"நீலக்கடல் "என நாகரத்தினம் கிருஷ்ணா என்பவர் எழுதி இருக்கும் ஒரு சமிபக்கால சரித்திர நாவலை படித்தேன் .சமிபத்தில் இத்தனை சுயமான சிந்தனை கொண்ட நாவல் தமிழில் நான் பார்க்கவில்லை .புதுசேரியை பற்றிய சமிபகாலதிய சரித்திர நாவல் .சென்னையில் உள்ள சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது .புதுவையின் மூன்று நூறு ஆண்டு வரலாறு கூறப்படுகிறது .தமிழகம் மற்றும் புதுவை தமிழர்கள் எப்படி ஏமாற்றி அடிமைகளாய் ஹாலந்து , மொரிஷியுஸ் ,பிரெஞ்சிந்திய திவுகளுக்கு அனுப்பப்பட்டனர் , அவர்கள் அனுபவித்த வன் கொடுமைகள் ,இவர்கள் வாழ்வுமுறை இதனையும் கவிதை நடையில் மிக அற்புதமாக , திருமூலரையும் , சங்கபாடல்களையும் இணைத்து மிக சுவாரசியமாக எழுதப்பட்ட நாவல் .அவசியம் படியுங்கள் .
போர் ஆற்றலால் புவியெல்லாம் சென்று ஆட்சி கொடி நாட்டிய தமிழன் புகலிடம் தேடி பிழைக்க கூலியாய் , கேவலமாய் அடிமைகளாய் கடத்தப்பட்டும் ,தானே ஒப்புக்கொண்டும் கும்பல் கும்பலாக கப்பல் ஏறிய கொடுமைகள் நிகழ்ந்த இடம் தான் புதுவை .இத்தகு நிலைக்கு அக்காலத்தில் நிலவிய கடும் பஞ்சமும் , அரசர்களுக்குள் நடை பெற்ற உரிமை போர்களும் , அவர்களது மக்கள் நலன்கருததாத ஆணவ ஆடம்பர போக்குகளும் ,உதரணமாக ஒரு நாயக மன்னருக்கு 700 மனைவிகள் ! போன்றவைகள் , மக்களை கப்பல் ஏற செய்தன .
இந்த சோக சமிபத்திய வரலாறை கனத்த இதயத்துடன் , படிபவர்களை அந்த காலத்திற்கே அழைத்து செல்லும் கவி நயத்துடன் எழுதிஉள்ளார்
இதன் விலை ரூ 250
பக்கங்கள் 525
Tuesday, June 17, 2008
நீலக்கடல்
Labels:
நாவல் தமிழில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment