Monday, November 03, 2008

சில பதில்கள்

//பூவுலகை முழுமையாக நம் ஆதிக்கத்தில் கொண்டு வந்தது என்பதும் ஒருperceptionதான். ஒரு பூகம்பம் போதாதா இல்லை என்று சொல்ல//

எந்த ஒரு பொருளைப்பற்றியும் பரிபூரணமாக நாம் தெரிந்துக்கொண்டல் ,அது நமது ஆளுமைக்குள் வந்துவிட்டது என கூறலாம் .அப்பொருளைப பற்றி அறிந்ததும் அது குறித்து அச்சமும் அகன்று விடுகிறது .அதனுடன் நமக்கு ஒரு நெருக்கம் ஏற்ப்பட்டுவிடுகிறது கார் ஓட்ட பழகிவிட்டால் எந்த காரையும் ஓட்ட பயம் நீங்கிவிடுகிறது .அப்படிதான் தற்க்கால அறிவியல் அறிஞர்கள் பூமியின் ரகசியங்கள் அனைத்தையும் அறிந்து விட்டார்கள் . அது நம் வசப் பட்டு விட்டது

.

//இதற்கான விடைகள் பொருளாதார இயலிலும் சமூகவியலிலும்தான் இருக்கின்றன.பக்தி இலக்கியத்திலும் ஆன்மீகத்திலும் இவற்றுக்கான பதில்களைத் தேடுவதுபயனளிக்காது. இலக்கியத்தில் புலம்பலும் ஆன்மீகத்தில் “சர்வம் விஷ்ணுமயம், சர்வம் பிரம்ம மயம்” என்னும் பரவசங்களுமே கிடைக்கும்.
ஆடம் ஸ்மித், கீன்ஸ், மார்க்ஸ் எனப் பலர் பேசி மூலதனத்துவம்,சமூகத்துவம், சமத்துவம் எனப் பிரித்துப் போட்டு நாடுகளும் இந்தக்கொள்கைகளைப் பரிசோதனை படுத்திப் பார்த்து, வென்று, தோற்று, இன்னும்போராடிக் கொண்டே உள்ளன. இப்போது மூலதனத்துவத்தின் இறங்கு முகம்.நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறது. ஆனால் சமூகத்துவம் செத்துப் புதைத்தஇடத்தில் காளான்கள் வளர்ந்து விட்டன. எதிர்காலத்தில் மூலதனத்துவம்தான்பிழைத்து எழுந்து, கொஞ்சம் சமூகத்துவ அரிதாரம் பூசிக் கொண்டுஆடவிருக்கிறது.//

மனிதன் தனது பரிணாம வளர்ச்சியில் முதுகு நிமிர்ந்து , கூட்டம் கூட்டமாக தனை சுற்றி இயற்க்கை படைத்திருத்ததை உண்டு வாழத்தான் ,.பின் தீயின் உபயோகத்தை கண்டன் , ருசியாக உணவு சமைத்து சாப்பிட ஆரமித்தான் . பின் அவனது குடும்பம் என பேதம் ஆரம்பித்தது .அவனுக்கு வீடு தேவைப்பட்டது .பின் கூட்டத்தில் இருந்து பிரியத்தொடங்கினான் . இவ்வாறு ஒரு வழியில் அங்கங்களின் முழுமையான வளர்ச்சி , முக அழகு முதலியவைகளில் இன்றுஇருக்கும் வடிவை அடைத்த மனிதன் . ஆனால் மறுபுறத்தில் அவன் மனம் சிறுகசிறுக மாசு அடைத்து வந்தது அவன் உண்ணும் உணவின் மூலம் கிடைத்த பதிவுகளும், அவன் வாழ்க்கை வாழ்த்த விதம் , சேர்த்த அறிவு , பட்ட கடன், செய்யத கர்மம் முதலியன மூலம் பெற்ற அனுபவங்கள் பதிவுகளாக படிப்படியாக அவன் மனதில் பதிய ஆரம்பித்து , பின் அவன் அந்த வாசனைகளின் படியே கண்டத்தையே கண்டு , தின்றதையே தின்பதில் இன்பம் காண ஆரம்பித்தான் . இந்த திகடச் சக்கர சூழலிலேயே வாழ்ந்து வருகிறான் .அவன் மனதும் மாசு படிந்து அதன் உச்சத்தில் உள்ளது .இந்த நிலையை மனிதன் எட்டவே பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன .இதற்குள் இந்த வாழ்க்கையில் மனித குலத்திற்கு ஏற்ப்பட்ட பல "ஏன் களுக்கு விடைக்கான பல சமயங்கள் தோன்றின . அந்ததந்த சமயத்தில் வந்ததால் அவைகள் சமயம் எனப்பட்டன போலும் .ஆனால் உலகம் முழுவது பல காலங்களில் தோன்றிய மதங்கள் சிறுக சிறுக நீர்த்து போக தொடங்கியது .மனிதன் எந்த மதம் தோன்றினாலும் மிகத் தந்திரமாக அதை ஏமாற்றி தன் விருப்பபடியே வாழும் வித்தையை கண்டுகொண்டான் .ஆனால் அவன் விருப்பம் என்பது அவனுடையது அல்ல , அது அவனின் வாசனைகளால் எண்ணங்களாகவும் , பின் செயல்களாகவும் மாறி அவனை ஆட்டி படைக்கிறது என நமது சித்தாந்தம் கூறுகிறது . பல மதங்களுக்கு பிறகு பல ism களும் உலகின் பல பகுதிகளில் , இந்த தீராத புதிருக்கு விடிவு காண தோன்றியது . அவைகளும் உலகம் முழுவதும் பரவி பின் அதன் தன்மையை இழந்தது .எதுவும் மனிதனை அவனின் கர்ம சக்ர ச்ழர்ச்சியில் இருந்து விடிவிக்க இயலவில்லை .மனிதன் மாறவேயில்லை ,எந்த உபதேசமும் அவனை மற்ற இயலவில்லை ஏன் எனில் மாற்றம் மனிதனின் வெளியில் உண்டாகி பயன் இல்லை , அது அவன் உள்ளில், மாற்றம் வரவேண்டும் . ஒவ்வொருவனுக்கும் வரவேண்டும் .அவன் அவன் வினையை அவன் தான் நுகர வேண்டும் . இதைதான் காட்டலாம் , ஊத்திவிடமுடியது என கூறுவார்கள் .

//பிறப்பில் சம அறிவு இல்லை; சம ஆரோக்கியம் இல்லை; சம திறன் இல்லை.அப்புறம் உணவும் செல்வமும் எப்படி சமமாக இருக்கும்?//

ஆம் , ஆனால் இந்த நிலைக்கு அவனே காரணம் ஆகிறான்
காரணம் திரும்பவும் இதற்க்கு கர்ம நியதியைதான் இழுக்கவேண்டும் . ஆனால் இதைவிட தெளிவான விளக்கம் வேறு எங்கும் கிடைகாது .இந்தக் கேள்வியை நாம் ஒப்புக்கொண்டால் இறைவனை பாரபட்சம் கொண்டவர் என ஏற்க்கவேண்டும் ,பின் அதற்க்கு என்ன காரணம் என ஆராய வேண்டும் .உண்மை என்னவோ இந்த வித்தியாசம் எல்லாம் மனிதனே தானே தனது செய்கையின் மூலம் தேடிக்கொள்கிறான்.

No comments: