Thursday, October 30, 2008

சப்தம் இல்லாமல் ஒரு சாதனை

//தீபாவளி தங்க விற்பனை அமோகம் ! 50 சதவீதம் அதிகரிப்பு !-உலக தங்க கவுன்சில் தகவல் தீபாவளிக்கு முந்தைய தினத்தில் தங்கம் விற்பனை இந்த ஆண்டு 50 சதவீதம் அதிகரித்ததாக உலக தங்க கவுன்சில் (டபிள்யூ.ஜி.சி.) தெரிவித்துள்ளது. //என்று ஒரு செய்தி நேற்று வெளிவந்தது .//

ஆனால் இப்போது சப்தம் இல்லாமல் ஒரு சாதனையை தமிழ் நாடு நிகழ்த்தி இருப்பது தெரியவந்துள்ளது .!தீபாவளிக்கு முந்தைய தினத்தில் தமிழ் நாட்டில் உள்ள 6700 டாஸ்மாக் கடைகளிலும் மொத்தத் விற்ப்னை 100 கோடியை தாண்டி விட்டதாம் .தீபாவளி அன்றும் விற்ப்னை 100 கோடியை தாண்டி விட்டதாம்
மெய்சிலிர்க்க வைக்கும் சாதனை .
மொத்தமாக அன்று விற்ற மது வகைகள் நான்கு லக்ஷம் பெட்டிகள்.தினசரி சராசரியாக 45 -60 கோடி ரூபாய் க்கு விற்பனை ஆகிறது .தீபாவளி அன்று இரட்டிப்பு ஆகி விட்டது .

உலகின் எல்லா பகுதியிலுள்ள தான் குடிக்கிறார்கள் , ஆனால் அங்கு குடித்த பின்பு தங்கள் வேலையை உற்சசகமாக , ஆர்வத்துடன் செய்வார்கள் .மது அவர்கள் திறமையை உள்ளிருக்கும் உயர்ந்த உணர்வை வெளிக்கொண்டு வரும் . ஆனால் நம் தமிழ் நாட்டிலோ தலை கிழ் குடித்துவிட்டால் அதோடு வேலை முடிந்து விடும் வெளி வரும் வார்த்தைகளின் தரம் ,உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே .

தமிழ் நாட்டு இளைஞர்களின் வரும் காலத்தை நினைக்கும் போதேநெஞ்சம் கலங்குகிறது .வெகுசிலர் மட்டும் தப்பிவிடுகின்றனர் , பெரும் பாலோர் புதை குழியில் சிக்கி மீடியா , தீடிர் உணவு , மது என காலம் கழிக்கின்றனர் .
வர வர பரோட்டா தமிழனின் தேசிய உணவு ,
கைலி தேசிய உடை ,எனஆகிவிட்டது .
பரோட்ட கடைகளும் , டாஸ்மாக் கடைகளும்
இல்லாத கிராமமே தமிழ் நாட்டில் இல்லை
அன்புடன் ,
ஏ.சுகுமாரன்

Tuesday, October 28, 2008

அது என்னவோ எந்த தீபாவளிக்கும் இல்லாத

அது என்னவோ எந்த தீபாவளிக்கும் இல்லாத ஒரு உணர்ச்சி
நாள் முழுவதும் தொடர்ந்து இந்த தீபாவளிக்கு-!-
இங்கு தெருவில் கேட்க்கும் வெடி சப்தம் எல்லாம்
இலங்கையில் தமிழர் மேல் விழும் வெடியையே
நெஞ்சில் நினைவில் வரச்செய்தது !
மறக்கமுடியவில்லை கலைஞர் பார்த்த அந்த குறுந்தகட்டை
,அதன் அழிவு காட்சிகளை, தமிழர் ஆக பிறந்தது பாபமா ?
அதுவும் இலங்கையில் பிறந்தது யார் தவறு ? கொத்து கொத்தாக மடிகிறார்கள் கேட்க்க ஒரு நாத்யில்லையே !
பாரதி இன்று இருந்திருந்தால் பொங்கி எழுந்து
வீர மிகு கவிதைகளால் நமக்கு
சிறுது மரத்து போன மனித உணர்வு ஊட்டியிருப்பார்
.நாய்களோ! பன்றிச் சேய்களோ? என கேட்டிருப்பார் !
கதியற்ற மனிதர்களுக்கு கடவுளே காப்பு ! பிரார்த்திப்போம் !அன்புடன் ,ஏ.சுகுமாரன்

இன்று வரும் விருந்தினர்கள்

அன்பர்களே ,
நேற்று என்னிடம் நன்கு பேர்கள் வந்தார்கள்
உங்கள் அனைவர் கை பேசி எண்ணை கேட்டார்கள்
நான் கை பேசி எண்ணைதர மறுத்தேன் ஆனால் உங்கள் அனைவர் இல்லமுகவரியையும் தந்துவிட்டேன் .இன்று அவர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள் நான் அவர்களை உங்கள் இல்லத்திலே தங்குமாறு கேட்டுகொண்டேன் உங்கள் அனுமதி பெறாமலேயே !
வந்தால் தயவு செய்து வரவேற்க மறக்காதீர்கள் ,
அவர்கள் பெயர்கள் சுகம் , சாந்தி ,செல்வம் , அறிவு .
என் அதிக பிரசிங்கி தனத்தை மன்னித்து விடுங்கள் !
அன்புடன் ,
ஏ.சுகுமாரன்

ஒளியே தீபாவளி

மனிதனின் மாசுதான் நரகாசுரன்
மாசை கொன்று தலை முழுகுவோம்
மாசு நீங்கிய பின் தோன்றிடும்
ஞான ஒளியே தீபாவளி ! ஒளி பரவட்டும்
வரவிருக்கும் வளமான வாழ்வு
ஞானத்தின் பங்களிப்பு ! வாழ்த்தி வரவேற்ப்போம் !
வாழ்க வளமுடன் !அசதோமா சத் கமய !
அன்புடன்,
ஏ.சுகுமாரன்

அன்புடையார் எல்லாம் உடையார் ----ஏ .சுகுமாரன்

அன்புடையார் எல்லாம் உடையார் ----ஏ .சுகுமாரன்
மாலை நேரம் , கணவனை எதிர்பார்த்து வீட்டுக்கு வெளியே வந்த மங்கை முற்றத்தில் இருந்த மூவரை பார்த்தாள்களைப்பு
தோற்றத்தை கனிவுடன் பார்த்து . முக முறுவலுடன் உள்ளே அழைத்தாள் .தாகம் தீர்க்க கொஞ்சம் பானகம் தர .
மகிழ்ச்சியுடன் அந்த மூவர் வினவினர் உன் கணவன்
உள்ளே இருக்கிறானா என்று ,வரும் நேரம் தான் எனக்கூற ,
முவரும் காத்திருக்க ஒப்பினார் கணவன் வரும் வரை

கணவனும் வந்தான் மனைவியிடம் கேட்டான் மூவரைப்பற்றி ,
விபரம் அறிந்த அவன் அவசரமாய்ச சொன்னான்
அவர்களை உள்ளே அழைக்க ! கனிவுடன் வெளியே வந்த மனைவி அவர்களை உள்ளே அழைக்க அவர்கள் கூறிய பதில் அவளை வியக்க வைத்து ..
அவர்கள் கூறினார் அவர்கள் பெயரை
வரிசையாய்ஒருவர் சொன்னார் என் பெயர் செல்வம் ,
அடுத்தவர் சொன்னார் என் பெயர் வெற்றி மூன்றாம் நபரோ
அடக்கமாக சொன்னார் என் பெயர் அன்பு என !
ஆனால் அம்மா ! நாங்கள் முவரும் ஒன்றாய் எந்த வீட்டிலும்
நுழைய இயலாது , உன் கணவனை வினவி வா
எங்களில் யார் முதலில் தேவை என என்றனர் .

அதிசியத்து உள்ளே சென்ற மங்கை ,சொன்ன கதை கேட்ட கணவனும் ,அவளின் குட்டி மகளும் துள்ளிகுதிதனர் உவகை மிகுதியால் ,அவசரமாய் கணவன் சொன்னான் உடனே அழைத்து வா !
அந்த செல்வ மனிதனை செல்வமிருந்தால் சீரும் சிறப்புடன் வாழலாம் என ,

சற்றே தயங்கிய நங்கைஅவள் மெல்லிய குரலில் கணவனை கேட்டாள், ஏன் வெற்றி வந்தால் எதிலும் வெலலாமே ,வலிமையுடன் வாழ வெற்றி போதாதா என்றாள்
துள்ளிக் குதித்த அன்பு மகள் ,அம்மா அம்மா
அன்பையே அழைத்து வா எனக் கொஞ்ச அன்பு மகளின்
செல்ல கொஞ்சல் எல்லை மீறவே இருவரும் முடிவெடுத்தனர்
அன்பையே அழைப்பது என

வெளியே வந்த மங்கை மலர்சியுடன் அழைத்தாள்அன்பு மனிதனை வீட்டிற்கு உள்ளே , மறற இருவரிடம் மன்னிப்பு கேட்டபடியே - அப்போது தான் நிகழ்ந்தது அந்த அதிசயம் !அன்பு மனிதனுடன் சேர்த்து புறப்பட்டனர்
முவரும் ஒன்றாய் -வியப்புடன் நோக்கியமங்கையிடம்
அன்பிருக்கும் இடத்தில் நாங்கள் இருவரும் சேர்த்தே இருப்போம் -
ஆனால் நீ எங்களில் ஒருவரை விரும்பிருபின் மறற
இருவருக்கும் அங்கு இருப்பிடம் இல்லை
ஆனால் அன்பு உள்ள இடத்தில் செல்வமும்
வெற்றியும் சேர்த்தே தான் இருப்போம் -
எங்களை அன்பிடம் இருந்து பிரிப்பது
இயலாத காரியம் என்றனர் .அன்பின் வலிமை அளவற்றது ஆயிற்றே ! உலகின் ஈர்ப்பு விசையின் வேறு பெயர்தான் அன்பு !

அகத்தியர் கூறிய காயகல்பங்கள்

இனி அடுத்ததாக சித்தர்களில் முதன்மையானவரும் ,காவேரியை தமிழ் நாட்டிற்கு கொண்டு வந்தவராக கூறப்படும் அகத்தியர் கூறிய காயகலப்பங்களை பார்ப்போம் .அனேகமாக தமிழகத்தின் பல ஊர்களிலும் அகத்தியரின் சிலைகளை கோயில்களில் காணலாம் பல ஸ்தல புராணங்களிலும் அவர் சம்பந்த பட்டிருப்பார் .பல ஊர்களின் பெயரும் அவர்பெயரில் உள்ளது .நான் கூட டெல்லியில் இருந்து வெளி வரும் வடக்குவாசல் என்ற இதழில் அகத்தியர் வாழ்ந்த சித்தர்கள் பூமிதான் புதுச்சேரியா?என ஒரு கட்டுரை ஜூலை மாதம் எழுதி இருந்தேன் அதை மின் தமிழ் லும் கூட இட்டுஇருந்தேன் அகத்தியர் ஒருவரல்ல பலர் என்று கூட கருத்து உண்டு .அகத்தியர் என்ற பெயர் அகத்தின் செயல் அறிந்துக் கூறியதால் வந்ததாக கூறுவர்.இவரது மாணாக்கரில் புலத்தியர் ,தேரையர் முக்கியமானவர்கள் .அவர் அகத்தியர் பெருநூல் ,அகத்தியர் பரிபூரணம் போன்ற பல நூல்களை வைத்திய ,வாத ,ஞான ,சோதிட சாஸ்திரங்களில் செய்துள்ளார் .---------------------இனி அவர் கூறிய காய கல்பம் இவைகளை நான் மூலத்தில் உள்ளதை மாற்றாமல் அபடியே தருவதற்கு காரணம் இதன் பொருளை ஆய்து காணவேண்டும் என்றுதான் , நான் ஒன்று கூற அர்த்தம் வேறு இருக்கக்கூடாது அல்லவா ?மேலும் இது யாருக்கு கிடைக்க வேண்டுமோ அவருக்கு அகத்தியர் வழி காட்டுவர் .
-------------------------------------------------------------------
இந்த சதுரகிரி வனத்திலே ,கையாந்தகரை என்ற மூலிகை இருக்கிறது , அதை பிடிங்கி வந்து மை போல் அரைத்து ஆவின் நெயில் குழப்பி கொதிக்கவைத்து ,சிவந்த பதத்தில் இறக்கி காலைநேரத்தில் வலது கை பெருவிரலால் தொட்டு ,உள்நாக்கில் மேல் வாசலில் தடவி வர குகை வாசல் திறக்கும் .,தேகமும் சித்தியாகும் ,மற்றொரு முறை சோதி புல் என்றொரு முலிகை உண்டு ,பார்வைக்கு மலை புல் போலிருக்கும் ,சிறுது மஞ்சள் நிறமாய் இருக்கும் .நான்கு விரல் அளவுக்கு மேல் வளராது .அதை சாபம் நீக்கி சமுலதுடன் பிடுங்கி வந்து இரவு நேரம் பார்த்தால் தீபம் போல் பிரகாசிக்கும்.இந்த புல்லை ஆவின் பாலில் போட்டால் ரத்த நிறமே வரும் ..அப்போது ஒரு கழஞ்சு சூதம் அதனோடு சேர்த்து நூறு எருமுட்டையில் புடமிட ,அச்ச சூதம் கெட்டி ஆகிவிடும் பின் அதை செந்துரமாக்கி வெள்ளியில் கொடுக்க ஏமமகும் ,அதை பற்ப்பமாகிநெய்யில் குழப்பி புசித்து வர தேகம் சித்தியாகும் என்றார் .
அன்புடன் ஏ.சுகுமாரன்

Saturday, October 11, 2008

18 சித்தர்கள் கூறிய காயகல்ப முறைகள் --ஏ.சுகுமாரன்

18 சித்தர்கள் கூறிய காயகல்ப முறைகள் --ஏ.சுகுமாரன்
முதலில் சித்தர் போகர் கூறியதில் இருந்து ஆரமிப்போம் .இது திரட்டியது .தான் இதன் மூலம் சதுரகிரி புராணத்தில் உள்ளது அறிமுக உரை மட்டும் என்னுடையது இந்த தொடரின் இறுதியில் நூல் கிடைக்கும் இடம் முகவரி தருகிறேன் .காயகல்ப முறைகளை மூலத்தில் உள்ளபடியே தருகிறேன் .செய்து பார்ப்பது அவரவர் விருப்பம் .நான் சிபாரிசு செய்யவில்லை இது பதிவு செய்யப்படவேண்டும் எனவே இதை எழுதுகிறேன் .தங்குந்த குருவின் துணை தேவை .
பொதுவாகவே சித்தர்கள் எவரும் அவரவர்களது சொந்தப் பெயரால்
அழைக்கப்படுவதில்லை. அவர்களது சித்தம் தெளிந்து சித்தர்கள் நிலையை அவர்கள்
அடையும்போது அதுவரை வாழ்ந்து வந்த வாழ்க்கையும் அவர்கள் சொந்த பெயர்,
அதனை ஒட்டிய அவரது நிகழ்வுகள், அனுபவங்கள் மறைந்து சித்தர் என்ற பொது
வழியிலே செல்ல ஆரம்பிக்கும்போது, மக்கள் அவர்களது அப்போதைய நிலையைக்
குறிக்கும் வேறு ஒறு உருவப் பெயரால் அழைக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
அப்படித்தான் பாம்பாட்டி சித்தர், அழுகுணி சித்தர், சட்டைநாதர், என்று அந்த
நாட்களிலும் , விசிறி வைத்திருந்ததால் விசிறி சாமியார் என்று இந்த நாள் வரை மரபு
தொடர்ந்து வருகிறது.சித்தர் போகர் தமிழ்நாட்டில் பிறந்த பொற்கொல்லர் மரபை சேர்ந்தவர் என்று
கருதப்படுகிறார். இவரது சீடர் புலிப்பாணி என்னும் சித்தர் ஆவார். அவர் புலி மேல் ஏறி
பயணம் செய்து வந்ததால் புலிப்பாணி என்று அழைக்கப்பட்டதாக கூறுவார்கள்.
போகர் இயற்றிய நூலில் போகர் 7000 என்பது மிக முக்கியமானது. துவாத காண்டம்
என்ற நூலும் குறிப்பிடத்தக்கது. . இவர் தனது சீடர்களுடன் சீனா தேசம் சென்று
அங்கு ரசவாதக்கலையும், விமானம் முதலியன செய்வதைப் பற்றியும் நூல்கள் செய்தும்
உபதேசங்கள் செய்தும் சிலகாலம் இருந்ததாக கூறப்படுகிறது .பின் தமிழ்நாடு திரும்பி ஆவினன் குடியை அடுத்த சிறுகுன்றில் நவபாஷாணத்தால்
'தண்டாயுதபாணி' என்ற தெய்வத்தை படைத்து அதற்கு பூஜா விதிகளையும்
விதித்தார்.குறிப்பிட தக்கது அந்த சிலை தண்டு ( குச்சி )வைத்திருந்ததால்
தண்டாயுதபாணி. --முருகர் கீழே ஆவினன் குடியில் தான் உள்ளார் .பிறகு அங்கு தண்டாயுதபாணிக்கு அருகிலேயே தனக்கு ஒரு சமாதியை செய்து அதில்
சமாதி ஆனார்.
போகர்ரின் காயகல்ப முறை இது கேள்வி பதில் பாணியில் அமைத்துள்ளது :
"சுவாமீ! இனி நாங்கள் தேக சித்தி யடைவதன் பொருட்டு ஏதாவது சில கற்ப
முறைகளைக் கூறியருள வேண்டுமென்று கேட்க, அதற்கு முனிவர் ஐவர்களே! உலகத்தில் நம்மைப் போன்ற சித்தர்கள்
அனுபவத்திலிருந்து வருகிற அநேக கற்ப முறைகளிற் சிலவற்றை இப்பொழுது
உங்களுக்குக் கூறுகிறேன்.
அதாவது, இவ்வனத்தின் மேற்குத்திசைக் கன்னி மூலையில் தில்லை விருக்ஷமென்
றொன்றுண்டு. அதனை முகம்வீங்கி விருக்ஷமென்றுஞ் சொல்லுவார்கள். அவ்விருக்ஷம்
கறுப்பு நிறமாகவும், கிளைகள் சாம்பல் வர்ணமாகவும், சிறிதாகவும், இலை
அகத்தியிலை போலவும் இருக்கும். அதன் பாலைக் கரத்தாற்றீண்டாது அரைக்காற்
படிகொண்டு வந்து தாமிரத் தகட்டை இலேசாகத் தட்டி அப்பாலில் ஒரு மண்டலம்
ஊறப்போட்டுப் பின்பு அதையெடுத்து வீரமும் பூரமும் சேர்த்து அப்பாலேயே விட்டு
அரைத்துத் தகட்டை யெடுத்துக் கவசஞ்செய்து குக்குடபுடமிடச் சுண்ணமாகும்.
அச்சுண்ணத்தை ஆவின் நெய்யிற் குழப்பி மூன்றுநாள் சாப்பிடக் காயசித்தியாகும்.
இன்னொரு முறையாவது, அந்தத் தில்லை விருக்ஷமிருக்கு மிடத்திற்குத் தென்திசையில்
ஒரு திட்டு இருக்கிறது. அதன் கீழே மணல் வாரி யோடை யென்ற ஓர் வாய்க்கால்
இருக்கிறது. அவ்வாய்க்காலின் கரையில் சிவந்த இலைக்கள்ளி யென்றொரு மூலிகை
உண்டு. அதனுடைய இலை சிவப்பு நிறமாக இருக்கும். அதன் பாலைக்
குன்றிமணியிடை சர்க்கரையிற் சேர்த்து மூன்றுநாள் புசிக்கவேண்டும். மறு மூன்றுநாள்
வரை பத்தியத்துடனிருந்து, பகலில் மோரன்னமும், இரவில் பாலன்னமும் அருந்தத்
தேகசித்தியாகும் என்று கூறி யருளினர். "இது குறித்து விவாதங்களை எதிர்பார்க்கிறேன் .
அன்புடன் ,
ஏ.சுகுமாரன்

Wednesday, October 08, 2008

பிரபஞ்ச புதிர் தொடர்ச்சி

கண்ணன், சுகுமாரன் மற்றும் அன்பர்களே,
என் கேள்வி இத்தனை அருமையான தமிழ்ப் பாக்களை இந்தஉரையாடலுக்குள் கொண்டு வந்து விட்டிருப்பது எனக்கு ரொம்பமகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் சொல்லுங்கள். படிக்கப் படிக்கத்தேனாக இருக்கிறது.
அது ஒரு புறம் நடக்கட்டும். ஆனால் ஏராளமான அறிவியலாளர்கள் ஏராளமாகச்சிந்தித்து, ஏராளமாகப் பணச் செலவு செய்து ஏராளமாக ஆய்வுகள் நடத்திஒன்றைக் கண்டு பிடித்து அறிவியல் பூர்வமாக வெளியிட்ட பின்னர்,"பூ, இது என்ன? எங்கள் ஆழ்வார்கள் சொல்லியிருக்கிறார்களே" என்றுஊதி விடுவது எனக்கு ஒப்புதலில்லை.
நமது ஆழ்வார்கள், நாயன்மார்கள், சித்தர்கள் இதனை உண்மையிலேயேஅறிந்திருந்தால்அவற்றை விவரணையாகச் சொல்லி (in detail) நமக்கு உணர்த்தியிருக்கலாமே!அவர்கள் சொல்லுவது, குறிப்பது நாம் பேசுகின்ற இந்த பெரு வெடிப்புத்தானா?எனக்கு அப்படித் தோன்றவில்லை.
நீங்கள் சொல்லும் காரண காரியங்களை நீட்டினால் இந்தப் பாடல்களை வைத்துஇன்னொரு மேல்தளத்திற்கும் ஒருவர் போக முடியும். அதாவது "இந்த ஆழ்வார்கள்இத்யாதிபெருவெடிப்புக்கும் முன்னுள்ள நிலையையும் குறிக்கிறார்கள்; அதைஅறிவியலும்இன்னும் கண்டுபிடிக்கவில்லை" என்பதான ஒரு வாதம்.
முடியும்தானே? இந்தப் பாடல்கள் ஒரு ecstasy மனப்பான்மையில் சொல்லும்விஷயங்களுக்குநாமாக நீட்சிகளை இழுத்துக் கொண்டே போகலாம். நாளை Higgs Bosonகண்டு பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டாலும் எங்கள் ஆழ்வார்கள் சொல்லியவிஷயம்தான் என நீட்டித்துச் சொல்லலாம். இவற்றுக்கெல்லாம் இடங்கொடுக்கும்அளவுக்கு அந்தப்பாடல்கள் பூடகமாகவும் மர்மமாகவும் இருக்கின்றன. ஏதாகிலும்"துகள்", "துகளின் துகள்" என்னும் சொற்கள் வசதியாக அகப்படலாம்.
எனக்கென்னமோ அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒன்றாகப் பேசிக் குழப்பக்கூடாதுஎனத் தோன்றுகிறது. தனித்தனியே வைத்துப் பேசினால் வம்பில்லை.
ரெ.கா.
- Show quoted text -
On 10/7/08,
karthigesur@gmail.com <karthigesur@gmail.com> wrote:
அன்புள்ள சுகுமாரன்,
எனது எண்ணங்கள்.
அறிவியலாளர்கள் - இங்கு கற்றையியல் ஆய்வாளர்கள் எனக் கொள்க -முன்முடிபுகள் ஏதுமின்றி பிரபஞ்சத் தோற்றத்தை ஆராய்கிறார்கள்.ஆனால் இதைப்பற்றி வெளியிலிருந்து பேசிக்கொண்டுள்ள நாம் நமதுஞானிகளும் சித்தர்களும் சொல்லியிருப்பதைப் பிடித்துக் கொண்டு அதற்கேறபஇது இருக்கிறதா என ஒப்பிடுவதிலேயே குறியாக இருக்கிறோம்.
இதுவே நாம் பிரபஞ்ச உற்பத்தியின் உண்மைகளை அறிவியல் பூர்வமாகஅறிந்து கொள்ள ஒரு தடையாக இருக்கும் என நான் எண்ணுகிறேன்.We are cetrtainly biased in favour our beloved Tamil saints and benton looking for scraps ofevidence in the big bang research to justfy that premise.அதே வேளை இந்த கற்றையியல் அறிவியலாளர்களின் அறிவார்ந்தகண்டுபிடிப்புக்களைநாம் இதனால் மலிவு படுத்தி விடுகிறோம் என்றும் தோன்றுகிறது. இதனாலேயேஅறிவியலையும் ஆன்மீகத்தையும் தனித்தனியே பேசுவதே சிறந்தது எனநான் சொல்கிறேன்.
பரிணாம வளர்ச்சிகள் பற்றி கந்தரனுபூதி முதலான இலக்கியங்கள் சொல்லியவற்றைநீங்கள் எடுத்துக் காட்டுகிறீர்கள். இதைப் பற்றி நாம் என்ன விவாதிக்கமுடியும்?என்ன கருத்துச் சொல்ல முடியும்?
கற்றையியல் சொல்வதை எப்படி நம்மால் முழுக்கவும் புரிந்து கொள்ளமுடியவில்லையோஅப்படித்தான் இதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கற்றையியல்சொல்பவற்றிற்குஒரு methodology இருக்கிறது. Corroborative research இருக்கிறது.Academic validation இருக்கிறது.ஆனால் இங்கு நீங்கள் மேற்கோள் காட்டும் பரிணாம வளர்ச்சியை ஆதாரப் படுத்தஎன்னஇருக்கிறது?
அமித் கோசுவாமி பற்றியுய்ம் எழுத ஆசைதான். சில கருத்துக்களும்கேள்விகளும் உணடு.பின்னால் எழுதுகிறேன்.
ரெ.கா.
On Oct 6, 9:17 pm, "annamalai sugumaran" <
amirthami...@gmail.com>wrote:> பிக் பாங் பற்றிய சர்ச்சை விஞ்ஞானிகளின்> பதிலை அதிகம் சார்த்து> மேலும் மேலும் சென்றதால் நான்> தற்காலிகமாக ஓர் ஒய்வு கேட்டேன் .> ஆனால் இன்னும் தேடல் ஒரு முடிவுக்கு வரவில்லை இன்னும்> சொல்லப் போனால் நாம் ஆரமிக்கவே இல்லை .> > இதில் ஒரு வேறு கருத்தும் இருக்கிறது> நாம் இது வரை பரிணாம வளர்ச்சியில் ஏழு நிலைகளை> தாண்டி வந்ததாக கருதப்படுகிறது>> "மாவேழ் சனனம் கெட மாயைவிடா> மூ வேடனை என்று முடிதிடுமோ " என்று>> அருணகிரி நாதர் கந்தரனுபூதியில் ஏழு பரிணாம நிலை பற்றி> கூறுகிறார்> பரிணாம வகைகளும் அதில் உள்ள கரு வேறுபாடுகளும்>
அன்புள்ள திரு ரெ.கா.அவர்களுக்கு >//அறிவியலாளர்கள் - இங்கு கற்றையியல் ஆய்வாளர்கள் எனக் கொள்க -முன்முடிபுகள் ஏதுமின்றி பிரபஞ்சத் தோற்றத்தை ஆராய்கிறார்கள்.ஆனால் இதைப்பற்றி வெளியிலிருந்து பேசிக்கொண்டுள்ள நாம் நமதுஞானிகளும் சித்தர்களும் சொல்லியிருப்பதைப் பிடித்துக் கொண்டு அதற்கேறபஇது இருக்கிறதா என ஒப்பிடுவதிலேயே குறியாக இருக்கிறோம்.//
அப்படியில்லை திரு ரெ.கா, நமது மனித இனம் தோன்றி பல லக்ஷம் ஆண்டுகள் ஆகிவிட்டன .ஆனால் சுமார் நானுறு ஆண்டுகளாகத்தான் நமது அறிவியலாளர்கள்விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளை அடிப்படை தொடர்புகளுடன் ஆய்து பதிவு செய்யத்தொடங்கி இருக்கின்றனர் .அப்போது முன்னர் மனிதர்கள் அறிவின்றி , ஆராயும் மன பக்குவம் இன்றி இருந்தார்களா என்றால் இல்லை .மனிதன் தோன்றியதில் இருந்து அவனை சுற்றி இருந்த பல புதிர்களை அவன் ஆர்வத்துடன் பார்த்து ஆராய்துதான் இருந்து இருக்கிறன் .ஆனால் இப்போது நானுறு ஆண்டு களாக மனிதன் பரிணாம வளர்ச்சியிலே அறிவின் உச்சத்தில் இருக்கிறன் .ஒலிம்பிக்கில் இருந்து இன்னும் பலவேறு , சொல்லப்போனால் அனைத்து துறைகளும் மனிதன் தன் முந்தய சாதனை களைமுறியடித்து வருகிறான் மனிதன் மாறிக்கொண்டே வருகிறான் உருவிலும் , அறிவிலும் , குணதில்லும் விரிவடைத்து தான் வருகிறான் இது எப்படிசாத்தியமாகும் அறிவின் தொடர்ச்சியும் முயற்சியின் தொடர்ச்சியும் இருந்தால் தான் .இதையும் பரிணாம வளர்ச்சி என்றும் ,பூர்வஜன்ம வாசனை என்றும் நம் முன்னோர் கூறினார்இதற்க்கு கருவில்லேயே திருவுடயவரக பலர் இருந்ததுண்டு இன்னும் கூட பல குழந்தைகள் சிறுவயதிலேயே கணினிதிறமை கவி படும் திறன் , தத்துவ அறிவு பெற்று விளங்குவதை நாம் காணலாம் , ஞான சம்பந்தர் பழமையானவர் என்பதால் அவர் முன்று வயதில் கவி பாடியதை நாம் கணக்கில் கொள்ளவேண்டாம் , ஆனால் இன்றும் இத்தகைய பல இளம் நிபுணர்கள் பல நாடுகளிலும் நாம் பார்க்கிறோம் .. குறிப்பாக நமது பாரதத்தில் , பிற கண்டங்களிலே மனிதர்கள் தங்கள் வயற்று பாட்டையே பார்த்துக்கொண்டு வனங்களில் வாழ்ந்த போது, நாம் அறிவியல் ஆராய்ச்சிக்கு என தனியே ஒரு குழுவை வைத்திருந்தோம் , அவர்களுக்கு பெயர் தான் வேறே இருந்தது , அதில் ஜாதி ,இன பாகுபாடு முதலில் இல்லை . யார் வேண்டும் ஆனாலும் இந்த சிந்தனை செய்வதையே தவமாக கொண்ட குழுவில் சேரலாம் .அவர்கள் ரிஷிகள் எனப்பட்டார்கள் , தமிழகத்தில் சித்தை அடக்கிதால் சித்தர்கள் எனப்பட்டனர் ..அவர்களின் சுக துக்கங்களை நமது சமுதாயம் பார்த்துக்கொண்டது .அவர்கள் இறைவனை குறித்து சிந்தனையை ஆரமிக்கவில்லை அவர்களை சுற்றி வாழும் மனிதர்கள் படும் துயரத்தின் காரணத்தையும் ,ஏன் பிறந்தோம் , ஏன் சாகிறோம் ,எதற்க்காக வாழ்கிறோம் ,வாழும் போது ஏன் சிலருக்கு துக்கம் ,சிலருக்கு வசந்தம் சிலர் ஏன் சிவிகையில் போகிறார்கள் ,சிலர் ஏன் சிவிகையை தூக்குகிறார்கள் ஏன் வியாதிகள் , சில ஏன் மருந்தால் குணமாகிறது ,சில ஏன் மருந்து கொடுத்ததும் குனமவதில்லை , என நம்மை பற்றயுள்ள பல புதிர்களுக்கு விடைக்கான முயன்றனர் .பலரும் பல வழிகள் கண்டனர் , ஆனால் அனைத்துக்கும் விடையளிக்க அவர்களுக்கு கடவுளும் ,கர்ம விதியும் தான் தேவை பட்டது. அவர்கள் சிந்தித்து கண்ட பொருளை அவர்கள் அப்படியே யாரையும் ஒப்புக்கொள்ள சொலவில்லை .அப்போது தர்க்க சாஸ்திரம் என்ற பெயரிலே தற்போதைய விஞான முறைகளை போல் வெகுவாக அறிஞர் பெருமக்கள் குழுவினால் ஆராயப்பட்டது .ஒவொரு கருத்துக்கும் சாஸ்திர பிரமாணம் தேவைப்பட்டது .ஆதி சங்கரரில் இருந்து , புத்தர் , ராமானுஜர் , அப்பர் என மாதக் கணக்கில் வாதங்கள் பாரதத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அறிவை தேடினர் அதே சமயம் பரப்பினர் .அப்படி வாழையடி வாழையை வந்த அறிவியலாரின் வழிவந்தவர்கள் தான் தற்க்கால விஞனிகளும் அவர்கள் கண்டுப்பிடிப்பையோ , உழைப்பையோ யாரும் குறைத்து மதிப்பிடவோ , குறைகூறவோ இல்லவே இல்லை இன்னும் சொல்லப்போனால் மாறிக்கொண்டே வரும் அறிவியலாளர்கள் கண்டுப்பிடிப்பை கண்முடித்தனமாக நமது மக்கள் ஏற்று கொள்ளவதும் ,அதற்கு எந்த ஆதாரமும் கேட்க்கததும் தான் பெரு வியப்பு .உதாரணம் நமது நவீன விவசாய அறிவுரையால் பாரம்பரிய விவசாயத்தை இன்று இழந்து பல்வேறு வியாதி ,மன இறுக்கத்துடன் நமது வாழ்க்கை அமைத்தது . நாம் பழம் பாடல்களில் சில விஞ்ஞான வார்த்தைகள் இருப்பதை சுட்டிகாண்பிப்பதுஇதையும் உங்கள் ஆராச்சியில் சேருங்கள் , உண்மை இருந்தால் உலகுக்கு கூறுங்கள் என்பதற்காகவே .சில நேரம் நமது தற்போதைய விஞ்ஞான அறிவினால் சில புரிந்து கொள்ளாமல் போகப்படலாம் .வரும் காலங்களில் அது நிரூபிக்க படலாம் பல லக்ஷம் ஆண்டுகள் பொறுத்திருந்தோம் , இன்னும் சில ஆண்டுகள் பொறுப்போமே.நமது முன்னோர் கூறியது பல விவாதங்களினால் நிரூபிக்க பட்ட பல சாஸ்திர பிரமாணங்கள் கொண்ட , காலத்தால் எஞ்சி நிற்பவை அது ஆபத்து இல்லாத தேய்த்த வழி பாதை . மேலும் சில உள்ளது பின் , அதுபற்றி பேசுவோம்.என்னை பொறுத்தவரை இன்னும் எதாவது இதன் மூலம் கிடைகாதா என்றுதான் இவைகளை எழுதுகிறேன் .அன்புடன்,-ஏ.சுகுமாரன்- Show quoted text -



- Show quoted text --- A.SugumaranAmirtham IntlPONDICHERRY INDIA MOBILE 09345419948
www.puduvaisugumaran.blogspot.comwww.puduvaitamilsonline.com
------------------------------------------ On 10/8/08, Narayanan Kannan <
nkannan@gmail.com> wrote: 2008/10/8 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>:> போன ஜென்மத்தில் தாய்ப்பால் அருந்தியது, துணை புணர்ந்தது எல்லாம் :)>> யாரும் கற்றுத்தராமலேயே நமக்கு இவை தெரிகின்றனவே!
உண்மைதான். பிறந்தவுடன் கன்றுக்கு தாய்மடி போக வேண்டுமென்றுஎப்படித்தெரிகிறது? அறிவியல் சொல்லும் இவையெல்லாம் மரபுடன் இயைந்து வரும்செயலென. டி.என்.ஏ எனப்படும் மரபு வேதிமம் இம்மாதிரி நினைவுகளைமர்மக்குறியீடுகளாக தன்னுள் புதைத்து வைத்து, ஒரு தலைமுறையிலிருந்துஅடுத்த தலைமுறை என்று பரப்பிவருகிறது. இதனால்தான், விலங்குகள் (யானையும்சேர்த்து) நீரில் நீந்தும் தன்மை பெறுகின்றன, எப்பயிற்சியும் இல்லாமல்.ஏனெனில் நமது தோற்றம் நீரில் ஆரம்பிக்கிறது.
க.>
அன்பின் திரு கண்ணன், இந்த டி.என்.ஏ ஆதியில் இருந்து ஓவொரு உயிர்வகைக்கும் மாறவே இல்லையா ? அல்லது மாறுதலுக்கு உள்பட்டதா ?மாறும் என்றால் எதனால் ? தற்போதைய மாடுகள் சிக்னலை பார்த்து சாலையை கடக்கிறதே அந்த அறிவு டி.என்.ஏ மூலம் வந்ததா ?எல்லாவற்றிக்கும் அடிப்படை குணம் உள்ளது சிங்கம் சிங்கமகாதான் இருக்கும் எப்படியும் மாறது .மனிதனின் அடிப்படை குணம் என்ன ?பசியும் ,இனவிருத்தியும் தானா ?விலங்கிலிருந்து நாம் எந்தவழியில் மாறுபடுகிறோம் ?மனம் என்பது இருப்பதால் தானே மனிதன் அந்த மனதை பற்றி நமது அடிப்படை பாடத்தில் ஏன் இல்லை .?விஞானம் கண்ணால் காணும் பூத உடலை பற்றிதானே கூறுகிறது.ஆனால் நாம் பல் ஆயிரம் ஆண்டுகளாக மனதை பற்றியே ஆய்து வருகிறோம் .ஒவொரு மனித மனமும் அத்தனை பூர்வஜன்மத்தை தாங்கிய நுண் பொருள் , அது இல்லாமல் மனிதன் இயயங்க இயலாது . புலன்கள் மனதின் தொடர்பு இன்றி வேலை செய்யாது .பூர்வஜன்ம தொடர்பு மனதின் மூலம் வருகிறது நமது விதி ஊழ் டி.என்.ஏ மூலம் வருகிறது என கொள்ளலாமா ?அன்புடன்,-ஏ.சுகுமாரன்
- Show quoted text -

Wednesday, October 01, 2008

அடுத்த அக்டோபர் இரண்டு வரை --ஏ.சுகுமாரன்


நல்லவேளை அக்டோபர் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறைதான் வருகிறது !--மாலை போட்டுவிட்டு வண்ண வண்ண மிட்டாய்களை பிஞ்சுகளுக்கு வாரிஇறைத்து விட்டு வசதியாக சென்று வழக்கமான வேலையை பார்க்கலாம் -இந்த மகாத்மா தான் ஏன் சத்திய சோதனைஎன பரிசோதனை தொடங்கினார் இன்று வரை சத்தியத்தை ரொம்ம தான் சோதனை செய்து வருகிறார்கள் -எல்லாம் செய்த மகாத்மா இருக்கும் இடம்தான் செரியிலாமபோச்சு - யாருங்க யோசனை சொன்னா ரூபாயில் அவரை போடச்சொல்லி !தினமும் மது கடையில் அவர் நோட்தான் கோடி கோடியாசுத்துது -பேசாமல் மானையும் மயிலையும் போட்டாலாவது

மானாட மயிலாட பார்த்திருக்கலாம் -எப்படியோ நீ மகாத்மாநாங்கள்

சாதா ஆத்மாதான் என்று சவ்கரியமா சொந்தவேலையை

பார்த்துக்கலாம் அடுத்த அக்டோபர் இரண்டு வரை .

அன்புடன்

ஏ.சுகுமாரன்