Sunday, April 12, 2009

எனக்குப புரிந்தது இதுவே


எனக்குப புரிந்தது இதுவே


யாருடனும் உன்னை ஒப்பிடாதே !

ஒவ்வருவரும் அவரவர் நிலையில் தனித்தனியே !
நீயும் உன் மகனும் கூட வேறு வேறுதான்

அவரவர் வினையை போக்கி

ஞானம் பெற அவரவர் வருகிறார்கள் !
உன்கடமை உனது பாத்திரம் இப்போது தந்தை !
கொஞ்ச நாளுக்கு முன் நீயே மகன் பாத்திரத்தில் இருந்தாய் !

இருக்கும் வரை கொடுத்த பாத்திரத்தை குறைவர செய்வதே சுதர்மம் !
இதில் மற்றவருடன் உன்னை ஒப்பிடுவது நாடகத்தில்
அடுத்தவர் வசனத்தை நீபேசுவது போல் !,
அது உன் பணிஅல்ல் !
அது உன்னையே நீ அவமதித்து கொள்வது ஆகும் !


சுதர்மத்தில் வரும் தடைகளை எண்ணி அதிகம் கலங்காதே !
எங்காவது சாவி இல்லாது பூட்டு செய்கிறார்களா ?
எந்த பிரச்னையும் தீர்வுடன் தான் வருகிறது !
சில சமயம் சாவியை மறந்து விட்டு தேடுவது போல் ,
பல சமயம் நாம் தீர்வை தேடி அலைகிறோம் !
எப்போதும் தீர்வு ,பிரச்சனைக்கு அருகில் தான் இருக்கும் !
பிரச்சினையை ஊன்றிப் பார் !


நீ சோகமாக இருந்தால் வாழ்க்கை
உன்னைப் பார்த்து சிரிக்கிறது ,
கையால் ஆகாதவன் என்று !
நீ சந்தோஷமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப் பார்த்துமகிழ்கிறது !
நீ மற்றவரை சந்தோஷப் படுத்தினால்
வாழ்க்கை உன்னைவாழ்த்துகிறது ! வணங்குகிறது !


ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின்
பின்னணியிலும் அவன் ஏறிவந்த
ஒரு கடினமான சோகக் கதை இருக்கும் !
ஒவ்வொரு துயரக் கதைக்கும் நிச்சயம்
ஒரு வெற்றிகரமான முடிவிருக்கும் !
நீ அந்த சுழற்ச்ச்யில் எங்கு இருக்கிறாயோ !
கஷ்டத்தை ஒப்புகொள் ! வெற்றிக்கு தயார் ஆகு !


மற்றவர் செய்யும் தவறுகளை பேச நமக்கு ரொம்ம ஆசைதான் !
ஆனால் நம்ம தவறுகளை நாம் உணர நமக்கு நேரமில்லை !
அதை தெரிந்து கொள்ளும் கடைசி ஆளாக நாம் தான் இருப்போம் !
அனைவருக்கும் தெரிந்த பிறகுதான் நமக்கு புரியும் நம் தவறுகள் !

அப்போது தெரிந்து கொண்டும் பலன் இராது !
சுற்றி யாரும் இருக்க மாட்டர்கள் நம்மை தொந்தரவு செய்ய !
தனிமையில் தான் இனிமை !

உஷாராக நாம் காலுறை அணிவது தான் புத்திசாலித்தனம் !
சாலை முழுவதும் முள் இல்லாது கமபளம்விரிக்க முடியுமா ?
ஊரை திருத்தப் போவதை விட
நம்மை திருத்திக் கொள்ளவது மிக சுலபம் !


யாரும் காலத்தின் பின்னல் சென்று நடந்த நிகழ்வின்
மோசமான ஆரம்பத்தை மாற்ற முடியாது !
எனவே சென்றதை எண்ணி செயலிழக்க வேண்டாம் !
ஆனால் யாராலும் புதிய ஒரு மாற்றத்தால்
ஒப்பில்லாத சந்தோஷ முடிவை அடைய முடியும் !

முடிந்து விட்ட பிரச்னையை பற்றி வருந்தி என்ன பயன் ?
ஒரு பிரச்சனை முடியாது என்றால்
அதைக் குறித்து புலம்பி என்ன பயன் !
நம்மை தேடி வரும் பிரச்னையை
மகிழ்வுடன் எதிர்கொண்டு
சந்தோஷத்துடன் வழியனுப்பு !
அதில் நீமட்டும் பட்டும் படாமல் இருக்க பயின்று கொள் !


தவறவிட்ட வாய்ப்புகளை எண்ணி
கண்ணீரால் கண்களை குளமாக்காதே !
எதிரில் வந்து நிற்கும் நல்ல ஒரு புதிய வாய்ப்பை
அந்தக் கண்களின் கண்ணீர் மறைத்து விடக்கூடும் !


முகத்தை மட்டும் மாற்றினால்
ஏதாவது மாற்றம் வருமா ?
மாற்றத்தை எதிர்க் கொள்ளும்
முகம் தான் மறுமலர்ச்சி தரும்
யாரைப் பற்றியும் குறையில்லை ,
நாம் மாறினால் போதும் ,
வாழ்வின் இனிமைக்கு
பிறரை சார்ந்து இராதீர்கள் !
மற்றவர் அயிபிராயம் உங்களுக்கு
உங்கள் மன நிமதிக்கு
நிச்சயம் தேவையானால்
நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வாய்ப்பே இல்லை !

மற்றவர்களுஉகு வேறு பல வேலை உண்டு
உங்களை மக்ழ்விப்பதை தவிர ! -


------------------------------------------
இது முதலில் கவிதை அல்ல !

இதை நான் எந்த புத்தகத்தை பார்த்தும் நகல் எடுக்க வில்லை !

நான் நடந்து வந்த பாதையில் கண்டெடுத்த கற்கள் இவை !

பாதத்தில் தைத்த்தில் சில வைர கற்களும் உண்டு !

இந்த கருத்துக்கள் எதுவும் புதியது இல்லை !

பலரும் பகர்ததுவே !

கொள்வோர் இருப்பின் தொடரும் உத்தேசம் உண்டு !

No comments: