Sunday, November 30, 2008

சென்றார்கள் ! வென்றார்கள் !











மும்பை மாநகரில் புகுந்து பெரும் நாசம் விளைவித்த பயங்கரவாதிகள் ஒடுக்கப்பட்டுவிட்டனர். அவர்கள் பிடித்து வைத்திருந்த ஒபராய் ஹோட்டல், தாஜ் ஹோட்டலின் புதிய கட்டடம், யூதர்களின் குடியிருப்பான நரிமன் ஹெüஸ் ஆகியவை தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிரடி வீரர்களால் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முழுமையாக மீட்கப்பட்டுவிட்டன. நவம்பர் 26 இரவு முதல் நவம்பர் 29 வரை நடந்த இந்தியாவின் மிகக் கொடுமையான , கோழைத்தனமான தீவிரவாத வன்முறை ,நமது வீர மிகுந்த கமாண்டோக்களால் ஒடுக்கப் பட்டது .
தாஜ் ஹோட்டல் ஒரு மிகப் பெரிய கட்டிடம். இதில் பல நூறு சொகுசுஅறைகள் உண்டு. இவை ஒவ்வொன்றும் அளவில் மிகப் பெரியவை. மேலும்பல "கூட்டம் நடத்துவற்கான" அரங்குகளும், உணவகங்களும் உண்டு. .பழைய தாஜ் அரண்மனை கட்டிடம் மற்றும் புதிய தாஜ்டவர். மேலும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் உள்ளே மாட்டிக் கொண்டுஇருக்க, தீவிரவாதிகளை அழிக்கும் பணி மிக கடினமாகவே இருந்தது. தூரதிர்ஷ்டவசமாக, தாஜ் ஹோட்டலின் வரைபடம் கமாண்டோக்களுக்குவழங்கப் படவில்லை. கண்காணிப்பு கேமரா அறையினையும் தீவிரவாதிகள்சேதப் படுத்தி விட்டனர். ஹோட்டலுக்குள்ளே பல இடங்களில் இவர்கள் தீவைத்ததால், உள்ளே புகை மண்டலமாகவும் கடும் இருட்டாகவும் வேறுஇருந்தது. இந்த கடினமான சூழலிலும் கூட வெற்றிகரமாக எதிரிகளை வென்றநமது படைவீரர்களின் சாகசம் பாராட்டுக்குரியது. அது பற்றி சில சிறப்பு படங்கள் இதோ !
1 ) வெற்றி பெற்று விடுவித்த பின் திரும்பும் நமது வீரர்கள்




2 ) மும்பையில் மரணம் அடித்தவர்களின் நினைவைப் போற்றி லக்நோவில்தீபம் ஏற்றும் இந்தியர்கள்




3) தாஜ் விடுவித்த பின், உடனடியாக கூடியிருந்த மக்களின் கொண்டாட்டம்



No comments: