார்.ஸ்ரீபதி சென்னையைச் சேர்ந்தவர். இவர் 28.4.50 அன்று கே.வி.சாம்பமூர்த்தி-வேதநாயகி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இந்தியாவில் , இங்கிலாந்து ராணுவத்தில் அதிகாரியாகவும், 2-ம் உலகப் போரிலும் பணியாற்றியவர் கே.வி.சாம்பமூர்த்தி. ஸ்ரீபதி சென்னை மற்றும் மதுரையில் முதுகலைப் பட்டம் படித்தார். லயோலா கல்லூரியின் பழைய மாணவர் இவர். சில்வேனியாவில் எம்.பி.ஏ. பட்டமும் படித்துள்ளார்.1975-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்தற்போது தலைமைச் செயலாளராக இருக்கும் எல்.கே.திரிபாதி, இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில் புதிதாக சிறப்பு தலைமைச் செயலாளரை நியமித்து, எல்.கே.திரிபாதி நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-கூடுதல் தலைமைச் செயலாளர், விழிப்புப் பணி கமிஷனர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தக் கமிஷனர் ஆகிய பதவிகளை வகிக்கும் கே.எஸ்.ஸ்ரீபதி, தமிழகத்தின் சிறப்புச் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். விழிப்புப் பணி கமிஷனர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தக் கமிஷனர் ஆகிய பதவிகளை அவர் தொடர்ந்து வகிப்பார்.சிறப்பு தலைமைச் செயலாளர் என்ற வகையில் அவர் தலைமைச் செயலாளருடன் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம் அவருடன் ஆலோசனை நடத்தலாம். தலைமைச் செயலாளரிடம் அளிக்கப்படும் அல்லது அவர் வழியாக வந்து செல்லும் அனைத்து அரசுக் கோப்புகளும், சிறப்புத் தலைமைச் செயலாளர் கவனத்துக்கும் கொண்டு செல்லப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சனிக்கிழமை சந்திர கிரகணம் ! -- ஏ.சுகுமாரன்

சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய 3 கோள்களும் ஒரே நேர் கோட்டிற்கு வரும் அதிசய நிகழ்ச்சி ஆகும்
வரும் 16-ந்தேதி சனிக்கிழமை இரவு 11.53 மணிக்கு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. மறுநாள் 17-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5.27 மணி வரை நீடிக்கிறது.இந்த கிரகணம் பசிபிக் பெருங்கடலின் மேற்குபகுதி, ஜப்பான் நாட்டின் வட துருவம், ரஷ்யாவின் வட கிழக்கு பகுதியில் தொடங்கும். பசிபிக் பெருங்கடலின் தென் மேற்கு பகுதி, கிரீன்லாந்து மற்றும் தென் அமெரிக்காவின் வட கிழக்கு பகுதியில் கிரகணம் முடிவடையும்.சந்திர கிரகணத்தை இந்தியா, ஆசிய நாடுகள், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா நாட்டுக்காரர்கள் காணலாம்.இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தில் `டெலஸ்கோப்' வழியாகவும் பொதுமக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சந்திர கிரகணத்தால் பல ஆபத்து இருப்ப தாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.பயபடுகிறவர்கள் பயபடுங்கள்

அரவிந்தர் பிறந்த நாள்--ஏராளமான சாதகர்கள் வருகை -- ஏ.சுகுமாரன்

இன்று அரவிந்தரின் 136-வது பிறந்த தினமாகும். இதையொட்டி புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தர் உபயோகித்த அறைகள் பக்தர்கள் தரிசனத்துக்காக நாளை காலை 4 மணி முதல் மாலை 6 மணிவரை திறந்து வைக்கப்படுகிறது.
காலை 6 மணி முதல் 6.30 மணி வரை சமாதியை சுற்றி தியானமும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் புதுவை மற்றும் வெளி மாநிலங் களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள் கிறார்கள். பக்தர்களின் வசதிக்காக அரவிந்தர்ஆசிரமம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன.