Monday, December 22, 2008

30,0000 ஜோடி புதிய ஷுக்கள் !
எங்கேயோ இடிஇடித்து , எங்கேயோ மழைப் பாய்வது போல் ,அமெரிக்கா அதிபர் புஷ்ஷின் மேல் ஒரு நிருபர் ஷுவை எறிந்தாலும்,எறிந்தார் , அந்த ஷுவை செய்த துருக்கியில் உள்ள கம்பெனிக்கு அடித்து யோகம் .!அதற்க்கு ஆடர் மேல் ஆடர் ஆக குவிகிறது .இது வரை அதிபர் புஷ்ஷின் மேல் எறிந்த ஷு மாதிரியே , உள்ள ஷுவை கேட்டு 30,0000 ஜோடி ஷுக்களுக்கு ஆடர் வந்துள்ளதாம் .புதிதாக அந்த கம்பெனி 100 ஆட்களை வேலைக்கு அமர்தயுள்ளது .அந்த மாடல் 271 க்கு வந்தக் கிராக்கியை பார்த்து , அந்த கம்பெனி அதிபர் ராமழான் பாய்தான் , அதிர்ச்சியும் , ஆனந்தமும் அடைந்து இருக்கிறாரம் .வந்திருக்கும் புதிய ஆடர் அவருடைய ஒரு ஆண்டு ,உர்ப்பதியைப் போல் நன்கு மடங்காம் .இதில் 1,20,000 ஜோடிகளுக்கு ஆடர் ஈராக் கில் இருந்தும் , 18,000 ஜோடிகள் அமெரிக்காவில் இருந்தும் கேட்டு ஆடர் வந்துள்ளது .இந்த கம்பெனியின் ஷுவின் விற்ப்பனை உரிமையை ,ஒரு பிரிட்டன் நிறுவனம் ,புதியதாக பெற்றயுள்ளது .இதற்க்கு சிரியா ,எகிப்பது ,முதலிய நாடுகளில் இருந்தும் ஆடர்கள் குவிந்து வருகிறதாம் .நிலைமையை உணர்த்த நிறுவன அதிபர் அந்த மாடல் ஷுக்கு ,புதிய பெயரும் சூட்டிவிடாரம் , இப்போது அது புஷ் ஷு அல்லது பை பை புஷ் என பெயர் மாற்றம் அடைந்து விட்டது .
பாருங்கள் அதிஷ்டம் எப்படி அடிக்கிறது என்று ,
அடித்தவர் என்னோமோ இன்னும் சிறையில் தான் இருக்கிறார் .

Friday, December 12, 2008

விதியே விதியே தமிழச் சாதியை என்செய நினைத்தாய் !


விதியே விதியே தமிழச் சாதியை என்செய நினைத்தாய் !
பாரதி பிறந்து 126 ஆண்டுகள் ஓடிவிட்டன , ஆனந்த சுதந்திரம் அடையவேண்டி தான் வாழும் போதே ஆனந்தப்பள்ளு பாடிய பாரதி , ஆனந்த சுதந்திரத்தின் சுகத்தை அனுபவிப்பதற்கு தான் இருக்கமாட்டோம் என்று தான் ஆடுவோமே பள்ளு பாடுவோமேஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடிப்பாடினாரோ என்பது தெரியவில்லை ,ஆனால் கவிகளின் மொழிகள் பொய்ப்பதில்லை . அதுமட்டும் என்றும் நிலைத்திருக்கும் உண்மை
ஆனால் ஆண்டுகள் பல சென்றும் , இன்னும் மீளாத தமிழகத்தின் தாழ்த்த வாழ்வியலும் நாளுக்கு நாள் குறைந்து வரும் தரம் தாழ்த்த நிலையையும் , கலாச்சார சிர்குலைவுகளையும் ,சுதந்திரம் பெற்ற நமது மக்கள் இன்னும் பழைய அடிமையின் மோகம் விலகாமல் , கண்டதே காட்சி , கொண்டதே கோலம் எனவாழும் அவலத்தை அன்றே எண்ணி எண்ணி குமைந்திருக்கிறார் தமிழர் தம் பெருமையையும் , மாட்சிமைதனையும் மறந்துவிட்டு ,காணும் பொருள்களில் சிந்தை மிகச் செலுத்தி , தன் பெருமிதம் இழந்து வாழ்கிறார்களே, தம் பண்டையர் ஆக்கிய மாளாத செல்வங்களின் ,மதிப்பை தானே உணராமல் தற்குறியாக வாழும் மக்கள் நிலை குறித்து மனம் வாடி , விதியே , விதியே தமிழ்ச் சாதியை என்னசெய்யப் போகிறாய்? எனக் கேட்பதை படிக்கும் போதே இன்றுத்தான் பாடியது போல் புத்திளமை பொங்க விளங்குகிறது .அதுவே இன்றும் தொடர்வது தான் வேதனையாக இருக்கிறது

பாரதியாரின் தமிழ்ச சாதி எனும் அரியதொரு பாடல் . 1937 ஆம் வருடப் பதிப்பில் "இருத்தலை கொள்ளியிடையே" என உள்ளது .தற்ப்பொதைய தமிழர் நிலை போலவே அந்தப் பாடலுக்கும் முதலும் , முடிவிலும் உள்ள வரிகள் கிடைக்கவில்லை .தமிழர் சரித்திரம் போலவே பாடலின் முதலும் மர்ம முடிச்சிதான் . தமிழர் தம் வாழ்வியலின் இறுதி நிலைக்கூறித்த அச்சம்த்தை ஒத்து பாடலின் முடிவும் கிடைக்கவில்லை
பாடலின் தொடக்கமே இப்படி ஆரமிக்கிறது ,
..........எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்,
நாட்பட நாட்பட நாற்றமு சேறும் பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய் நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ?
விதியே விதியே தமிழச் சாதியை என்செய
நினைத்தாய் எனக்குரை யாயோ?
காணும் வழியலாம் சென்று , காட்சிக்கு தக்கபடி கண்டதே கோலமென அதக்கேற்ற வாறு மாறும் தமிழர் சமுதாயம் உன் அருளால் , தருமம் மாறா , பொருள்கொண்ட வாழ்கை வாழும் வழி அமைப்பையோ ?என என மேலும் குமைகிறார்
சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித் தன்மையும்
தனது தருமமும் மாயாது என்றுமோர்
நிலையா யிருந்துநின் அருளால் வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடு வாயோ? தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச்
சிதவற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?
அழியாக் கடலோ?
அணிமலர்த் தடமோ?
வானுறு மீனோ?
மாளிகை விளக்கோ?
கற்பகத் தருவோ?
காட்டிடை மரமோ?
விதியே தமிழச் சாதியை எவ்வகை விதித்தாய் ?என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.

ஏனெனில் சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும் திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகும் கருதியும்
எல்லை யொன் றின்மைஎ எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளாற் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச் சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று உறுதிகொண்டிருந்தேன்.
ஒருபதி னாயிரம் சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான் உள்ளுடை வின்றி உயர்த்திடு நெறிகளைக் கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்.
வள்ளுவரும் கம்பரும் பிறந்த இந்த பெருமைமிகு தமிழகம் அழிக்க முடியாத அமரத்துவம் வாய்ந்தது எண்ணி இருந்தாராம் , ஆனால் இன்று தமிழர் படும் படு கண்டு அவர் எண்ணம் மாறிவிட்டதாம் . எத்தனை உண்மை பாருங்கள் !
ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும் தென்முனை யடுத்த தீவுகள் பலவினும் பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய தமிழச் சாதி தடியுதை யுண்டும் காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும் வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும் பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும் பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம் நாட்டினைப் பிரிந்த நலிவினார் சாதலும் இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்,
இவை அததனையும் மிஞ்சும் இன்றைய இலங்கை தமிழர் அவலம் , அவர்தம் மாளாத துயரம் இவைகளுக்கு எத்தனை பொருத்தமாக இருக்கிறது இந்த வரிகள் இன்னும் கூட உயிருள்ளவை !

தெய்வம் மறவார, செயுங்கடன் பிழையார், ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும், இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார், என்பதென் னுலத்து வேரகழ்ந் திருத்தலால் எனினும்
இப்பெருங் கொள்கை இதயமேற் கொண்டு கலங்கிடா திருந்த எனைக்கலக் குறுத்தும் செய்தியொன் றதனைத் தெளிவுறக் கேட்பாய்.
ஊனமற் றெவை தாம் உறினுமே பொறுத்து வானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல்,
தானமும் தவமுந் தாழ்ந்திடல் பொறுத்து ஞானமும் பொய்க்க நசிக்குமோர் சாதி சாத்திரங் கண்டாய் சாதியின் உயர்த்தலம், சாத்திர மின்றேற் சாதியில்லை, பொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடும் மக்கள் பொய்ம்மை யாகிப் புழுவென மடிவார், நால்வகைக் குலத்தார் நண்ணுமோர் சாதியில் அறிவுத் தலைமை யாற்றிடும் தலைவர் - மற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும் - இவர்தம் உடலும் உள்ளமும் தன்வச மிலராய் நெறிபிழைத் திகழ்வுறு நிலைமையில் வீழினும் பெரிதிலை பின்னும் மருந்திதற் குண்டு செய்கையுஞ் சீலமும் குன்றிய பின்னரும்

இன்றும் நாளுக்கு நாள் வலுத்துவரும் , சாத்தியக் கொடுமைகள் ,அதனை சுட்டிக் காட்டி நாளுக்கு ஒன்றாக முளைக்கும் புதிய புதியக் கட்சிகளின் காட்சி . அர்த்தம் புரியாமல் வளரும் வர்ணாசிரமம் , இவைகளை மாய்த்து மாய்ந்து சாடுகிறார் .இன்னும் எத்தனை நாள் நீடிக்கும் இந்த வர்ணாசிரம என்ற அறியாமை ,ஒன்று புரிந்து அதை புனரமைக்கவேண்டும் அல்லது அதை பிய்த்து எறியவேண்டும்.இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் தமிழன் வாழ்வு சீர்க்கெட்டு சிதயவேண்டும் .இதுவரை வந்த சிர்திருத்த வாதிகளின் போதனைகள் , அவரவர் கண் முன்னே பொய்த்து போகிறதே .!வள்ளலார் கூட கடைவிரித்தேன் கொள்ல்வாரில்லை என கடையை சுருட்டிக் கொண்டு மறைத்துவிட்டரே !கோடிகோடியாய் இருக்கும் சீர்திருத்த கொள்ள்கைகளை , நாயன்மார் , ஆழ்வார் பாடல்களில் உள்ளதை உணராமல் இதில் உள்ள பக்தியையும் , தமிழின் சுவையையும் மட்டுமே சௌகரியமாக பாராட்டி கொண்டாடுகின்றனர் .இந்த அவலங்களை அன்றே அரை நூற்றாண்டுகளுக்கு முன் எண்ணி எண்ணி மாய்த்த பாரதியார் , விதியை நம்பியதால் விதியே விதியே தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?

மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின் செய்கையும் நடையும் தீனியும் உடையும் கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை யவற்றினுஞ் சிறந்தன, ஆதலின், அவற்றை முழுதுமே தழுவி மூழ்கிடி நல்லால், தமிழச் சாதி தரணிமீ திராது பொய்த் தழி வெய்தல் முடி பெனப் புகழும்
நன்றடா! நன்று! நாமினி மேற்றிசை வழியெலாந் தழுவி வாழ்குவம் எனிலோ ஏ! ஏ! அஃதுமக் கிசையா தென்பர், உயிர்தரு மேற்றிசை நெறிகளை உவந்து நீர் தழுவிடா வண்ணந் தடுத்திடும் பெருந் தடை பல அவை நீங்கும் பான்மையை வல்ல என்றருள் புரிவர், இதன் பொருள் சீமை மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச் சாதியின் நோய்க்குத் தலையசைத் தேகினர், என்பதே யாகும்;
இஃதொரு சார்பாம் பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரோடு நமதுமூ தாதையர் (நாற்பதிற் றாண்டின்) முன்னிருந்தவரோ? முந்நூற்றாண்டிற்கு அப்பால் வாழ்ந்தவர் கொல்லோ? ஆயிரம் ஆண்டின் முன்னவரோ, ஐயா யிரமோ? பவுத்தரே நாடெலாம் பல்கிய காலத் தவரோ? புராண மாக்கிய காலமோ? சைவரோ? வைணவ சமயத் தாரோ? இந்திரன் தானே தனிமுதற் கடவுள் என்றுநம் முன்னோர் ஏந்திய வைதிகக் காலத் தவரோ? கருத்திலா தவர்தாம் எமதுமூ தாதைய ரென்பதிங் கெவர்கொல்?
நமதுமூ தாதையர் நயமுறக் காட்டிய ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும் ஆங்கவர் காட்டிய அவ்வப் படியே தழுவிடின் வாழ்வு தமிழர்க் குண்டு
இந்த நிலைமை மாற என்ன தான் வழி ?இப்படியே இத்தனை நாள்தான் இருப்பது .அதற்கும் விடை கூறுகிறார் பாரதியார் ! நமதுமூதாதையர் நயமுறக் காட்டிய ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும் ஆங்கவர் காட்டிய அவ்வப் படியே தழுவிடின் வாழ்வு தமிழர்க் குண்டு !நாம் இனி யாவது நம் முன்னோர் நமக்காக கனிவுடன் உகந்தளித்த வழிகளில் செல்வதே ,அவர்தேம் உரைகளை நமது வாழும் வழியாக கொள்ளவதே ,தற்போதைய பிரச்சனைகளுக்கு தீர்வு என்கிறார் .

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்வாழிய பாரத மணித்திரு நாடு

Sunday, November 30, 2008

18 சித்தர்கள் கூறிய காயகல்ப முறைகள்

சுந்தரானந்தர் கூறியகாயகல்ப முறை !


இந்த வனத்தின் மேற்கே , செங்கடுகாய் மரமும் , கர்ப்பதரு மரமும் உள்ளது .செங்கடுகாய் மரம் கடுக்காய் மரம் மாதிரியே இருக்கும் ,காய்கள் சிவப்பாக இருக்கும் .கர்ப்பதரு மரம் ஐந்து கிளைகள் கொண்டதாக இருக்கும் ,ஐந்து கிளைகளுமே ஐந்து வித இலைகள் கொண்டது .இந்த செங்கடுகாய் மற்றும் கர்ப்பதரு மரத்தின் பச்சை பட்டையை காடி நீரில் முன்று நாட்கள் ஊறவைத்து ,பிசைந்து தண்ணீர் வடித்து ,அதற்க்கு அளவாக உப்பு ,மிளகு சேர்த்து ,அவைகளுடன் இஞ்சி ,எலும்பிட்சை சாறுவிட்டு அரைத்து ,பழகின ஒரு மண் பாத்திரத்தில் வைத்து 48 நாட்கள் காலை ,மாலை புசித்துவர தேகம் சித்திக்கும் என்று சுந்தரானந்தர் கூறினார் .
சுந்தரானந்தர் அகத்தியரின் சீடர் எனகூறபபடுவார்,போகர் ,மற்றும் சட்டை முனியிடம் சில பாடம் கேட்ருக்கிறார்
இவர் எழுதிய நூல்கள் பல ,அவைகளில் சில இதோ !
வைதியத்திரட்டு ௧௫00
வகாரம் ௨00
அதீத சூத்திரம் ௧0௪
முப்பூ ௨௫
சுத்தஞானம் ௫௧
மற்றும் பல
அன்புடன் ,
ஏ .சுகுமாரன்

சென்றார்கள் ! வென்றார்கள் !











மும்பை மாநகரில் புகுந்து பெரும் நாசம் விளைவித்த பயங்கரவாதிகள் ஒடுக்கப்பட்டுவிட்டனர். அவர்கள் பிடித்து வைத்திருந்த ஒபராய் ஹோட்டல், தாஜ் ஹோட்டலின் புதிய கட்டடம், யூதர்களின் குடியிருப்பான நரிமன் ஹெüஸ் ஆகியவை தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிரடி வீரர்களால் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முழுமையாக மீட்கப்பட்டுவிட்டன. நவம்பர் 26 இரவு முதல் நவம்பர் 29 வரை நடந்த இந்தியாவின் மிகக் கொடுமையான , கோழைத்தனமான தீவிரவாத வன்முறை ,நமது வீர மிகுந்த கமாண்டோக்களால் ஒடுக்கப் பட்டது .
தாஜ் ஹோட்டல் ஒரு மிகப் பெரிய கட்டிடம். இதில் பல நூறு சொகுசுஅறைகள் உண்டு. இவை ஒவ்வொன்றும் அளவில் மிகப் பெரியவை. மேலும்பல "கூட்டம் நடத்துவற்கான" அரங்குகளும், உணவகங்களும் உண்டு. .பழைய தாஜ் அரண்மனை கட்டிடம் மற்றும் புதிய தாஜ்டவர். மேலும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் உள்ளே மாட்டிக் கொண்டுஇருக்க, தீவிரவாதிகளை அழிக்கும் பணி மிக கடினமாகவே இருந்தது. தூரதிர்ஷ்டவசமாக, தாஜ் ஹோட்டலின் வரைபடம் கமாண்டோக்களுக்குவழங்கப் படவில்லை. கண்காணிப்பு கேமரா அறையினையும் தீவிரவாதிகள்சேதப் படுத்தி விட்டனர். ஹோட்டலுக்குள்ளே பல இடங்களில் இவர்கள் தீவைத்ததால், உள்ளே புகை மண்டலமாகவும் கடும் இருட்டாகவும் வேறுஇருந்தது. இந்த கடினமான சூழலிலும் கூட வெற்றிகரமாக எதிரிகளை வென்றநமது படைவீரர்களின் சாகசம் பாராட்டுக்குரியது. அது பற்றி சில சிறப்பு படங்கள் இதோ !
1 ) வெற்றி பெற்று விடுவித்த பின் திரும்பும் நமது வீரர்கள்




2 ) மும்பையில் மரணம் அடித்தவர்களின் நினைவைப் போற்றி லக்நோவில்தீபம் ஏற்றும் இந்தியர்கள்




3) தாஜ் விடுவித்த பின், உடனடியாக கூடியிருந்த மக்களின் கொண்டாட்டம்



Wednesday, November 26, 2008

காயகல்ப முறைகள் ---உரோம ரிஷி

நான் இந்த இழையில் எழுதி வருவது சித்தர்கள் அருளிய காயகல்ப முறைகளைப் பற்றி மட்டுமே .அதுவும் இந்த முறைகளை மட்டும் எழுதக் காரணம் நமது சித்தர்கள் அருளிச் செய்து , நடை முறைப் படுத்திவந்த பல ரகசிய முறைகள் இன்னும் நம்மால் ஆராயப் படாமல் ,இருக்கிறது .இதை பதிவு செய்வதன் மூலம் அது அடுத்த தலைமுறைக்கும் கிடைக்கசெய்வதே முக்கிய நோக்கம் .மேலும் அதன் மூலம் சிதையாமலும் நான் தருவது ,பின்னால் இதை ஆராய்ச்சி செய்பருக்கு எந்த கருத்து வேறுபடும் வரக் கூடாது என்பதற்க்காகதான் .சித்தர்களது தத்துவ விளக்கங்களும் , பாடல்களும் ,வைத்திய முறைகளும் தமிழர்தம் சொத்துதான் . அவைகளும் ஒருவகை இல்லகியம் தான் . .அந்த முறைகளில் சில சுலபமானவை, பல மிகக் கடினமானவை .
சித்தர்களை பற்றிய வரலாறுகளையும் ,கதைகளையும்திரு இந்திரா சௌதர்ராஜன் அவர்கள் மிக அழகாக எழுதி நீண்ட நாட்களாக தமிழத்திற்கு அறிமுகம் செய்துள்ளார் .சித்தர்களை பற்றிய கதைகளையும் ,வரலாறுகளையும் தெரிந்துகொள்ள , http://chithargal.blogspot.com/ என்ற வலைப்பூவில் சித்தர்ககள் ராஜ்யம் என்ற பெயரில் இதுவரை 16 சித்தர்களை பற்றி எழுதிஉள்ளார் .இதைப் பற்றிகூட திருமதி சுபா ஒருமுறை கேட்டிருந்தார் . படித்து மகிழுங்கள் .
இனி உரோம ரிஷி என்னும் சித்தர் அருளிச்செய்த காயகல்ப்ப முறைகளைக் காண்போம் .----
இந்த ஆசரமத்திற்கு கிழப் புறம் , செங்க்கொடிவேலி என்ற ஒரு செடி இருக்கிறது .அச்செடியின் பூ பிச்சிப்பூ போலவும் ,நிறம் சிவப்பாகவும் ,வேர் ரத்த நிறமாகவும் இருக்கும் .அச்செடிக்கு சாபம் நீக்கி சமூலத்தையும் பிடிங்கி வந்து , இரும்பினால் செய்த ஒரு குழாயில் போட்டு ,அத்துடன் அமுரி சேர்த்து எட்டு நாள் உறிய பிறகு எடுக்க இரும்பு சுத்தியாகும் .அந்த இரும்பை உலையில் இட்டு தகடாக அடித்து , அத்தகடை ஆட்டு எருவில் புடமிட்டு ,ஏரஞ்சி தயலத்தில் சுருக்கிட பேதிக்கும் .அதை மறுபடி உலையில் காய்ச்சி செங்க்கொடிவேலி சாற்றில் சுர்க்கிட பத்து வயதாகும் .அதை சுண்ணம் செய்து பசுவின் நெய்யில் ஒரு வாரம் புசித்துவர தேக சித்தியாகும் .
மற்றொரு முறை அந்த செங்க்கொடிவேலி செடிக்குப் பக்கத்தில் ,கருங்கொடி வேலி என்ற ஒரு செடி இருக்கிறது .அதன் இலை நொச்சியிலை போல் இருக்கும் .அந்த இலையை பிடிங்கி வந்து கசக்கி சாறு பிழிந்து ,,வெந்த சோறில் ஒருக் கைப்பிடி எடுத்து ,அதில் அந்த சாரை முன்று துளியிட்டு அந்த சாதத்தை முன்று நாள் வரை சாப்பிட்டு வர தேகசிதியாகும் என்றார் .

சங்க இலக்கியம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள் யார்?


கடம்பர்கள் கடற்கொள்ளை காரர்கள் என வந்த மடலுக்கு பதில் .இது மின்தமிழில் வந்தது
சங்க இலக்கியம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள் யார்?
//"சால்பெரும் தானைச் சேரலாதன்
மால்கடல் ஒட்டிக் கடம்பறுத்து இயற்றியபண்அமை முரசின் கண்அதிர்ந்தன்ன"(அகம். 347)(பொருள் :பெரும் படையுடையவன் சேரலாதன்.அவன் பெரிய கடலில் பகைவர்களை அழித்து அவர்களின் கடம்ப மரத்தை அறுத்து முரசு செய்தான்.அம் முரசு முழங்கியது போல)இப்பாடலடிகளின் வழியாக இன்று சோமாலிய கடற்கொள்ளையர்கள் செய்யும் வேலைகளைப் பண்டைய கடம்பர்கள் செய்தனர் போலும்.இவை பற்றி விரிவாக ஆராய இடம் உள்ளது. கடம்பர்கள் இல்லை.கதம்பர்கள் எனப் பொருள்கொள்ளும் அறிஞர்களும் உள்ளனர்.இக் கதம்பர்கள் மைசூர் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் எனவும் அறியமுடிகிறது.தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்கடம்பாஊஞ்சல் ஒன்னு செய்யவேணும் //அவ்வாறு முனைவர் மு இளங்கோவன் ஒரு கட்டுரை சுவாரஸ்யமாக எழுதி இருந்தார் .ஆனால் எனக்கு அதில் சில ஐயப் பாடுகள் உண்டு . அதை உங்களுடன் பகிர்த்து கொள்ளவிரும்புகிறேன் .

தமிழ் நாட்டில் தமிழர் கடவுளான முருகருக்கு கடம்பர் என ஒரு பெயர் உண்டு .கந்தா ,கடம்பா ,கதிர்வேலா என்ற பாடல் மிகப் பிரபலம் .கடம்ப மரம் மட்டுமல்ல ,கடம்ப மீன் உண்டு , இதைதான் கண்வோய் என்பார்கள் .அதுவும் கடல் தொடர்பு சொல்தான் .கடம்ப வன் நாதர் , கடம்ப என்ற வேரில் பல ஆலயங்கள் மிக பழங்கால இறை வழிப்பாடு இடங்கள் உள்ளன .கண்வ முனிவருக்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தந்த தலம். கடம்பர் கோயில் என பல கதைகள் உண்டு .எனவே கடம்பர் என்பது ஒரு கடல் கொள்ளைக்கார இனமாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை என நினைத்தேன் .

இதற்க்கு துணை புரிவது போல் மாங்குடி கிழார் பாடிய புறம் 335,
"அடலருந்துப் பின் குரவேதளவே
தளவே குருந்தே முல்லை
இந்நான் கல்லது பூவும் இல்லை
கருங்கால் வரகே இருங்கதிர் தினையே
சிறுகொடிக் கொள்ளே அவரையொடுஇந்நான்
இந்நான் கல்லது உணவும் இல்லைதுடியன்
பாணன் பறையன் கடம்பனென்றுஇந்நான்
கல்லது குடியுமில்லைஒன்னாத் தெவ்வர் முன்னின்று
விலங்கிஒன்று
ஏந்து மருப்பின் களிறு எறிந்து விழ்ந்தெனக்கல்லே
பரவின் அல்லதுநெல் உகுத்துப் பரவும் கடவுளும் இல்லை"

என்று கூறுகிறது.

அதாவது குமரிக் கண்டம் அழிந்தபோது வடக்கு நோக்கி நகர்ந்தவர்கள் சேர, சோழ, பாண்டியர் என்ற அடையாளத்துடன் இன்றைய தமிழகத்தினுள் நுழைந்தனர். அடர்காடாக இருந்ததை இரும்புக் கோடாரி கொண்டு திருத்திக் குடியேறியதைப் பரசுராமன் கதை தொன்மவடிவில் கூறுகிறது. இவர்களுக்கு முன்பு அங்கு வாழ்ந்த நான்கு மக்கள் குழுவினரான துடியர், பாணர், பறையர், கடம்பர் என்போரின் எதிர்ப்புக் குரலாக ஒலிக்கும் பாடல் தான் மாங்குடி கிழார் பாடிய புறம் ஆகும் .
இவ்வாறு சேர, சோழ, பாண்டியர் இன்றைய தமிழகத்துக்குள் வரும்போது அவர்களைவிட வளர்ச்சி குன்றியவர்களாயிருந்த பறையர், பாணர், துடியர், கடம்பர் என்ற நான்கு குடியினர்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு, ஒருவேளை அவர்களைக் கொன்று குவித்து விட்டுக் கூட நம் சேர, சோழ, பாண்டியர் இங்கு காலூன்றியிருக்கலாம். இன்று பறையர்கள் பெருமளவில் தமிழகத்தில் வாழ்கின்றனர். மிகுந்த சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களாக வாழுகின்றனர் .
பாணர்கள் ஆங்காங்கே சிலர் உள்ளனர்.
பிற சாதிகளில் இணைந்தும் உள்ளனர்.
மேலும் பாணர்கள் இன்னும் வடக்கே சென்று இன்றைய ஒரிசாவும் அன்றைய கலிங்கத்தில் குடியேறினர் .
அந்தப் பகுதி இன்று க்ந்தமலை என்று அழைக்கப் படுகிறது .இன்றும் அந்த இனத்தின் பெயர் இன்னும் பாணர்கள் தான் .
ஒரிசாவில் கிறிஸ்துவத்திற்கு எதிரான வன்முறை நடந்ததாக கூறப் படும் பகுதி இதுதான் .அவர்கள் பண்டைய சோழர்களுடன் நெருங்கிய உறவு வைதிருத்தனர் .ராஜராஜசோழர் கங்கை படையெடுப்புக்கு வழி காட்டுபவர்களாக இவர்கள் பணியாற்றி இருப்பதாக ,கலிங்க -தமிழ் சரித்திர ஆய்வு செய்து வரும் திரு .பாலசுப்ரமணியம் கூறுகிறார் .
துடியர் எனும் உடுக்கடிப்போர் கோடாங்கி என்ற பெயரில்
வாழ்கின்றனர் என்று தெரிகிறது. கடம்பர் சேர அரசர்களால் துரத்தப்பட்டு இன்று கோவாவில் வாழ்கின்றனர்.
கடம்பர்களை, உரோமக் கடல் வாணிகர்களுக்குப் போட்டியாக உள்ளனர் என்று சேரர்கள் துரத்தி அவர்கள் கோவா மக்களின் மூதாதைகளாயினர். பாணரும் துடியரும் தடந்தெரியாத அளவுக்குச் சிறுத்துவிட்டனர். .
வேளிர், மழவர், நாகர், கடம்பர், திரையர் என ஐந்து முக்கிய குடிகளாக பிரிக்கப் பட்டிருந்த தமிழகத்தின் பூர்வ குடிகள் காலப் போக்கில் அவர்கள் மேற்கொண்ட தொழில்கள் மற்றும் அவர்கள் குடியமர்ந்த இடங்களின் பூகோள அமைப்பின் அடிப்படையில் மேலும் சிறு சிறு உட்பிரிவுகளாக தங்களை வரையறுத்துக் கொண்டார்கள்.
மேலும் பூர்விக தமிழ் மன்னர்கள் வாழ்க்கை , வாரிசுகள் பற்றி விக்கிபீடியா கிழ்கண்ட தகவல்களை தருகிறது . ""சங்க காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியாகவிருந்த துளு நாட்டில் கடம்பரின் ஆட்சி கி. மு. 300 முதல் கி. பி. 1336 வரை 1636 ஆண்டுகள் நடைபெற்று வந்தன. இவர்கள் தலைமைத் தாயகமாக வனவாசி பன்னிராயிரமாகும் மேலும் கடற்கரையோரப் பகுதியாகிய கொண்கானம் தொளாயிரமும் மூலத்தாயகமாக கொண்கானக் கடற்கரையும் விளங்கியது. கடம்பர் ஆரம்ப காலங்களில் கடலாட்சி செய்த இனத்தவர்கள் என பதிற்றுப்பத்தில் குறிப்புகள் உள்ளன. கடம்பர்கள் கொள்ளையடிப்பதற்கு மூலதனமாக விளங்கிய தீவு வெள்ளைத் தீவாகும் (இலட்சத் தீவு). கடம்பர் நாடாக மங்கலாபுரம் (மங்களூர்) விளங்கியது. துளு நாட்டில் அமைந்திருந்த மங்களூர்த் துறைமுகம் இன்று தென் கன்னடப் பகுதியைச் சார்ந்த பிரதேசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பூழி மற்றும் மங்கலாபுரம் போன்ற பகுதிகள் சில காலம் இவர்களின் ஆட்சியின் கீழ் இருந்துவந்தது. கார்வார் முனை முதல் நேத்திராவதி ஆற்று முகத்துவாரம் (மங்களூர் - மங்கலாபுரம்) வரை அமையப்பெற்றிருந்த கடற்கரைக்கு கடற் கடம்பு எனப் பெயரிடப்பட்டிருந்து இக்கடற்கரைக்குப் பக்கத்தில் உள்ள தீவுகளில் கடம்பர்கள் ஆட்சி செலுத்தினர். மேற்கு நாடுகளிலிருந்து வரும் கப்பல்களைக் கொள்ளையடித்தும் வந்த காரணத்தால் தமிழ் இலக்கியங்களில் இவர்கள் கடற் கடம்பர் என குறிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் நன்னன் கி. மு. 300 - 260
கூந்தலம் வனவாசிக் கடம்பன் கி. மு. 260 - 232
திரிலோசனக் கடம்பன் கி. மு. 190 - 165
கடம்பின் பெருவாயில் கி. பி. 46 - 80
நார்முடிச் சேரல் காலத்துக் கடம்பன் கி. பி. 80 - 110 செங்குட்டுவன் காலத்துக் கடம்பன் கி. பி. ௧௧0
- 135
இளம்சேரல் இரும்பொறைக் காலத்துக் கடம்பன் கி. பி. 135 - 155
மயூரவர்மன் கி. பி. 350 - 375
சந்திரகாந்தன் கி. பி. 375 - 400
பக்ரதவர்மன் கி. பி. 400 - 425
ரகுகாகுத்தவர்மன் கி. பி. 425 - 450
முதலாம் சாந்திவர்மன் கிருஷ்ணன் கி. பி. 450 - 475
மாந்தத்ரிவர்மன் - மிருகேச வர்மன் கி. பி. 475 - 500
தேவவர்மன் - விஷ்ணு - சிவரதன் - பானு - இரவி வர்மன் கி. பி. 500 - 535 குமாரன் - சிம்மன் - அரிவர்மன் கி. பி. 535 - 570
மாந்தாதன் - கிருஷ்ணன் 2, அரசவர்மன் கி. பி. 570 - 585
கோவா கடம்பன் ஜயகேசின் 2 கி. பி. 1090 - 1120
மகாமண்டலேசுர கடம்பன் கி. பி. 1181 - 1258
கடைசிக் கடம்பன் (பெயர் தகவல் இல்லை) கி. பி. 1300 - 1336 ("http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது )

மேலும் கலிங்கத்துப பரணியில் கூடியிருந்த அரசர்கள் என கிழ்க் கண்ட மனனர்கர் வரிசையில் கடம்ப மன்னர் பெயரும் உள்ளது .329

தென்னவர் வில்லவர் கூபகர் சாவகர் சேதிபர் யாதவரேகன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே. 18330 கங்கர் கராளர் கவிந்தர் துமிந்தர் கடம்பர் துளும்பர்களேவங்க ரிலாடர் மராடர் விராடர் மயிந்தர் சயிந்தர்களே. 19331 சிங்களர் வங்களர் சேகுணர் சேவணர் செய்யவ ரையணரேகொங்கணர் கொங்கர் குலிங்கர் சவுந்தியர் குச்சரர் கச்சியரே. 20332 வத்தவர் மத்திரர் மாளுவர் மாகதர் மச்சர்மி லேச்சர்களேகுத்தர் குணத்தர் வடக்கர் துருக்கர் குருக்கர் வியத்தர்களே. 21333 எந்நக ரங்களு நாடு மெமக்கருள் செய்தனை யெம்மையிடச்சொன்னத னங்கள்கொ ணர்ந்தன மென்றடி சூடுக ரங்களொடே. ௨௨எனவே

கடம்பர்கள் வெறும் கடல் கொள்ளைக் காரர்களாக மட்டும் இருந்திருக்க வாய்ப்பு இல்லை அவர்கள் தமிழகத்தின் பூர்வீக மன்னர் பரம்பரையில் ஒரு இனமாகும் .தமிழ்ச் சமூக வரலாற்றையும், தொல்பொருள் தடயங்களுக்கு, தொல்லியல் அறிஞர்கள் கூறும் விளக்கங்களை இணைத்து
தொல்லியல் தடயங்கள் கூறும் செய்திகளை முமுமையாகக் கணக்கிலெடுத்துக்கொண்டு விறுப்பு, வெறுப்பற்ற நிலையில் தமிழ்ச் சமூக வரலாற்றை எழுத வேண்டியது ,முனைவர் மு இளங்கோவன் போன்ற அறிஞர்கள் செய்யவேண்டியது . இப்போது பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்ச் சமூக வரலாறு பலபுதிர்களை உள்ளடக்கியதாக உள்ளது. திரு கண்ணன் கூறியது போல் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களில் ஒரு பிரிவினர் 'கடம்பர்'. அவர்கள் இந்தியப்பழங்குடிகள் போல் இருப்பது தற்செயலானது இல்லை.என்ற தகவலும் ஆராயத்தக்கதுதான் . .நான் தமிழ் முறையாக படித்த முனைவர் அல்ல .ஆனால் தமிழ் மேல் கொண்ட பேரன்பால் ,நான் கற்ற சில சில செய்திகளை பகிர்த்து கொள்ளகிறேன் .இதை மேலும் உண்மை ஆராய்ந்து முனைவர் மு. இளங்கோ போன்றவர்கள் உண்மையை கூறி அதை புத்தகமாக வெளியிட்டால் வாங்கிப் படிக்கும் முதல் ஆள் நானாக இருப்பேன் .எனவே இதில் ஆக்க பூர்வமான தகவல்கள் இன்னும் இருந்தால் தெரிவித்தால் ,மேலும் நமது தமிழர் பற்றிய உண்மை வரலாறு வெளிச்சத்துக்கு வர உதவி ஆக இருக்கும் ..
அன்புடன்,
ஏ.சுகுமாரன்

எண்குணத்தான்,

மின் தமிழ் உரையாடலுக்கு, எண்குணத்தான் யாது என்ற மடலுக்கு எனது பதில்

திருவள்ளுவர் இறைவனை வாழ்த்தும் பத்துக் குறட்பாக்களிலே
ஆதிபகவன்,
வாலறிவன்,
மலர்மிசை ஏகினான்,
அறவாழி அந்தணன்,
எண்குணத்தான்,
வேண்டுதல் வேண்டாமையிலான்,
தனக்குவமையில்லாதான்,
பொறிவாயில் ஐந்தவித்தான்,
என இறைவன் என்னும் பொருளின் பண்புகளை போற்றிப் புகழ்கின்றார். இச்சிறப்புப் பெயர்களிலே ஆழ்ந்த கருத்துக்கள் இருக்கின்றன. பொருள் செறிவும் நுட்பமும் நிறைந்து காணப்படுகின்றன
மேலும் திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வரும் பற்றிய ஏழு குறள்களில் இறைவனின் 'அடி' என்னும் சொல் வருகிறது.இதில் அடி என்பது இறைவழியின் பாதை எனப் பொருள் கொள்ளலாம் .எனவே இறைவனின் பண்பை பற்றி வள்ளுவர் மிகுதியாக நமக்கு தெரிவிக்க முயற்சிக்கிறார் .
இதில் எண்குணத்தான் என்பது இறைவனின் எட்டு கல்யாண குணங்களை குறிப்பது .மனிதனின் குணங்கள் மூன்றுதான் ,அவை

சத்வ குணம்
ரஜோ குணம்
தாமோ குணம்

ஆனால் கடவுளின் குணங்கள் 8 என சிறப்பித்து கூறப் படுகிறது .அவையாவன
1. தன் வயத்தன் ஆதல்
2. தூய உடம்பினன் ஆதல்
3. இயற்கை உணர்வினன் ஆதல்
4. முற்றும் உணர்தல்
5. இயல்பாகவே பாசங்களில் நின்றும் நீங்குதல்
6. பேரருள் உடைமை
7. முடிவிலா ஆற்றலுடைமை
8. வரம்பிலின்பமுடைமை

இவைகளையே ராமபிரானின் பண்புகளாக குறிப்பிடப் படுகிறது .

மேலும் நமது இந்து மதத்தின் மிகப் பெரிய பலம் தேடுதலே .இறைவன் பற்றிய உண்மை வேறு வழிகளில் பிரகாசமாக வேருமார்கங்களில் ,வேறு குருக்கள் கூறியதில் , உள்ளதா என தேடும் வேட்க்கை என்றும் நம் அறியோருக்கு உண்டு .
அத்தனை சுதந்திரம் ,அறிவுவேட்க்கை கொண்டது நமது மார்க்கம் . இது அறிவு மயமானது .பக்தி யோகம் ,கர்மயோகம் ,ஞானயோகம் என யோகதில்லேபல விதங்கள் , நமக்கு உண்டு இதனால் நம்மிடம் இல்லாததால் பிறரிடம் போகிறோம் எனப் பொருள் இல்லை .
ஆனால் மற்றவரிடம் உள்ளதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம் யோகா மார்கத்தில் மிகுதியாக உண்டு .

நமது சித்தர் ராமதேவர் தான் , மெக்கா சென்று யாகோப் என பெயர் மாறி பல சித்தர் காவியம் படைத்தார் என்பார்கள் .
ராமதேவரின் ரசாயணம் என்ற நூல்
மிக ரகசிய ரசாயன விளக்கங்கள் கொண்டது .
மேலும் ஒரு சேரன் அரேபியா சென்று
இஸ்லாம் மதம் மாறி அங்கேயே சமாதி பெற்றதாகவும்
ஒரு வரலாறு கேள்விப்பட்டிருக்கிறேன்

உண்மையை உணரும் வரை தேடுதல் இருந்த்துகொண்டுதான் இருக்கும் .உணருதல் வேறு , அறிதல் வேறு .தன்வய்தினதால் வரை தேடுதல் தொடரும் .
அன்புடன் ,
ஏ. சுகுமாரன்

Friday, November 07, 2008

அடுத்த சாவுக்கு போகும்வரை !

இன்று ஒரு இழவு வீட்டிற்கு சென்றிந்தேன்
இழவு என்பது நிகழ்வு என்பது போல்
நிஜத்தில் நடக்கும் நிகழக்கால நடப்புகள் !
ஆலயத்தில் உதிப்பதுதான் இறப்பு வீட்டிலும் ,
என்றும் எதிர்காலத்திலும் , இறந்த காலத்திலும்
வாழும் மனிதன் இறப்பில்தான் நிஜத்தில் வாழ்கிறான்
தன் இயலாமையை தான் உணரும் தருணம் அது !
ஒவ்வொரு இறப்பிலுமே , ஒவ்வொரு வைராக்கியம்
பிரசவத்தில் உதிப்பது போல் , உதிரும் எண்ணக் கோர்வை !
ஆனாலும் வள்ளுவர் கூறும் உலகின் பெருமை போல்
நாளை நமக்கு புதிய நாள் ! நாமே பெரியவர் !
உலகம் பிறந்தது எனக்காக ! அனுபவி ராஜா அனுபவி !
அடுத்த சாவுக்கு போகும்வரை !
அன்புடன் ,
ஏ. சுகுமாரன்

Monday, November 03, 2008

சில பதில்கள்

//பூவுலகை முழுமையாக நம் ஆதிக்கத்தில் கொண்டு வந்தது என்பதும் ஒருperceptionதான். ஒரு பூகம்பம் போதாதா இல்லை என்று சொல்ல//

எந்த ஒரு பொருளைப்பற்றியும் பரிபூரணமாக நாம் தெரிந்துக்கொண்டல் ,அது நமது ஆளுமைக்குள் வந்துவிட்டது என கூறலாம் .அப்பொருளைப பற்றி அறிந்ததும் அது குறித்து அச்சமும் அகன்று விடுகிறது .அதனுடன் நமக்கு ஒரு நெருக்கம் ஏற்ப்பட்டுவிடுகிறது கார் ஓட்ட பழகிவிட்டால் எந்த காரையும் ஓட்ட பயம் நீங்கிவிடுகிறது .அப்படிதான் தற்க்கால அறிவியல் அறிஞர்கள் பூமியின் ரகசியங்கள் அனைத்தையும் அறிந்து விட்டார்கள் . அது நம் வசப் பட்டு விட்டது

.

//இதற்கான விடைகள் பொருளாதார இயலிலும் சமூகவியலிலும்தான் இருக்கின்றன.பக்தி இலக்கியத்திலும் ஆன்மீகத்திலும் இவற்றுக்கான பதில்களைத் தேடுவதுபயனளிக்காது. இலக்கியத்தில் புலம்பலும் ஆன்மீகத்தில் “சர்வம் விஷ்ணுமயம், சர்வம் பிரம்ம மயம்” என்னும் பரவசங்களுமே கிடைக்கும்.
ஆடம் ஸ்மித், கீன்ஸ், மார்க்ஸ் எனப் பலர் பேசி மூலதனத்துவம்,சமூகத்துவம், சமத்துவம் எனப் பிரித்துப் போட்டு நாடுகளும் இந்தக்கொள்கைகளைப் பரிசோதனை படுத்திப் பார்த்து, வென்று, தோற்று, இன்னும்போராடிக் கொண்டே உள்ளன. இப்போது மூலதனத்துவத்தின் இறங்கு முகம்.நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறது. ஆனால் சமூகத்துவம் செத்துப் புதைத்தஇடத்தில் காளான்கள் வளர்ந்து விட்டன. எதிர்காலத்தில் மூலதனத்துவம்தான்பிழைத்து எழுந்து, கொஞ்சம் சமூகத்துவ அரிதாரம் பூசிக் கொண்டுஆடவிருக்கிறது.//

மனிதன் தனது பரிணாம வளர்ச்சியில் முதுகு நிமிர்ந்து , கூட்டம் கூட்டமாக தனை சுற்றி இயற்க்கை படைத்திருத்ததை உண்டு வாழத்தான் ,.பின் தீயின் உபயோகத்தை கண்டன் , ருசியாக உணவு சமைத்து சாப்பிட ஆரமித்தான் . பின் அவனது குடும்பம் என பேதம் ஆரம்பித்தது .அவனுக்கு வீடு தேவைப்பட்டது .பின் கூட்டத்தில் இருந்து பிரியத்தொடங்கினான் . இவ்வாறு ஒரு வழியில் அங்கங்களின் முழுமையான வளர்ச்சி , முக அழகு முதலியவைகளில் இன்றுஇருக்கும் வடிவை அடைத்த மனிதன் . ஆனால் மறுபுறத்தில் அவன் மனம் சிறுகசிறுக மாசு அடைத்து வந்தது அவன் உண்ணும் உணவின் மூலம் கிடைத்த பதிவுகளும், அவன் வாழ்க்கை வாழ்த்த விதம் , சேர்த்த அறிவு , பட்ட கடன், செய்யத கர்மம் முதலியன மூலம் பெற்ற அனுபவங்கள் பதிவுகளாக படிப்படியாக அவன் மனதில் பதிய ஆரம்பித்து , பின் அவன் அந்த வாசனைகளின் படியே கண்டத்தையே கண்டு , தின்றதையே தின்பதில் இன்பம் காண ஆரம்பித்தான் . இந்த திகடச் சக்கர சூழலிலேயே வாழ்ந்து வருகிறான் .அவன் மனதும் மாசு படிந்து அதன் உச்சத்தில் உள்ளது .இந்த நிலையை மனிதன் எட்டவே பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன .இதற்குள் இந்த வாழ்க்கையில் மனித குலத்திற்கு ஏற்ப்பட்ட பல "ஏன் களுக்கு விடைக்கான பல சமயங்கள் தோன்றின . அந்ததந்த சமயத்தில் வந்ததால் அவைகள் சமயம் எனப்பட்டன போலும் .ஆனால் உலகம் முழுவது பல காலங்களில் தோன்றிய மதங்கள் சிறுக சிறுக நீர்த்து போக தொடங்கியது .மனிதன் எந்த மதம் தோன்றினாலும் மிகத் தந்திரமாக அதை ஏமாற்றி தன் விருப்பபடியே வாழும் வித்தையை கண்டுகொண்டான் .ஆனால் அவன் விருப்பம் என்பது அவனுடையது அல்ல , அது அவனின் வாசனைகளால் எண்ணங்களாகவும் , பின் செயல்களாகவும் மாறி அவனை ஆட்டி படைக்கிறது என நமது சித்தாந்தம் கூறுகிறது . பல மதங்களுக்கு பிறகு பல ism களும் உலகின் பல பகுதிகளில் , இந்த தீராத புதிருக்கு விடிவு காண தோன்றியது . அவைகளும் உலகம் முழுவதும் பரவி பின் அதன் தன்மையை இழந்தது .எதுவும் மனிதனை அவனின் கர்ம சக்ர ச்ழர்ச்சியில் இருந்து விடிவிக்க இயலவில்லை .மனிதன் மாறவேயில்லை ,எந்த உபதேசமும் அவனை மற்ற இயலவில்லை ஏன் எனில் மாற்றம் மனிதனின் வெளியில் உண்டாகி பயன் இல்லை , அது அவன் உள்ளில், மாற்றம் வரவேண்டும் . ஒவ்வொருவனுக்கும் வரவேண்டும் .அவன் அவன் வினையை அவன் தான் நுகர வேண்டும் . இதைதான் காட்டலாம் , ஊத்திவிடமுடியது என கூறுவார்கள் .

//பிறப்பில் சம அறிவு இல்லை; சம ஆரோக்கியம் இல்லை; சம திறன் இல்லை.அப்புறம் உணவும் செல்வமும் எப்படி சமமாக இருக்கும்?//

ஆம் , ஆனால் இந்த நிலைக்கு அவனே காரணம் ஆகிறான்
காரணம் திரும்பவும் இதற்க்கு கர்ம நியதியைதான் இழுக்கவேண்டும் . ஆனால் இதைவிட தெளிவான விளக்கம் வேறு எங்கும் கிடைகாது .இந்தக் கேள்வியை நாம் ஒப்புக்கொண்டால் இறைவனை பாரபட்சம் கொண்டவர் என ஏற்க்கவேண்டும் ,பின் அதற்க்கு என்ன காரணம் என ஆராய வேண்டும் .உண்மை என்னவோ இந்த வித்தியாசம் எல்லாம் மனிதனே தானே தனது செய்கையின் மூலம் தேடிக்கொள்கிறான்.

Thursday, October 30, 2008

சப்தம் இல்லாமல் ஒரு சாதனை

//தீபாவளி தங்க விற்பனை அமோகம் ! 50 சதவீதம் அதிகரிப்பு !-உலக தங்க கவுன்சில் தகவல் தீபாவளிக்கு முந்தைய தினத்தில் தங்கம் விற்பனை இந்த ஆண்டு 50 சதவீதம் அதிகரித்ததாக உலக தங்க கவுன்சில் (டபிள்யூ.ஜி.சி.) தெரிவித்துள்ளது. //என்று ஒரு செய்தி நேற்று வெளிவந்தது .//

ஆனால் இப்போது சப்தம் இல்லாமல் ஒரு சாதனையை தமிழ் நாடு நிகழ்த்தி இருப்பது தெரியவந்துள்ளது .!தீபாவளிக்கு முந்தைய தினத்தில் தமிழ் நாட்டில் உள்ள 6700 டாஸ்மாக் கடைகளிலும் மொத்தத் விற்ப்னை 100 கோடியை தாண்டி விட்டதாம் .தீபாவளி அன்றும் விற்ப்னை 100 கோடியை தாண்டி விட்டதாம்
மெய்சிலிர்க்க வைக்கும் சாதனை .
மொத்தமாக அன்று விற்ற மது வகைகள் நான்கு லக்ஷம் பெட்டிகள்.தினசரி சராசரியாக 45 -60 கோடி ரூபாய் க்கு விற்பனை ஆகிறது .தீபாவளி அன்று இரட்டிப்பு ஆகி விட்டது .

உலகின் எல்லா பகுதியிலுள்ள தான் குடிக்கிறார்கள் , ஆனால் அங்கு குடித்த பின்பு தங்கள் வேலையை உற்சசகமாக , ஆர்வத்துடன் செய்வார்கள் .மது அவர்கள் திறமையை உள்ளிருக்கும் உயர்ந்த உணர்வை வெளிக்கொண்டு வரும் . ஆனால் நம் தமிழ் நாட்டிலோ தலை கிழ் குடித்துவிட்டால் அதோடு வேலை முடிந்து விடும் வெளி வரும் வார்த்தைகளின் தரம் ,உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே .

தமிழ் நாட்டு இளைஞர்களின் வரும் காலத்தை நினைக்கும் போதேநெஞ்சம் கலங்குகிறது .வெகுசிலர் மட்டும் தப்பிவிடுகின்றனர் , பெரும் பாலோர் புதை குழியில் சிக்கி மீடியா , தீடிர் உணவு , மது என காலம் கழிக்கின்றனர் .
வர வர பரோட்டா தமிழனின் தேசிய உணவு ,
கைலி தேசிய உடை ,எனஆகிவிட்டது .
பரோட்ட கடைகளும் , டாஸ்மாக் கடைகளும்
இல்லாத கிராமமே தமிழ் நாட்டில் இல்லை
அன்புடன் ,
ஏ.சுகுமாரன்

Tuesday, October 28, 2008

அது என்னவோ எந்த தீபாவளிக்கும் இல்லாத

அது என்னவோ எந்த தீபாவளிக்கும் இல்லாத ஒரு உணர்ச்சி
நாள் முழுவதும் தொடர்ந்து இந்த தீபாவளிக்கு-!-
இங்கு தெருவில் கேட்க்கும் வெடி சப்தம் எல்லாம்
இலங்கையில் தமிழர் மேல் விழும் வெடியையே
நெஞ்சில் நினைவில் வரச்செய்தது !
மறக்கமுடியவில்லை கலைஞர் பார்த்த அந்த குறுந்தகட்டை
,அதன் அழிவு காட்சிகளை, தமிழர் ஆக பிறந்தது பாபமா ?
அதுவும் இலங்கையில் பிறந்தது யார் தவறு ? கொத்து கொத்தாக மடிகிறார்கள் கேட்க்க ஒரு நாத்யில்லையே !
பாரதி இன்று இருந்திருந்தால் பொங்கி எழுந்து
வீர மிகு கவிதைகளால் நமக்கு
சிறுது மரத்து போன மனித உணர்வு ஊட்டியிருப்பார்
.நாய்களோ! பன்றிச் சேய்களோ? என கேட்டிருப்பார் !
கதியற்ற மனிதர்களுக்கு கடவுளே காப்பு ! பிரார்த்திப்போம் !அன்புடன் ,ஏ.சுகுமாரன்

இன்று வரும் விருந்தினர்கள்

அன்பர்களே ,
நேற்று என்னிடம் நன்கு பேர்கள் வந்தார்கள்
உங்கள் அனைவர் கை பேசி எண்ணை கேட்டார்கள்
நான் கை பேசி எண்ணைதர மறுத்தேன் ஆனால் உங்கள் அனைவர் இல்லமுகவரியையும் தந்துவிட்டேன் .இன்று அவர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள் நான் அவர்களை உங்கள் இல்லத்திலே தங்குமாறு கேட்டுகொண்டேன் உங்கள் அனுமதி பெறாமலேயே !
வந்தால் தயவு செய்து வரவேற்க மறக்காதீர்கள் ,
அவர்கள் பெயர்கள் சுகம் , சாந்தி ,செல்வம் , அறிவு .
என் அதிக பிரசிங்கி தனத்தை மன்னித்து விடுங்கள் !
அன்புடன் ,
ஏ.சுகுமாரன்

ஒளியே தீபாவளி

மனிதனின் மாசுதான் நரகாசுரன்
மாசை கொன்று தலை முழுகுவோம்
மாசு நீங்கிய பின் தோன்றிடும்
ஞான ஒளியே தீபாவளி ! ஒளி பரவட்டும்
வரவிருக்கும் வளமான வாழ்வு
ஞானத்தின் பங்களிப்பு ! வாழ்த்தி வரவேற்ப்போம் !
வாழ்க வளமுடன் !அசதோமா சத் கமய !
அன்புடன்,
ஏ.சுகுமாரன்

அன்புடையார் எல்லாம் உடையார் ----ஏ .சுகுமாரன்

அன்புடையார் எல்லாம் உடையார் ----ஏ .சுகுமாரன்
மாலை நேரம் , கணவனை எதிர்பார்த்து வீட்டுக்கு வெளியே வந்த மங்கை முற்றத்தில் இருந்த மூவரை பார்த்தாள்களைப்பு
தோற்றத்தை கனிவுடன் பார்த்து . முக முறுவலுடன் உள்ளே அழைத்தாள் .தாகம் தீர்க்க கொஞ்சம் பானகம் தர .
மகிழ்ச்சியுடன் அந்த மூவர் வினவினர் உன் கணவன்
உள்ளே இருக்கிறானா என்று ,வரும் நேரம் தான் எனக்கூற ,
முவரும் காத்திருக்க ஒப்பினார் கணவன் வரும் வரை

கணவனும் வந்தான் மனைவியிடம் கேட்டான் மூவரைப்பற்றி ,
விபரம் அறிந்த அவன் அவசரமாய்ச சொன்னான்
அவர்களை உள்ளே அழைக்க ! கனிவுடன் வெளியே வந்த மனைவி அவர்களை உள்ளே அழைக்க அவர்கள் கூறிய பதில் அவளை வியக்க வைத்து ..
அவர்கள் கூறினார் அவர்கள் பெயரை
வரிசையாய்ஒருவர் சொன்னார் என் பெயர் செல்வம் ,
அடுத்தவர் சொன்னார் என் பெயர் வெற்றி மூன்றாம் நபரோ
அடக்கமாக சொன்னார் என் பெயர் அன்பு என !
ஆனால் அம்மா ! நாங்கள் முவரும் ஒன்றாய் எந்த வீட்டிலும்
நுழைய இயலாது , உன் கணவனை வினவி வா
எங்களில் யார் முதலில் தேவை என என்றனர் .

அதிசியத்து உள்ளே சென்ற மங்கை ,சொன்ன கதை கேட்ட கணவனும் ,அவளின் குட்டி மகளும் துள்ளிகுதிதனர் உவகை மிகுதியால் ,அவசரமாய் கணவன் சொன்னான் உடனே அழைத்து வா !
அந்த செல்வ மனிதனை செல்வமிருந்தால் சீரும் சிறப்புடன் வாழலாம் என ,

சற்றே தயங்கிய நங்கைஅவள் மெல்லிய குரலில் கணவனை கேட்டாள், ஏன் வெற்றி வந்தால் எதிலும் வெலலாமே ,வலிமையுடன் வாழ வெற்றி போதாதா என்றாள்
துள்ளிக் குதித்த அன்பு மகள் ,அம்மா அம்மா
அன்பையே அழைத்து வா எனக் கொஞ்ச அன்பு மகளின்
செல்ல கொஞ்சல் எல்லை மீறவே இருவரும் முடிவெடுத்தனர்
அன்பையே அழைப்பது என

வெளியே வந்த மங்கை மலர்சியுடன் அழைத்தாள்அன்பு மனிதனை வீட்டிற்கு உள்ளே , மறற இருவரிடம் மன்னிப்பு கேட்டபடியே - அப்போது தான் நிகழ்ந்தது அந்த அதிசயம் !அன்பு மனிதனுடன் சேர்த்து புறப்பட்டனர்
முவரும் ஒன்றாய் -வியப்புடன் நோக்கியமங்கையிடம்
அன்பிருக்கும் இடத்தில் நாங்கள் இருவரும் சேர்த்தே இருப்போம் -
ஆனால் நீ எங்களில் ஒருவரை விரும்பிருபின் மறற
இருவருக்கும் அங்கு இருப்பிடம் இல்லை
ஆனால் அன்பு உள்ள இடத்தில் செல்வமும்
வெற்றியும் சேர்த்தே தான் இருப்போம் -
எங்களை அன்பிடம் இருந்து பிரிப்பது
இயலாத காரியம் என்றனர் .அன்பின் வலிமை அளவற்றது ஆயிற்றே ! உலகின் ஈர்ப்பு விசையின் வேறு பெயர்தான் அன்பு !

அகத்தியர் கூறிய காயகல்பங்கள்

இனி அடுத்ததாக சித்தர்களில் முதன்மையானவரும் ,காவேரியை தமிழ் நாட்டிற்கு கொண்டு வந்தவராக கூறப்படும் அகத்தியர் கூறிய காயகலப்பங்களை பார்ப்போம் .அனேகமாக தமிழகத்தின் பல ஊர்களிலும் அகத்தியரின் சிலைகளை கோயில்களில் காணலாம் பல ஸ்தல புராணங்களிலும் அவர் சம்பந்த பட்டிருப்பார் .பல ஊர்களின் பெயரும் அவர்பெயரில் உள்ளது .நான் கூட டெல்லியில் இருந்து வெளி வரும் வடக்குவாசல் என்ற இதழில் அகத்தியர் வாழ்ந்த சித்தர்கள் பூமிதான் புதுச்சேரியா?என ஒரு கட்டுரை ஜூலை மாதம் எழுதி இருந்தேன் அதை மின் தமிழ் லும் கூட இட்டுஇருந்தேன் அகத்தியர் ஒருவரல்ல பலர் என்று கூட கருத்து உண்டு .அகத்தியர் என்ற பெயர் அகத்தின் செயல் அறிந்துக் கூறியதால் வந்ததாக கூறுவர்.இவரது மாணாக்கரில் புலத்தியர் ,தேரையர் முக்கியமானவர்கள் .அவர் அகத்தியர் பெருநூல் ,அகத்தியர் பரிபூரணம் போன்ற பல நூல்களை வைத்திய ,வாத ,ஞான ,சோதிட சாஸ்திரங்களில் செய்துள்ளார் .---------------------இனி அவர் கூறிய காய கல்பம் இவைகளை நான் மூலத்தில் உள்ளதை மாற்றாமல் அபடியே தருவதற்கு காரணம் இதன் பொருளை ஆய்து காணவேண்டும் என்றுதான் , நான் ஒன்று கூற அர்த்தம் வேறு இருக்கக்கூடாது அல்லவா ?மேலும் இது யாருக்கு கிடைக்க வேண்டுமோ அவருக்கு அகத்தியர் வழி காட்டுவர் .
-------------------------------------------------------------------
இந்த சதுரகிரி வனத்திலே ,கையாந்தகரை என்ற மூலிகை இருக்கிறது , அதை பிடிங்கி வந்து மை போல் அரைத்து ஆவின் நெயில் குழப்பி கொதிக்கவைத்து ,சிவந்த பதத்தில் இறக்கி காலைநேரத்தில் வலது கை பெருவிரலால் தொட்டு ,உள்நாக்கில் மேல் வாசலில் தடவி வர குகை வாசல் திறக்கும் .,தேகமும் சித்தியாகும் ,மற்றொரு முறை சோதி புல் என்றொரு முலிகை உண்டு ,பார்வைக்கு மலை புல் போலிருக்கும் ,சிறுது மஞ்சள் நிறமாய் இருக்கும் .நான்கு விரல் அளவுக்கு மேல் வளராது .அதை சாபம் நீக்கி சமுலதுடன் பிடுங்கி வந்து இரவு நேரம் பார்த்தால் தீபம் போல் பிரகாசிக்கும்.இந்த புல்லை ஆவின் பாலில் போட்டால் ரத்த நிறமே வரும் ..அப்போது ஒரு கழஞ்சு சூதம் அதனோடு சேர்த்து நூறு எருமுட்டையில் புடமிட ,அச்ச சூதம் கெட்டி ஆகிவிடும் பின் அதை செந்துரமாக்கி வெள்ளியில் கொடுக்க ஏமமகும் ,அதை பற்ப்பமாகிநெய்யில் குழப்பி புசித்து வர தேகம் சித்தியாகும் என்றார் .
அன்புடன் ஏ.சுகுமாரன்

Saturday, October 11, 2008

18 சித்தர்கள் கூறிய காயகல்ப முறைகள் --ஏ.சுகுமாரன்

18 சித்தர்கள் கூறிய காயகல்ப முறைகள் --ஏ.சுகுமாரன்
முதலில் சித்தர் போகர் கூறியதில் இருந்து ஆரமிப்போம் .இது திரட்டியது .தான் இதன் மூலம் சதுரகிரி புராணத்தில் உள்ளது அறிமுக உரை மட்டும் என்னுடையது இந்த தொடரின் இறுதியில் நூல் கிடைக்கும் இடம் முகவரி தருகிறேன் .காயகல்ப முறைகளை மூலத்தில் உள்ளபடியே தருகிறேன் .செய்து பார்ப்பது அவரவர் விருப்பம் .நான் சிபாரிசு செய்யவில்லை இது பதிவு செய்யப்படவேண்டும் எனவே இதை எழுதுகிறேன் .தங்குந்த குருவின் துணை தேவை .
பொதுவாகவே சித்தர்கள் எவரும் அவரவர்களது சொந்தப் பெயரால்
அழைக்கப்படுவதில்லை. அவர்களது சித்தம் தெளிந்து சித்தர்கள் நிலையை அவர்கள்
அடையும்போது அதுவரை வாழ்ந்து வந்த வாழ்க்கையும் அவர்கள் சொந்த பெயர்,
அதனை ஒட்டிய அவரது நிகழ்வுகள், அனுபவங்கள் மறைந்து சித்தர் என்ற பொது
வழியிலே செல்ல ஆரம்பிக்கும்போது, மக்கள் அவர்களது அப்போதைய நிலையைக்
குறிக்கும் வேறு ஒறு உருவப் பெயரால் அழைக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
அப்படித்தான் பாம்பாட்டி சித்தர், அழுகுணி சித்தர், சட்டைநாதர், என்று அந்த
நாட்களிலும் , விசிறி வைத்திருந்ததால் விசிறி சாமியார் என்று இந்த நாள் வரை மரபு
தொடர்ந்து வருகிறது.சித்தர் போகர் தமிழ்நாட்டில் பிறந்த பொற்கொல்லர் மரபை சேர்ந்தவர் என்று
கருதப்படுகிறார். இவரது சீடர் புலிப்பாணி என்னும் சித்தர் ஆவார். அவர் புலி மேல் ஏறி
பயணம் செய்து வந்ததால் புலிப்பாணி என்று அழைக்கப்பட்டதாக கூறுவார்கள்.
போகர் இயற்றிய நூலில் போகர் 7000 என்பது மிக முக்கியமானது. துவாத காண்டம்
என்ற நூலும் குறிப்பிடத்தக்கது. . இவர் தனது சீடர்களுடன் சீனா தேசம் சென்று
அங்கு ரசவாதக்கலையும், விமானம் முதலியன செய்வதைப் பற்றியும் நூல்கள் செய்தும்
உபதேசங்கள் செய்தும் சிலகாலம் இருந்ததாக கூறப்படுகிறது .பின் தமிழ்நாடு திரும்பி ஆவினன் குடியை அடுத்த சிறுகுன்றில் நவபாஷாணத்தால்
'தண்டாயுதபாணி' என்ற தெய்வத்தை படைத்து அதற்கு பூஜா விதிகளையும்
விதித்தார்.குறிப்பிட தக்கது அந்த சிலை தண்டு ( குச்சி )வைத்திருந்ததால்
தண்டாயுதபாணி. --முருகர் கீழே ஆவினன் குடியில் தான் உள்ளார் .பிறகு அங்கு தண்டாயுதபாணிக்கு அருகிலேயே தனக்கு ஒரு சமாதியை செய்து அதில்
சமாதி ஆனார்.
போகர்ரின் காயகல்ப முறை இது கேள்வி பதில் பாணியில் அமைத்துள்ளது :
"சுவாமீ! இனி நாங்கள் தேக சித்தி யடைவதன் பொருட்டு ஏதாவது சில கற்ப
முறைகளைக் கூறியருள வேண்டுமென்று கேட்க, அதற்கு முனிவர் ஐவர்களே! உலகத்தில் நம்மைப் போன்ற சித்தர்கள்
அனுபவத்திலிருந்து வருகிற அநேக கற்ப முறைகளிற் சிலவற்றை இப்பொழுது
உங்களுக்குக் கூறுகிறேன்.
அதாவது, இவ்வனத்தின் மேற்குத்திசைக் கன்னி மூலையில் தில்லை விருக்ஷமென்
றொன்றுண்டு. அதனை முகம்வீங்கி விருக்ஷமென்றுஞ் சொல்லுவார்கள். அவ்விருக்ஷம்
கறுப்பு நிறமாகவும், கிளைகள் சாம்பல் வர்ணமாகவும், சிறிதாகவும், இலை
அகத்தியிலை போலவும் இருக்கும். அதன் பாலைக் கரத்தாற்றீண்டாது அரைக்காற்
படிகொண்டு வந்து தாமிரத் தகட்டை இலேசாகத் தட்டி அப்பாலில் ஒரு மண்டலம்
ஊறப்போட்டுப் பின்பு அதையெடுத்து வீரமும் பூரமும் சேர்த்து அப்பாலேயே விட்டு
அரைத்துத் தகட்டை யெடுத்துக் கவசஞ்செய்து குக்குடபுடமிடச் சுண்ணமாகும்.
அச்சுண்ணத்தை ஆவின் நெய்யிற் குழப்பி மூன்றுநாள் சாப்பிடக் காயசித்தியாகும்.
இன்னொரு முறையாவது, அந்தத் தில்லை விருக்ஷமிருக்கு மிடத்திற்குத் தென்திசையில்
ஒரு திட்டு இருக்கிறது. அதன் கீழே மணல் வாரி யோடை யென்ற ஓர் வாய்க்கால்
இருக்கிறது. அவ்வாய்க்காலின் கரையில் சிவந்த இலைக்கள்ளி யென்றொரு மூலிகை
உண்டு. அதனுடைய இலை சிவப்பு நிறமாக இருக்கும். அதன் பாலைக்
குன்றிமணியிடை சர்க்கரையிற் சேர்த்து மூன்றுநாள் புசிக்கவேண்டும். மறு மூன்றுநாள்
வரை பத்தியத்துடனிருந்து, பகலில் மோரன்னமும், இரவில் பாலன்னமும் அருந்தத்
தேகசித்தியாகும் என்று கூறி யருளினர். "இது குறித்து விவாதங்களை எதிர்பார்க்கிறேன் .
அன்புடன் ,
ஏ.சுகுமாரன்

Wednesday, October 08, 2008

பிரபஞ்ச புதிர் தொடர்ச்சி

கண்ணன், சுகுமாரன் மற்றும் அன்பர்களே,
என் கேள்வி இத்தனை அருமையான தமிழ்ப் பாக்களை இந்தஉரையாடலுக்குள் கொண்டு வந்து விட்டிருப்பது எனக்கு ரொம்பமகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் சொல்லுங்கள். படிக்கப் படிக்கத்தேனாக இருக்கிறது.
அது ஒரு புறம் நடக்கட்டும். ஆனால் ஏராளமான அறிவியலாளர்கள் ஏராளமாகச்சிந்தித்து, ஏராளமாகப் பணச் செலவு செய்து ஏராளமாக ஆய்வுகள் நடத்திஒன்றைக் கண்டு பிடித்து அறிவியல் பூர்வமாக வெளியிட்ட பின்னர்,"பூ, இது என்ன? எங்கள் ஆழ்வார்கள் சொல்லியிருக்கிறார்களே" என்றுஊதி விடுவது எனக்கு ஒப்புதலில்லை.
நமது ஆழ்வார்கள், நாயன்மார்கள், சித்தர்கள் இதனை உண்மையிலேயேஅறிந்திருந்தால்அவற்றை விவரணையாகச் சொல்லி (in detail) நமக்கு உணர்த்தியிருக்கலாமே!அவர்கள் சொல்லுவது, குறிப்பது நாம் பேசுகின்ற இந்த பெரு வெடிப்புத்தானா?எனக்கு அப்படித் தோன்றவில்லை.
நீங்கள் சொல்லும் காரண காரியங்களை நீட்டினால் இந்தப் பாடல்களை வைத்துஇன்னொரு மேல்தளத்திற்கும் ஒருவர் போக முடியும். அதாவது "இந்த ஆழ்வார்கள்இத்யாதிபெருவெடிப்புக்கும் முன்னுள்ள நிலையையும் குறிக்கிறார்கள்; அதைஅறிவியலும்இன்னும் கண்டுபிடிக்கவில்லை" என்பதான ஒரு வாதம்.
முடியும்தானே? இந்தப் பாடல்கள் ஒரு ecstasy மனப்பான்மையில் சொல்லும்விஷயங்களுக்குநாமாக நீட்சிகளை இழுத்துக் கொண்டே போகலாம். நாளை Higgs Bosonகண்டு பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டாலும் எங்கள் ஆழ்வார்கள் சொல்லியவிஷயம்தான் என நீட்டித்துச் சொல்லலாம். இவற்றுக்கெல்லாம் இடங்கொடுக்கும்அளவுக்கு அந்தப்பாடல்கள் பூடகமாகவும் மர்மமாகவும் இருக்கின்றன. ஏதாகிலும்"துகள்", "துகளின் துகள்" என்னும் சொற்கள் வசதியாக அகப்படலாம்.
எனக்கென்னமோ அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒன்றாகப் பேசிக் குழப்பக்கூடாதுஎனத் தோன்றுகிறது. தனித்தனியே வைத்துப் பேசினால் வம்பில்லை.
ரெ.கா.
- Show quoted text -
On 10/7/08,
karthigesur@gmail.com <karthigesur@gmail.com> wrote:
அன்புள்ள சுகுமாரன்,
எனது எண்ணங்கள்.
அறிவியலாளர்கள் - இங்கு கற்றையியல் ஆய்வாளர்கள் எனக் கொள்க -முன்முடிபுகள் ஏதுமின்றி பிரபஞ்சத் தோற்றத்தை ஆராய்கிறார்கள்.ஆனால் இதைப்பற்றி வெளியிலிருந்து பேசிக்கொண்டுள்ள நாம் நமதுஞானிகளும் சித்தர்களும் சொல்லியிருப்பதைப் பிடித்துக் கொண்டு அதற்கேறபஇது இருக்கிறதா என ஒப்பிடுவதிலேயே குறியாக இருக்கிறோம்.
இதுவே நாம் பிரபஞ்ச உற்பத்தியின் உண்மைகளை அறிவியல் பூர்வமாகஅறிந்து கொள்ள ஒரு தடையாக இருக்கும் என நான் எண்ணுகிறேன்.We are cetrtainly biased in favour our beloved Tamil saints and benton looking for scraps ofevidence in the big bang research to justfy that premise.அதே வேளை இந்த கற்றையியல் அறிவியலாளர்களின் அறிவார்ந்தகண்டுபிடிப்புக்களைநாம் இதனால் மலிவு படுத்தி விடுகிறோம் என்றும் தோன்றுகிறது. இதனாலேயேஅறிவியலையும் ஆன்மீகத்தையும் தனித்தனியே பேசுவதே சிறந்தது எனநான் சொல்கிறேன்.
பரிணாம வளர்ச்சிகள் பற்றி கந்தரனுபூதி முதலான இலக்கியங்கள் சொல்லியவற்றைநீங்கள் எடுத்துக் காட்டுகிறீர்கள். இதைப் பற்றி நாம் என்ன விவாதிக்கமுடியும்?என்ன கருத்துச் சொல்ல முடியும்?
கற்றையியல் சொல்வதை எப்படி நம்மால் முழுக்கவும் புரிந்து கொள்ளமுடியவில்லையோஅப்படித்தான் இதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கற்றையியல்சொல்பவற்றிற்குஒரு methodology இருக்கிறது. Corroborative research இருக்கிறது.Academic validation இருக்கிறது.ஆனால் இங்கு நீங்கள் மேற்கோள் காட்டும் பரிணாம வளர்ச்சியை ஆதாரப் படுத்தஎன்னஇருக்கிறது?
அமித் கோசுவாமி பற்றியுய்ம் எழுத ஆசைதான். சில கருத்துக்களும்கேள்விகளும் உணடு.பின்னால் எழுதுகிறேன்.
ரெ.கா.
On Oct 6, 9:17 pm, "annamalai sugumaran" <
amirthami...@gmail.com>wrote:> பிக் பாங் பற்றிய சர்ச்சை விஞ்ஞானிகளின்> பதிலை அதிகம் சார்த்து> மேலும் மேலும் சென்றதால் நான்> தற்காலிகமாக ஓர் ஒய்வு கேட்டேன் .> ஆனால் இன்னும் தேடல் ஒரு முடிவுக்கு வரவில்லை இன்னும்> சொல்லப் போனால் நாம் ஆரமிக்கவே இல்லை .> > இதில் ஒரு வேறு கருத்தும் இருக்கிறது> நாம் இது வரை பரிணாம வளர்ச்சியில் ஏழு நிலைகளை> தாண்டி வந்ததாக கருதப்படுகிறது>> "மாவேழ் சனனம் கெட மாயைவிடா> மூ வேடனை என்று முடிதிடுமோ " என்று>> அருணகிரி நாதர் கந்தரனுபூதியில் ஏழு பரிணாம நிலை பற்றி> கூறுகிறார்> பரிணாம வகைகளும் அதில் உள்ள கரு வேறுபாடுகளும்>
அன்புள்ள திரு ரெ.கா.அவர்களுக்கு >//அறிவியலாளர்கள் - இங்கு கற்றையியல் ஆய்வாளர்கள் எனக் கொள்க -முன்முடிபுகள் ஏதுமின்றி பிரபஞ்சத் தோற்றத்தை ஆராய்கிறார்கள்.ஆனால் இதைப்பற்றி வெளியிலிருந்து பேசிக்கொண்டுள்ள நாம் நமதுஞானிகளும் சித்தர்களும் சொல்லியிருப்பதைப் பிடித்துக் கொண்டு அதற்கேறபஇது இருக்கிறதா என ஒப்பிடுவதிலேயே குறியாக இருக்கிறோம்.//
அப்படியில்லை திரு ரெ.கா, நமது மனித இனம் தோன்றி பல லக்ஷம் ஆண்டுகள் ஆகிவிட்டன .ஆனால் சுமார் நானுறு ஆண்டுகளாகத்தான் நமது அறிவியலாளர்கள்விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளை அடிப்படை தொடர்புகளுடன் ஆய்து பதிவு செய்யத்தொடங்கி இருக்கின்றனர் .அப்போது முன்னர் மனிதர்கள் அறிவின்றி , ஆராயும் மன பக்குவம் இன்றி இருந்தார்களா என்றால் இல்லை .மனிதன் தோன்றியதில் இருந்து அவனை சுற்றி இருந்த பல புதிர்களை அவன் ஆர்வத்துடன் பார்த்து ஆராய்துதான் இருந்து இருக்கிறன் .ஆனால் இப்போது நானுறு ஆண்டு களாக மனிதன் பரிணாம வளர்ச்சியிலே அறிவின் உச்சத்தில் இருக்கிறன் .ஒலிம்பிக்கில் இருந்து இன்னும் பலவேறு , சொல்லப்போனால் அனைத்து துறைகளும் மனிதன் தன் முந்தய சாதனை களைமுறியடித்து வருகிறான் மனிதன் மாறிக்கொண்டே வருகிறான் உருவிலும் , அறிவிலும் , குணதில்லும் விரிவடைத்து தான் வருகிறான் இது எப்படிசாத்தியமாகும் அறிவின் தொடர்ச்சியும் முயற்சியின் தொடர்ச்சியும் இருந்தால் தான் .இதையும் பரிணாம வளர்ச்சி என்றும் ,பூர்வஜன்ம வாசனை என்றும் நம் முன்னோர் கூறினார்இதற்க்கு கருவில்லேயே திருவுடயவரக பலர் இருந்ததுண்டு இன்னும் கூட பல குழந்தைகள் சிறுவயதிலேயே கணினிதிறமை கவி படும் திறன் , தத்துவ அறிவு பெற்று விளங்குவதை நாம் காணலாம் , ஞான சம்பந்தர் பழமையானவர் என்பதால் அவர் முன்று வயதில் கவி பாடியதை நாம் கணக்கில் கொள்ளவேண்டாம் , ஆனால் இன்றும் இத்தகைய பல இளம் நிபுணர்கள் பல நாடுகளிலும் நாம் பார்க்கிறோம் .. குறிப்பாக நமது பாரதத்தில் , பிற கண்டங்களிலே மனிதர்கள் தங்கள் வயற்று பாட்டையே பார்த்துக்கொண்டு வனங்களில் வாழ்ந்த போது, நாம் அறிவியல் ஆராய்ச்சிக்கு என தனியே ஒரு குழுவை வைத்திருந்தோம் , அவர்களுக்கு பெயர் தான் வேறே இருந்தது , அதில் ஜாதி ,இன பாகுபாடு முதலில் இல்லை . யார் வேண்டும் ஆனாலும் இந்த சிந்தனை செய்வதையே தவமாக கொண்ட குழுவில் சேரலாம் .அவர்கள் ரிஷிகள் எனப்பட்டார்கள் , தமிழகத்தில் சித்தை அடக்கிதால் சித்தர்கள் எனப்பட்டனர் ..அவர்களின் சுக துக்கங்களை நமது சமுதாயம் பார்த்துக்கொண்டது .அவர்கள் இறைவனை குறித்து சிந்தனையை ஆரமிக்கவில்லை அவர்களை சுற்றி வாழும் மனிதர்கள் படும் துயரத்தின் காரணத்தையும் ,ஏன் பிறந்தோம் , ஏன் சாகிறோம் ,எதற்க்காக வாழ்கிறோம் ,வாழும் போது ஏன் சிலருக்கு துக்கம் ,சிலருக்கு வசந்தம் சிலர் ஏன் சிவிகையில் போகிறார்கள் ,சிலர் ஏன் சிவிகையை தூக்குகிறார்கள் ஏன் வியாதிகள் , சில ஏன் மருந்தால் குணமாகிறது ,சில ஏன் மருந்து கொடுத்ததும் குனமவதில்லை , என நம்மை பற்றயுள்ள பல புதிர்களுக்கு விடைக்கான முயன்றனர் .பலரும் பல வழிகள் கண்டனர் , ஆனால் அனைத்துக்கும் விடையளிக்க அவர்களுக்கு கடவுளும் ,கர்ம விதியும் தான் தேவை பட்டது. அவர்கள் சிந்தித்து கண்ட பொருளை அவர்கள் அப்படியே யாரையும் ஒப்புக்கொள்ள சொலவில்லை .அப்போது தர்க்க சாஸ்திரம் என்ற பெயரிலே தற்போதைய விஞான முறைகளை போல் வெகுவாக அறிஞர் பெருமக்கள் குழுவினால் ஆராயப்பட்டது .ஒவொரு கருத்துக்கும் சாஸ்திர பிரமாணம் தேவைப்பட்டது .ஆதி சங்கரரில் இருந்து , புத்தர் , ராமானுஜர் , அப்பர் என மாதக் கணக்கில் வாதங்கள் பாரதத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அறிவை தேடினர் அதே சமயம் பரப்பினர் .அப்படி வாழையடி வாழையை வந்த அறிவியலாரின் வழிவந்தவர்கள் தான் தற்க்கால விஞனிகளும் அவர்கள் கண்டுப்பிடிப்பையோ , உழைப்பையோ யாரும் குறைத்து மதிப்பிடவோ , குறைகூறவோ இல்லவே இல்லை இன்னும் சொல்லப்போனால் மாறிக்கொண்டே வரும் அறிவியலாளர்கள் கண்டுப்பிடிப்பை கண்முடித்தனமாக நமது மக்கள் ஏற்று கொள்ளவதும் ,அதற்கு எந்த ஆதாரமும் கேட்க்கததும் தான் பெரு வியப்பு .உதாரணம் நமது நவீன விவசாய அறிவுரையால் பாரம்பரிய விவசாயத்தை இன்று இழந்து பல்வேறு வியாதி ,மன இறுக்கத்துடன் நமது வாழ்க்கை அமைத்தது . நாம் பழம் பாடல்களில் சில விஞ்ஞான வார்த்தைகள் இருப்பதை சுட்டிகாண்பிப்பதுஇதையும் உங்கள் ஆராச்சியில் சேருங்கள் , உண்மை இருந்தால் உலகுக்கு கூறுங்கள் என்பதற்காகவே .சில நேரம் நமது தற்போதைய விஞ்ஞான அறிவினால் சில புரிந்து கொள்ளாமல் போகப்படலாம் .வரும் காலங்களில் அது நிரூபிக்க படலாம் பல லக்ஷம் ஆண்டுகள் பொறுத்திருந்தோம் , இன்னும் சில ஆண்டுகள் பொறுப்போமே.நமது முன்னோர் கூறியது பல விவாதங்களினால் நிரூபிக்க பட்ட பல சாஸ்திர பிரமாணங்கள் கொண்ட , காலத்தால் எஞ்சி நிற்பவை அது ஆபத்து இல்லாத தேய்த்த வழி பாதை . மேலும் சில உள்ளது பின் , அதுபற்றி பேசுவோம்.என்னை பொறுத்தவரை இன்னும் எதாவது இதன் மூலம் கிடைகாதா என்றுதான் இவைகளை எழுதுகிறேன் .அன்புடன்,-ஏ.சுகுமாரன்- Show quoted text -



- Show quoted text --- A.SugumaranAmirtham IntlPONDICHERRY INDIA MOBILE 09345419948
www.puduvaisugumaran.blogspot.comwww.puduvaitamilsonline.com
------------------------------------------ On 10/8/08, Narayanan Kannan <
nkannan@gmail.com> wrote: 2008/10/8 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>:> போன ஜென்மத்தில் தாய்ப்பால் அருந்தியது, துணை புணர்ந்தது எல்லாம் :)>> யாரும் கற்றுத்தராமலேயே நமக்கு இவை தெரிகின்றனவே!
உண்மைதான். பிறந்தவுடன் கன்றுக்கு தாய்மடி போக வேண்டுமென்றுஎப்படித்தெரிகிறது? அறிவியல் சொல்லும் இவையெல்லாம் மரபுடன் இயைந்து வரும்செயலென. டி.என்.ஏ எனப்படும் மரபு வேதிமம் இம்மாதிரி நினைவுகளைமர்மக்குறியீடுகளாக தன்னுள் புதைத்து வைத்து, ஒரு தலைமுறையிலிருந்துஅடுத்த தலைமுறை என்று பரப்பிவருகிறது. இதனால்தான், விலங்குகள் (யானையும்சேர்த்து) நீரில் நீந்தும் தன்மை பெறுகின்றன, எப்பயிற்சியும் இல்லாமல்.ஏனெனில் நமது தோற்றம் நீரில் ஆரம்பிக்கிறது.
க.>
அன்பின் திரு கண்ணன், இந்த டி.என்.ஏ ஆதியில் இருந்து ஓவொரு உயிர்வகைக்கும் மாறவே இல்லையா ? அல்லது மாறுதலுக்கு உள்பட்டதா ?மாறும் என்றால் எதனால் ? தற்போதைய மாடுகள் சிக்னலை பார்த்து சாலையை கடக்கிறதே அந்த அறிவு டி.என்.ஏ மூலம் வந்ததா ?எல்லாவற்றிக்கும் அடிப்படை குணம் உள்ளது சிங்கம் சிங்கமகாதான் இருக்கும் எப்படியும் மாறது .மனிதனின் அடிப்படை குணம் என்ன ?பசியும் ,இனவிருத்தியும் தானா ?விலங்கிலிருந்து நாம் எந்தவழியில் மாறுபடுகிறோம் ?மனம் என்பது இருப்பதால் தானே மனிதன் அந்த மனதை பற்றி நமது அடிப்படை பாடத்தில் ஏன் இல்லை .?விஞானம் கண்ணால் காணும் பூத உடலை பற்றிதானே கூறுகிறது.ஆனால் நாம் பல் ஆயிரம் ஆண்டுகளாக மனதை பற்றியே ஆய்து வருகிறோம் .ஒவொரு மனித மனமும் அத்தனை பூர்வஜன்மத்தை தாங்கிய நுண் பொருள் , அது இல்லாமல் மனிதன் இயயங்க இயலாது . புலன்கள் மனதின் தொடர்பு இன்றி வேலை செய்யாது .பூர்வஜன்ம தொடர்பு மனதின் மூலம் வருகிறது நமது விதி ஊழ் டி.என்.ஏ மூலம் வருகிறது என கொள்ளலாமா ?அன்புடன்,-ஏ.சுகுமாரன்
- Show quoted text -

Wednesday, October 01, 2008

அடுத்த அக்டோபர் இரண்டு வரை --ஏ.சுகுமாரன்


நல்லவேளை அக்டோபர் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறைதான் வருகிறது !--மாலை போட்டுவிட்டு வண்ண வண்ண மிட்டாய்களை பிஞ்சுகளுக்கு வாரிஇறைத்து விட்டு வசதியாக சென்று வழக்கமான வேலையை பார்க்கலாம் -இந்த மகாத்மா தான் ஏன் சத்திய சோதனைஎன பரிசோதனை தொடங்கினார் இன்று வரை சத்தியத்தை ரொம்ம தான் சோதனை செய்து வருகிறார்கள் -எல்லாம் செய்த மகாத்மா இருக்கும் இடம்தான் செரியிலாமபோச்சு - யாருங்க யோசனை சொன்னா ரூபாயில் அவரை போடச்சொல்லி !தினமும் மது கடையில் அவர் நோட்தான் கோடி கோடியாசுத்துது -பேசாமல் மானையும் மயிலையும் போட்டாலாவது

மானாட மயிலாட பார்த்திருக்கலாம் -எப்படியோ நீ மகாத்மாநாங்கள்

சாதா ஆத்மாதான் என்று சவ்கரியமா சொந்தவேலையை

பார்த்துக்கலாம் அடுத்த அக்டோபர் இரண்டு வரை .

அன்புடன்

ஏ.சுகுமாரன்

Friday, September 26, 2008

பிரபஞ்ச புதிர் !! -ஏ.சுகுமாரன்

பிரபஞ்ச புதிர் !! -ஏ.சுகுமாரன்
பிரம்மனே ! பிரபஞ்ச நாயகனே !

பிந்துவே ! பெரு ஓசையின் (BIG BANG) விளைவே !

எமையெல்லாம் படைத்தது ஆள்வது

நீஎன்றால் நீங்காத ஐயம் பல என்றும் உண்டு !

பசியும் பட்டினியும் கூட உன் படைப்பு தானா?

எத்தனை தொழில் செய்தாலும் துரத்தி வரும் தொல்லைகளும் நீயே படைய்த்தயா ? பிறந்தோர் அனைவரும் புசிதிருக்கும் வித்தையை ஏன் படைக்க மறந்தாய்! " இரந்தும் உயிர் வாழ்தல்

வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான் " என உன்னை வான் புகழ் வள்ளுவர் சபித்த போதும் ஏன் வாளாயிருந்தாய்

படைத்தல் உன் பணி என்றால் உலகில் இத்தனை நெருக்கம் ஏன் படைத்தாய் ! உன் கணக்கில் பிழையா ?காலத்தின் இறுதியால் இந்த குழப்பமா ? எம்மில் பலர் வாடுவதையும்

வெற்று குடங்கள் வீரமுரசு கொட்டுவதும் நீயேன் உன் படைப்பில் அனுமதித்தாய் ?மசால் வடை விற்பவன் மகாகவியை விட வசதியாய் வாழ , மனிதன் படைத்த பணம் உன் அனைத்து படைப்பையும் ஆளும் தகுதி அடைந்தது எப்படி ? இறப்பில் தன்னே ஒற்றுமை அடைகிறான்

வாழும் போதோ ஆயிரம் வேற்றுமை அவன் தவறால் மட்டும் இல்லாமல் தவிகிறானே !

கர்மத்தின் பம்பர சுழற்சி விசை இன்னும் உன்னிடம் தானே உள்ளது !!

Monday, September 22, 2008

தில்லி வாசிகளின் திகைப்பும் ,தலைகீழாய் திரும்பிய குப்பை தொட்டிகளும் .......---- ஏ. சுகுமாரன் ..



தில்லி வாசிகளின் திகைப்பும் ,தலைகீழாய் திரும்பிய குப்பை தொட்டிகளும் .......---- ஏ. சுகுமாரன் ..
ஞாயிறு அன்று மாலைதான் தில்லியில் ரயிலில் இருந்து இறங்கமுடிந்தது ,கருப்பு சனியின் கொடூர வன்முறை , மனித இனத்திற்கே ஒவ்வாத பயங்கர வன்முறை தாண்டவத்தின் பாதிப்பு பார்க்கும் இடமெல்லாம் தெரிந்தது ! தில்லி மக்களின் முகமெல்லாம் ஒருமாதிரியான இறுக்கம் !ஒன்று போல அனைவர்முகத்திலும் ஒரேமாதிரி முகபாவம் .பேசவே அனைவர் தயக்கமும் ஒருமாதிரியே! ௨00௫- ஆண்டு நடந்த பயங்கரம் மீண்டும் தில்லியில் நடக்கும் என்றே நம்ப மறுக்கும் மனோபாவம் !குண்டுவெடித்த கருப்பு சனியின் சேதி கேட்ட டெல்லி வாழும் மக்கள் அனைவரும் குப்பைதொட்டியில் குண்டுவெடித்த செய்தி அறிந்து என்னசெய்தனர் தெரியுமா ?
அனைத்து தெருக்களிலும் குப்பை தொட்டிகள் மக்களால் தலைகீழாய் திருப்ப பட்டன .மறு நாள் காலை !ஒரே மாதிரி எதிர் வினை அனைத்து மக்களையும் செயல்பட வைத்து தான் விந்தை .!இது மாதிரி செய்ய சொல்லி கூறப்பட்டதா என நகராச்சி அதிகாரிகளை கேட்டதற்கு இல்லை என மறுத்தனர் .மறுநாள் வெடி வெடித்த கபூர் மார்க்கெட் பகுதிக்கு சென்றபோது , கும்பல் கும்பலையே மக்கள் சுற்றி அமர்ந்து கதறி அழுதவாறு இருந்தனர் .ஆனால் மக்கள் அந்த பகுதியை நடந்து போக எளிதாக அனுமதிக்க பட்டனர் .காவல் துறை இறுக்கமான முகத்துடன் ஆனால் யாருக்கும் இடையுறு இன்றி அமைதியாக மக்களை கட்டுபடுத்தினர் .இது நாம் பயிலவேண்டிய பண்பு .ஆனாலும் டெல்லி மக்கள் ஒரே மாதிரி குப்பை தொட்டிகளை திருப்பி வைத்து தங்கள் எதிர்ப்பை கட்டியதும் , அனைத்து மக்களும் ஒரே நாளில் அச்ச உணர்வில் இருந்து வெளிவந்ததும், போலீசார் காட்டிய கண்ணியமான கண்டிப்பும் இந்தியா எந்த அச்சுறுத்தலையும் உறுதியாக எதிர்கொள்ளும் வல்லமை உடையது என காட்டியது.ஜெய் ஹிந்து !

கறுப்பு சனியும் அடுத்த ஒரு கருத்துள்ள ஞாயிறும ------- ஏ. சுகுமாரன்




கறுப்பு சனியும் அடுத்த ஒரு கருத்துள்ள ஞாயிறும ------- ஏ. சுகுமாரன்




கருப்பு சனியின் கொடூரைதை சற்றே மறந்து ஞாயிறு அன்று குவிந்தனர் அதிசயம் ! ஆர் .கே புரம் தமிழ் சங்க வளாகத்தில் நிரம்பிவழிந்ததுஎதையும் எதிர்பார்க்காத தானே வந்து குவிந்த மக்கள் கூட்டம் !பெருமை எல்லாம் பேசவந்த அபுதுல் கலாம் அவர்களுக்கும் , வடக்குவாசல் இதழின் தமிழர் மத்தியில் உள்ள நெருக்கத்தையும் உறவையும் வெளிபடுத்தியது.!கவின் மிகு வடக்குவாசல் இலக்கிய சிறபிதழை தன் பொற்கரங்களால் வெளியிட்டு வாழ்த்துரை கலாம் அவர்களாலும் , கவிஞர் ராசன் அவர்களும் வழங்கப்பட பெற்றுக்கொளும் வாய்ப்பு பதிபசிரியர் அவர்களால் எனக்கும் கிட்டியது !வன்முறைக்கு எதிராக நல்ல சக்கதிகள் எல்லாம் ஒன்று சேரும் அவசியத்தை கலாம் அவர்கள் வலியிறுத்தி அனைவரையும் நாட்டின் முன்னேற்றதிர்க்காகவும் தனிமனித முன்னேற்றதிர்க்காகவும் ஒருகுரலில் உறுதி எடுக்க செய்தார் வடக்கு வாசல் இதழையும் , பென்னேஸ்வரனின் நல்லதிர்க்கான முயற்சியில் அனைவர் பங்களிப்பின் அவசியத்தையும் உணரும்படி வாழ்த்தி பேசினார் கவிஞர் ராஜன் அவர்கள் தன் அறிவார்த்த பேச்சால் அனைவரையும் கவர்ந்தார் .உச்ச நிதிமன்ற மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணமணி துருவி துருவி வடக்குவாசலில் தேடியும் குறையுன்றும் இல்லை கிருஷ்ணா என்றார் ..இருபது மாதமாய் இதமாய் இனிய கருத்துக்கள் பலவற்றை இளைய சமுதாயத்தினரின் முன்னேற்றம் காண எழுதிவந்த சன்னத் குமார் தன் பேச்சாலும் அனைவரையும் கவர்ந்தார் .மேதகு கலாம் அவகளின் பேச்சும் ,கவிஞர் ராஜன் அவர்களின் சிந்தனை சிதறல்களும் நீண்ட நாட்கள் வந்தவர் மனதை விட்டு அகலாது .பெருமை மிகு விருந்தினர் அதிகம் கொண்ட அவையில் இரண்டு மணி சென்றதே தெரியாமல் மக்கள் மயங்கினர் .நன்றிஉரை கூற வந்த திரு பென்னேஸ்வரனும் தன் மயக்கும் பேச்சால் ஒருவரையும் விடாமல் நன்றி தெரிவித்து தன் பண்பை உணர்த்தினர் .எல்லாம் சொல்லி இலக்கிய இதழை பற்றி சொல்லாமல் விட்டால் எப்படி ?அம்பது ரூபாயில் ஒரு அறுசுவைவிருந்து ! 15 அன்று தான் 86 வயது முடித்த கி.ரா வில் இருந்து அனைத்து மூத்த ,மக்களறிந்த படைபாளிகளின் படைப்பால் கமகமத்தது , கனமும் அதிகம் தான் .!முன்றண்டுகளை முடித்த வடக்கு வாசல் பென்னேஸ்வரன் பார்வையே தனிதினுசு , இலக்கிய பார்வை , நாடக மேடையாகவேஉலகை பார்க்கும் நவீன நாடக பிதாமகன் , இறைவன் மட்டும் லாகனை சற்றே தளர்திருந்தால் பல அற்புதங்களை இன்னும் நடத்தி காட்டி இருப்பார் .நல்லவைகளை மனம் விட்டு பாராட்டுவது தானே நலவைகள் வளரவழி ! எதுவும் இல்லாதவர்களை ஒரு நல்ல சொல்லவாவது சொல்ல சொல்லிதானே திருமூலர் கூறுகிறார் ! நல்லதே செய்வோம் !வாழ்க வளமுடன் !

Sunday, September 07, 2008

விலங்கு கடவுளர்

இந்தியாவில் கடவுளாக, புனிதமாக் கருத படும் வேறு சில் விலங்கு வடிவங்கள் .
ஐராவதம் --இந்திரனின் வாகனம் வெள்ளை யானை
எருமை எமனின் வாகனம்
காகம் சனி யின் வாகனம்
காளை சிவனின் வாகனம்
நாய பைரவர் வாகனம்
காமதேனு வளத்தின் வடிவம்
மயில் முருகரின் வாகனம்
கருடர் விஷ்ணுவின் வாகனம்
எலி விநாயகரின் வாகனம்
ஆடு அக்னியின் வாகனம்
அன்னம் சரஸ்வதியின் வாகனம்
சிங்கம் துர்காவின் வாகனம்
கிளி காமதேவனின் வாகனம்
இவை கடவுளுடன் சேர்த்தே வழிபட படும் , கடவுளர்களின் வாகனங்கள் .
சில கடவுளுக்கு விலங்குகளின் கொடியும் உண்டு .
சமுதாயத்தில் விலங்குகளுக்கும் சமதர்மம், சமநிலை உண்டு என்பதை உணர்தேவே விலங்குகளும் , விலங்குகளுக்காக சில விழாக்களும் நாம் கடை பிடித்தோம் .காலத்தின் விபரித்தால் , நாம் சில விலங்குகளை , பிராணிகளை ஒழித்து புறக்கணித்து வாழ்தோம் இன்று இயற்கையால் மனித இனம் புறகணிக்க பட்டு வருகிறது. இயற்கையின் சமநிலையை இழந்து விட்டோம் .

விநாயகர் வடிவத்தை பிற கிரகத்தில் இருந்து வந்த , முகத்தில் நீண்ட வாயு கவசம் மாட்டிய ,கவச உடை அணிந்த உருவம் என விவரித்து பல ஆண்டுகளுக்கு முன் ஒரு கட்டுரை படித்த நினைவு , "ஓம் ஷக்தி" இதழில் என நினைக்கிறேன் .
அன்புடன் ,ஏ. சுகுமாரன்

Wednesday, September 03, 2008

இன்று விநாயகர் சதுர்த்தி



இன்று விநாயகர் சதுர்த்தி !


மார்க்கெட்டில் முட்டிமோதும் அலை அலையாய் கூட்டம்


வருடத்துக்கு ஒரு முறையே கிடைக்கும்


விளாம்பழம் , பிரபம் பழம் , கள்ளா பழம் இன்னும்


நாவல் பழம் ,எருக்கம் பூ , கம்பு கதிர்கள் ,அருகம் புல்


என கவனமாய் ஒன்றையும் விட்டுவிடாமல் வாங்க துடிக்கும் மக்கள்


மண் பிள்ளையார் விதவிதமாய் காசுக்கு ஏற்றபடி காட்சி அளிக்கிறார்அவருக்கு வண்ண மிகு கொற்ற குடைகள்


வாங்கும் போதே மகிழ்ச்சி ! விழாவின் நோக்கம் விளங்குகிறது !




விநாயகர் நமது முழு முதற்கடவுள் ! அவர் இல்லாமல் ஒருபாடலும் ஆரம்பம் இல்லை ! அது இலக்கியமனலும , நாடகம் ஆனாலும் ,யாகம் ஆனாலும் , எந்த பூஜை ஆனாலும் ,முதல் வணக்கம் அவருக்கே !அவர் ஒன்றும் வாதாபியில் இருந்து இடையில் வந்த கடவுள் இல்லை நம் தமிழர் பழம் பெரும் வழிபாட்டில் அவருக்கு தான் முதலிடம் .உலக மொழிகள் அனைத்திற்கும் அடிப்படை ஒலியான அ, உ , ம என்ற முன்று ஒலிகளின் ஒன்றி நிற்கும் ஓம் என்ற ஆதார ஒலியே விநாயகர் என நமது சித்தர் கண்டு ,காணாபத்தியம் என்ற வழிபாட்டு முறை வழி வழியாய் வந்தது .சுமார் 3000 ஆண்டு களுக்கு முன் தோன்றிய , சமந்தரால் திருவாடு துறையில் 1300 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்க பட்ட திரு மந்திரத்தை எழுதிய சித்தருக்கெல்லாம் சித்தரான திருமூலர் தனது திருமந்திரத்தை
:"ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்ற்ற்ற்னை "


என்ற வணகதுடன் தொடங்குகிறார் . விநாயகர் என்ற வடிவம் நமது சித்தர்கள் ஓளி முறையில் அமைத்த வழிபாட்டு ஒருவமாகும் , இந்த காட்சி பொருளுக்கு ஒலியிலான வடிவம் தந்து அமைதிருபதே அவ்வையின் விநாயகர் அகவல் .இது ஒரு ஞான சாதனம் .


இந்த அகவல் நூலும் "சீதக் கள்பச் செந்தா மறைப்பூம்பாதச் சிலம்பு பல இசை பாட" என திரு வடி வணகதுடன் ஆரமிகிறார். மேலும் தொல்காப்பியம் இளம்பூரனதிலே"தன் தோள் நான்கின் ஒன்று கை மி கூ உம் களிறு வளர் பெரும் காடாயினும் ஓளி பெரிது என்ற மிக பழைய பாடலும் விநாயகர் வழிபாட்டின் பழமையையும் , தமிழர் வழக்கத்தையும் எடுத்து காட்டுகிறது .விநாயகர் சித்தர்களின் சீரிய படைப்பு ஓங்காரத்தின் வடிவம் பிரணவத்தின் வெளிப்ப்பாடு .எளிமைக்கும் எளிமையை சிறுவர்க்கும் மிகநெருங்கிய கடவுள் ,அவர் இன்றி பலருக்கு பரீட்சை வெற்றி பலன் அள்ளித்தது இல்லை தமிழகத்தில் விநாயகர் வழிபாடு எளிமைக்கும் எளிமையை அனைத்து மக்களுக்கும் உரிய எங்கும் நிறைத்த முலைக்கு முலை , சந்துக்கு சந்து அருள் பாலிக்க காத்திருக்கும் கடவுள் .இன்று வணங்கி மகிழ்வோம் , இன , மத வேறுபாடு களைய அவரையே தாள் பணிவோம் .அன்புடன் ஏ. சுகுமாரன் http://www.puduvaitamilsonline.com/amirthamintl@gmail.com

Tuesday, September 02, 2008

செய்திகள் செப் 2--

புதிய புதுவை அமைச்சர்கள் பட்டியலுக்கு சோனியா ஒப்புதல்நமச்சிவாயம் அமைச்சராகிறார் --ஆடம்பர கொண்டாட்டம் வேண்டாம்----வைத்திலிங்கம் வேண்டுகோள் --ஏ.சுகுமாரன்
புதுச்சேரி அமைச்சர்கள் பட்டியலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்படி நமச்சிவாயமும் அமைச்சராகிறார்.புதிய அமைச்சரவை 4-ந்தேதி பதவி ஏற்கும் என்று தெரிகிறதுபுதுவையில் புதிய அமைச்சரவை பதியேற்பு விழாவை முன்னிட்டு கட்-அவுட் மற்றும் பேனர்கள் வைத்து ஆரம்பரமாக கொண்டாட வேண்டாம், காமராசர் வழிநடக்கும் நமது காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் எங்களது பதவியேற்பு விழாவை முன்னிட்டு ஆரம்பரம் இல்லாமல் மிக எளிமையான முறையில் தங்களின் அன்பையும், ஆதரவையும் தருமாறு வேண்டுகிறேன்.என்று தொண்டர்களுக்கு வைத்திலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்



தமிழக புதிய வாக்காளர் 35 லட்சம் பேர்--மொத்த வாக்காளர் 4.29 கோடி நரேஷ் குப்தா பேட்டி --ஏ.சுகுமாரன்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது தமிழக வாக்காளர் இறுதிப்பட்டியல் செப்டம்பர் மாதத்துக்குள் வெளியிடப்படும். இதில், 4 கோடியே 29 லட்சம் பேர் இடம்பெறக்கூடும் என்று தெரிவித்தார்.தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், புதிதாக பெயர் சேர்ப்போர், தொகுதி மாறியோர் போன்றவர்கள் அது தொடர்பான திருத்தங்கள் செய்வதற்கான அவகாசம் அளிக்கப்பட்டது. இதில், எதிர்பாராத வகையில் மிக அதிக எண்ணிக்கையில், 35 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற பட்டியல் திருத்தத்தின்போது, 13 லட்சம் முதல் 15 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்தது குறிப்பிடத்தக்கது.இப்போது, தேர்தல் வருவதால் வாக்காளர்களிடம் ஓட்டு போட ஆர்வம் அதிகரித்திருக்கலாம். அதனால் நிறைய விண்ணப்பங்கள் வந்திருக்கலாம். இதுதவிர, அரசியல் கட்சிகள், மக்களை ஊக்கப்படுத்தியதும் காட்டியதும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தங்கள் தொடர்பான விண்ணப்பங்கள், சிறப்பு முகாம்கள், வாக்குச்சாவடி அதிகாரிகள், கல்லூரிகள் மற்றும் இன்டர்நெட் மூலமாக பெறப்பட்டன. இன்டர்நெட் வாயிலாக (ஆன்லைன்) 6,700 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் சென்னையில் அதிகபட்சமாக 2,433 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்றவை மேற்கொள்ளப்படும் அதேநேரத்தில் இறுதிப்பட்டியலில், முகவரி மாறியவர்கள், உயிரிழந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படும்.

தமிழகத்தில் 2008-ம் ஆண்டில் மக்கள்தொகை 6 கோடியே 60 லட்சமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிக்கு பிறகு, மேலே சொன்ன தொகையில் 65 சதவீதத்தினர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவார்கள் என்று கருதுகிறோம் (சுமார் 4 கோடியே 29 லட்சம் வாக்காளர்கள்). இந்த தொகையானது, தமிழக மக்கள்தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கையை சற்று ஏறக்குறைய ஒத்திருக்கக்கூடும்.இவ்வாறு நரேஷ் குப்தா தெரிவித்தார்.
அண்ணாவின் வாரிசுகளுக்கு நிதியுதவி!கருணாநிதி ரூ.10 லட்சம் வழங்கினார் --ஏ.சுகுமாரன்

அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் வாரிசுகள் மறைந்த சி.என்.ஏ. பரிமளம் மற்றும் சி.என்.ஏ. இளங்கோவன், சி.என்.ஏ.கவுதமன், சி.என்.ஏ.பாபு ஆகியோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று கடந்த 30-ந் தேதி நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.
முதல்-அமைச்சர் கருணாநிதி மறைந்த சி.என்.ஏ. பரிமளத்தின் மகன்கள் மலர்வண்ணன், சவுமியன், மகள் இளவரசி ஆகியோரிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். அதே போல் சி.என்.ஏ. இளங்கோவனுக்கும் முதல்-அமைச்சர் கருணாநிதி ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மறைந்த சி.என்.ஏ.பரிமளத்தின் மகன்களும், மகளும் மற்றும் சி.என்.ஏ. இளங்கோவன் ஆகியோர் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
பிகாரை வாட்டும் கடும் வெள்ளம் ! 20 லட்சம் பேர் தவிப்பு ! --ஏ.சுகுமாரன்
பீகார் மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்த பலத்த மழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.நேபாள நாட்டில் இருந்து பாயும் கோசி ஆற்றில் இருந்து 2 லட்சம் கன அடிக்கும் அதிகமான தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் பீகாரில் ஓடும் அந்த ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.பல ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. நூற்றுக் கணக்கான வீடுகள் இந்த வெள்ளத்தில் இடிந்து விட்டன. 20 லட்சம் பேர் வீடுகளை இழந்ததுடன், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறார்கள்.
மீட்பு பணிகளுக்காக 28 ஆயிரம் மாநில போலீசார் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்களுடன் ராணுவமும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. நேற்று வரை மொத்தம் 4 ஆயிரத்து 500 (37 கம்பெனி) ராணுவ வீரர்களை மத்திய அரசு மீட்புப் பணிக்காக பீகாருக்கு அனுப்பி வைத்துள்ளது.நேற்று வரை 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்
இனி ஏடிஎம் போனால் வருமான வரி கட்டலாம்,! --ஏ.சுகுமாரன்
வருமான வரி கட்ட இனிமேல் எந்த கஷ்டமும் தேவை இல்லை. நேராக வீடு அருகே இருக்கும் வங்கி ஏடிஎம்முக்கு சென்றால் போதும். உடனே கட்டிவிட்டு திரும்பலாம். மேலும் ஒரு நவீன தொழில்நுட்பத்தை வருமான வரித் துறை பயன்படுத்த உள்ளது. இதன் மூலம் ஒருவர் செலுத்திய வரித் தொகையும், கணக்கையும¢ சரி பார்த்து, வரித் தொகை ஏதேனும் திரும்பத் தர வேண்டுமா என விரைவாக கண்டறிய முடியும். கடந்த ஆண்டில் நேரடி வரி வசூல் ரூ.3.14 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டு ரூ.3.95 லட்சம் கோடி வசூலிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. --

Tuesday, August 26, 2008

தமிழ் செய்தி ஆக் 26

காங்கிரஸ் கூட்டணியில் விஜயகாந்துக்கு வாய்ப்பு ! ?: தங்கபாலு நம்பிக்கை !! ஏ.சுகுமாரன்
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசியபோது காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட மதச் சார்பற்ற கட்சிகள் சேரும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் அமைதியும், வளர்ச்சியும் நிலைக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம். தமிழகத்துக்கும் இது பொருந்தும். தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வலுப்பெறும். பாமக உள்ளிட்ட கட்சிகளிடையே தற்போதுள்ள கருத்துவேறுபாடுகள் விரைவில் நீங்கிவிடும். தேர்தல் நேரத்தில் தேமுதிக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளும் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இணைய வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், காமராஜரின் திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இடம் பெயர்ந்த இடதுசாரிகள்: மக்களைக் கரைசேர்க்கும் கப்பலாக காங்கிரஸ் உள்ளது. ஆனால், காங்கிரûஸ மூழ்கும் கப்பலாக தவறாக நினைத்த இடதுசாரிகள் கடலில் குதித்து விட்டனர். அவர்கள் மூழ்கிக் கொண்டிருப்பது அவர்களுக்கே தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியை தோல்வியுறச் செய்வதற்காகவே பாஜகவும், இடதுசாரிகளும் இணைந்து செயல்படுகின்றனர். எனினும், மதச்சார்பற்ற கட்சிகள் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து ஆதரிக்கின்றன. இடதுசாரிகள் தற்போது இடம் பெயர்ந்து சென்று விட்டனர். மேற்கு வங்கத்தில் பேரவைத் தேர்தல் கருதியே இடதுசாரிகளின் செயல்பாடு உள்ளது. இது வெறும் பாவனையே. 3-வது அணி கற்பனையே!: இடதுசாரிகள் உள்ளிட்ட 3-வது அணி என்பது வெறும் கற்பனையே. எப்போதுமே அந்த அணி சாதித்தது எதுவும் இல்லை. மீண்டும் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும். என்றார் தங்கபாலு

உஷார் ! செப்.15 முதல் ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் கிடையாது ! நேரம் காலை 6 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே - முகவர்கள் சங்கம் முடிவு: ஏ.சுகுமாரன்
சேலத்தில் திங்கள்கிழமை நடந்த தமிழ்நாடு பெட்ரோல் முகவர் சங்க மகாசபைக் கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.கண்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்கள் செயல்படாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக சென்னை போன்ற நகரங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகளவில் டீசலை கொள்முதல் செய்து வருகின்றன. தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக ரிலையன்ஸ், ஷெல், எஸ்ஸôர் போன்ற நிறுவனங்கள் தங்களது பெட்ரோல் விநியோகத்தை நிறுத்தி விட்டன. இதன் காரணமாகவும் அதன் வாடிக்கையாளர்கள் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த பெட்ரோல் நிலையத்துக்கு வரத்தொடங்கியதால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் நிறுவனங்கள் கடந்தாண்டு வழங்கிய அதே அளவையே நடப்பாண்டும் வழங்கி வருகின்றன. நுகர்வுக்கு ஏற்றவாறு பெட்ரோல், டீசலை அதிகரித்து வழங்க மறுத்து வறுகின்றன. இதன் காரணமாக பெட்ரோல் நிலைய முகவர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் விதத்தில் கேரளத்தில் உள்ளதுபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதுமுள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக வார நாள்களில் காலை 6 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பெட்ரோல் நிலையங்கள் செயல்படும். எண்ணெய் நிறுவனங்கள் போதிய அளவு டீசல், பெட்ரோல் ஆகியவற்றை வழங்காததால் தவிர்க்க முடியாத சூழலில் இம்முடிவை எடுத்துள்ளோம். என்றார்.
மறைமுகமாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த திட்டம் ! ஜெயலலிதா தகவல் ஏ.சுகுமாரன்
.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் பெட்ரோலிய பொருட்களின் விலைகளை மத்திய அரசு மறைமுகமாக உயர்த்துவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார் மேலும் கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கு மீண்டும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டீசலுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்க வேண்டியிருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக விவசாய உற்பத்தி, தொழில் வளம் என அனைத்து வளங்களும் குன்றிப் போயுள்ளன. மீனவர்கள் தங்கள் படகுகளில் மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து, எண்ணை நிறுவனங்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவிதமான பயனும் இல்லை.எண்ணை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தலைமைச் செயலாளர் "டீசல் தட்டுப்பாட்டிற்குக் காரணம் மின் பற்றாக்குறையே'' என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும், மின்சாரப் பற்றாக்குறை காரணமாக, தகவல் தொழில்நுட்பம் உட்பட, அனைத்துத் துறைகளைச் சார்ந்த நிறுவனங்களும் 24 மணி நேரமும் இயங்க டீசல் தேவைப்படுகிறது என்றும், இதன் விளைவாக டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் தலைமைச் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.சாதாரண டீசலுக்கு தட்டுப்பாட்டை உருவாக்கினால், பிரீமியம் டீசலை அதிகம் விற்கலாம் என்ற நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் புகார் கூறுகின்றனர். கச்சா எண்ணையின் விலை ஒரு பேரலுக்கு 35 டாலர் அளவுக்குக் குறைந்திருக்கும் இந்த வேளையில், இதுபோன்ற செயலில் மத்திய அரசு ஈடுபடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற முயற்சிகளில் எண்ணை நிறுவனங்கள் ஈடுபட்டால், இது மேலும் விலைவாசி உயர வழிவகுக்கும்.என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஒரிசாவில் பயங்கரம ! 2 பேர் எரித்துக் கொலை; பாதிரியாருக்கு பலத்த தீக்காயம்! ஏ.சுகுமாரன்
.ஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் ஜலஸ்பேட்டாவில் உள்ள ஆசிரமத்துக்குள் கடந்த சனிக்கிழமை இரவு, ஆயுதம் தாங்கிய மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் அங்கிருந்த விசுவ இந்து பரிஷத் தலைவர் சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இக்கொலையை கண்டித்து, விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பினர், வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், பதட்டம் மிகுந்த கந்தமால் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி கொலையை கண்டித்து, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் நேற்று 12 மணி நேர பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு பா.ஜனதாவும் ஆதரவு தெரிவித்தது. இதையொட்டி, ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. பர்கார் மாவட்டத்தில் புட்பாலி என்ற இடத்தில் கிறிஸ்தவ அமைப்பு நடத்தி வரும் அனாதை ஆசிரமத்துக்கு ஒரு மர்ம கும்பல் தீவைத்தது.
இதில் அங்கிருந்த ஒரு பெண், தீயில் கருகி பலியானார். ஒரு கிறிஸ்தவ பாதிரியார் பலத்த தீக்காயம் அடைந்தார். அவர் பர்காரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த 20 குழந்தைகள் உயிர் தப்பின. பலியான பெண்ணைப் பற்றிய அடையாளம் கண்டறியப்படவில்லை. அனாதை ஆசிரமத்தில் இருந்த மரச்சாமான்களையும் கும்பல் அடித்து நொறுக்கியது.
இதற்கிடையே, சுட்டுக் கொல்லப்பட்ட சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதியின் உடல், ஜலஸ்பேட்டா ஆசிரம பள்ளியில் இருந்து சாகபடாவில் உள்ள அவரது ஆசிரமத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. முன்னதாக, அவரது உடலுடன் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் நடந்து சென்றனர். அப்போது அவர்களில் பலர் வன்முறையில் ஈடுபட்டனர்.
வழியில் தென்பட்ட தேவாலயங்களுக்கு தீவைத்தனர். கிறிஸ்தவ பள்ளிகளையும், வீடுகளையும், கடைகளையும், போலீஸ் சோதனை சாவடிகளையும் அடித்து நொறுக்கினர். 12 தேவாலயங்களும், 40 வீடுகளும் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறையை தடுக்க முயன்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.பந்த்தையொட்டி, தலைநகர் புவனேஸ்வரத்தில் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பினர், முக்கிய சாலைகளில் டயர்களை எரித்து, போக்குவரத்தை தடை செய்தனர். இதனால் பஸ், டாக்சி, ஆட்டோக்கள் ஓடவில்லை. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. .. கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.

ரிலையன்ஸ் புதிய பிரிபெய்டு ஜாது 135 பேக் திட்டம் ! சிறிய நிறுவன உபயோகிப்பாளருக்கு லாபம் !
ஏ.சுகுமாரன்
சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், சிறு மற்றும் நடுத்தர நிறுவன செல்போன் வாடிக்கையாளர்களுக்காக பிசினஸ் ஜாது 135 பேக் என்ற பிரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனத்தின் தமிழகப் பிரிவு தலைமைச் செயல் அதிகாரி அஜய் அவஸ்தி நிருபர்களிடம் கூறியதாவது:
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக பிசினஸ் ஜாது 135 பேக் என்ற பிரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்கிறது.
மாதம் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம்வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்காக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் இணைந்து கொள்ள விரும்புவோர் மாதாமாதம் ரூ.135க்கு ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். 5 பேர் கொண்ட ஒரு நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் இதில் இணைந்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் அழைத்துக்கொள்ளும் அழைப்புகள் அனைத்தும் இலவசம். இதர செல்போன்கள் மற்றும் லேண்ட் லைன் போன்களுக்கு அழைப்பு விடுத்தால் ஒரு நிமிடத்திற்கு 49 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும்.
பிசினஸ் ஜாது 135 திட்ட வாடிக்கையாளர்கள் இதர ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு விடுக்கும் அழைப்புளும் இலவசம்தான். அதேபோல டாப் அப் ரீசார்ஜ் செய்யும் தொகை முழுவதையும் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பேசலாம். இத்திட்டம் சென்னை உட்பட தமிழக வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பொருந்தும்.
இத்திட்ட வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் கட்டணத்தில் 35 சதவீதம்வரை சேமிக்க முடியும்.
தற்போது தமிழகத்தில் 40 லட்சத்து 50 ஆயிரம் வாடிக்கையாளர்களை ரிலையன்ஸ் பெற்றுள்ளது. இதில் 92 சதவீதம்பேர் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள். தமிழகத்தில் 90 சதவீத கிராமங்களில் ரிலையன்ஸ் சேவை வழங்கப்படுகிறது.
தற்போது மாநிலம் முழுவதிலும் 1400 இடங்களில் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

Monday, August 25, 2008

செய்திகள் ஆக்ஸ் 25 மணி ௭.௪0 அம்

ஸ்ரீபுரம் பொற்கோயில் முதல் ஆண்டு நிறைவு விழா! கோலாகலமான ஆன்மிக ஊர்வலம் !! ஏ.சுகுமாரன்
ஸ்ரீபுரம் பொற்கோயிலின் முதலாம் ஆண்டு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக வேலூரில் நடந்த ஆன்மிக ஊர்வலத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். உலக மக்கள் அனைத்து வளங்களும் பெற்று அமைதியாக வாழ சிறப்பு யாகங்கள் காலை 8 முதல் மாலை 4 மணி வரை மண்டித் தெருவில் நடைபெற்றது. இதில் 50 வேத விற்பன்னர்கள் யாகம் நடத்தினர். மாலையில் பக்தர்கள் பேரணி: மாலை 4 மணிக்கு யாக சாலைக்கு ஸ்ரீசக்தி அம்மா வருகை தந்து அருளாசி வழங்கினார். பிறகு வேலூர் மண்டித் தெருவில் இருந்து யாக கலசங்களுடன் ஆன்மிக ஊர்வலம் புறப்பட்டது.
ஊர்வலத்தில் இடம்பெற்ற மயில் வாகனத்தில் ஸ்ரீசக்தி அம்மா அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
9 யானைகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலத்தின் முன்பு செல்ல, கலசம், முளைப்பாரி, தீச்சட்டிகள் ஏந்திய பெண்கள் பின்தொடர்ந்தனர். அலங்கரிக்கப்பட்ட 9 குதிரைகள், 9 ஒட்டகங்கள், கரகாட்டம், மயிலாட்டம், கொக்கலியாட்டம், சிலம்பம், பறையிசை ஆகியன இடம்பெற்றன. பேண்டு வாத்தியத்துக்கு ஏற்ப நடனமாடியபடி குதிரை ஒன்று ஊர்வலத்தில் பங்கேற்றது. சிங்கப்பூரில் பிரபலமான சிங்க நடனம் ஊர்வலத்தில் இடம்பெற்றது. நமது நாட்டின் கலை, கலாசாரம் பண்பாட்டை விளக்கும் வகையில் பரதநாட்டியம் (தமிழ்நாடு), குச்சுப்புடி (ஆந்திரம்), யட்சகானம் (கர்நாடகம்), கதகளி (கேரளம்), கதக் (உ.பி.), ஒடிசி (ஒரிசா), மணிப்புரி (மணிப்பூர்), பாங்கரா (பஞ்சாப்) உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் நடனமாடிச் சென்றனர். கிராமிய கலைகளை சிறப்பிக்கும் வகையில் பம்பை, உடுக்கை, சிலம்பு, சிலம்பாட்டம், கரகாட்டம், கோலாட்டம், பொய்க்கால் ஆட்டம், காவடி, நாகசுர கலைஞர்கள், திருமுறை பாராயணமும், வேதபாராயணமும் ஊர்வலத்தில் இடம்பெற்றன. தசாவதாரம், அஷ்டலட்சுமி, மும்மூர்த்திகள், அன்னை நாராயணி ஆகிய திருஉருவங்களின் அலங்காரத்தில் ஸ்ரீநாராயணி வித்யாலயா பள்ளிக் குழந்தைகள் அலங்கார வாகனத்தில் வந்தனர். சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஊர்வலம் மண்டித் தெருவில் இருந்து பழைய பஸ்நிலையம், ஆபீஸர்ஸ் லைன் வழியாக ஸ்ரீபுரத்தை அடைந்தது. நிறைவாக அன்னை ஸ்ரீலட்சுமி நாராயணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சாலையில் இருபுறமும் பக்தர்கள் திரளானோர் காத்திருந்து ஆன்மிக ஊர்வலத்தை கண்டு களித்தனர்.
"காங்கிரஸ்சா மூழ்கிய கப்பல் ? தேர்தல் முடிவில் தெரியும்: ஜி.கே. வாசன் ஆவேசம்-- ஏ.சுகுமாரன்
"காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்; அதில் திமுக பயணம் செய்கிறது' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் என். வரதராஜன் தெரிவித்தக் கருத்துக்கு ஜி.கே. வாசன் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டிஅளித்தார்.
மூழ்கும் கப்பல் என காங்கிரûஸ குறிப்பிட்டுள்ள மார்க்சிஸ்ட் மூழ்கி, கவிழ்ந்த கப்பல். நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்ததன் மூலம், மக்களின் நம்பிக்கையை இழந்த கட்சிகளாக இடதுசாரிக் கட்சிகள் செயல்படுகின்றன.
ஆட்சியில் பங்கு... திமுக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும் என தொண்டர்களின் கோஷம் தற்போது அதிகரித்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி எப்போதுமே தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. தற்போது தீவிரமாக எழுந்துள்ள இந்த கோஷங்கள் குறித்தும் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு எடுத்துக் கூறியுள்ளோம். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி என்பதே காங்கிரஸின் லட்சியம்.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளன.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 2007-2008-ம் ஆண்டில் 3.4 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளன.
ரூ.71 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பாரத் நிர்மான் திட்டத்தின் கீழ் 49,250 வீடுகளும், கடந்த 4 ஆண்டுகளில் 2.4 லட்சம் பள்ளிகளும் கட்டப்பட்டுள்ளன. மத்திய அரசு சார்பில் 8 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் தேர்தலில் இது வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார்.
மக்களவைத் தேர்தல் வரும்போது, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை ஆதரிக்கும் ஒத்தக் கருத்துள்ள கட்சிகள் எதுவாக இருந்தாலும், காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும். மதவாத சக்திகளுக்கு காங்கிரஸ் ஒருபோதும் இடம் அளிக்காது.
நாங்கள்தான் முதல் அணி; நாங்கள்தான் வெல்லும் அணி என்றார் ஜி.கே. வாசன்.
புதுவையில் இன்று பலபரிசை ! பலத்த போலீஸ் பாதுகாப்பு !! மேலிடப் பார்வையாளர்கள் ஆளுநரை சந்திகிறார்கள் --ஏ.சுகுமாரன்
காங்கிரஸ் கட்சியின் மேலிடப்பார்வையாளர்கள் வயலார் ரவி, அருண்குமார், கே.பி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் புதுச்சேரிக்கு திங்கள்கிழமை வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து 3 பேரும் ஒன்றாக கார் மூலம் புதுச்சேரி வருகின்றனர். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு நேரடியாகச் செல்கின்றனர். அங்கு துணைநிலை ஆளுநர் கோவிந்த்சிங் குர்ஜாரை சந்தித்துப் பேசுகின்றனர். அதன் பிறகு காலாப்பட்டு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடக்கும் காங்கிரஸ் எம்.எல்..ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் வி.நாராயணசாமியும், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியனும் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு: காங்கிரஸ் எம்..எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் ஹோட்டலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படையைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட போலீஸôர் பல்வேறு இடங்களிலும் கண்காணிப்புப் பணியில் இறக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி முழுவதும் 7 போலீஸ் கண்காணிப்பாளர்கள் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக முதுநிலை போலீஸ் கண்காணிப்பாளர் (சட்டம்-ஒழுங்கு) அகர்வால் தலைமையில் நடந்தக் கூட்டத்தில் இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன.
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. மீண்டும் சேரும் ! ப.சிதம்பரம் நம்பிக்கை !!--ஏ.சுகுமாரன்
மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் முதல்-அமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடம் நீடித்தது. கருணாநிதியை சந்தித்து விட்டு வெளியே வந்த மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், நிருபர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் பேசினேன். காட்டுப்பள்ளியில் எல் அண்ட் டி நிறுவனம் கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகம் அமைப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அந்த திட்டத்தில் இன்னும் சில முடிவுகள் எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதை தீர்ப்பதற்காக எல் அண்ட் டி நிறுவனத்தினரும் முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து விவாதித்தனர். நானும் அதைப்பற்றி பேசினேன்.
இது பற்றி செப்டம்பர் 15-ந் தேதிக்குள் முடிவுகள் எடுக்கப்பட்டு பணிகள் தொடங்க இருக்கிறது. இந்த திட்டம் 4 ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்த இருக்கிறது. இந்த திட்டத்தால் 12 முதல் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
பணிகள் தொடங்குவதற்கான ஒப்பந்தம் செப்டம்பர் 8-ந் தேதி முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தாக இருக்கிறது.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் கடன் பெறுவதற்கு உலக வங்கியிடம் மனு கொடுத்து இருக்கிறோம். இது சம்பந்தமாகவும் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் பேசினேன்.
சிவங்கையில் வாசனை பொருள் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 77 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கி கொடுத்துள்ளது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தேன். இந்த பணிகள் 18 மாதத்தில் முடிவடையும். அதன் பின்னர் இந்த பூங்காவை முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைப்பார்.
சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு இடம் பார்க்கப்பட்டுள்ளது. தேர்வு செய்த இடம் உயர் கல்வித்துறை வசம் இருப்பதால், அதை சுகாதாரத்துறைக்கு மாற்றுவதற்கு முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிதி மந்திரி ப.சிதம்பரத்திடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:-காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. தொடர்கிறதா?
பதில்:- இன்றைக்கும் மத்திய அரசியலில் பா.ம.க. அங்கம் வகித்துக்கொண்டு தான் இருக்கிறது. தொடர்ந்து ஆதரவும் அளித்து வருகிறது. இடையில் தமிழக அரசியலில் ஏற்பட்ட வேறுபாடுகளால் அவர்கள் விலகி இருப்பது போல ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்கள் ஆதரவு தர மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. நாளைக்கே அவர்கள் தமிழகத்தில், ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் தொடர கூடிய வாய்ப்பு உருவகலாம்.
கேள்வி:-கம்ïனிஸ்டுகள் தமிழகத்தில் 3-வது அணி அமையும் என்று கூறுகிறார்களே?
பதில்:-அவர்கள் சொல்வதை பார்த்தால் 3-வது அணியல்ல. 5-வது அணியே வரும்.
சிறு பிள்ளைதனமானது
கேள்வி:-காங்கிரஸ் மூழ்கும் கப்பல் என்று கம்ïனிஸ்டுகள் விமர்சனம் செய்து வருகிறதே?
பதில்:-கடந்த 50 ஆண்டுகளாக இதை பலரும் சொல்லி வருகிறார்கள். கம்ïனிஸ்டுகள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. நாட்டிற்கு சங்கடம் வரும்போதெல்லாம், நாடு என்ற கப்பலை செலுத்தும் மாலுமியாகத் தான் காங்கிரஸ் இருந்திருக்கிறது. இதை புரிந்துகொள்ளாமல் கம்ïனிஸ்டுகள் பேசுவது சிறுபிள்ளைதனமானது.இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
தி.மு.க. வின் 2 ஆண்டு ஆட்சியில் ௨,34 ,000 பேருக்கு அரசுப் பணி.ஸ்டாலின் பெருமிதம் --ஏ.சுகுமாரன்
சென்னை மாநகராட்சியில், பணியின்போது இறந்த 240 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியும், 15 வருடங்களாக விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய 229 டிரைவர்களுக்கு கைக்கடிகாரங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியும் சென்னையில் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பயனாளிகள் அனைவருக்கும் பணி நியமன ஆணை மற்றும் பரிசுகளை வழங்கினார்.அபோது ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழகத்தில் 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருந்தது. அப்போது சென்னை மாநகராட்சி மேயராக நான் இருந்தபோது, கருணை அடிப்படையில் வேலை என்பது உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 412 பேர் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.ஆனால், அதன் பின்னர் 2-வது முறையாக நான் மேயராக பொறுப்பேற்றபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது நடந்த பல கொடுமைகள், அவலநிலை உங்களுக்கே தெரியும். அப்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் கருணை அடிப்படை வேலைக்கு தடை, பணி நியமனத்திற்கு தடை போன்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
2006-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கை, புத்தகமாகவே மக்களிடம் வழங்கப்பட்டது. 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, விவசாயிகளின் கூட்டுறவு கடன் ரத்து, சத்துணவில் 2 முட்டை, டி.வி. இல்லாதவர்களுக்கு இலவச கலர் டி.வி., கருணை அடிப்படையிலான வேலை மீண்டும் கொண்டு வரப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உறுதிமொழியாகவே கூறப்பட்டது.
அது இன்று நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சி காலத்தில் புதிய வேலைகள் கூட வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து போராட்டம் நடத்தக்கூட முடியவில்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். போராட்டம் அறிவித்தால் இரவு நேரத்திலேயே கைது செய்து சிறையில் அடைத்தனர். சிலர் அதிர்ச்சியில் தற்கொலை கூட செய்துகொண்டனர்.முதல்-அமைச்சராக கருணாநிதி பொறுப்பேற்ற உடன் வேலை நியமன தடை சட்டம் நீக்கப்பட்டது. 18-3-2008 அன்று சென்னை தியாகராய அரங்கில் நடந்த விழாவில் 500 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று 240 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் மட்டும் இன்றி, உள்ளாட்சித்துறையிலும் 307 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, 1098 பேர் பெற்றுள்ளனர். இதன் மூலம் 1098 குடும்பங்களில் விளக்கேற்றப்பட்டுள்ளது. கால முறை ஊதியம் மூலம் 12 ஆயிரத்து 618 பேர் பயன் பெற்றுள்ளனர்.
விரைவில் நிரப்பப்படும் கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 276 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசு வேலைவாய்ப்பு எங்கே? என்று கேட்டவர்களுக்காகத்தான் இந்த பதில்.ஏனைய காலி இடங்களையும் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையை போல் எந்த ஒரு பெரிய மாநகராட்சியிலும் மேம்பாலங்கள் கட்டிய வரலாறு கிடையாது. 9 மேம்பாலங்களை மாநகராட்சியே குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடித்துள்ளது. மேலும், மேம்பாலங்கள் கட்டுவதற்கான தொகையில் ரூ.30 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சிரஞ்சீவியின் புதிய கட்சி நாளை ஆரம்பம் ! திருப்பதியில் தொண்டர்கள் 8 லட்சம் பேர் குவிகிறார்கள் !!----ஏ.சுகுமாரன்



தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் சிரஞ்சீவி, புதிய கட்சி தொடங்கி அரசியலில் இறங்குகிறார் நடிகர் சிரஞ்சீவியின் புதிய கட்சி வரும் செவ்வாய்க்கிழமை உதயமாகிறது. திருப்பதியில் நடைபெறும் பிரமாண்ட தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக விசேஷ ரெயில்கள், பஸ்களில் தொண்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். கட்சியின் தொடக்க விழாவை நடத்துவதற்காக, திருப்பதியின் புறநகர் பகுதியான அவிலாலா கிராமம் ராஜீவ்காந்தி நகரில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 122 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தில் மாநாடு போல் நடைபெறும் இந்த கூட்டத்தில் சிரஞ்சீவியின் ரசிகர்கள் 5 முதல் 8 லட்சம் பேர் வரை கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்தும் சிரஞ்சீவியின் ரசிகர்கள் விழாவில் பங்கேற்கிறார்கள்.ரசிகர்களின் வசதிக்காக இன்று முதல் 17 விசேஷ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஐதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா, குண்டூர், நெல்லூர், காக்கிநாடா, மசூலிப்பட்டினம் உள்பட ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த விசேஷ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
.இதுதவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சுமார் 3 ஆயிரத்து 500 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.விழாவில் பங்கேற்க வரும் ரசிகர்கள், திருப்பதியில் உள்ள தங்கும் விடுதிகளை முன்கூட்டியே பதிவு செய்து கொண்டுள்ளனர். . திருப்பதியில் உள்ள திருமண மண்டபங்கள் சிரஞ்சீவி ரசிகர் மன்ற நிர்வாகிகளால் முன்பதிவு செய்யப்பட்டு, அவற்றில் நேற்று முதல் ரசிகர்கள் தங்கியுள்ளனர்.தேவஸ்தான தங்கும் விடுதிகளிலும் அறைகள் அனைத்தும் நிரம்பி விட்டன.
.
நடிகர் சிரஞ்சீவியின் புதிய கட்சி தொடக்க விழாவையொட்டி, திருப்பதி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நகர் முழுவதும் பலவண்ண மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. திரும்பும் திசையெல்லாம் பலவித கோணங்களில் சிரஞ்சீவியின் பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. நகர் முழுவதும் நூற்றுக்கணக்கான வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
ரசிகர்களுக்கு இன்றும், நாளையும் லட்சக்கணக்கான இலவச உணவு பொட்டலங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.சிரஞ்சீவி புதிய கட்சி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருவதால், போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
உயர் அதிகாரிகள் தலைமையில் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று, சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
புதுவை பகுதியை சேர்த்த கேப்டன் முஸ்தபாவின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் ! ஜம்முவில் விபத்தில் பலியானர !!----ஏ.சுகுமாரன்

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து கிஸ்த்வார் நோக்கி சென்ற ராணுவ ஜீப் படோடே-தாத்திரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ரிக்கி நுல்லா என்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் இருந்த பள்ளத்தில் ஜிப் கவிழ்ந்தது இந்த விபத்தில் ராணுவ மேஜர் ஏ.கே.ஜெயின், கேப்டன்கள் முஸ்தபா, ஹன்ஸ்ராஜ், மற்றும் ராணுவ வீரர்கள் மனோஜ்குமார், மைத்தி ஆகியோர் உயிரிழந்தனர். இதில் கேப்டன் முஸ்தபா புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான வசந்தபுரத்தை சேர்ந்தவர்.அவரது உடல் நேற்று காலை வசந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. சென்னை ரெஜிமண்ட் பிரிவினை சேர்ந்த மேஜர் ஜெனரல் சுசில் சவுதாகர் தலைமையில் 26பேர் இந்த உடலை எடுத்து வந்தனர்.வீட்டிலிருந்து அவரது உடல் தேசியக்கொடி போர்த்தப்பட்டு உப்பளத்திலுள்ள முஸ்லீம்கள் கல்லறைக்கு எடுத்துவரப்பட்டது. அங்கு ராணுவ வீரர்களின் மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க முஸ்தபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பெய்ஜிங் ஒலிம்பிக் நிறைவடைதது ! கோலாகலமான நிறைவு விழா !1---ஏ.சுகுமாரன்
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் உலக விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு பெய்ஜிங் நகரில் நடந்தன.பெய்ஜிங்: கடந்த 16 நாட்களாக உலகின் கவனத்தை தன் பக்கம் இழுத்து வைத்திருந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவடைந்தன. இதையடுத்து கோலாகலமான நிறைவு விழா நிகழ்ச்சிகள் பெய்ஜிங்கில் நடந்தன.
204 நாடுகளைச் சேர்ந்த 10,500 விளையாட்டு வீர வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.
நிறைவு விழாவின்போது மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியும் இடம் பெற்றது. நிறைவு விழாவின்போது இந்திய கொடியை ஏந்தி சென்றார் குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த விஜேந்தர் குமார்.

Saturday, August 23, 2008

செய்திகள் ஆக்ஸ் 23 மணி 7.45AM

ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலம் ! இந்தியா இதுவரை 3 பதக்கங்களை பெற்று சாதனை ! !-----ஏ.சுகுமாரன்
பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்குமார் வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம் 3-வது பதக்கத்தை கைப்பற்றிய இந்தியா புதிய வரலாறு படைத்திருக்கிறது.மேலும் ஒலிம்பிக் குத்துச்சண்டை பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை விஜேந்தர் பெற்றார்சீனத் தலைநகர் பீஜிங்கில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டி நாளையுடன் நிறைவடைகிறது.முந்தைய வரலாற்றுடன் ஒப்பிடும் போது இந்த ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்கு தித்திப்பு நிறைந்தது என்று சொல்ல வேண்டும். துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கமும், மல்யுத்த வீரர் சுஷில்குமார் வெண்கல பதக்கமும் வென்று நமது நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்.112 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில், இந்தியா ஒரு ஒலிம்பிக்கில் 3 பதக்கங்கள் வெல்வது இதுவே முதல் தடவையாகும்.
"
"திமுக அணியில் நீடிப்பதில்லை என்று மார்க்சிஸ்ட்கள் ஏற்கெனவே திட்டமிட்டு விட்டார்கள்; சுருண்டிருந்த சூழ்ச்சித்திரை விரிகிறது, " கருணாநிதி கருத்து !-----ஏ.சுகுமாரன்
-
மார்க்சிஸ்டுகள் குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அவர் பாணி கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கேள்வி:- "கர்நாடகம், இமாசலப்பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் கூட்டணியின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் காங்கிரஸ் கட்சி மண்ணைக் கவ்வியுள்ளது என்பது வரலாறு; அதுபோல வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன், தி.மு.க. கூட்டணி தொடருமானால் அதே மண்ணைக் கவ்வும் நிலை தான் அவர்களுக்கும் ஏற்படும். காங்கிரஸ் என்கிற மூழ்கும் கப்பலில் தி.மு.க. பயணம் செய்ய விரும்பினால், அது அவர்களின் முடிவு'' என்று மார்க்சிஸ்ட் தலைவர் என்.வரதராசன் அரசியல் ஆரூடம் கணித்துள்ளாரே?
பதில்:- காங்கிரஸ் என்பது மூழ்கும் கப்பல் என்பது தெரிந்த பிறகும் - அணு ஒப்பந்தம் நிறைவடையும் வரையில் அந்த மூழ்கும் (?) கப்பலைவிட்டு இறங்காமல் இருப்பதற்காக எத்தனை முறை டெல்லியிலே காங்கிரஸ் தலைவர்களுடன் கம்ïனிஸ்டு உயர்மட்டத் தலைவர்கள் "சம்பாஷணை'' நடத்தினார்கள் என்பதும்; எத்தனை முறை சென்னைக்கு "விஜயம்'' செய்தார்கள் என்பதும்; நாடும், ஏடும் நன்கு அறிந்த ரகசியங்களாயிற்றே!
அப்போதெல்லாம் மாநிலங்கள் சிலவற்றில் காங்கிரஸ் தோற்றது இவர்கள் கவனத்துக்கு வரவில்லையா? சில மாநிலங்களில் காங்கிரஸ் தோற்றது தான், மார்க்சிஸ்ட்டுகள் விலகுவதற்கு உண்மையான காரணமா? அணு ஒப்பந்தம் என்று கூறியதெல்லாம் அதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு காரணமா?
அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான ஆற்காடு வீராசாமியின் கம்ïனிஸ்டு பற்றிய பேச்சுக்கு நான் மறுப்பு தெரிவித்து விளக்க அறிக்கை வெளியிட்ட பிறகும்; "காங்கிரஸ் கப்பலுடன் சேர்ந்து தி.மு.க. மூழ்கிவிடப் போகிறது'' என்று தோழர் வரதராசனைப் போன்றவர்கள்; "ஆரூடம்'' கணிப்பதைப் பார்க்கும்போது; அவர்கள் தி.மு.க. தோழமை அணியில் இருப்பதில்லையென்று ஏற்கனவே திட்டமிட்டுவிட்டார்கள் என்பதும்; அதனால்தான் ஒரு மாத காலத்துக்கு முந்தியே அவர்கள் ஏடுகளிலும், மேடைகளிலும் தி.மு.க. எதிர்ப்புப் பிரசாரத்தை மெல்ல மெல்லத் தொடங்கி விட்டார்கள் என்பதும் தெளிவாகிறது!
எது, எப்படியிருப்பினும் காங்கிரஸ் கப்பலில் ஏறி தி.மு.க. மூழ்கிவிடும் என்ற வரதராசனின் ஆரூடத்தை; என்னைப் பொறுத்தமட்டில் "அருளாசி''யாகவே கருதிக் கொள்கிறேன்.
எப்படியோ சுருண்டு கிடந்த "சூழ்ச்சித்திரை'' விரிந்து விட்டதைக் கண்ட பிறகாவது "விழிப்போடிருப்போம்'' என்று பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன்.கேள்வி:- 1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன் பிறகு 1999-ல் அதே பா.ஜ.க.வுடன் இணைந்து மத்திய அரசில் இணைந்து ஆட்சி நடத்தியது தி.மு.க. என்று மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சித் தலைவர் ஒருவர் சொல்லியிருக்கிறாரே; பா.ஜ.க.வுடன் மார்க்சிஸ்ட் கட்சி எந்த காலத்திலும், எந்த மாநிலத்திலும் உறவு கொண்டது உண்டா இல்லையா?
பதில்:- இந்த கேள்விக்கு இப்போது நான் நேரடியாகப் பதில் அளிப்பதைவிட, 9.3.2000 அன்று சட்டப் பேரவையில் கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றியபோது, நான் பேசிய ஒரு குறிப்பிட்ட பகுதியை இங்கே விளக்கினால், அதுவே இந்த கேள்விக்கு பொருத்தமான பதிலாக அமையுமென்று கருதுகிறேன்.
"1967-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் தேர்தல் முடிவுக்கு பிறகு பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மூன்று மாநிலங்களிலும் அகாலி தளம், பாரதீய கிராந்தி தளம், ஜனசங்கம் அடங்கிய கூட்டணி அரசில் இந்திய கம்ïனிஸ்டு கட்சி அங்கம் வகித்தது. ஆர்.எஸ்.எஸ். கட்சியினுடைய நிழல் என்று சொல்லப்படுகின்ற ஜனசங்கம், பாரதீய கிரந்தி தளம், அகாலி தளம் ஆகிய இந்த கட்சிகள் எல்லாம் பங்கு பெற்ற அரசில் சி.பி.ஐ. கட்சி அங்கம் வகித்தது. மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி அந்த அணியிலே பங்கு பெற மறுத்துவிட்டது. ஆனால், அந்த அரசுகளுக்கு நிபந்தனையோடு கூடிய ஆதரவை அளிக்க மார்க்சிஸ்ட் கட்சி ஒப்புக் கொண்டது.
கே.சுப்பராயன்:- முதல்-அமைச்சர் சொல்வது உண்மை தான். ஆனால் இந்திய கம்ïனிஸ்டு கட்சியினுடைய ஒரு மாநிலக் குழு தீர்மானித்து, அப்படி பங்கு பெற்றது தவறு என்று மத்திய தலைமை சுட்டிக்காட்டியிருக்கிறது. எனவே, அதை இந்திய கம்ïனிஸ்டு கட்சியினுடைய அதிகாரபூர்வமான கருத்தாக எடுத்துக் கொள்ள இயலாது.
கருணாநிதி:- நான் அந்த அரசில் அங்கம் வகித்தார்கள் என்று தான் சொன்னேன். அது மாநிலக் குழுவா, மத்தியக் குழுவா என்பதெல்லாம் அல்ல. அப்படிப்பட்ட அரசில் ஜனசங்கம் இருந்த அரசில், சி.பி.ஐ. அங்கம் வகித்தது என்பது தான். பிறகு, 1977-ல் நடந்த தேர்தலில் மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையிலே ஜனதா அரசு அமைந்தது. ஜனதாவிலே இடம் பெற்ற கட்சிகளில் ஒன்று ஜனசங்கம். அந்த அரசில் வாஜ்பாய், அத்வானி, நானாஜி தேஷ்முக் ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள். மார்க்சிஸ்ட் கட்சி வெளியே இருந்து அரசுக்கு ஆதரவு கொடுத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
1989-90-ல் வி.பி.சிங் தலைமையிலே மத்தியில் ஆட்சி. அப்போது சி.பி.எம்., பா.ஜ.க., இரண்டுமே வெளியே இருந்து வி.பி.சிங் ஆட்சியை ஆதரித்தார்கள்'' என்று சட்டப் பேரவையில் அப்போதே நான் பேசியிருக்கிறேன்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
தீயவை அகன்று, நன்மை செழித்து அனைவரும் ஆனந்தவாழ்வு வாழ வேண்டும் --ஜெயலலிதா கிருஷ்ண ஜெயந்திவாழ்த்து செய்தி !-----ஏ.சுகுமாரன்

அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள கிருஷ்ண ஜெயந்திவாழ்த்து வாழ்த்து செய்தியில் ஆனந்த வாழ்வு
கோகுலத்து கோமகனாம் கண்ணன் அவதரித்த நன்னாளான கிருஷ்ண ஜெயந்தி திருநாளை ஆர்வத்தோடும், மகிழ்வோடும் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனம், மொழி, மதம் மற்றும் சாதியற்ற பாதையின் மூலம் பாமர மக்களுக்கு வாழ்க்கை முறையை வகுத்துக் கொடுத்து, துன்பத்தில் இன்பம் காண வைக்கும் ஞானரசமாம் பகவத் கீதையை இந்த உலகத்திற்கு உபதேசித்தவர் பகவான் கிருஷ்ணர்.
கிருஷ்ணர் அவதரித்த இந்த நன்னாளில், மண்ணைத் தின்ற வாயில் விண்ணை காண்பித்த கண்ணனின் திருவருளால், தீயவை அகன்று நன்மை செழித்து அனைவரும் ஆனந்த வாழ்வு வாழ வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் தி.மு.க. இளைஞரணி பேரணி : 50 ஆயிரம் பேர் பேரணி! புதுவையில் வரவேற்பு ! !-----ஏ.சுகுமாரன்
விழுப்புரம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் அண்ணா நூற்றாண்டையொட்டியும், தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நேற்று மாலை நடை பெற்றது. 50 ஆயிரம் பேர் கலந்து கொண்ட தி.மு.க. இளைஞரணி பேரணி நடைபெற்றது. அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி மேடையில் அமர்ந்து பேரணியை பார்வையிட்டார்.மாலை 5 மணியளவில் விழுப்புரம் கே.கே.ரோடு அண்ணா நகர் அருகே, தி.மு.க. மாவட்ட மு.க.ஸ்டாலின் நற்பணி மன்றத்தலைவர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். மாலை 5 மணிக்கு புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு 7.30 மணிக்கு முடிவடைந்தது. பேரணி புறப்பட்டது முதல் முடிவடையும் வரை இளைஞரணியினரை பார்த்து மகிழ்ச்சியுடன் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையசைத்த படி இருந்தார்மு.க.ஸ்டாலினுடன் மத்திய மந்திரி வேங்கடபதி, அமைச்சர்கள் பொன்முடி, வேலு ஆகியோரும் மேடையில் அமர்ந்தபடி இளைஞரணி பேரணியை பார்வையிட்டனர்.
புதுவையில் வரவேற்பு !
விழுப்புரம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. துணைபொதுச்செயலாளரும், அமைச்சருமான மு.க. ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்தார்.புதுச்சேரி மாநில எல்லை பகுதியான கனகசெட்டிகுளத்திற்கு வந்த மு.க.ஸ்டாலினுக்கு புதுச்சேரி மாநில தி.மு.க. சார்பில் மாநில அமைப்பாளர் ஜானகிராமன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதில் சட்டசபை எதிர்கட்சி தலைவர் நாஜிம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி. சிவக்குமார், சிவா, ராஜாராமன், டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன், நந்தா. சரவணன், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் அனிபால்கென்னடி, வில்லியனூர் கொம்ïன் பஞ்சாயத்து தலைவர் நடராஜன், துணை தலைவர் ஏ.கே. குமார் , மற்றும் நிர்வாகிகள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுவையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம் !-----ஏ.சுகுமாரன்
புதுவையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர்களை இடம் மாற்றி போலீஸ் டி.ஜி.பி. கான் உத்தரவிட்டு உள்ளார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு புறக்காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பால்ராஜ் சிக்மா செக்ïரிட்டி பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஏனாம் தாரிகல்தப்பா புறக்காவல் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் சிக்மா நுண்ணறிவு பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதே போல் காரைக்கால் அம்பகரத்தூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் புதுச்சேரி ஆயுதப்படை பிரிவிற்கு மாற்றப்பட்டார். மங்கலம் புறக்காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தமிழரசன் சிக்மா செக்ïரிட்டிக்கு மாற்றப்பட்டார். மாகி ஸ்பெஷல் பிராஞ்ச் பிரிவில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் வல்சராஜ், பள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
சிக்மா செக்ïரிட்டி பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த விஜயன், பந்தகல் புறக்காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். கவர்னர் மாளிகையில் பணியாற்றி வந்த லட்சுமணன் ஏனாம் தாரிகல்தப்பா புறக்காவல்நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். புதுச்சேரி போலீஸ் பயிற்சி பள்ளியில் பணியாற்றி வரும் துரைராஜ், அம்பகரத்தூர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த முத்துசாமி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பு புறக்காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். கவர்னர் மாளிகையில் பணியாற்றி வரும் ராஜ்மனோகர், கோர்க்காடு புறக்காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சட்டசபையில் பணியாற்றி வரும் தயாளன் மங்கலம் புறக்காவல் நிலையத்திற்கும், முதலியார்பேட்டையில் பணியாற்றி வரும் முருகையன் சோலைநகர் புறக்காவல்நிலையத்திற்கும் மாற்றப்பட்டனர்.இந்த உத்தரவை டி.ஜி.பி. கான் வியாழன் இரவு பிறப்பித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் வர்த்தகம் ரூ.37,800 கோடி உயரும்--அசோசெம் மதிப்பீடு !-----ஏ.சுகுமாரன்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்படும் பரஸ்பர வர்த்தகத்தின் மதிப்பு அடுத்த சில ஆண்டுகளில் சுமார் ரூ.37,800 கோடிஉயரும் என அசோசெம் அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது. தற்போது இவ்விரு நாடுகளுக்கு மிடையே மேற்கொள்ளப்படும் வர்த்தகத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.8,400 கோடிஉள்ளது.வங்கி, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட சில துறைகளில் இரு நாடுகளுக்கிடையே நல்ல ஒத்துழைப்பு நிலவி வருவதும், இரு நாடுகளுக்கிடையே சாலை மற்றும் ரயில் போக்கு வரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தி வரு வதாக அசோசெம் தெரிவித்துள்ளது.
புதுவையில் கோளரங்கம் வேண்டும்--தமிழர் திராவிடர் கழகம் தீர்மானம் ----ஏ.சுகுமாரன்
தமிழர் திராவிடர் கழகச் செயல்வீரர்கள் கூட்டம் பொதுச்செயலர் மு.அ.குப்புசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
புதுச்சேரியில் கோளரங்கம் அமைக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். அதை விரைவில் ஏற்படுத்த வேண்டும். அந்தக் கோளரங்கத்துக்கு பெரியார் அறிவியல் கோளரங்கம் என்று பெயர் சூட்ட வேண்டும்.
அண்ணா நூற்றாண்டு விழாவை தமிழர் திராவிடர் கழகம் சார்பில் ஆண்டு முழுவதும் கொண்டாடுவது, அரசு சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா கலையரங்கம் கட்ட வேண்டும். தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவையொட்டி புதுச்சேரி முழுவதும் கொள்கை விளக்கப் பிரசாரம் நடத்துவது, சேது சமுத்திரத் திட்டம் குறித்து விளக்கக் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.