Monday, May 26, 2008

இன்று உடல் நலம் சரி இல்லாததால் புதிய பதிவுகள் இல்லை

இன்று உடல் நலம் சரி இல்லாததால் புதிய பதிவுகள் இல்லை

Sunday, May 25, 2008

வாசித்தும் அதில் என்னை பாதித்தும் ஆகும் மே 25 காலை 7.40 மணி

இந்த செய்திகள் இன்று வாசித்தும் அதில் என்னை பாதித்தும் ஆகும் .இவை தினமணி, தினகரன் தமிழ் பதிப்பில் இன்று வந்தவையில் சில .இந்த தினசரி நாளிதழ்களுக்கு நன்றி .இந்த குறிப்புகள் யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல


ராஜஸ்தானில் கலவரம் துப்பாக்கி சூட்டில் 10 பேர்
2வது நாள் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி ராஜஸ்தானில் கலவரம் நீடிப்பு சடலங்களுடன் ரயில் மறியல் மாநிலம் முழுவதும் பதற்றம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி குஜ்ஜார் இனத்தினர், ராஜஸ்தானில் நேற்று இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தினர்.
விவசாயிகள் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் பட்டியல் ஜூன் 30ல் வங்கியின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். சிதம்பரம் தகவல்
விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் ஜூன் 30ல் வங்கிகளில் ஒட்டப்படும் என மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் பேசினார்.சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் நடந்த வங்கி கிளை ஒன்றின் தொடக்கவிழாவில் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் பேசியதாவது:இந்திய அளவில் விவசாய கடன் தள்ளுபடி ரூ.60,000 கோடியிலிருந்து ரூ.71,680 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 3 லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகளுக்கு முழு தொகை கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்தியாவில் 596 மாவட்டங்கள் விவசாய மாவட்டங்களாகவும், அதில் 237 மாவட்டங்கள் வானம்பார்த்த பூமியாகவும் உள்ளன. தமிழகத்தில் சிவகங்கை உட்பட 17 மாவட்டங்கள் வானம்பார்த்த பூமியாக உள்ளன. இம்மாவட்டங்களில் விவசாய கடன் பெற்றவர்களில் 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் கடன் தொகையில் 25 சதவீத தொகை அல்லது ரூ.20,000 இதில் எது அதிகமோ அது தள்ளுபடி செய்யப்படும்.விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஜூன் 30ல் வங்கியின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கர்நாடக தேர்தல் முடிவுகள் இன்று 12 மணிக்கு முடிவு தெரியும்
கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10,16,22 தேதிகளில் மூன்று கட்டமாக நடைபெற்றது. மொத்தம் 224 தொகுதிகள். 4 கோடியே 77 ஆயிரத்து 666 வாக்காளர்கள். அதில் 2 கோடியே 61 லட்சம் பேர்தான் வாக்களித்தனர்.காங்கிரஸ் 222 வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. மற்ற கட்சிகள்: பாரதிய ஜனதா 224, மத சார்பற்ற ஜனதா தளம் 219, பகுஜன் சமாஜ் 217, சமாஜ்வாடி 121, ஐக்கிய ஜனதா தளம் 72, லோக் ஜனசக்தி 36, மார்க்சிஸ்ட் 10, இந்திய கம்யூனிஸ்ட் 9, அ.தி.மு.க. 7, பிற கட்சிகள் 162, சுயேட்சைகள் 943. மொத்தம் 2,242 வேட்பாளர்கள். 48 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 10 மணிக்குள் முன்னணி தெரியும். 12 மணிக்கு மேல் முடிவுகள் வர துவங்கும். பிற்பகல் 3 மணிக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர்களின் வெற்றி - தோல்வியை மையமாக வைத்து பெட்டிங் நடப்பதாக கிடைத்துள்ள தகவலை தொடர்ந்து போலீசார் கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.நேற்று நள்ளிரவு முதல் இன்று நள்ளிரவு 12 மணிவரை மது கடைகள் மூடப்பட்டுள்ளன. உலகிலேயே விலை அதிகம் ஆன வீடு வாங்குகிறார் இந்தியர் மிட்டல் லண்டனில் ரூ.982.8 கோடிக்கு வாங்குகிறார்
உலகின் நம்பர் 1 உருக்கு ஆலை அதிபரும் வெளிநாட்டு வாழ் இந்தியருமான லட்சுமி மிட்டல், லண்டனில் ரூ.982.8 கோடிக்கு வீடு வாங்குகிறார். அவரது மகன் ஆதித்ய மிட்டலுக்காக அந்த வீடு வாங்குவதாக தெரிகிறது.மேற்கு லண்டனில் கென்சிங்டன் பேலஸ் கார்டன் என்பது மிகவும் பிரபலமானது. மெகா கோடீஸ்வரர்கள் இருக்கும் பகுதி இது. மறைந்த இளவரசி டயானா இப்பகுதியில்தான் வசித்து வந்தார். இப்பகுதியில் ஏற்கெனவே 2004ம் ஆண்டில் ஒரு வீடு வாங்கியுள்ளார் லட்சுமி மிட்டல். இப்போது இன்னொரு வீடு வாங்க திட்டமிட்டு உள்ளார். இதற்காக விலை பேசி முடித்து விட்டார். ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலை உள்ளது. இந்த வீடு நோம் கோட்ஸ்மேன் (47) என்பவருக்கு சொந்தமானது. இஸ்ரேலிய அமெரிக்கரான இவரும் பிரபல வர்த்தகர்.இ¢ந்த வீடு நான்கு மாடிகள் கொண்டது. 5 ஆடம்பரமான சொகுது பெட்ரூம்கள் உள்ளன. வேலைக்காரர்கள் தங்க தனி வீடுகள் உள்ளன. பழைய பாணியில் கட்டப்பட்டு உள்ளது. மிக அற்புதமான ஓவியங்களும் இதை அலங்கரிக்கின்றன.இம்மாதிரியான வீடு விற்பனைக்கு வருவது மிக அரிதாக உள்ளது. அதனால்தான் இதற்கு விலையும் அதிகமாக உள்ளது என்கிறார் நிபுணர் ஒருவர். இந்த வீட்டை வாங்கி, தனது மகனும் ஆர்சிலர் மிட்டல் தலைமை நிதி அதிகாரியுமான ஆதித்ய மிட்டலை குடியமர்த்த மிட்டல் திட்டமிட்டு உள்ளார்.

Saturday, May 24, 2008

வாசித்தும் அதில் என்னை பாதித்தும் ஆகும் மே 24 காலை 7.20 மணி

இந்த செய்திகள் இன்று வாசித்தும் அதில் என்னை பாதித்தும் ஆகும் .இவை தினமணி, தினகரன் தமிழ் பதிப்பில் இன்று வந்தவையில் சில .இந்த தினசரி நாளிதழ்களுக்கு நன்றி .இந்த குறிப்புகள் யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல
இந்த ஆண்டு புதிதாக 25 ஆயிரம் என்ஜினீயர்களுக்கு வேலை இன்போசிஸ்
இந்த ஆண்டு புதிதாக 25 ஆயிரம் என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க இருப்பதாக இன்போசிஸ் துணைத் தலைவர் நந்திதா குர்ஜார் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள 250 பொறியியல் கல்லூரிகளில் திறமையான என்ஜினீயர்களை தேர்ந்தெடுக்க இருப்பதாகவும் அவர் கூறினார். தற்போது நமது பணி எல்லாம் சிஸ்டத்தில் தான். கன்சல்டிங், பிபிஓஎஸ் போன்ற பணிகள்தான். எனவே நாங்கள் சிறந்த பொறியாளர்களையே விரும்புகிறோம் என்று அவர் கூறினார். அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை இருந்தாலும் கூட இந்த ஆண்டு 25 ஆயிரம் பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளோம். இது மேலும் அதிகரிக்கும். கடந்த ஆண்டு 25 ஆயிரம் பொறியாளர்களைத் தேர்வு செய்யத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் இறுதியில் 30 ஆயிரம் பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் இன்போசிஸ் நிறுவனம் 1,000 காம்பஸ் இன்டர்வியூ நடத்தியது. இந்த ஆண்டு 1,050 காம்பஸ் இன்டர்வியூ நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர். வர்த்தகப் பள்ளிகளில் 350 பட்டதாரிகளைத் தேர்வு செய்ய உள்ளோம். கடந்த ஆண்டு 100 வெளிநாட்டு நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.என்று அவர் கூறினார்.
தரையிலிருந்து தரை இலக்கை தாக்கி அழிக்கும் பிருத்வி ஏவுகணை சோதனை முழுவெற்றி

ஒரிசா மாநிலம், சந்திப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிருத்வி ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது. 150 முதல் 250 கி.மீட்டர் வரை தரையிலிருந்து தரை இலக்கை தாக்கி அழிக்கும் பிருத்வி ஏவுகணை சோதனை முழுவெற்றி அடைந்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
8.56 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் திண்ணமும் கொண்ட இந்த ஏவுகணை 1000 கிலோ வெடிமருந்தை சுமந்து செல்லும் திறன் கொண்டது. திரவ மற்றும் திட எரிபொருளில் இயங்கக்கூடியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சந்திப்பூரிலிருந்து காலை 10.30 மணிக்கு ஏவப்பட்ட ஏவுகணை குறிப்பிட்ட நேரத்துக்குள் வங்கக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலக்கை குறி தவறாமல் தாக்கி அழித்தது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் (டிஆர்டிஓ) மற்றும் ராணுவத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சிறப்பு ஏவுகணைப் பிரிவு ஆகியவை இணைந்து இந்த சோதனையை நடத்தின. பிருத்வி ஏவுகணை ஏற்கெனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரு விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி விவசாயக் கடன் தள்ளுபடித்தொகை ரூ.60 ஆயிரம் கோடி தற்போது ரூ.71,680 கோடி
நாடுமுழுவதும் பெரு விசாயிகளுக்கான கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய பொதுப் பட்ஜெட்டில் ஏற்கெனவே அறிவித்திருந்த விவசாயக் கடன் தள்ளுபடித்தொகை ரூ.60 ஆயிரம் கோடியை தற்போது ரூ.71,680 கோடியாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுதில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு நிதியமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து கூறியது: ஏற்கெனவே தீட்டப்பட்ட திட்டம் 3 கோடி சிறு, குறு விவசாயிகள் பயனடையும் விதத்தில் இருந்தது. தற்போது மாற்றி அமைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் 3.69 கோடி சிறு, குறு விவசாயிகள் பயனடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம் மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் பெரு விவசாயிகளையும் சேர்த்து மொத்தம் 4 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகள் பயனடையும் நிலை உருவாகியுள்ளது. கூட்டுறவு கடனுதவி கழகம் மற்றும் அதேபோன்ற நிதியமைப்புகள் நீங்கலாக இதர நிறுவனங்கள், சங்கங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட கடன்கள், 1997 மார்ச் 31-ம் தேதிக்கு முன்பாக விநியோகிக்கப்பட்ட கடன்கள் ஆகியவையும் இத்திட்டத்தில் அடங்காது.
ரூ.84,378 கோடிக்கு மூன்றே மாதங்களில் தங்கம் விற்பனை உலக தங்க கவுன்சில் தகவல்
ஜனவரி முதல் மார்ச் வரையிலான 2008ம் ஆண்டின் முதல் காலாண்டில் உலக அளவில் தங்கத்தின் அளவு குறைந்தாலும் விற்பனை மதிப்பு உயர்ந்திருப்பதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி, கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்த போதிலும், முதல் காலாண்டில் தங்கத்தின் விற்பனை ரூ.84 ஆயிரத்து 378 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தைவிட 20 சதவீதம் கூடுதல் ஆகும்.
எனினும், இதே காலகட்டத்தில் 701 டன் தங்கம் மட்டுமே விற்பனை ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 16 சதவீதம் குறைவு. அதாவது 5 ஆண்டுகளுக்கு முன்பு விற்ற அளவுக்குதான் விற்பனை ஆகி உள்ளது.
மார்ச் மாத வாக்கில் தங்கத்தின் விலை முன் எப்போதும் இல்லாத அளவில், பவுன் விலை ரூ.10 ஆயிரத்தைத் தொட்டது. பிறகு இறங்கினாலும் ஏற்ற இறக்கத்துடனே காணப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விற்பனை அளவு குறைந்து விட்டதாக உலக தங்கக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

Friday, May 23, 2008

இந்த செய்திகள் இன்று வாசித்தும் அதில் என்னை பாதித்தும் ஆகும்மே 23 காலை 1040 மணி

இந்த செய்திகள் இன்று வாசித்தும் அதில் என்னை பாதித்தும் ஆகும் .
இவை தினமணி, தினகரன் தமிழ் பதிப்பில் இன்று வந்தவையில் சில .
இந்த தினசரி நாளிதழ்களுக்கு நன்றி .
இந்த குறிப்புகள் யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல


பெட்ரோல் விலை உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று அவசர கூட்டம் --- லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்கலாம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 135
டாலரை தாண்டி விட்டது. இதற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை
உயர்த்தாததால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒருநாளைக்கு 450
கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. இதனால் எண்ணெய்
நிறுவனங்கள் கடனில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடன்
பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா இன்று ஆலோசனை
நடத்துகிறார். இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில்
மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக முடிவு
எடுக்க, மத்திய அமைச்சரவை இன்று அவசரமாக கூடுகிறது. பெட்ரோல்,
டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்த இந்தக் கூட்டத்தில் முடிவு
எடுக்கப் படும் என்று தெரிகிறது. பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு
ரூ.16.34, டீசல் லிட்டருக்கு ரூ.23.49, சமையல் காஸ் சிலிண்டருக்கு
ரூ.305.90, மண்ணெண்ணெய்க்கு ரூ.28.72 நஷ்டம் ஏற்படுகிறது.
நிர்வாக செலவுகளை சமாளிக்க 3 எண்ணெய் நிறுவனங்களும் மாதம்
ரூ.3,500 கோடி கடன் வாங்க வேண்டியுள்ளதாக எண்ணெய் நிறுவன
வட்டாரம் தெரிவிக்கிறது.

நம புஷ் பெரியண்ணா கச்சா
எண்ணெய் விலை பேரலுக்கு 135
டாலரை தாண்டி போனதற்கு
இந்தியாதான் காரணம் என்றார் .நம்ம
ப சி அண்ணா கச்சா எண்ணெய்
விலை உயர்வைச் சமாளிக்க, அரசு
போக்குவரத்தை மக்கள் அதிகம்
பயன்படுத்த வேண்டும் என்று
மக்களுக்கு அட்வைஸ் செய்கிறார் “

முட்டை விலை கிடுகிடு உயர்வு ரூ.1.90 ஆனது

இன்று நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் விலை மேலும் 15
காசுகள் உயாந்து உள்ளது. ஒரு முட்டையின் விலை 190 காசாக
நிர்ணயம் செய்யப்பட்டது. நாமக்கல் மண்டலத்தில்
கோடைவெப்பம் கடுமையாக உள்ளதால், முட்டையின் உற்பத்தி
வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் 40 லட்சம் முட்டைகள் வரை
உற்பத்தி குறைந்து உள்ளது. இதனால் முட்டையின் விலை கிடுகிடு
வென உயர்ந்து வருகிறது. நாமக்கல்லில் நேற்று கூடிய தேசிய
முட்டை ஒருங்கிணைப்புகுழுவின் விலை நிர்ணய குழு கூட்டத்தில் ஒரு
முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 190 காசுகளாக நிர்ணயம்
செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. கடந்த வாரம்
முட்டை ஒன்றின் விலை 165 காசுகளாக இருந்தது.

ஜெர்மன் வங்கியில் இந்தியர்கள் கறுப்புப் பணம்: பதுக்கிவைத்து வரி ஏய்ப்பு : விசாரணை நடைபெறுவதாக சிதம்பரம் தகவல்

ஜெர்மனி அருகே உள்ள லீக்டென்ஸ்டைன் நாட்டில் உள்ள
ஜெர்மனிக்கு சொந்தமான எல்டிஜி வங்கியில் கறுப்புப் பணத்தை பதுக்கி
வைத்துள்ள இந்தியர்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஜெர்மன் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு
விவரங்களை கேட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 10-ம் தேதி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் ஜெர்மன்
வங்கியில் கறுப்புப் பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்கள்
தொடர்பான செய்தி வெளியானது. ஆஸ்திரியாவுக்கும்
சுவிட்சர்லாந்துக்கும் இடையே உள்ள ஒரு சிறிய நாடு லீக்டென்ஸ்டைன்.
இங்குள்ள வங்கியில் இந்தியர்கள் சிலர் பெரிய அளவில் கறுப்புப்
பணத்தை பதுக்கிவைத்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக செய்தி வெளியானது.

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, இந்த விஷயத்தில்
உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர்
மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். இந்த விவகாரம் தொடர்பாக நிதி
அமைச்சர் சிதம்பரம், தில்லியில் நிருபர்களிடம் கூறியது:

கறுப்புப் பணம் பதுக்கல் தொடர்பாக மத்திய அரசு மிகக் கடுமையாக
நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக ஜெர்மன்
அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு விவரங்கள் கேட்டறியப்பட்டு கடிதம்
எழுதப்பட்டுள்ளது. முறைப்படி கேட்டுக்கொண்டால் அந்த வங்கியில் முதலீடு செய்துள்ள ஜெர்மன் நாட்டைச் சாராத 800
பேருடைய விவரங்களை தரத் தயாராக உள்ளதாக ஜெர்மன் நிதி
அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு இந்த விவகாரத்தில்
கடுமையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றார் சிதம்பரம்.

“சிவாஜி படம் பார்த பிறகு இந்த முடிவு வந்திருக்குமோ”


கருத்துக் கணிப்பு கர்னாடகாவில் பாஜகவுக்குபெரும்பான்மை'

: பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களைக்
கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று தேர்தல் முடிவுகள் குறித்த வாக்குக்
கணிப்பு தெரிவிக்கிறது. மொத்தம் உள்ள 224 சட்டப்
பேரவைத் தொகுதிகளிலும் பாஜகவுக்கு 114 இடங்கள் வரை
கிடைக்கும் என்று அந்தக் கணிப்பு தெரிவிக்கிறது. தனிப்
பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை
என்பது குறிப்பிடத்தக்கது. சுவர்ண கன்னட தொலைக்காட்சி
நிறுவனமும், சி போர்ஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து
கருத்துக் கணிப்பு மற்றும் வாக்குக் கணிப்பை நடத்தின.

மூன்று கட்டத் தேர்தலிலும் வாக்குப் பதிவுக்கு முந்தைய கருத்துக்
கணிப்பும், வாக்குப் பதிவுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புமாக இரு
கட்டங்களாக இது நடத்தப்பட்டது.

Thursday, May 22, 2008

செய்திகள் இன்று வாசித்தும் அதில் என்னை பாதித்தும் மே 22 காலை 7.30 மணி

இந்த செய்திகள் இன்று வாசித்தும் அதில் என்னை பாதித்தும் ஆகும் .
இவை தினமணி, தினகரன் தமிழ் பதிப்பில் இன்று வந்தவையில் சில .
இந்த தினசரி நாளிதழ்களுக்கு நன்றி .
இந்த குறிப்புகள் யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல

சாராய சாவு எதிரொலி மதுவிலக்கு ஏடிஜிபி திலகவதி மாற்றம் இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீஸ் சஸ்பெண்ட் தளி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசார் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர்.

ஓசூர், தளி பகுதியில் விஷச் சாராயச் சாவுகள் அதிகரித்ததன் எதிரொலியாக, தமிழக மதுவிலக்கு போலீஸ் கூடுதல் டிஜிபி திலகவதி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஷியாம் சுந்தர் நியமிக்கப் பட்டுள்ளார். சாராய விற்பனையை தடுக்க தவறிய தளி இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, கர்நாடகாவிலும் சாராயம் குடித்த பலரும் பலியாயினர். கண் பார்வை இழப்பு, கை, கால்கள் பாதிப்படைந்ததாக மருத்துவமனையில் பலர் சேர்க்கப்பட்டனர். தமிழகத்தில் ஓசூர் பகுதிகளில் நேற்று பிற்பகல் வரை 51 பேர் வரை இறந்தனர். கர்நாடகாவிலும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது வரை இரு மாநிலங்களிலும் பலியானவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தமிழக அரசு இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. தளி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசார் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர். சாராய விற்பனையை தடுக்க தவறிய தளி போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பு வகித்த அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், தளி எஸ்.ஐ. கபிலன், ஏட்டு ரவி, மதுவிலக்குப் பிரிவு எஸ்.ஐ. செந்தாமரை ஆகிய 4 பேர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், மதுவிலக்குப் பிரிவு கூடுதல் டிஜிபி திலகவதி நேற்று மாலை அதிரடியாக மாற்றப்பட்டார். அவர் காத்திருப்போர் பட்டிய லில் வைக்கப் பட்டுள்ளார். தீயணைப்புத்துறை கூடுதல் டிஜிபியாக உள்ள ஷியாம் சுந்தர், மதுவிலக்குப் பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையெல்லாம் இத்தனை கடுமையுடன் முன்னமே செய்திருந்தால் சாவு பட்டிய லில் பெயர் வராமல் தடுத்துஇருந்திருகலாம்

லிப்ட்டில் சிக்கி மாணவன் பலியான சம்பவம் பின் சென்னை போலீஸ் அதிரடி 10,000 லிப்ட் இயக்க தடை

சென்னை நகரில் உள்ள கட்டிடங்களில் லைசென்ஸ் இல்லாத 10,000 லிப்ட்டுகளை இயக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.சென்னை சேலையூர் ஜெயின் அபிஷேக் அபார்ட்மென்ட் லிப்ட்டில் சிக்கி, பரத்ராஜ் என்ற மாணவன் இறந்தான். இதுதொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அடுக்கு மாடி குடியிருப்பின் கட்டுமானப் பணி முடிவதற்கு முன்பே, அங்கு பிளாட் வாங்கியவர்களை குடியேற அனுமதித்ததும், லிப்ட்டை சரிவர பராமரிக்கவில்லை என்பதும்விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, பராமரிப்பு மேலாளர் சிட்டிபாபு (32), இன்ஜினியர்கள் கணேஷ் (24), மாரிமுத்து (23) ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், சென்னை முழுவதும் 10,000 லிப்ட்கள் லைசென்ஸ் இல்லாமல், பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆபரேட்டர் மூலம்தான் இவை இயக்கப்பட வேண்டும் என்ற விதியும் பின்பற்றப்படுவதில்லை. எனவே, லைசென்ஸ் இல்லாத லிப்ட்களை இயக்க போலீசார் தடை விதித்துள்ளனர். போனில் புகார்: லிப்ட் சரியாக பராமரிக்கப்படவில்லை என்று தெரிந்தால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் புகார் செய்யலாம்:22500227 ,
இதையெல்லாம் இத்தனை கடுமையுடன் முன்னமே செய்திருந்தால் லிப்ட்டில் சிக்கி மாணவன் பலியான சம்பவம் வராமல் தடுத்துஇருந்திருகலாம்
மேலும் 27 தமிழறிஞர்கள் நூல்கள் அரசுடமை
அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ் சான்றோர்களின் கருத்துக்கள், வரும் தலைமுறைக்கு பயனளிக்கத்தக்க வகையில், இந்த ஆண்டு கவிஞர் பெரியசாமி தூரன், வெள்ளை வாரணனார், பண்டிதர் அயோத்தி தாசர், ஆபிரகாம் பண்டிதர், செய்குத் தம்பி பாவலர், ரா.பி.சேதுப்பிள்ளை ஆகியோர் நூல்கள் அரசுடமை ஆக்கப்பட்டு தலா ரூ.10 லட்சம் பரிவுத் தொகையாக வழங்கப்படும்.ராகவையங்கார், உடுமலை நாராயணகவி, அண்ணல் தங்கோ, அவ்வை தி.க. சண்முகம், விந்தன், லா.ச.ராமாமிர்தம், வல்லிக் கண்ணன், நா.வானமாமலை, புதுவை சிவம், அ.ராகவன், தொ.மு.சி.ரகுநாதன், சக்தி தாசன் சுப்பிரமணியன், ந.சஞ்சீவி, முல்லை முத்தையா, எஸ்.டி.சுந்தரம், மீரா, கார்மேக கோனார், முகமது நயினார் மரைக்காயர், சு.சமுத்திரம், கோவை இளஞ்சேரன், ந.சுப்பு ரெட்டியார் ஆகியோரின் நூல்கள் அரசுடமையாக்கப்பட்டு, மரபு உரிமை யர்களுக்கு தலா ரூ.5 லட்சம் பரிவுத் தொகை வழங்கப்படுகிறது. இதற்கான உத்தரவை முதல்வர் நேற்று பிறப்பித்துள்ளார். இந்த 27 தமிழறிஞர்களின் நூல்களுக்கும் ரூ.1.65 கோடி பரிவுத் தொகை வழங்கப்படும்.
தமிழுக்கு தமிழக அரசு செய்திருக்கும் மாபெரும் சேவை இது
8 ஆண்டுகால தொடர் போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி தில்லி தமிழ்ச் சங்கத்தில் வள்ளுவர் சிலை இடமாற்றம்
தில்லி ஆர்கே புரம் வெஸ்ட் பிளாக்கில் அமைந்திருந்த பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர் சிலை, தமிழ்ச் சங்கத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
வள்ளுவர் சிலை இடமாற்றம் செய்யப்பட்டது தங்களது 8 ஆண்டுகால தொடர் போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியென, தில்லி தமிழ்ச் சங்கச் செயலாளர் முகுந்தன் புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது:
ஆர்கே புரத்தில் வள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட போது அவ்விடம் சிறப்பாக இருந்தது. ஆனால் பின்னர் சிலையை சுற்றி அசுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். சிலைக்கு அருகில் பொதுக்கழிப்பிடம் ஒன்றையும் கட்டிவிட்டனர்.
அத்துடன் வெஸ்ட் பிளாக் பகுதியை சுற்றி சுவரும் எழுப்பப்பட்டதால் வள்ளுவர் சிலை தனிமைப்படுத்தப்பட்டது.
இது அப்பகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கு மிகவும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே, அந்த இடத்தில் இருந்து சிலையை அகற்றி தமிழ்ச் சங்கத்தில் வைக்குமாறு பொதுமக்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
இதையடுத்து நாங்கள் சிலையை தமிழ்ச் சங்கத்துக்கு இடமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டோம். இதை தமிழக முதல்வர் கருணாநிதி, தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.
பின்னர் தில்லி சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் வசந்த் விகாரை அணுகி, சிலையை தமிழ்ச் சங்க வளாகத்துக்குள் இடமாற்றம் செய்யவதற்கான அனுமதியை பெற்றோம். இதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை எவ்வித பாதிப்பும் இன்றி சிலை அகற்றப்பட்டு உடனடியாக தமிழ்ச் சங்க வளாகத்துக்குள் நிறுவப்பட்டது.
முதல்வர் கருணாநிதி திறந்து வைப்பார்: சிலையை ஒழுங்கான முறையில் பராமரிக்க தமிழ்ச் சங்கத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்ச் சங்கத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள சிலை இம்மாதம் இறுதியில் முறைப்படி திறந்து வைக்கப்படும்.
விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு சிலையை திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் ஆகியோரும் பங்கேற்பர் என, முகுந்தன் தெரிவித்தார்.
தில்லி ஆர்கே புரம் வெஸ்ட் பிளாக் பகுதி தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. இதனால் வள்ளுவர் சிலை அங்கு 1975-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
சிலையை சுற்றி அசுத்தம் . சிலைக்கு அருகில் பொதுக்கழிப்பிடம் அத்துடன் வெஸ்ட் பிளாக் பகுதியை சுற்றி சுவரும் எழுப்பப்பட்டதால் வள்ளுவர் சிலை தனிமைப்படுத்தப்பட்டது. இத்தகு அபத்த சூழலில் இருந்த வள்ளுவர் சிலை சரியான இடத்துக்கு மாற்றிய பொ. செயலாளர் முகுந்தன் மிகுந்த பாராட்டுக்கு உரியவர்
புதுவையில் ராஜீவ் காந்தி நினைவு தினம்
:
ராஜீவ் காந்தியின் நினைவு நாள் , இதையொட்டி ராஜீவ் காந்தி சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவரது சிலைக்கு முதல்வர் என்.ரங்கசாமி, மத்திய அமைச்சர் நாராயணசாமி, சட்டப்பேரவைத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் வைத்திலிங்கம், வல்சராஜ், கந்தசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், எம்.பி. ராமதாஸ், எம்எல்ஏக்கள் அங்காளன், நமச்சிவாயம், ஏழுமலை, தியாகராஜன், முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர். ராமசந்தரன், நகராட்சித் தலைவி ஸ்ரீதேவி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பகவத் கீதை, குர்ரான், பைபிள் வாசகங்கள் வாசிக்கப்பட்டன. பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் தேசப்பக்தி பாடல்களைப் பாடினர். தொடர்ந்து வன்முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழியை முதல்வர் ரங்கசாமி வாசித்தார். அதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
காங்கிரஸ் அலுவலகத்தில் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி படத்துக்கு காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆஹா இந்த ஒத்துமை எப்போதும் இருந்தால் எவ்ளது நல்லது

Wednesday, May 21, 2008

செய்திகள் வாசித்தும் பாதித்தும் மே 21 காலை 7.30 மணி

கன்னியாகுமரியில் நிலநடுக்கம் 50,000 பேர் வீதிகளில் தவிப்பு

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10.15 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகளில் வைக்கப் பட்டிருந்த பாத்திரங்கள் உருண்டன. தூங்கிக் கொண்டிருந்த பொது மக்கள் நிலஅதிர்வை உணர்ந்து வீடுகளை விட்டு வெளியே அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர்.
சுமார் 6 வினாடிகள் நீடித்த இந்த நிலஅதிர்வு கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கோவளம், புதுக்கிராமம், வாவத்துறை, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், லீபுரம், ஒற்றையால்விளை, பொழிக்கரை, மணக்குடி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் நெல்லை மாவட்டம் கூட்டப்புளியிலும் உணரப்பட்டது.
மொத்தம் 40 கிராமங்களையும் சேர்த்து சுமார் 50,000 பேர் நடுரோட்டில் விடியவிடிய பீதியில் விழித்து இருந்தனர். இதனால் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது.

--------------------------------------------------------------------------------
ரேஷன் கார்டு பெற இனி கணினி பதிவு முறை விண்ணப்பம்

தமிழகத்தில் ரேஷன் கார்டு வினியோகிக்க ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, அந்தந்த மாவட்டங்களிலேயே அச்சிட்டு வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்தது.
இப்போது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கணினியில் எளிதில் பதிவு செய்ய வசதியாக கணினி பதிவு விண்ணப்ப மாதிரியை குடிமைப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக விண்ணப்பிப்போருக்கு, ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை இருப்பின் அதன் எண்ணை குறிக்கவேண்டும்.
ஏற்கனவே குடும்ப அட்டையில் பெயர் இருந்து நீக்கப்பட்டிருப்பின் அதற்கான ஆவணத்தை இணைக்கவேண்டும். வீட்டு முகவரியை உறுதி செய்ய, வாக்காளர் அடையாள அட்டை நகல், சொந்த வீடாக இருந்தால் சொத்து வரி அல்லது, மின் கட்டண ரசீது அல்லது டெலிபோன் பில் அல்லது வங்கி பாஸ் புத்தகத்தின் முகப்பு அட்டையில் இடம் பெற்றுள்ள முகவரி பகுதி, குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருப்பின் அதற்கான அத்தாட்சி சான்று ஆகியவற்றை இணைக்கவேண்டும்.
மேலும் காஸ் இணைப்பு இருப்பின் அதை சார்ந்த தகவல்கள், அரிசி மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் வாங்க விருப்பம், அரிசிக்கு பதில் கூடுதல் சர்க்கரை தேவையா, எந்த பொருளும் வாங்க விருப்பமில்லை என்றால் அதை குறிப்பிடவேண்டும்.
உணவு வழங்கல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘முன்பு மக்கள் வழங்கும் விண்ணப்பத்தை சரிபார்த்து, கிராம நிர்வாக அலுவலர்களை கொண்டு ஆய்வு செய்யவேண்டும். விண்ணப்பங்களை பார்த்து ரேஷன் கார்டில் பெயர்களை பதிவு செய்வதிலும் காலதாமதம் ஏற்படும்.
தற்போது வழங்கப்பட்டுள்ள கணினி பதிவு விண்ணப்பத்தால் பணிகள் எளிதாகி, குறைகள் தவிர்க்கப்படும். தவறான தகவல் அளித்திருந்தால் கூட விண்ணப்பதாரரே பொறுப்பு ஏற்கவேண்டியிருக்கும்,’’ என்றனர்.
புதுவைக்கு சிறப்பு மாநில அந்தஸ்துதான் தேவை: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்
மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி கட்சியின் மாநிலச் செயலர் சோ. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமா? சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது வேடிக்கையானது. புதுச்சேரியின் பிரத்யேக சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்களை அமல் செய்ய புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி இல்லாமல் இருப்பதுதான் காரணம் என்று முதல்வர் ரங்கசாமி கூறுவது ஏற்புடையது அல்ல. முதல்வர் ரங்கசாமி பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 7 ஆண்டுகளாக நிதி மேலாண்மையில் சீர்கேடுகளும், ஒழுங்கீனங்களும் அதிகரித்துள்ளன. அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலே மக்கள் நலத்திட்டங்கள் கிடப்பில் போடப்படுவதற்கு அடிப்படை. புதுச்சேரியில் பெருகி வரும் குற்றங்களுக்குக் கட்டுப்பாடற்ற ரியல் எஸ்டேட் தொழில்தான் அடிப்படைக் காரணம். அதனால் புதுச்சேரியில் வெளிமாநிலத்தவர், வெளிநாட்டினர் அசையா சொத்துகள் வாங்கி விற்பதற்குத் தடை விதிக்க வேண்டும். நகர்ப் புறத்தில் நில உச்சவரம்பு சட்டத்தை மீண்டும் அமல் செய்ய வேண்டும். உடனடியாக ரியல் எஸ்டேட் கட்டுப்பாட்டுச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் திட்டங்களை அமலாக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார் பாலசுப்பிரமணியன்.

பாமகவின் நிலை என்ன? தேசிய செயலர் டி. ராஜா எம்.பிகேள்வி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதை பாமக ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா என்று அக் கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா எம்.பி. கூறினார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அதை பாமகவும் ஆதரித்தது. ஆனால் பாமகவைச் சேர்ந்த எம்.பி. ராமதாஸ், புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கேட்க வேண்டும். அப்போதுதான் மாநில அந்தஸ்தாவது மத்திய அரசு கொடுக்கும் நிலைக்கு வரும் என்று கூறியிருந்தார். இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ விசுவநாதன் விமர்சனம் செய்திருந்தார். இதனால் இப் பிரச்னையில் பாமகவுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா கூறுகையில், சட்டப்பேரவையில் மாநில அந்தஸ்து தொடர்பாக தீர்மானம் நிறைவேறியுள்ள நிலையில் பாமகவின் நிலை என்ன என்பதை அக் கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

Tuesday, May 20, 2008

செய்திகள் வாசித்தும் பாதித்தும் மே 21 காலை 7 மணி

சென்னைக்கு இன்னுமொரு புதிய அனல் மின்நிலையம்
சென்னை அருகே உள்ள குருவிமேடு கிராமத்தில் புதிய அனல் மின்நிலையம் அமைக்கப்படுகிறது.
இந்த புதிய அனல் மின் நிலையத்தை தமிழ்நாடு மின்சார வாரியமும் என்டிபிசி நிறுவனமும் சரி பங்கு மூலதனத்தில் கூட்டாக அமைக்க உள்ளன.
இந்த புதிய மின் நிலையத்துக்கு ஊரக மின் இணைப்பு கழகம் (ஆர்இசி) ரூ. 3,796 கோடி கடன் அனுமதித்துள்ளது.
இந்த மின் உற்பத்தி நிலையம் 11-வது திட்ட காலத்துக்குள் முழுமையாக உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் யூனிட் 2010 - 11-ம் ஆண்டு செயல்படத் தொடங்கும். இந்த நிறுவனத்துக்குத் தேவையான மின் உற்பத்தி கருவிகளை பெல் நிறுவனம் வழங்குகிறது.
கர்நாடகா தண்ணி தந்தாலும் ஆபத்து தான் போலிருக்கு . சாராய உயிர் இழப்பு 70 ஆனது கிருஷ்ணகிரி மாவட்டம் தளியையடுத்து விஷ சாராயத்துக்கு ஓசூரில் நேற்று 11 பேர் பலியாயினர். 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் தளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கர்நாடக பகுதிகளுக்கு சென்று கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள், கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வரப்படும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை கர்நாடக மாநிலம் ஆனைக்கல்லில் பாக்கெட் சாராயம் வாங்கி குடித்த 8 தொழிலாளர்கள் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் ஓசூர் பகுதியில் விஷ சாராயம் குடித்த மேலும் 11 பேர் நேற்று பலியானது கிருஷ்ணகிரி மாவட்ட மக்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், Ôஉயிரிழப்புக்கு காரணமான சாராயத்தில் போதைக்காக எத்தனால் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த சாராயத்தை அளவுக்கு அதிகமாக குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதுÕ என்றனர்.

Monday, May 19, 2008

செய்திகள் மே 19 காலை 7.45 மணி

கர்நாடக விஷ சாராயத்துக்கு 1 8 தமிழக தொழிலாளர்கள் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை சுற்றியுள்ள கிராம மக்கள், கர்நாடகாவில் உள்ள ஆனைக்கல்லுக்கு கூலி வேலைக்கு செல்வது வழக்கம். தளியை அடுத்த பின்னமங்கலம், தேவகானப்பள்ளி கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம், 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆனைக்கல்லுக்கு சென்றனர். வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பியபோது, ஆனைக்கல்லில் பாக்கெட் சாராயம் வாங்கி குடித்தனர். ஊருக்குத் திரும்பும் வழியிலேயே பின்னமங்கலத்தை சேர்ந்த வேணுகோபால் மனைவி ஆஞ்சனம்மா மயங்கி விழுந்தார். அவரை மற்றவர்கள் ஊருக்கு தூக்கி வந்தனர்.
தேவகானப்பள்ளியை சேர்ந்த முகமது (50), நாராயணன் (46), பின்னமங்கலத்தை சேர்ந்த ஆஞ்சனம்மா (48), சின்னப்பன் (35), கிருஷ்ணப்பா (65), அடவிசாமிபுரத்தை சேர்ந்த புட்டம்மா (65) ஆகியோர் மயங்கிய நிலையிலேயே இறந்தனர்.
மயங்கி விழுந்த இன்னும் சிலரை ஆனைக்கல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், சின்ன முனியம்மா (65), ரவியும் (35) சிகிச்சை பலனின்றி இறந்தனர். முனிராஜ் (32), முனுசாமி உட்பட 4 பேர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஓசூர் சப்&கலெக்டர் நாகராஜன், தளி எம்எல்ஏ ராமச்சந்திரன், எஸ்பி. தேன்மொழி, மதுவிலக்கு அமல்பிரிவு ஏ.டி.எஸ்.பி. மகேஸ்குமார் ஆகியோர் பின்னமங்கலம் சென்று விசாரணை நடத்தினர்.
முதல்வர் கருணாநிதி நலமுடன் வீடு திரும்பினார்.
முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பினார். அவரை மேலும் ஒரு வாரத்துக்கு ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
முதல்வர் கருணாநிதி கடுமையான கழுத்து வலி மற்றும் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார் . கடந்த மே 16-ம் தேதி காலை சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நீண்ட காலத்துக்குப் பின்...: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து, தனது பேரனான தயாநிதி மாறனைச் சந்திக்க விரும்பாமல் கருணாநிதி தவிர்த்து வந்தார். இந் நிலையில், கருணாநிதியை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் தயாநிதி.
இந்தச் சந்திப்பின் போது, குடும்பப் பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. கருணாநிதியை தயாநிதி மாறன் நேரில் சந்தித்ததன் மூலம், இரு குடும்பத்துக்குள் இருக்கும் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
: வீடு திரும்பினாலும், குறைந்தது ஒரு வாரமாவது ஓய்வில் இருக்க வேண்டும் என முதல்வரை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கழுத்து மற்றும் முதுகு வலியைக் குறைக்கும் வகையில் இருக்கையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியாகும்
பத்தாம் வகுப்புத் தேர்வு கடந்த மார்ச் 25-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 10-ம் தேதி வரையில் நடைபெற்றன. மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் சுமார் 8 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.தேர்வில் மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்வது பூர்த்தியாகிவிட்டது. அவற்றை வெளியிடுவது தொடர்பாக அதிகாரிகள் நிலையிலான கூட்டம் கடந்த சில நாள்களுக்கு முன் நடைபெறுவதாக இருந்தது. அக்கூட்டம் அநேகமாக ஓரிரு தினங்களில் கூடி, முடிவு வெளியிடும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. ஆகிய தேர்வுகள் அனைத்துக்கும் மாநிலக் கல்வித் திட்டத்தைப் போல் சீரான அதிகபட்ச மதிப்பெண்ணுக்கு மதிப்பிடப்படும்.
இதன் மூலம் அனைவருக்கும் சதவீத அடிப்படையில் மதிப்பெண்ணைக் குறிப்பிடுவது எளிதாக இருக்கும் என்று கல்வித் துறையினர் தெரிவித்தனர்.

வில்லியனூர் திருக்காமேஸ்வரர் தேரோட்டம்
முதல்வர் ரங்கசாமி வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். மத்திய அரசின் திட்டத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் பேராசிரியர் மு. ராமதாஸ், எம்எல்ஏக்கள் நாராயணசாமி, நமச்சிவாயம், ஏழுமலை, தியாகராஜன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். வேல்ராம்பட்டைச் சேர்ந்த கோவிந்தம்மாள் (65) விநாயகர் தேர் சக்கரத்தின் அடியில் தேங்காய் வைத்தார். அப்போது கோவிந்தம்மாள் கால் மீது தேர் சக்கரம் ஏறியது. இதில் காயம் அடைந்தார். அங்கிருந்த பொதுமக்கள் போலீஸôர் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்
இந்த விழாவையொட்டி திருக்காமேஸ்வரர் கோயில் தேவஸ்தானம் சார்பில் பக்தி பாடல் அடங்கிய குறுந்தகட்டை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.

Sunday, May 18, 2008

செய்திகள் மே 18 காலை 7.15 மணி

ஆஹா ! ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை, இன்னும் ஒரு வாரத்தில் குறையும்
ஓட்டல்களில் இட்லி, தோசை, பொங்கல், டீ, காபி உள்ளிட்ட
உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டல்கள் உணவுப்
பொருட்களின் விலை, இன்னும் ஒரு வாரத்தில் குறையும் என்று
உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். தமிழக ஓட்டல்கள் சங்க
நிர்வாகிகளுடன் உணவு அமைச்சர் எ.வ.வேலு, கோட்டையில் நேற்று
ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:
சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரியைக் குறைத்தல்,
ஆன்லைன் வர்த்தகம் தடை செய்தல், விலை ஏற்றத்தை தடுத்தல் உள்ளிட்ட
அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பாமர மக்கள், தினக்கூலி வேலை செய்பவர்கள், தொழிலாளர்கள், வெளியூர்களிலிருந்து சென்னைக்கு
தினந்தோறும் வந்து செல்பவர்கள், சுற்றுலா செல்பவர்கள் உள்ளிட்டோருக்கு
உணவகங்கள்தான் உயிர்நாடி.
இட்லி, வடை, பூரி, பொங்கல் போன்றவை அன்றாடம் பொதுமக்கள்
விரும்பி உண்ணும் உணவு. இவற்றின் விலை உயர்வை உடனடியாகக்
கட்டுப்படுத்த வேண்டும். 1976ம் ஆண்டில் நடைமுறையில் இருந்த
சில கடுமையான சட்டங்களை போல அரசு மீண்டும் சட்டம் இயற்றக்
கூடிய நிலையை உணவகங்கள் ஏற்படுத்தக் கூடாது. இவ்வாறு
அமைச்சர் வேலு பேசினார். இதையடுத்து, ஓட்டல்
உரிமையாளர்கள் உடனடியாக உணவுப் பொருட்களின் விலையைக்
குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரிடம் உறுதியளித்தனர். குறைக்கப்பட்ட விலைப் பட்டியலை அரசிடம் தருவதாக
கூறியுள்ளனர். இந்த கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் சண்முகம், உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜாராம், தமிழ்நாடு ஓட்டல்கள்
சங்கத் தலைவர் வசந்தபவன் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிதம்பரத்தின் பேச்சை கேட்ககானோம் ! பணவீக்க விகிதம் கிடுகிடு உயர்வு
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக நாட்டின்
பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை
உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை
எடுக்கிறது. நாட்டின் பணவீக்க விகிதம் இந்த மாதம் 3ம் தேதியுடன் முடிந்த
வாரத்தில், கடந்த 44 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக
7.83 சதவீதத்தைத் தொட்டது. இதற்கு முன் 2004 செப்டம்பர் 11ல்
7.87 சதவீதமாக இருந்ததுதான் அதிகம்.
இறக்குமதி வரிச் சலுகைகள், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை
அறிவித்து வருகிறது. எனினும், பணவீக்கம் குறையவில்லை என்பதை
கடந்த 3ம் தேதி நிலவரம் காட்டுகிறது. கடந்த 44 மாதங்களில் இல்லாத
அளவுக்கு பணவீக்க விகிதம் தற்போது 7.83 சதவீதத்தைத்
தொட்டுள்ளது. இதற்கு முன் 2004 செப்டம்பர் 11ம் தேதி பணவீக்கம் 7.87
சதவீதமாக இருந்தது. உணவுப் பொருட்களைப்
பொருத்தவரை, காய்கறி, பழங்கள் விலை 3 சதவீதமும், காபி 6
சதவீதமும், சோளம் 4 சதவீதமும், மசாலாப் பொருட்கள், பயறு வகைகள்
1 சதவீதமும் விலை உயர்ந்துள்ளன. கோதுமை மாவு, தேங்காய் எண்ணெய்
போன்ற தயாரிப்பு பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளதால்
பணவீக்கம் அதிகரித்தது. தொழிற்சாலை எரிபொருள்களான
நாப்தா, பர்னாஸ் எண்ணெய், இலகுரக டீசல் எண்ணெய்
ஆகியவற்றின் விலை உயர்வும் பணவீக்க உயர்வுக்கு காரணமாக
கூறப்படுகின்றன.
இந்த மாதத்துக்குள் பணவீக்கம் 8 சதவீதத்தைத் தொடலாம் என்று
பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்
குலை நடுங்க வைக்கும் குளோபல் வார்மிங். எதிர்கால சந்ததியினரையும் காப்பது நமது கடமை
உலகம் முழுவதும் பெருகிவிட்ட இருசக்கர, நான்கு சக்கர
வாகனங்கள் கக்கும் கார்பன் மோனாக்சைடு, தொழிற்சாலைகளில்
இருந்து வெளிவரும் நைட்ரஸ் ஆக்ஸைடு, கார்பன் டெட்ரா
குளோரைடு, குளிர்சாதனங்களிலிருந்து வெளியாகும் பிரியான், குளோரோ
புளோரின்...என காற்று மண்டலத்தில் கார்பன் மற்றும் அதன் கூட்டு
வாயுக்களின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. பருவம் மாறி மழை கொட்டுது...திடீர் திடீரென்று புயல் காற்று அங்கங்கே பூமி குலுங்குது. கடல்
பொங்குகிறது...சமீபத்தில் சீனாவை உலுக்கியுள்ள பூகம்பம், மியான்மரை
புரட்டிப் போட்ட நர்கீஸ் புயல், கடந்த மாதம் தமிழகத்தில் பெய்த
திடீர் மழை.... இதெல்லாம் காலம் மாறிப் போனதுக்கு உதாரணம். . மேலும் காற்று மண்டலத்தில் கார்பன் வாயுத் தொகுதிகளின் அளவு
280 பி.பி.எம் (மில்லியனில் ஒரு பங்கு)தான் இருக்க வேண்டும்.
ஆனால் இன்றைக்கு 380 பி.பி.எம்மைத் தாண்டி விட்டது. இந்த
நூற்றாண்டின் இறுதியில் இது 800 ஆகிவிடும் என்று விஞ்ஞானிகள்
கணித்துள்ளனர். ஆனால் 500 பி.பி.எம்மைத் தாண்டினாலே நாம்
உயிர் வாழ முடியாது என்பது மற்றுமொரு ஆபத்து.
ஏனெனில் காற்றில் கார்பன் வாயுத் தொகுதிகள் அதிகமாகிவிட்டால்,
அதில் இருக்கும் கார்பன் மூலக்கூறுகள் அதிகப்படியான வெப்பத்தை உள்வாங்கி, அப்படியே திருப்பி தரும். இதனால் காற்று மண்டலம் வழக்கத்தை விட சூடாகிவிடும்.
ஆனாலும் ஓசோனில் ஓட்டைகள் விழுவது நின்றபாடில்லை. இதனால்
ஆர்ட்டிக், அன்டார்டிக் பகுதிகளில் உள்ள பனி மலைகள் வேகமாக
உருகி வருகின்றன. விளைவு, கடல் மட்டம் அதிகரித்து, நிலப்பரப்பு
குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வரும் 2100ம் ஆண்டில் கடல் மட்டம் 5
மீட்டர் உயர்ந்து விடும். இதனால் 5 கோடி இந்தியர்கள் வீடுகளை
இழப்பார்கள். இந்தியாவில் கடற்கரை ஓரம் உள்ள பல நகரங்கள்
கடலுக்குள் சென்று விடும். குறிப்பாக சென்னை எண்ணூர் கூட கொஞ்சம்
கொஞ்சமாக கடலுக்குள் சென்று கொண்டிருக்கிறது என்கிறார்கள்
நிபுணர்கள். மறு புறம் உலக வெப்பமாதலால் கடல் நீர் ஆவியாகி செல்வதால், கடலில் வெற்றிடம் ஏற்பட்டு, அவ்வப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் உருவாகின்றன. மேலும் பருவம் தவறிய, குறைவான மழையளவு, முறையற்ற தட்ப வெப்பம், சுனாமி, பூகம்பம் என்ற தொடர் விளைவுகளும் ஏற்படும் என்கின்றனர் சூழலியல்
நிபுணர்கள். இந்த நிலையை மாற்ற வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. நம்மையும் எதிர்கால சந்ததியினரையும் காப்பது நமது கடமை. இந்த பேராபத்தில் இருந்து
மரங்கள் நம்மைக் காக்க முடியும். அவை நச்சு வாயுக்களை சுவாசித்து,
நமக்காக பிராண வாயுவை வெளியிடுகின்றன. எனவே இருக்கும் காடுகளைக் அழிக்காமல், காக்க வேண்டும். காடுகள் இருந்தால்
மண்வளம், மூலிகைகள், வன விலங்குகள், செழுமை, கூடுதல்
மழையளவு, இயற்கைப் பாதுகாப்பு என பல்வேறு நன்மைகள் உள்ளன. எதிர்கால சந்ததியினருக்காகவும் பூமியை நாம் விட்டுசெல்லவேண்டும் !
முதல்வர் கருணாநிதி குணமடைந்து வருகிறார் : மு.க.ஸ்டாலின் தகவல்
சேலத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க சனிக்கிழமை அன்று வந்த மு.க.ஸ்டாலின் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் கருணாநிதி குணமடைந்து வருகிறார். இன்னும் ஓரிரு தினங்களில் அவர் இல்லம் திரும்புவார்' என்று கூறினார்.
சமூகவிரோதிகளை ஒடுக்க இப்போதுள்ள சட்டங்களே போதும்': முதல்வர் என்.ரங்கசாமி
புதுச்சேரியில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்த முதல்வர் என்.ரங்கசாமி புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு சீராக இருக்கிறது. மற்ற மாநிலங்களை நோக்கும் போது சட்டம்- ஒழுங்கு பராமரிப்பில் புதுச்சேரி முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. புதுச்சேரியில் குண்டர் சட்டம் கொண்டு வருவது தொடர்பாகவும், தேசிய பாதுகாப்புச் சட்டம் தொடர்பாகவும் கேட்கிறீர்கள். இப்போதுள்ள சட்டங்களே போதுமானது. இச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார் முதல்வர்.

Friday, May 16, 2008

செய்திகள் மே 16 காலை 7.45 மணி

பூங்கோதை ராஜினாமாவை வரவேற்கிறோம் ஆனால் ராஜிநாமா செய்யவேண்டியது கருணாநிதியே- ஜெயலலிதா அறிக்கை I
அமைச்சர் பூங்கோதை ராஜிநாமா குறித்து ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நெருங்கிய உறவினர் தொடர்புடைய ஊழல் வழக்கை அவருக்குச் சாதகமாகக் கையாளுமாறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநரிடம் தொலைபேசியில் கேட்டுக் கொண்டதற்காக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ராஜிநாமா செய்துள்ளார். சுயமரியாதையுடன் செயல்பட்டுள்ள அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படும் ஒட்டுமொத்த விவகாரத்துக்கும் முதல்வரின் பதில் என்ன? முதல்வரின் கட்டுப்பாட்டில் தான் உள்துறை உள்ளது. இந்நிலையில், இவரின் உத்தரவின் பேரில் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதா? இல்லை, முதல்வருக்குத் தெரியாமலேயே ஒட்டுக் கேட்கப்பட்டதா?
அப்படியானால், முதல்வரின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இல்லை என்பதையே காட்டுகிறது. எனவே, இந்தப் பிரச்னையில் முதல்வர் ராஜிநாமா செய்யவேண்டும். இதற்கெல்லாம் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை என்றால், அதிகாரத்தில் தொடரும் தார்மிக உரிமையை முதல்வர் இழந்துவிட்டார் என்றே அர்த்தம் என அறிக்கையில் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
மத்திய அரசு வழங்கிய துரு பிடித்த தடுப்பூசிக் குழல்கள் மீது தமிழகம் குற்றச்சாட்டு
தமிழகத்துக்கு தரமான ஊசிக் குழல்களை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸýக்கு தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலர் வி. கு. சுப்புராஜ் எழுதியுள்ள கடித விவரம்:-
""குழந்தைகளைத் தாக்கும் ஆறு உயிர்க் கொல்லி நோய்களைத் தடுப்பதற்காக 1985-ம் ஆண்டு தடுப்பூசித் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12.5 லட்சம் கர்ப்பிணி தாய்மார்கள், 11.5 லட்சம் குழந்தைகள் இத் திட்டத்தினால் பலன் அடைகின்றனர்.
தேசிய குடும்ப நல மதிப்பீட்டின்படி, தடுப்பூசித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதனால் தடுப்பூசியினால் தடுக்கப்படக்கூடிய நோய்களின் பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.
தமிழகத்தில் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், குழந்தைப் பருவ ரண ஜன்னி, இளம்பிள்ளைவாதம் போன்ற நோய்களின் தாக்கம் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக அண்டை மாநிலங்களில் போலியோ நோய் பாதிப்பு இருந்தாலும், தமிழகத்தில் போலியோ நோய் பாதிப்பு இல்லை. தடுப்பூசி சேவையில் தமிழகம் 100 சதவீத சாதனையை எட்டியுள்ளது. தமிழக அரசிடமிருந்து தரமான தடுப்பு மருந்துகள் வரப்பெற்றதால்தான் தமிழகம் இச் சாதனையை அடைய முடிந்தது.
டிசம்பர் முதல் பிரச்னை: மத்திய அரசு அண்மையில் டிசம்பர் 2007-ல் வழங்கிய தானே செயலிழக்கும் ஊசிக் குழல்களில் சில தரமற்றதாகவும், சில ஊசிகளில் துருவும், குழல்களின் உள்ளே தூசுவும் காணப்பட்டன. அவை தடுப்பூசி போட பயன்படுத்துவதற்கு சிறிதும் தகுதியற்றனவாக உள்ளன.
இது தொடர்பாக கடந்த 9.5.2008 அன்று இத்தகைய தரமற்ற ஊசிக் குழல்களின் மாதிரிகளோடு மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறைக்கு அறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.
எதிர்மறையான விளைவு: திருவள்ளூர் மாவட்டத்தில் தட்டம்மை தடுப்பூசி போடப்பட்ட பிறகு அண்மையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்தன. இதையடுத்து தடுப்பூசித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சில மாற்றங்களை தமிழக அரசு செய்துள்ளது. ஆரம்ப சுகாதார மையங்களிலும் சில தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் டாக்டர்களின் மேற்பார்வையிலும் தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மேற்கண்ட தரமற்ற ஊசிக் குழல்களைப் பயன்படுத்தினால் தடுப்பூசித் திட்டம் மீண்டும் பாதிப்படைவதோடு எதிர்மறையான விளைவுகளும் ஏற்படும். இதனால் இந்த ஊசிக் குழல்கள் பயன்படுத்தப்படுவது தமிழகத்தில் உடனடியாக முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே தரமான ஊசிக் குழல்களை உடனடியாக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தானே செயலிழக்கும் ஊசிக் குழல்கள் எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதால், அவற்றின் தரத்தை உறுதி செய்த பிறகு பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உடனடியாக அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்'' என்று அந்தக் கடிதத்தில் சுப்புராஜ் குறிப்பிட்டுள்ளார்
.புதுச்சேரி நகர சிரமைபுக்கு ரூ.100 கோடி திட்டம் மத்திய அரசின் செயலர் தகவல்
ஜவஹர்லால் நேரு தேசிய நகரப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி நகர புனரமைப்புத் திட்டங்களுக்கு ரூ.100 கோடி அளிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. இதில் 80 கோடியை மத்திய அரசு அளிக்கும், மீதி ரூ.20 கோடியை தன்னுடைய பங்களிப்பாக புதுச்சேரி அரசு அளிக்க வேண்டும் என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் செயலர் ஹர்ஜித் எஸ். ஆனந்து கூறினார். புதுச்சேரிக்கு வியாழக்கிழமை வந்த அவர், முதல்வர் என். ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்
புதுவையில் அரசு கேபிள் டி.வி. நடத்த விரைவில் தனி அதிகாரி: முதல்வர்

தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரி அரசு சார்பில் கேபிள் டி.வி. தொடங்க பரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதையொட்டி புதுச்சேரி மாநில கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு புதன்கிழமை நடந்தது. இச் சங்கத்தின் தலைவர் அ.மு. சலீம் தலைமை வகித்தார்.
அதில் முதல்வர் ரங்கசாமி பேசியது:
பிற மாநிலங்களில் செயல்படுத்தும் நல்ல திட்டங்களை செயல்படுத்த புதுச்சேரி அரசு தயாராக இருக்கிறது. தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் அரசு கேபிள் டி.வி. நடத்தப்படும் என்று அறிவித்துள்ளோம். இதைச் செயல்படுத்த தனியாக ஓர் அதிகாரியை நியமிக்க உள்ளோம். கேபிள் ஆபரேட்டர்களின் ஆலோசனையைக் கேட்டு அரசு கேபிள் டி.வி. நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் மக்கள் கட்டும் சந்தா கட்டணம் குறையும் என்றார்.

Thursday, May 15, 2008

செய்திகள் மே 15 காலை 7.40 மணி

நாடு இருக்கும் நிலை எண்ணி கருணாநிதி வேதனை : பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம்
முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூட இருந்தே குழி பறிக்கும் சிலரின் தோழமைதான் கிடைக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளார்நாடு வாழ, நலிவு தீர, நானிலம் தழைக்க நான்கைந்து பேர் கூட்டணி சேர்ந்து நற்செயல் புரியலாம் என்றால், கூட இருந்தே குழி பறிப்பவரின் தோழமைதான் கிடைக்கிறது. இந்நிலையில் அவர்கள் விருந்துக்கு அழைத்தால் வேம்பாய் கசக்கிறது.தொங்கலில் சேது சமுத்திரத் திட்டம்: பெரியார், அண்ணா, காமராஜர் போன்ற தலைவர்களால் வலியுறுத்தப்பட்ட, தமிழகத்தின் வளம் பெருகிட உதவக் கூடிய, அனைத்துக் கட்சியினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சேது சமுத்திரத் திட்டம் தொங்கலில் கிடக்கிறது.இன்னும் எத்தனைக் காலம் வாழப் போகிறோம் என்ற கேள்விக்கு பதில் தேடிய நாள்கள் ஓடிப் போய் செத்துப் பிழைக்கின்ற நேரத்தை நினைத்தவாறு நடுங்கச் செய்யும் தீவிரவாதம் வளர்ந்து வருகிறது. தேசத்தைக் காப்பதா? தேகத்தை துளைத்துக் கூறுபோடும் குண்டு மழைக்கிடையே குழந்தை குட்டிகளோடு தவிப்பதா? அதுவும் இப்போதா அல்லது எப்போதா என்று வினாத் தொடுக்கும் விபரீதத் தீவிரவாதம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. தன்னலம் இல்லாதவர்களும், தாய்நாட்டிற்காக உயிரையும் துறப்பவர்களும் தான் என்னுடன் இருப்பவர்கள் என்ற பெருமிதம் வாய்க்கும் வரையில் பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருப்பதாக புகார் : அமைச்சர் பதவியிலிருந்து பூங்கோதை ராஜிநாமா
பேரவையில் நேற்று இந்தப் பிரச்னை குறித்து ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை, லஞ்சப் புகாரில் சிக்கிய தனது நெருங்கிய உறவினரான, மின்வாரியத்தில் பொறியாளராகப் பணிபுரியும் ஜவஹர் என்பவரைக் காப்பாற்றுவதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையர் உபாத்தியாயாவிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அவர்களின் உரையாடல் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்து அனைத்துத் தரப்பு மக்களிடமும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்திய அரசியல் சாசனப்படி நடப்பேன் என்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட அமைச்சர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். இதற்கான பரிகாரத்தை சம்பந்தப்பட்ட அமைச்சரே காண வேண்டும் என்றார்.அதற்கு பதிலளித்து முதல்வர் ,எதிர்க்கட்சியின் பணி எதுவோ அதனை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஒ. பன்னீர்செல்வம் அமைதியான முறையில் நிறைவேற்றி உள்ளார். இடித்துச் சொல்ல வேண்டிய எதிர்தரப்பினர் இல்லாவிட்டால் அந்த அரசு தானாகவே கெட்டுவிடும் என்பது வள்ளுவர் வாக்கு.ஏற்கெனவே ஒட்டுக்கேட்ட விவகாரம் சட்டப் பேரவையில் எழுப்பப்பட்டு அதனை விசாரிக்க விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சியில் ஒருவர் பேசுவதை இன்னொருவர் பதிவு செய்வது எளிதாகி இருக்கிறது.தலைமைச் செயலாளரும், இன்னொரு அதிகாரியும் பேசிக் கொண்டதாகப் பதிவான ஒட்டுக் கேட்பு விவகாரம் விசாரணையில் இருக்கும் போது இடையில் இந்த செய்தி வந்துள்ளது. இதில் ஒரு அமைச்சர் சம்பந்தப்பட்டிருப்பதால் நான் வேதனைப்படுகிறேன். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கூறியதைப்போல விசாரணை கமிஷனோடு இதையும் சேர்க்கலாமா என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போது, அவரே தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.அமைச்சரின் ராஜிநாமா குறித்து நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதைப் பற்றி கலந்தாலோசித்துக் கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில் இந்த ஒட்டுக் கேட்பு விவகாரம் எப்படி நடைபெறுகிறது என்பதை நமது புலனாய்வு அமைப்பு மூலம் ஆராய வேண்டியிருக்கிறது. யோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தமிழக எம்.எல்.ஏ. மாத ஊதியம் தொகுதி மேம்பாட்டு நிதி உயர்வு

சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற நிதித் துறை மீதான மானியக் கோரிக்கைக்கு பதிலளித்து நிதியமைச்சர் க. அன்பழகன் இந்த உயர்வினை அறிவித்தார்சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு தற்போது ரூ. 2,000 சம்பளம், ஈட்டுப்படி, தொகுதிப் படி, தொகுப்புப் படி, தொலைபேசி, வாகனம், தபால் ஆகிய படிகளுமாக சேர்த்து மாதத்துக்கு ரூ. 25,000 வழங்கப்படுகிறது.உறுப்பினர்களின் வேண்டுகோள்படி, சம்பளத்தில் ரூ. ஆயிரமும் , படிகளில் ரூ. 4 ஆயிரமும் சேர்த்து மாதத்துக்கு ரூ. 30,000 வழங்கப்படும். இந்த உயர்வு, 2008-ம் ஆண்டு ஏப்ரல் 1 - ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு... முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியமாக தற்போது ரூ. 7 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இது, ரூ. 8 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இறந்தால், அவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ. 3,500-லிருந்து ரூ. 4 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இவையும், 2008 ஏப்ரல் 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றார் அமைச்சர் க. அன்பழகன். இதில் முதல்வர் கருணாநிதி கூறியது: எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக தற்போது ரூ. 1 கோடியே 20 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. அது, ரூ. 1 கோடியே 50 லட்சமாக உயர்த்தித் தரப்படும். என்றார்
மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை புதுவை மாநில அந்தஸ்து கோருவது தொடர்பாக ஒருமித்த கருத்தை உருவாக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்

மார்க்சிஸ்ட் கட்சியின் பெருமாள். நேற்று விடுத்த செய்தியில் புதுச்சேரி சட்டப் பேரவையில் மாநில அந்தஸ்து தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றும்போது காங்கிரஸ் மற்றும் பாமக எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்தனர். பிறகு அக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் சிறப்பு மாநில அந்தஸ்துதான் மத்திய அரசிடம் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளது சரியல்ல. அதனால் இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்த கருத்தை உருவாக்க வேண்டியது அவசியம். அதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.எங்கள் கட்சியைப் பொறுத்தவரை புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து பெற வேண்டும். ஏற்கெனவே மத்திய அரசு அருணாசலபிரதேசம், சிக்கிம், மிசோரம் போன்றவற்றுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கியுள்ளது. அதனால் புதுச்சேரியின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது.பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி 2 ஐந்தாண்டு திட்டங்கள் முடிந்த பிறகுதான் இந்தியாவுடன் இணைந்தது. இந்தக் காரணத்தைக் காட்டி புதுச்சேரிக்குச் சிறப்பு மாநில அந்தஸ்து பெற முடியும்.கடந்த பாஜக ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதார கொள்கைதான் இப்போதுள்ள காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் பின்பற்றப்படுகிறது. அதனால் விலைவாசி உயர்ந்துள்ளது.விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த எங்கள் கட்சி சார்பில் இம் மாதம் 15-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடக்கிறது. புதுச்சேரியில் 6 மையங்களில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார் பெருமாள்

முதல்வர் அறிவித்த சலுகை வேண்டாம்; அதிகாரம்தான் வேண்டும்: நகராட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு
நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு செல்போன் படி உள்ளிட்ட சலுகைகளை அண்மையில் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். புதுச்சேரி நகராட்சியின் கூட்டம் புதன்கிழமை தொடங்கியபோது இதற்காக முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவிக்க நகராட்சித் தலைவர் டாக்டர் ஸ்ரீதேவி முயன்றார். இதற்கு புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். செல்போன் படி அளிப்பது போன்ற தனி நபர் சலுகைகளை நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை. நகராட்சிக்கு உரிய அதிகாரத்தை முதல்வர் ரங்கசாமி கொடுக்க வேண்டும் என்றனர். இதற்கு அதிமுக உறுப்பினர்களும் ஆதரவாக கோஷம் எழுப்பினர்.ஒரு கட்டத்தில் நகராட்சிக்கு அதிகாரம் வேண்டும்தான் என்று நகராட்சித் தலைவி டாக்டர் ஸ்ரீதேவி ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றலாம் என்றும் அவர் கூறினார். இருப்பினும் இது தொடர்பாக இக் கூட்டத்தில் தீர்மானம் எதுவும் நிறைவேறவில்லை. செல்போன் படி உள்ளிட்ட சலுகைகளை எங்களுக்கு அளித்தால் போதாது. மக்களுக்காகப் பணியாற்ற நகராட்சிக்கு உரிய அதிகாரத்தை அரசு அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்

Wednesday, May 14, 2008

ஜெய்ப்பூர் கோரதாண்டவம் - வலுப்படும் ஒற்றுமை






ராகவன் தம்பி அனுமதியுடன் http://www.sanimoolai.blogspot.com/ இருந்து




கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஹைதராபாத் நகரத்தில் நிகழ்ந்தது தொடர் குண்டு வெடிப்பு. அதன்பிறகு அக்டோபர் மாதத்தில் ஜெய்ப்பூரில். இப்போது மீண்டும் ஜெய்ப்பூரில் அரங்கேற்றியிருக்கிறார்கள். இது தொடர்பாக சில சந்தேகக் கைதுகளும் நிகழ்ந்துள்ளன. இதுவரை (அதாவது இந்த வலைப்பூ பதிவேற்றம் செய்யும் வரை நான்கு பேரை விசாரணைக்காக கைது செய்துள்ளது ஜெய்ப்பூர் காவல் துறை.
நேற்று (13 மே 2008) ஜெய்ப்பூரில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பின் பின்னணியாக ஒரு புதிய கோணத்திலும் ஒரு பார்வையை வைத்திருக்கிறார்கள் சில செய்தியாளர்கள். அவர்கள் சொல்வதாவது, இந்தியா பொக்ரானில் அணுகுண்டு சோதனை நிகழ்த்திப் பத்தாண்டு நிறைவு பெறுகிறது. இது பாகிஸ்தானை ஏகத்துக்கும் உசுப்பி விட்ட ஒரு நிகழ்வு. நம்முடைய வெளியுறவுத் துறை அமைச்சர் விரைவில் பாகிஸ்தான் செல்ல இருக்கிறார். இதுபோன்ற நேரத்தில் இப்படி ஒரு அசம்பாவிதத்தைத் தோற்றுவிப்பது இருநாடுகளுக்கிடையிலான உறவுகள் சீர்படுவதில் சில பின்னடைவுகளை ஏற்படுத்தலாம் என்கிற நோக்கில் சில இசுலாமிய பயங்கரவாத அமைப்புக்கள் இதை செய்திருக்கலாம் என்றும் ஒரு சொல்கிறார்கள். இன்னொரு பக்கம், இசுலாமிய அமைப்புக்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்த சில இந்து அமைப்புக்களே இதை செய்திருக்கலாம் என்றும் வாதிக்கிறார்கள். இந்தத் தொடர் குண்டு வெடிப்புக்கள் அதிகம் சேதம் விளைவிக்காது வேகம் குறைந்து இருப்பதையும் தங்கள் வாதத்துக்கு வலு சேர்ப்பது என்று சொல்கிறார்கள் இவர்கள். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஜெய்ப்பூரில் நடக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் கவலையை அதிகரிக்க வைக்கிறது.
ஜெய்ப்பூருக்கு அருகாமை நகரங்களான ஆக்ரா, தில்லி போன்ற நகரங்களில் காவல் ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதில் மிகவும் ஆறுதல் தரும் விஷயம் என்னவென்றால், கோவில் வளாகத்திலேயே குண்டு வெடித்தும் ஜெய்ப்பூர் மக்கள் எவ்வித வகுப்புக் கலவரங்களையும் ஏற்படுத்தாது அமைதி காத்ததுதான். வேறு சில ஊர்களில் இது நிகழ்ந்திருந்தால் குறிப்பிட்ட சில சமூகத்தினர் தாக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்காது தங்கள் சோகங்களை மனதில் ஏந்தி உடனடியாக மீட்புப்பணிகளிலும் காயமûடைந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்ப்பதிலும் எல்லோரும் அதீதமான கவனம் செலுத்தியிருக்கிறார்கள். காவல் துறையும் நகரில் வதந்திகள் ஏதும் பரவாது தடுக்கும் வகையில் அனைத்து மொபைல் இணைப்புக்களையும் உடனடியாக நிறுத்தி வைத்திருக்கிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த அரைமணி நேரத்துக்குள் எல்லா மொபைல் இணைப்புக்களும் நிறுத்தி வைக்கப்பட்டதனால் எவ்வித வதந்திகளும் வெளியில் பரவாத வண்ணம் தடுக்கப்பட்டிருக்கிறது. காயமடைந்தோர் சேர்க்கப்பட்ட சவாய் மான்சிங் மருத்துவமனையின் மருத்துவர்களும் ஊழியர்களும் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறார்கள்.
வெளிச் சக்திகள் நம்மைச் சூழ்ந்து இடர் விளைக்கும்போது நமக்கு ஒரு பிரத்யேகமான வல்லமையைத் தருகிறாள் அன்னை. இதனை ஒவ்வொரு தாக்குதல்களின் போதும் இந்தியர்களாகிய நாம் நிரூபித்து வருகிறோம் என்பதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது.

செய்திகள் மே 14 காலை 7.30 மணி


ஜெய்ப்பூரில் தொடர் குண்டுவெடிப்பு: 60 பேர் சாவு
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை இரவு 12 நிமிஷங்களுக்குள் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 60 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஜெய்ப்பூரில் இப்படியொரு தாக்குதல் நடைபெறும் என்பதை மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீஸôர் எதிர்பார்க்கவில்லை என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. கார் மற்றும் துணிக்கடையில்... நகரின் கோட்வாலி பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றின் அருகிலும், இப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலும் குண்டுகள் வெடித்தன. நகரின் திரிபோலியா பஜாரில் மக்கள் நடமாட்டம் அதிகமிருந்த நிலையில் இங்கும் குண்டு வெடித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். மேலும் இந்நகரிலுள்ள ஹனுமார் கோயில் அருகிலும், மானஸ் செüக், படி செüபல், சோட்டி செüபல், ஜோஹரி பஜார் ஆகிய பகுதிகளிலும் தொடர்ச்சியாக குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. முதல் குண்டுவெடிப்பு இரவு 7.40 மணிக்கு நிகழ்ந்தது.ஜெய்ப்பூரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைடுத்து மத்திய உள்துறை அமைச்சகக் குழுவினர் மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினர் இங்கு வந்துள்ளனர். ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜெய்ப்பூரில் நிகழ்ந்துள்ள தொடர் குண்டுவெடிப்புகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவி முதல் வங்கி எஸ்பிஐ ஆஸி. நிறுவனத்துடன் ஒப்பந்தம்

10 ஆயிரம் கிளைகளுடன் செயல்படும் பாரத ஸ்டேட் வங்கிக்கு 10 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர் அது பொது காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஐஏஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இவ்விரு நிறுவனங்களும் கூட்டாக இந்தியாவில் பொது காப்பீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தும். புதிய நிறுவனத்தில் 74 சதவீத பங்குகள் எஸ்பிஐ வசமும், 26 சதவீத பங்குகள் ஐஏஜி வசமும் இருக்கும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பொதுக்காப்பீட்டுத் துறையில் மிகச் சிறந்த வளர்ச்சியை எஸ்பிஐ எட்டும் என்று வங்கியின் துணை நிர்வாக இயக்குநர் தீபக் சாவ்லா தெரிவித்தார்.

காரைக்காலில் ஜிப்மர் மருத்துவமனையின் கிளையைத் தொடங்க வேண்டும்-மு. ராமதாஸ்

இது சமந்தமாக எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தலைநகர் புதுச்சேரியில் இருந்து 160 கி.மீ. தூரத்தில் காரைக்கால் அமைந்துள்ளது. அண்மையில் மாவட்டமாக அறிவிக்கப்பட்ட காரைக்காலில் 1.72 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். காரைக்காலில் பல கிராமங்கள் இருக்கின்றன. காரைக்காலின் பொருளாதார மற்றும் சுகாதார குறியீடுகள் அடிப்படையில் பார்க்கும்போது காரைக்கால் மற்ற பிராந்தியங்களைக் காட்டிலும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.
தற்போது மாநில அரசு நடத்தும் பொது மருத்துவமனையின் வாயிலாக அடிப்படை மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இதயநோய், நரம்பியல் துறை, அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை போன்ற சிறப்பு சிகிச்சைகளுக்கு காரைக்கால் மக்கள் புதுச்சேரியில் உள்ள ஜிப்மருக்குதான் செல்ல வேண்டியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 47-க்கு அருகில் காரைக்கால் அமைந்துள்ளதால் அது ஒரு விபத்து நிறைந்த பகுதியாக இருக்கிறது. விபத்தில் இருந்து மக்களுக்கு உடனடியாக மருத்துவ சேவை அளிக்கக் கூடிய வசதி அங்கு இல்லை. எனவே ஜிப்மரின் சிறப்பு மையம் ஒன்றை காரைக்காலில் அமைக்க வேண்டும் என்று ஏற்கெனவே கேட்டிருந்தேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்று காரைக்காலில் இந்த மையத்தை அமைக்க உறுதி அளித்தீர்கள்.
அந்த உறுதிமொழியின் தொடர்ச்சியாக அந்த பிராந்திய மக்களின் நீண்டகால கோரிக்கையான ஜிப்மரின் விரிவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இந்த மையத்தை முதன் முதலாக காரைக்காலில் ஒரு வாடகை கட்டடத்தில் தேவையான அடிப்படை நோய் கண்டறியும் வசதிகளோடு அமைக்கலாம்.
ஜிப்மரில் இருந்து மருத்துவ அதிகாரிகள் இந்த மையத்தை நிர்வகிக்க கேட்டுக் கொள்ளப்படலாம். சிறப்புத் துறை வல்லுநர்கள் வாரத்தின் ஒவ்வொரு நாளைக்கும் ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து அந்த மையத்துக்குச் சென்று நோயாளிகளைப் பரிசோதித்து அவர்களைக் குணமடையச் செய்ய தொடர் நடவடிக்கை எடுக்கலாம், அவரச காலத்தில் அங்குள்ள நோயாளிகளை அந்த மையத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் மூலமாக ஜிப்மர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உடனடி சிகிச்சை அளிக்கலாம்.
இந்த மையத்தின் வாயிலாக ஏழை மக்களுக்கு காரைக்காலில் உயர்தர மருத்துவ சேவையை அளிக்கலாம். அதனால் ஒவ்வொரு முறையும் ஜிப்மருக்கு வந்து செல்லும் நேரம், சக்தி, பொருளாதாரம் வீணடிக்க வேண்டிய அவசியம் இருக்காது. எனவே இத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் ராமதாஸ்.


அம்பேத்கர் மணி மண்டபம் திறப்பு விழா மத்திய அமைச்சர் வராததால் ஒத்திவைப்பு

சமூநலத்துறை அமைச்சர் மு. கந்தசாமி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி கடற்கரை சாலையில் புனரமைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் மணி மண்டபம் திறப்பு விழா இம் மாதம் 14-ம் தேதி திறப்பதாக இருந்தது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் அமைச்சர் மீராகுமார் இந்தத் தேதியில் வரவில்லை.
மத்திய அமைச்சரிடம் மறு ஒப்புதல் கிடைத்தவுடன் இன்னொரு தேதியில் திறப்பு விழா நடைபெறும் என்று அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதுவை பஞ்சாலை தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் - முதல்வர்அறிவுப்பு

புதுச்சேரி ஏ.எப்.டி. பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 அளிக்கப்படும் என்று முதல்வர் என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இந்நிலையில் தங்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இடைக்கால நிவாரணம் அளிக்க வேண்டும் என்று சுதேசி, பாரதி, கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் முதல்வர் ரங்கசாமியுடன் செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
அதன் அடிப்படையில் புதுச்சேரி சுதேசி, பாரதி பஞ்சாலை தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.750-ம், திருபுவனை கூட்டுறவு நூற்பாலைத் தொழிலாளர்களுக்கு ரூ.600-ம் இடைக்கால நிவாரணமாக அளிக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

Tuesday, May 13, 2008

செய்திகள் மே 13 காலை 7.30 மணி



சீனாவில் மிகப்பெரும் சோகம் : கடும் நிலநடுக்கத்தால் 9,000 பேர் சாவு
சீனாவில் திங்கள்கிழமை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 9,000 பேர் பலியாகினர். பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 900 மாணவர்கள் புதைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 அலகாக பதிவானது. தென்மேற்கு சீனாவின் சிஜுவான் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்க அதிர்வை பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரத்தைச் சேர்ந்த மக்கள் உணர்ந்தனர். சீனாவின் அண்டைநாடுகளான வியத்நாம், தாய்லாந்திலும் இந்த நிலநடுக்க அதிர்வை உணர முடிந்தது. நிலநடுக்கத்தால் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கட்டடங்கள் அதிர்ந்தன. இதை உணர்ந்த மக்கள் வீடுகளையும், அலுவலகங்களையும் விட்டு அலறியடித்துக் கொண்டு வீதிக்கு ஓடிவந்தனர்.
இதனிடையே, இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை உடனடியாக மீட்கவும், மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி உள்பட அனைத்து உதவிகளை செய்யவும் சீன அதிபர் ஆணை பிறப்பித்துள்ளதாக, செய்தி நிறுவனம் கூறியது.
சிறப்பாக சேவை புரிந்த 26 நர்சுகளுக்கு நைட்டிங்கேல் விருது
சிறப்பாகப் சேவை புரிந்த 26 நர்சுகளுக்கு தேசிய "ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் திங்கள்கிழமை வழங்கினார். விருது பெற்றோரில் தமிழ்நாடு, ஜம்மு-காஷ்மீர், மேகாலயம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நர்சுகள் அடங்குவர். அவர்களில் ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ் சந்திரா என்பவர் மட்டுமே ஆண். விருது வழங்கிப் பேசிய பிரதிபா பாட்டீல், நர்சுகளுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பற்றாக்குறை இருப்பதால், இன்னும் அதிக அளவில் நர்சிங் கல்லூரிகளை அமைக்க வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.
பணவீக்கம் 4 மாதங்களில் 5.5 சதவீதமாக குறையும் : பிரதமரின் பொருளாதார ஆலோசனை உறுப்பினர்
.
தில்லியில் திங்கள்கிழமை தொடங்கிய சர்வதேச வரி தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் தலைவர் சி. ரங்கராஜன் இவ்வாறு கூறினார். இந்த ஆண்டு பருவ மழை சிறப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது. எனவே உணவு தானிய விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். தவிர, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இதன் பலன் முழுமையாக தெரிய நான்கு மாதங்கள் ஆகும். பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வங்கிகளில் ரொக்கக் கையிருப்பு விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இது வெளிப்படையாகத் தெரியும் நடவடிக்கையாகும். இது தவிர, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 120 டாலரைத் தாண்டியுள்ளதால் அதன் தாக்கம் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஓரளவு இருந்தாலும் அதனால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாது. இருப்பினும் பொருளாதாரத்தில் தேக்க நிலை அல்லது மந்த நிலை ஏற்பட வாய்ப்புண்டு. என்று கூறினார்.
புதுவைவில் பிரபல குற்றவாளி பட்டப்பகலில் வெடிகுண்டு மூலம் கொலை:
புதுச்சேரியில் பட்டப்பகலில் ரிமோட் வெடிகுண்டு மூலம் ரெüடி கொலை செய்யப்பட்டார். உழவர்கரை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் தெஸ்தான் (38). இவர் பல கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் தெஸ்தான் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் திங்கள்கிழமை வந்தனர். திருமண பத்திரிகை அளிக்க வந்துள்ளதாக அவர்கள் கூறினர். அப்போது குண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறதுமோட்டார் சைக்கிள் பெட்டியில் மறைந்து வைக்கப்பட்டிருந்த ரிமோட் மூலம் பையில் உள்ள வெடி குண்டை வெடிக்கச் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸôருக்கு எழுந்துள்ளது.
குண்டு வெடிப்பில் தெஸ்தான் பலியானார். அருகில் இருந்த 2 பேர் காயம் அடைந்தனர். இந்தக் கொலை சம்பவத்தையொட்டி தெஸ்தானின் ஆதரவாளர்கள் கடைகளை மூடுமாறு வலியுறுத்தி வந்தனர்.
இதையொட்டி ரெட்டியார்பாளையம், நெல்லித்தோப்பு, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன

Monday, May 12, 2008

செய்திகள் மே 12 காலை 7.30 மணி

இந்த ஆண்டு தமிழகத்தில் மின வெட்டு இருக்காது!': ஆர்க்காடு . வீராசாமி தகவல்
தமிழகத்தில் தற்போது காற்றாலைகள் மூலம் 1000 முதல் 1800 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக தமிழகத்தில் மே 15ஆம் தேதிக்குப் பிறகுதான் காற்றாலை மூலம் மின் உற்பத்தி தொடங்கும். ஆனால், இந்தாண்டு ஏப்ரல் 27ஆம் தேதி முதலே மின் உற்பத்தி தொடங்கி விட்டது.
காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி தொடங்கி விட்டதால், இனி வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் பெற தேவையில்லை. தமிழகத்தை 6 மண்டலமாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு நாள் விடுப்பு வழங்கும் திட்டம் மார்ச் மாதம் முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.
மின் உற்பத்தியில் தற்போதுள்ள இதே நிலை நீடிக்குமேயானால் தொழிற்சாலைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த சுழற்சி முறையிலான விடுப்பு திட்டம் விரைவில் ரத்து செய்யப்படும். காற்றாலை மூலம் மின் உற்பத்தி தொடங்கி விட்டதால், மே 30 - க்குப் பிறகு தமிழகத்தில் மின் தடையே இருக்காது. பல பகுதிகளில் தொடர்ந்து மின் தடை ஏற்படுவது குறித்து கண்காணிப்புப் பொறியாளருடன் ஆலோசனை நடத்தியதில், பல இடங்களில் மின் மாற்றிகள், பீடர்கள் பற்றாக்குறை இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதை நிவர்த்தி செய்வதற்கு ரூ. 2000 கோடி செலவாகும் என்றார் வீராசாமி.

மக்களின் கஷ்டம் புரியாதவர் சிதம்பரம் ஜெயலலிதா தாக்கு

ஒட்டுமொத்த குறியீட்டெண் அடிப்படையில் விலைவாசி 7.61 சதவீதம் உயர்ந்திருப்பதாக அரசின் பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். இடைத்தரகர்கள், சில்லரை வணிகர்களைக் கடந்து சாமானிய மக்களை அடையும்போது இந்த உயர்வு 30 சதவீதமாக இருக்கும். இதில் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை என்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கூறுகிறார். சாமானிய மக்களின் கஷ்டங்கள் அவருக்குப் புரியவில்லை
சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பேருந்துகளில் மறைமுகக் கட்டண உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் அப்பாவி மக்கள் மீது 40 சதவீத விலைவாசி உயர்வு சுமத்தப் பட்டுள்ளது.
அமெரிக்காவின் கொள்கைகள் காரணமாகத்தான் இந்தியாவில் விலைவாசி உயர்ந்திருப்பதாக ஏப்ரல் முதல் வாரத்தில் சொன்ன சிதம்பரம், ""பன்னாட்டு விலைவாசி உயர்வால்தான் இங்கு விலைவாசி உயர்ந்திருக்கிறது'' என்று ஏப்ரல் 16-ஆம் தேதி தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டார்.
சிதம்பரம் இவ்வாறு முரண்பட்ட தகவல்களைக் கூறிக் கொண்டிருந்த போதிலும், பிரதமராக இருக்கும் பொருளாதார வல்லுநர் மன்மோகன் சிங் அமைதி காத்து வருவது அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.
.
சிதம்பரத்தின் முரண்பட்ட அறிக்கைகள் அவருடைய பலவீனத்தைக் காட்டுவதாக இருக்கிறது. இதுபோன்ற அறிக்கைகள் மக்களின் வயிற்றை நிரப்ப உதவாது. உறுதியான நடவடிக்கைதான் இப்போதைய தேவையே தவிர, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பணவீக்கம் தொடர்பான கொள்கைகளால் எதுவும் முடியாது.
இந்தியர்கள் அதிகம் சாப்பிடுவதால்தான் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் சொன்னதற்கு எதிர்ப்பைக் காட்டும் துணிச்சல் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், நிதியமைச்சர் சிதம்பரத்துக்கும் இல்லை.
இந்திய மக்களைப் பற்றி கூறிய கருத்துகளால் தனக்கு அறிவார்ந்த தன்மை இல்லை என்பதை அமெரிக்க அதிபர் காட்டிக் கொண்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காததன் மூலம், தங்களுக்கு முதுகெலும்பு இல்லை என்பதை இந்தியத் தலைவர்கள் காட்டிவிட்டனர். என்று அறிகையில் கூறியுள்ளார் புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்துதான் சரியாய் இருக்கும் நாராயணசாமி கருத்து

செய்தியாளர்களிடம் மத்திய திட்டத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமை கூியதாவது
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பதை நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது ஏற்றுக் கொண்டார். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சவாண் இதற்கான சட்டவரையறை கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். அதற்குள் ஆட்சிக் காலம் முடிந்துவிட்டதால் அது நிறைவேறாமல் போனது.
இப்போது புதுச்சேரியின் வருவாய் நிலையைக் கருத்தில் கொண்டால் சிறப்பு மாநில அந்தஸ்து கொடுத்தால்தான் வளர்ச்சி காண முடியும்.
உள்கட்டமைப்பு வசதிகள், தொழிற்சாலைகள், சுற்றுலா வளர்ச்சி, சிறப்புப் பொருளாதார மண்டலம் போன்றவற்றில் புதுச்சேரி வளர்ச்சி அடைந்தால் மாநில அந்தஸ்து பெற முடிவு செய்யலாம். அதுவரை சிறப்பு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். அதற்காக புதுச்சேரி அரசு ஓர் அறிக்கை தயார் செய்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டப்பேரவையில் இது தொடர்பாக சட்டம் கொண்டு வந்து நுழைவுத் தேர்வை ரத்து செய்துள்ளனர். அது போன்றுதான் புதுச்சேரியிலும் செய்ய வேண்டும். நுழைவுத் தேர்வு ரத்து தொடர்பாக சட்டப்பேரவையில் மசோதா கொண்டு வந்தால் அதற்கு ஒப்புதல் கொடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் தயாராக இருக்கிறது என்றார் நாராயணசாமி.
அமைச்சர் மல்லாடியை பதவி பறிக்க பட வேண்டும் அன்பழகன் கோரிக்கை

செய்தியாளர்களிடம் அதிமுக செயலரும் எம்எல்ஏவுமான ஆ.அன்பழகன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக அரசு சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பதவியில் நீடிக்கக் கூடாது. அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக சட்டப்பேரவையில் அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எதிர்த்தார். அதனால் ஒருமனதாக இத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை. பெரும்பான்மை எம்எல்.ஏக்களின் கருத்து அடிப்படையில்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்குச் சிறப்பு மாநில அந்தஸ்தோ அல்லது மாநில அந்தஸ்தோ எதுவும் கொடுக்கக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியவர் இந்த மல்லாடி. அரசு எடுக்கும் முடிவை எதிர்க்கக் கூடியவர் எப்படி அமைச்சராக பதவியில் நீடிக்க முடியும்? அதனால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். நம் நாட்டில் இது போன்று எந்த மாநிலத்திலும் அரசின் முடிவை ஓர் அமைச்சர் எதிர்த்தது கிடையாது. என்றார் அன்பழகன்
கம்பன் விழா இனிது முடிந்தது .
முன்று நாள் கம்பன் விழா இனிது முடிந்தது .நேற்று அரங்கம் நிரம்பியது . இனி புதுவைவில் பல பேர் புதிதாக கம்பராமாயணம் படிக்காரமிப்பார்கள் என்பது நிச்சியம். சிறந்த முறையில் நடைபெற்ற ஏற்பாடுகளை மக்கள் பாராட்டினர்

Sunday, May 11, 2008

செய்திகள் மே 11 காலை 7.30 மணி

பரூக் அப்துல்லா எச்சரிக்கை :சீனாவிடம் இந்தியா கவனமாக இருக்க வேண்டும்
"ஜம்மு காஷ்மீரில் அமைதி' என்ற தலைப்பில் ஜம்முவில் சனிக்கிழமை நடபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசியபோது பரூக் அப்துல்லா இந்தியாவுக்கு சீனா அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, அந்நாட்டிடம் இந்தியா எப்போதும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்
இந்தியாவுக்கு மிக நெருக்கமாக தனது அணு நீர்மூழ்கி கப்பல் தளத்தை சீனா அமைத்துள்ளது. இதைச் செயற்கைக்கோள் தெளிவாக படம்பிடித்து அனுப்பியுள்ளது. சீனா அதன் பாதுகாப்பு விஷயத்தில் மிகக் கவனமாக உள்ளது. இதுபோன்ற சீனாவின் நடவடிக்கையை இந்தியா அலட்சியப்படுத்திவிடக் கூடாது. இந்தியாவும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பரூக் அப்துல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.
அருணாச்சலத்தின் மீது ஆதிக்க முயற்சி: திபெத்தை சீனா ஆக்கிரமித்த போது அதை இந்தியா கண்டு கொள்ளவில்லை. இதனால் திபெத்தின் மீதான சீனாவின் ஆளுமை வலுவடைந்துள்ளது. அதுபோல அருணாச்சல பிரதேச மாநிலத்தின் மீதும் உரிமை கொண்டாடும் முயற்சியில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த விஷயத்திலும் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றார்.
அணுசக்தித் திட்டம் நாட்டிறகு வலுசேர்க்கும் - கலாம்

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நாட்டிறகு வலுசேர்க்கும் என்று கலாம் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் கருத்தை வரவேற்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அறிவார்ந்தவர்களின் குரலை நாடே கூர்ந்து கவனிக்கும் என தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் நாட்டின் அணுசக்தித் திட்டத்துக்கு வலுசேர்க்கும் என்று கலாம் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இத்திட்டம் தேச ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் என்று கூறப்படுவதையும் கலாம் நிராகரித்தார். கலாமின் கருத்தை வரவேற்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், "நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானியான கலாம், பொக்ரான் அணுகுண்டு சோதனை உள்ளிட்டவற்றில் மிகச் சிறந்த பங்களிப்பை ஆற்றியுள்ளார்.' அவரை போன்ற அறிவார்ந்தவர்களின் குரலை மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றார் மன்மோகன் சிங்.
காரைக்காலில் கேந்திரிய வித்யாலயாக்கு 10 ஏக்கர் நிலம் புதுவை அரசு தரும்

காரைக்கால் MLA நாஜிம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கேந்திரிய வித்யாலயாக்கு புதுச்சேரி அரசு 10 ஏக்கர் நிலம் தர வேண்டும் என்று கேந்திரிய வித்யாலா இயக்குநரகம் வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுவை முதல்வர் என். ரங்கசாமியிடம் தெரிவித்தபோது, கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க காரைக்காலில் 10 ஏக்கர் நிலம் தருவதாக முதல்வர் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஒப்புதல் கடிதத்தை கேந்திரிய வித்யாலயாவின் ஆணையருக்கு அனுப்பும்படி புதுவை கல்வித் துறை இயக்குநரை முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார் என்று நாஜிம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் + ௨ தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர் அரவிந்துக்கு முதல்வர் பாராட்டு
புதுச்சேரி மாநில அரசுப் பள்ளிகள் அளவில் காரைக்கால் தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ். அரவிந்த் 1200-க்கு 1171 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார்.
இவருக்கு புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் ஆகியோர் தொலைபேசி மூலம் பேசி தமது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
புதுவை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம், மாணவரின் இல்லத்துக்கு சனிக்கிழமை சென்று அவருக்கு சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார்.
அரசின் செயல் முறை சரியாக இருந்தால் தான் புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கிடைக்கும் : எம்.பி. ராமதாஸ்
செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசினார் அப்போது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று இப்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை சிறப்பு மாநில அந்தஸ்து கோரிதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை 8 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் உண்மையில் புதுச்சேரி அரசுக்கு அக்கறை இருந்தால் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தத் தீர்மானத்தை உள்துறை அமைச்சகத்துக்கு மட்டும் அனுப்பினால் போதாது. பிரதமர் அலுவலகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தொடர்பான பிரச்னையில் ஒரு கொள்கை முடிவை எடுக்க வேண்டும். அதற்காக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் சேர்ந்து இக் கொள்கை முடிவை எடுக்க வேண்டும். அதற்கு புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மாநில அந்தஸ்து அளிக்கக் கோரும் தீர்மானத்தை மட்டும் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தால் போதாது. அத்துடன் மாநில அந்தஸ்து கொடுத்தால் புதுச்சேரிக்குக் கிடைக்கும் நிதி ஆதாரம், வளர்ச்சி போன்றவை குறித்த ஒரு சாத்தியக்கூறு அறிக்கையை இணைத்து அனுப்ப வேண்டும். இதற்காக ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் பொருளாதார நிபுணர்களையும் உள்படுத்த வேண்டும். இது தொடர்பாக தேவையான தகவல்களைக் கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.
புதுச்சேரியில் இருந்து வரும் கடிதங்களில் எதாவது தவறு இருக்கும் என்றுதான் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் அந்தக் கடிதத்தைப் படிக்கின்றனர். அது போன்ற நிலையில் மாநில அந்தஸ்து தொடர்பான சாத்தியக் கூறு அறிக்கை இல்லாமல் தீர்மானத்தை மட்டும் அனுப்பி வைத்தால் எந்தப் பயனும் இல்லை. என்றார் ராமதாஸ்
புதுச்சேரிக்கு மழை நிவாரணமாக ரூ.7.68 கோடி -மத்திய அரசு

மக்களவை உறுப்பினர் பேராசிரியர் மு.ராமதாஸ் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசும்போது புதுச்சேரிக்கு மழை நிவாரணமாக ரூ.7.68 கோடியை மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளது புதுச்சேரியில் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெய்த மழையின் காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. இது தொடர்பாக மத்திய குழு சேதங்களைப் பார்வையிட்டுச் சென்றுள்ளது. இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரிக்கு மழை நிவாரணமாக ரூ.7.68 கோடியை அனுமதித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி அரசுக்கு அடுத்த வாரம் அரசு ஆணை வரும்என்றார் ராமதாஸ்.

Saturday, May 10, 2008

செய்திகள் மே 10 காலை 7.45 மணி

பிளஸ் 2 : அரசு அறிவித்த முதலிடங்கள்

தமிழைப் பாடமாக எடுத்தவர்களில் முதல் ரேங்க் பெற்றவர்களே பிளஸ் 2' தேர்வில் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்படுவது வழக்கம் என்பதால்"முதலிடத்தை நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வித்யா விகாஷ் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். தாரணி 1200-க்கு 1182 மதிப்பெண் அதே மதிப்பெண் பெற்று செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.ராஜேஷ் குமாரும் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இருவரும் தமிழை மொழிப் பாடமாக எடுத்து பிளஸ் 2 படித்தவர்கள்.
ஈரோடு கே.கே.என். அரசு மேல்நிலைப் பள்ளி ஏ.ரம்யா, நாமக்கல் வரகராம்பட்டி வித்யா விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தளபதி குமார் விக்ரம் ஆகியோர் 1181 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை வகிக்கின்றனர்.
1180 மதிப்பெண் பெற்ற நாமக்கல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.தீபா மூன்றாம் இடத்தில் வந்துள்ளார்.
மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவிகளில் 87.3 சதவீதம் பேரும், மாணவர்களில் 81.3 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
டாஸ்மாக் முலம் ரூ. 8,800 கோடி வருவாய் ஓராண்டு சாதனை

உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை குறித்த அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் வருவாய் அளவு ரூ. 7,473 கோடி. ஓராண்டில் மட்டும் ரூ.1,343 கோடி கூடுதல் வருவாய் அரசுக்குக் கிடைத்துள்ளது. இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுவகைகள், பீரின் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளன. 2006-ம் ஆண்டு மே நிலவரப்படி, 6,699 சில்லறை மதுபான விற்பனைக் கடைகளை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் நடத்திக் கொண்டிருந்தது. தமிழகத்தில் தற்போது 6,800 "டாஸ்மாக்' கடைகள் இயங்கி வருகின்றன. மொத்தம், 33,300 பணியாளர்கள் கடைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்படிதான் இருக்கவேணும் அரசுபள்ளிகள்-- முதல் 3 அரசு பள்ளிகள்
புதுச்சேரி சுசிலாபாய் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 94.79 சதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மிஷன் வீதி வ.உ.சி. மேல்நிலைப் பள்ளி 91.30 சதம் தேர்ச்சி அடைந்துள்ளது. லப்போர்த் வீதி திருவள்ளுவர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 90.77 சதம் தேர்ச்சி அடைந்துள்ளது.
சுல்தான்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி 20.59 சதம் மட்டும் தேர்ச்சி அடைந்துள்ளது. பிளஸ்டூ தேர்வில் குறைவான தேர்ச்சி சதம் பெற்ற பள்ளி இதுதான்.

நகரப் பகுதிக்கு பாண்டிச்சேரியா புதுச்சேரியா : என்ன பெயர் பிரச்னனை

புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்றம் பொதுச்செயலர் எல்லை. சிவக்குமார் வெளியிட்ட அறிக்கையில் நகரப் பகுதிக்கு பாண்டிச்சேரிக்குப் பதிலாக புதுச்சேரி என்று பெயர் அழைக்கும் அரசு ஆணையை வெளியிட வேண்டும் என கூறியுள்ளார்
பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டு வந்த பெயர் புதுச்சேரி என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு தமிழ் அமைப்புகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் வலியுறுத்தி வந்தனர்.
சட்டமன்றத்திலும் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு புதுச்சேரி என்ற பெயரை மாற்ற உள்துறை இலாகவின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும்போது ஒட்டுமொத்த பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என்று மாற்றப்பட்டுள்ளதாகவும், பாண்டிச்சேரி நகரப் பகுதி பாண்டிச்சேரி என்றே அழைக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுலாத்துறை பாதிக்காமல் இருக்க இப்படி செய்ததாகக் கூறினார்கள்.
பாண்டிச்சேரி நகரப் பகுதியின் பெயரை புதுச்சேரி என்று பெயர் மாற்றம் செய்ய தடையாக உள்ளது எது? என்பதை முதல்வர் ரங்கசாமி விளக்க வேண்டும். புதுச்சேரி சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நகரப் பகுதிக்கு பாண்டிச்சேரி என்று நீடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதா?
புதுச்சேரி என்ற பெயர் மாற்றினால் சுற்றுலா வளர்ச்சி பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டு பெயர் மாற்றக் கூடாது என்ற ஆலோசனையை வழங்கியவர்கள் மத்திய உள்துறை அமைச்சகமா? அல்லது புதுச்சேரி அரசின் தலைமைச் செயலகமா அல்லது சட்டத்துறையா என்பதை அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி அறிவிக்க வேண்டும்.
புதுச்சேரி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் உடனடியாக முதல்வர் ரங்கசாமி பாண்டிச்சேரி நகரப் பகுதியை புதுச்சேரி என்று அழைக்க அரசாணை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார் சிவக்குமார்.

அரசின் இலவச அரிசி வழங்கும் திட்டத்துக்குக் கூடுதல் செலவு : மத்திய தணிக்கைக் குழு புகார
புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை வாயிலாக இலவச அரிசி திட்டத்தை அமல்படுத்தியது. அதற்காக மத்திய அரசு அளித்த அரிசியை ரேஷன் கார்டுகளுக்குக் கொடுக்க பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் ரூ.11.21 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. தகுதியற்ற மாணவர்களுக்கு ரூ.28.97 லட்சம் அளவுக்கு கல்வி உதவித்தொகையை துறை வழங்கியது மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் ரூ.17.11 லட்சம் மிகையாகக் கொடுக்கப்பட்டுள்ளதுஇதனால் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கைக் குழு அறிக்கையில் கூறியுள்ளது.

Friday, May 09, 2008

இன்று பிளஸ்டூ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாயின

இன்று பிளஸ்டூ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாயின -சுகுஜி
சென்னை மாணவி ஆஷா முதலிடம் -ஆதர்ஷ் எம்.எச்.எஸ்.எஸ். பள்ளியைச் சேர்ந்த ஆஷா கணேசன் 1,200க்கு 1,191 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்
சென்னை ஆதம்பாக்கம் எஸ்.டி.ஏ.வி. மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த எஸ்.முரளி கிருஷ்ணன் 1,188 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
டி.ஏ.வி. மேல் நிலைப் பள்ளியைச் ச்ர்ந்த ஹரிஷ் ஸ்ரீராம் 1,187 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்
புதுச்சேரியிலும் இன்று பிளஸ்டூ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாயினபெட்டைட் செமினரி உயர்நிலைப்பள்ளி மாணவர் ஸ்ரீவர்தன் 1,183 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தார். அதே பள்ளியைச் சேர்ந்த இப்ராஹிம் ஆசிப்-1,178, பாலாஜி-1,174 மதிப்பெண்கள் எடுத்து 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.
டான் பாஸ்கோ மற்றும் செயின்ட் பாட்ரிக் பள்ளியை சேர்ந்த இரு மாணவர்கள் 1,174 மதிப்பெண்கள் எடுத்து பாலாஜியுடன் 3வது இடத்தை பகிர்ந்துள்ளனர்.
இந்த முறையும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர்

மின்தடை

இன்று காலை 6 மணி முதல் மின்தடை
+2 தேர்வு முடிவுகள் கூட பார்க்க முடியாமல் மாணவர் திண்டாட்டம் .வெளியில் இருத்து இதை போடுகிறேன்

Thursday, May 08, 2008

பெரியணணா ! கொஞ்சம் பாருஙணணா


courtesy : dil se desi

செய்திகள் மே 8 காலை7.00 மணி சுகுஜி

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் .



பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகின்றன.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் , தமிழகத்தில் மார்ச் 3-ம் தேதியிலிருந்து 24-ம் தேதி வரை நடந்த பிளஸ் 2 தேர்வை 2 லட்சத்து 78 ஆயிரத்து 673 மாணவர்களும், 3 லட்சத்து 8 ஆயிரத்து 572 மாணவிகளும் எழுதினர். தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) காலை வெளியிடப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார்
மியான்மர் ( பர்மா) புயல்: 22 ஆயிரம் பேர் சாவு. லட்சக்கணக்கானோர் வீடு இழப்பு



மியான்மரில் சனிக்கிழமை தாக்கிய புயலால் குறைந்தபட்சம் 22 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். மேலும் 41 ஆயிரம் பேரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. லட்சக்கணக்கானோர் வீடுவாசல்களை இழந்துள்ளனர்.
மியான்மரில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் சேவை அமைப்பின் இயக்குநர் ஆன்ட்ரூ கிர்க்வுட் புதன்கிழமை கூறியதாவது: மியான்மரின் தெற்கு கரையில் சனிக்கிழமை தாக்கிய புயல் காரணமாக 22 ஆயிரம் பேர் இறந்ததுடன் மேலும் 41 ஆயிரம் பேரைக் காணவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான சடலங்களை நிவாரணக் குழுவினர் கண்டுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை அழுகத் தொடங்கியுள்ளன.
பலநாடுகள் நிவாரண பொருள்கள் அனுபியுள்ளன . ஆனால் மக்களை அணுக அனுமதி பெற சிரமமாக உள்ளதாக புகார் உள்ளத
புகைப்படம் : நன்றி BBC


புதிய நியமனம் : ப.சண்முகம் பாமக மாநில துணைத் தலைவர்



பா.ம.க. தலைவர் கோ.க. மணி ஓர் அறிவிப்பை புதன்கிழமை வெளியிட்டார். அதில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவராக ப.சண்முகம் நியமிக்கப்பட்டு இருக்கிறார் என தெரிவித்துள்ளார் சண்முகம் கடலூரை அடுத்த ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். மாவட்ட ஊராட்சி உறுப்பினராகவும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினராகவும், மாவட்ட சமூகநலத்துறை பெண்கள் முன்னேற்றச் சங்க தலைவராகவும், தொழிலாளர் மற்றும் தொழிற்சாலைப் பாதுகாப்புத் துறையின் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் சண்முகம் இருந்து வருகிறார். பா.ம.க. மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகவும், 5 முறை மாவட்டச் செயலாளராகவும் இருந்தார்
அப்பாடா ! நாளை +௨ முடிவு .வருபோது நல்ல செய்தி ! புதுவையில் நுழைவுத் தேர்வு ரத்தாகிறது



புதுச்சேரியில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய துணைநிலை ஆளுநர் பொபிந்தர் சிங் (பொறுப்பு) ஒப்புதல் அளித்துள்ளார். அதற்கான கோப்பில் அவர் புதன்கிழமை கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான நுழைவுத் தேர்வை தமிழகத்தைப் போன்று ரத்து செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவையில் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கட்சிப் பாகுபாடு இன்றி வலியுறுத்தினர். அதற்கான அரசு ஆணை வெளியிடவில்லை என்று கூறி எம்.எல்.ஏக்கள் புதன்கிழமை சட்டப் பேரவையில் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். துணைநிலை ஆளுநர் மாளிகையில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் துணைநிலை ஆளுநர் பொபிந்தர் சிங்கை புதன்கிழமை மாலையில் சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, கல்வியமைச்சர் ஷாஜகான் ஆகியோர் பெற்றோர், மாணவர்களின் நலன் கருதி நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதற்கான அரசு ஆணை புதன்கிழமை இரவே வெளியாகும் என்றனர்.


புதுச்சேரி விடுதலை நாள் எப்போது ? அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படும். வரலாற்றில் ஏற்பட்டுள்ள தவ்று திருத்த படுமா ?
புதுச்சேரி விடுதலை பெற்ற நாள் குறித்து அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் என். ரங்கசாமி கூறினார். சட்டப்பேரவையில் இது குறித்து ஆர். விசுவநாதன் (இந்திய கம்யூனிஸ்ட்) கேள்வி எழுப்பினார். புதுச்சேரியின் விடுதலை நாள் எது என்பதை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக அரசு ஆராய்ந்து வருகிறது. அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுத்து இது தொடர்பாக அறிவிக்கப்படும் என்றார் முதல்வர்.
இதை வரவேற்ற விசுவநாதன், நல்ல முடிவை முதல்வர் கூறியுள்ளார். வரலாற்றில் ஏற்பட்டுள்ள தவறைத் திருத்த முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

Wednesday, May 07, 2008

செய்திகள் மே 7 காலை 7 மணி - சுகுஜி

பி.இ. சேருவது இனி மிக சுலபம் -குறைந்தபட்ச மார்க் 55%
பேரவையில் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு அமைச்சர் க. பொன்முடி செவ்வாய்க்கிழமை பதில் அளிக்கும்போது இது தொடர்பாக கூறியதாவது:-
""தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 272-ஆக உயர்ந்துள்ளன. 2006-07-ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து சிறுபான்மையினர் அல்லாத பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 65 சதவீதமாகவும் சிறுபான்மையினர் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 50 சதவீதமாகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கில் காலியிடங்கள்: மேலும் மாணவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக 2006-07-ம் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் அதிக அளவில் சேருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும் குறைந்தபட்ச ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் காரணமாக (60 சதவீதம்) 2006-07-ம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேராமல் 19,652 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக இருந்தன. 2007-08-ம் கல்வி ஆண்டில் 14,721 இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு புதிதாக அரசு மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமப்புற மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகளில் படிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருப்பதையும் மனத்தில் கொண்டு நடப்புக் கல்வியாண்டு (2008-09) முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேரும் வகையில், குறைந்தபட்ச மதிப்பெண் விகிதத்தைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது'' என்றார் அமைச்சர் பொன்முடி.

புதுச்சேரியா?, பாண்டிச்சேரியா? என்னவென்று அழைப்பது-- குழப்பம்! குழப்பம் !

சட்டப்பேரவையில் இது குறித்து முதல்வர் கூறியதாவது புதுச்சேரியா அல்லது பாண்டிச்சேரியா எந்தப் பெயரில் அழைப்பது என்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் அறிக்கை வந்தப் பிறகு இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் என். ரங்கசாமி கூறினார்.

அமெரிக்காவின் இன்னொரு அபாண்டம் -- தொடரும் கதை !

இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினரும் சர்வதேச அளவில் உணவு விலைவாசி உயர்வுக்குக் காரணம் என அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் அதிபர் ஜார்ஜ் புஷ் குறிப்பிட்டார் . இதற்கு இந்தியாவில் பலத்த எதிர் குரல் எழுந்துள்ளது
இந்த நிலையில் இன்னொரு அபாண்டத்தை இந்தியா மீது அமெரிக்கா சுமத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு இந்தியாவும், சீனாவும்தான் காரணம் என அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்காஸ் ஸ்டான்சல் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 120 அமெரிக்க டாலரை கடந்துள்ளது. உலகம் முழுவதும் எரிபொருள் தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவில் தேவை அதிகரித்து விட்டது. இதன் காரணமாகவே கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது.
இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய்யின் விலையிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒருவகையில் நமக்கு இது பெருமை , உலகம் இனி நம்மை சுற்றி சுழலும் , ஆனால் அமெரிக்காவின் தினசரி பேச்சி தான் இந்தியாவில் எதிர்ப்பு அலைகளை எழுபயுள்ளது

அம்பேத்கர் மணி மண்டபம் மே 14 தேதி திறக்கப்படுகிறது.

சட்டப்பேரவையில் சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி இத்தகவலை தெரிவித்தார்
புதுச்சேரி கடற்கரை சாலையில் புதுப்பிக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் மணி மண்டபம் இம்மாதம் 14-ம் தேதி திறக்கப்படுகிறது.
மத்திய சமூகநீதித்துறை அமைச்சர் மீரா குமாரி இதைத் திறந்து வைக்கிறார் என்றார் கந்தசாமி.
ரூ. 5. கோடியில் புதுச்சேரி கடற்கரை மேலும் அழகுப்படுத்தும் பணி ரூ. 5. கோடியில் தொடங்கப்பட உள்ளது

சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் மீது அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செவ்வாய்க்கிழமை அளித்த பதில்:
புதுச்சேரி கடற்கரையை ரூ.5 கோடியில் அழகுபடுத்தும் பணி வரும் ஜூன் மாதம் தொடங்கி ஜனவரி 2009-ல் நிறைவு பெறும். கடற்கரை காந்தி திடல் மற்றும் கலைப் பொருள் சந்தை ஆகியவற்றை சீர் செய்ய ரூ.2.67 கோடி அளவில் பணிகள் ஜூன் மாதம் தொடங்கி ஜனவரி 2009-ல் நிறைவு பெறும்.
புதுச்சேரி உணவு விடுதி மேலாண்மை கல்லூரிக்கான புதிய கட்டடப் பணிகளுக்கு ரூ.4.97 கோடி நிதி அளிக்கப்பட்டது. மேலும் ரூ.6.8 கோடி மத்திய அரசு நிதியுதவி கிடைத்துள்ளது.
இந்தப் பணிகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவு பெறும்.

Tuesday, May 06, 2008

செய்திகள் மே 6 காலை 7.00

மகளிர் இடஒதுக்கீடு இப்போதும் இல்லை மக்களவை ஒத்திவைப்பு

மகளிர் இடஒதுக்கீடு மசோதா எடுத்துக் கொள்ளப்பட இருந்த நிலையில், மக்களவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அதன் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி நேற்று அறிவித்தார்.
தொடர்ந்து குறுக்கீடுகள் இருப்பதும், அவை ஒத்திவைக்கப்படுவதும், அவைத் தலைவரின் அதிகாரத்தை மறுப்பதும் பொதுமக்கள் நலன் என்ற நமது பொதுவான குறிக்கோளுக்கும், நிர்வாக நம்பகத்தன்மைக்கும் உதவாது என்று மக்களவையை ஒத்திவைக்கும் முன் சோம்நாத் தெரிவித்தார். நடப்பு கூட்டத் தொடரிலேயே மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதி கூறியிருந்தார். அவரது உறுதிமொழியை புரளி ஆக்கிவிட்டது ஒத்திவைப்பு அறிவிப்பு என்றார். குருதாஸ் தாஸ் குப்தா இது. ஜனநாயக நாடாளுமன்ற நடைமுறையையே கேலிக்கூத்தாக்கும் செயல் என்றார்.
கல்விக் கடனுக்கு மத்திய அரசு மானியம் வரும் கல்வியாண்டிலிருந்து திட்டம் அமல்

தொழில் கல்விகளுக்கு வங்கிகளில் மாணவர்கள் பெறும் கடன் தொகைக்கான வட்டியை மத்திய அரசு கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது. இதற்கான வழிகாட்டுதலை மத்திய அரசின் மனித வளர்ச்சி மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கி வருகிறது. இப்புதிய முறை வரும் கல்வி ஆண்டில் (2008-09) நடைமுறைக்கு வரும் என தெரிகிறது.

இந்தத் திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தும். கனரா வங்கி இத்திட்டத்துக்கான வங்கியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. . இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 4 ஆயிரம் கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எல்லாம் சரி கடன் கிடைகவேனுமே ! பாங்கில் கடன் வாங்குவது பற்றிய சிரமம் போய் பார்த்தால் தான் தெரியும்

நுழைவுத் தேர்வை ரத்து செய்ய அவசரச் சட்டம் அவசரமாய் தேவை: கலைநாதன் MLA

சட்டப்பேரவையில் கேள்விநேரம் முடிந்தவுடன் நாரா கலைநாதன் பேசியதாவது :
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதற்காக இன்னும் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் பெறவில்லை. இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு உண்டா, இல்லையா என்ற குழப்பத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழக அரசைப் போன்று நுழைவுத் தேர்வை ரத்து செய்ய சட்டத்தை நடப்புக் கூட்டத் தொடரில் அரசு நிறைவேற்ற வேண்டும்.
அதற்கு உரிய கால அவகாசம் இல்லை என்று அரசு கருதியதால், யூனியன் பிரதேச ஆட்சிப் பரப்புச் சட்டம் 1963-ன்படி துணைநிலை ஆளுநர் வாயிலாக அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இது மிக அவசரம் !!1
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர்
சட்டப்பேரவையில் ஆர். விசுவநாதன் MLA (இந்திய கம்யூனிஸ்ட்) கேள்வி எழுப்பினார்.
இதற்கு முதல்வர் ரங்கசாமி பதில் அளிக்கையில், இந்தச் சட்டப்பேரவைக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.
5.5.2007-ல் புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப் பரப்பின் அமைச்சரவைக்கு அதிக அதிகாரங்களைக் கொடுக்கக் கோரும் தீர்மானம் உரிய நடவடிக்கைக் கோரி உள்துறை அமைச்சகத்துக்கு 7.3.2008-ல் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் மாநில அந்தஸ்து பெறுவதற்குத் தேவையான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் பேசுகையில், ஏற்கெனவே தில்லிக்கு எம்.எல்ஏக்களை அழைத்துச் செல்வதாக முதல்வர் கூறியிருந்தார். ஆனால் நடக்கவில்லை என்றார்.
இதற்குப் பதில் அளித்த முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்தவுடன் விரைவில் அழைத்துச் செல்லப்படுவர் என்றார்.

Monday, May 05, 2008

செய்திகள் மே 5 காலை 7.30

உணவு விலைவாசி உயர்வுக்குக் இந்தியாதான் காரணம் : ஜார்ஜ் புஷ் கருத்து "கொடூரமான ஜோக்': பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனி

இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினரும் சர்வதேச அளவில் உணவு விலைவாசி உயர்வுக்குக் காரணம் என அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் அதிபர் ஜார்ஜ் புஷ் குறிப்பிட்டார் . இதற்கு இந்தியாவில் பலத்த எதிர் குரல் எழுந்துள்ளது ஜார்ஜ் புஷ் கருத்து குறித்து பிரதமர் மன்மோகன் சிங் மெüனம் சாதிப்பது வெட்கக் கேடானது என பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது. முன்பு வெடிகுண்டு சோதனையாளராக (பாம் இன்ஸ்பெக்டர்) இருந்த புஷ் தற்போது உணவு சோதனையாளராக (பிரெட் இன்ஸ்பெக்டர்) மாறியுள்ளார். இந்தியர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பது பற்றிப் பேச அமெரிக்காவுக்குத் தகுதி இல்லை. இது போன்ற தலையீடுகளை இந்தியா பொறுத்துக் கொள்ளாது. புஷ்ஷுக்கு மத்திய அரசு தகுந்த பதிலளிக்க வேண்டும் என்றார்.
விலைவாசி உயர்வுக்கு இந்தியர்களும் காரணம் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியிருப்பது "கொடூரமான ஜோக்' என பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனி கூறினார். திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சர்வதேச அளவில் விவசாய நிலங்களை வர்த்தக உபயோகத்துக்காக பெரிய அளவில் மாற்றியதன் காரணமாக உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உணவுப் பற்றாக்குறைக்கு அமெரிக்காவின் கொள்கைகளும் காரணமாகும். குறைகூறுபவர்கள், விவசாய நிலங்களை மற்றவற்றுக்குப் பயன்படுத்தக் கூடாது. அமெரிக்கா உள்பட எல்லா நாடுகளும் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். அரிசி, கோதுமை ஆகியவற்றின் உற்பத்தி நமது நாட்டில் குறைந்துள்ளது என்பதும் உண்மை என்றார் அவர்.
இந்திய ஏற்றுமதி 26 சதவீதம் உயர்துளது மதிப்பு ரூ. 65,710 கோடி

இந்தியாவின் ஏற்றுமதி ரூ. 65,710 கோடியை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 26 சதவீதம் அதிகமாகும். ஏற்றுமதி அதிகரித்துள்ள அதேவேளையில் இறக்குமதி பலமடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரையான காலத்தில் இந்தியாவின் இறக்குமதி ரூ. 9,49,133 கோடியாகும்.
அப்பாடா ! மன்மோகன் சிங நிம்மதி

மத்திய ஆட்சியில் தே.மு.தி.க. பங்கு பெற வேண்டும் என்றோ, பிரதமர் பதவியைப் பிடிக்க வேண்டும் என்றோ எனக்கு ஆசை கிடையாது. விஜயகாந்த் டெல்லி பேச்சு
தமிழர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டியது முக்கியம். அந்த வகையில் தமிழ் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் செயல்படும் மத்திய அரசுக்கும், தேசியக் கட்சிக்கும் தே.மு.தி.க.வின் ஆதரவு கிடைக்கும் என்றார் . கொடுமைக ங !!
புதுவையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கியுள்ள நிதியும் அதிகாரமும் போதுமானதாக இல்லை: . ராமதாஸ் எம்.பி

புதுச்சேரி மக்களவை உறுப்பினர் பேராசிரியர் மு. ராமதாஸ் .அறிக்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரமும், நிதியும் வழங்கியுள்ளதாக புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளது திருப்தியாக இல்லை. உள்ளாட்சி உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்தியும், நகராட்சி, கொம்யூன், பஞ்சாயத்து, கிராமப் பஞ்சாயத்து ஆகியவற்றுக்குக் குறைந்த அளவு நிதி உதவியும் உயர்த்திக் கொடுத்துள்ளார் முதல்வர்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் சொல்லி இருப்பதைப் போன்று புதுச்சேரி அரசு நியமித்துள்ள 2-வது மற்றும் 3-வது நிதிக்குழு, மேலும் ராமநாதன் குழு பரிந்துரை செய்தப் பணிகளைப் பிரித்துக்கொடுக்க வேண்டும் என்பதுதான் நியாயமான நடவடிக்கை.
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணிசங்கர் அய்யருடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி பஞ்சாயத்து பணிகள், அதற்கான வரைபடம் எதையும் இந்த அரசு ஏற்பாடு செய்யவில்லை.
எல்லா அதிகாரத்தையும் தன் கையில் வைத்துக் கொண்டு யாருக்கும் அதிகாரத்தைப் பிரித்துக் கொடுக்க மாட்டேன் என்று செயல்படுவது சர்வாதிகார போக்காகும். உள்ளாட்சிகளுக்குப் பணியையும், பணியாளர்களையும், அதற்கான நிதியையும் வழங்க வேண்டியது அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி புதுச்சேரி அரசின் கடமையாகும்.
தற்போது புதியதாகப் பதவியேற்றுள்ள துணைநிலை ஆளுநர், புதுச்சேரி தலைமைச் செயலரைச் சந்தித்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரங்களை உண்மையாகப் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். என்று கூறியுள்ளார்