Sunday, November 30, 2008

18 சித்தர்கள் கூறிய காயகல்ப முறைகள்

சுந்தரானந்தர் கூறியகாயகல்ப முறை !


இந்த வனத்தின் மேற்கே , செங்கடுகாய் மரமும் , கர்ப்பதரு மரமும் உள்ளது .செங்கடுகாய் மரம் கடுக்காய் மரம் மாதிரியே இருக்கும் ,காய்கள் சிவப்பாக இருக்கும் .கர்ப்பதரு மரம் ஐந்து கிளைகள் கொண்டதாக இருக்கும் ,ஐந்து கிளைகளுமே ஐந்து வித இலைகள் கொண்டது .இந்த செங்கடுகாய் மற்றும் கர்ப்பதரு மரத்தின் பச்சை பட்டையை காடி நீரில் முன்று நாட்கள் ஊறவைத்து ,பிசைந்து தண்ணீர் வடித்து ,அதற்க்கு அளவாக உப்பு ,மிளகு சேர்த்து ,அவைகளுடன் இஞ்சி ,எலும்பிட்சை சாறுவிட்டு அரைத்து ,பழகின ஒரு மண் பாத்திரத்தில் வைத்து 48 நாட்கள் காலை ,மாலை புசித்துவர தேகம் சித்திக்கும் என்று சுந்தரானந்தர் கூறினார் .
சுந்தரானந்தர் அகத்தியரின் சீடர் எனகூறபபடுவார்,போகர் ,மற்றும் சட்டை முனியிடம் சில பாடம் கேட்ருக்கிறார்
இவர் எழுதிய நூல்கள் பல ,அவைகளில் சில இதோ !
வைதியத்திரட்டு ௧௫00
வகாரம் ௨00
அதீத சூத்திரம் ௧0௪
முப்பூ ௨௫
சுத்தஞானம் ௫௧
மற்றும் பல
அன்புடன் ,
ஏ .சுகுமாரன்

No comments: