மின் தமிழ் உரையாடலுக்கு, எண்குணத்தான் யாது என்ற மடலுக்கு எனது பதில்
திருவள்ளுவர் இறைவனை வாழ்த்தும் பத்துக் குறட்பாக்களிலே
ஆதிபகவன்,
வாலறிவன்,
மலர்மிசை ஏகினான்,
அறவாழி அந்தணன்,
எண்குணத்தான்,
வேண்டுதல் வேண்டாமையிலான்,
தனக்குவமையில்லாதான்,
பொறிவாயில் ஐந்தவித்தான்,
என இறைவன் என்னும் பொருளின் பண்புகளை போற்றிப் புகழ்கின்றார். இச்சிறப்புப் பெயர்களிலே ஆழ்ந்த கருத்துக்கள் இருக்கின்றன. பொருள் செறிவும் நுட்பமும் நிறைந்து காணப்படுகின்றன
மேலும் திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வரும் பற்றிய ஏழு குறள்களில் இறைவனின் 'அடி' என்னும் சொல் வருகிறது.இதில் அடி என்பது இறைவழியின் பாதை எனப் பொருள் கொள்ளலாம் .எனவே இறைவனின் பண்பை பற்றி வள்ளுவர் மிகுதியாக நமக்கு தெரிவிக்க முயற்சிக்கிறார் .
இதில் எண்குணத்தான் என்பது இறைவனின் எட்டு கல்யாண குணங்களை குறிப்பது .மனிதனின் குணங்கள் மூன்றுதான் ,அவை
சத்வ குணம்
ரஜோ குணம்
தாமோ குணம்
ஆனால் கடவுளின் குணங்கள் 8 என சிறப்பித்து கூறப் படுகிறது .அவையாவன
1. தன் வயத்தன் ஆதல்
2. தூய உடம்பினன் ஆதல்
3. இயற்கை உணர்வினன் ஆதல்
4. முற்றும் உணர்தல்
5. இயல்பாகவே பாசங்களில் நின்றும் நீங்குதல்
6. பேரருள் உடைமை
7. முடிவிலா ஆற்றலுடைமை
8. வரம்பிலின்பமுடைமை
இவைகளையே ராமபிரானின் பண்புகளாக குறிப்பிடப் படுகிறது .
மேலும் நமது இந்து மதத்தின் மிகப் பெரிய பலம் தேடுதலே .இறைவன் பற்றிய உண்மை வேறு வழிகளில் பிரகாசமாக வேருமார்கங்களில் ,வேறு குருக்கள் கூறியதில் , உள்ளதா என தேடும் வேட்க்கை என்றும் நம் அறியோருக்கு உண்டு .
அத்தனை சுதந்திரம் ,அறிவுவேட்க்கை கொண்டது நமது மார்க்கம் . இது அறிவு மயமானது .பக்தி யோகம் ,கர்மயோகம் ,ஞானயோகம் என யோகதில்லேபல விதங்கள் , நமக்கு உண்டு இதனால் நம்மிடம் இல்லாததால் பிறரிடம் போகிறோம் எனப் பொருள் இல்லை .
ஆனால் மற்றவரிடம் உள்ளதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம் யோகா மார்கத்தில் மிகுதியாக உண்டு .
நமது சித்தர் ராமதேவர் தான் , மெக்கா சென்று யாகோப் என பெயர் மாறி பல சித்தர் காவியம் படைத்தார் என்பார்கள் .
ராமதேவரின் ரசாயணம் என்ற நூல்
மிக ரகசிய ரசாயன விளக்கங்கள் கொண்டது .
மேலும் ஒரு சேரன் அரேபியா சென்று
இஸ்லாம் மதம் மாறி அங்கேயே சமாதி பெற்றதாகவும்
ஒரு வரலாறு கேள்விப்பட்டிருக்கிறேன்
உண்மையை உணரும் வரை தேடுதல் இருந்த்துகொண்டுதான் இருக்கும் .உணருதல் வேறு , அறிதல் வேறு .தன்வய்தினதால் வரை தேடுதல் தொடரும் .
அன்புடன் ,
ஏ. சுகுமாரன்
Wednesday, November 26, 2008
எண்குணத்தான்,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment