Thursday, June 05, 2008

அகவையோ 85 ஆனால் இளமை பேச்சிலும் மூச்சிலும் 50 ஆண்டு கால சட்டமன்ற அனுபவம் பொதுவாழ்வில் 70 ஆண்டு, வாழ்வாங்கு வாழும் முதல்வரை புதுவை முதல்வர் சந்தித்து ஆசி பெற்றார்


தமிழக முதல்வர் கருணாநிதியின் 85வது பிறந்த நாளையட்டி புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் ஜானகிராமன் தலைமையில் திமுகவினர் நேற்று சென்னை சென்று அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். இதில் அவைத்தலைவர் சுப்புராயன், துணை அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவக்குமார் எம்.எல்.ஏ., ராஜாராமன் எம்.எல்.ஏ, பொருளாளர் கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., கேசவன், சி.பி.திருநாவுக்கரசு, சோமசுந்தரம், இளைஞரணி அமைப்பா ளர் சிவா எம்.எல்.ஏ, தொண்டரணி அமைப்பா ளர் நந்தா சரவணன் எம்.எல்.ஏ., கொம்யூன் பஞ்சாயத்து தலைவர்கள் நடராஜன், சுகுமார், யூ.சி.ஆறுமுகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், பழனி, தைரியநாதன், கோபால் மற்றும் அணி செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.புதுச்சேரியில் கருணாநிதியின் பிறந்த நாளை யட்டி பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. நெல்லித்தோப்பு லெனின் வீதியில் ஜானகிராமன் தலை மையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளை யாட்டு உபகரணங்களை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் பழ தண்ட பாணி, முருகானந்தம், முத்து, விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொகுதியில் பல்வேறு இடங்களில் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திமுக பிரதிநிதி ரமேஷ் தலைமையில் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர்.இலவச வேட்டி சேலை:மண்ணாடிப்பட்டு தொகுதியில் கொம்யூன் பஞ்சாயத்து துணை தலை வர் குமார் தலைமையில் 85 முதியவர்களுக்கு இலவச வேட்டி சேலை, மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொகுதி அவைத்தலைவர் மண்ணாங்கட்டி, செயலாளர் செந்தில்குமார், தட்சிணாமூர்த்தி, கண் ணன், பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். புஸ்சி தொகுதியில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், அன்னதானமும் முன்னாள் எம்.எல்.ஏ. கென்னடி தலைமையில் வழங்கப்பட் டது. காசுக்கடை தொகுதி யில் தொகுதி செயலாளர் குமாரசுப்பிரமணி தலைமையில் இனிப்பும் வழங்கப்பட்டது. திருபு வனை தொகுதியில் கவுன்சிலர்கள் தண்டபாணி, தனராஜ் ஆகியோர் தலை மையில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம், அன்னதானம் வழங்கப்பட்டது. வில்லியனூர் தொகுதி யில் பஞ்சாயத்து தலைவர் நடராஜன் தலை மையில் திமுக கொடியேற்றி 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாரதி மில்லில் திமுக தொழிற்சங்கம் சார்பில் கொடி யேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் மாநிலத் தின் பல இடங்களில் திமுக கொடியேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments: