Wednesday, November 26, 2008

காயகல்ப முறைகள் ---உரோம ரிஷி

நான் இந்த இழையில் எழுதி வருவது சித்தர்கள் அருளிய காயகல்ப முறைகளைப் பற்றி மட்டுமே .அதுவும் இந்த முறைகளை மட்டும் எழுதக் காரணம் நமது சித்தர்கள் அருளிச் செய்து , நடை முறைப் படுத்திவந்த பல ரகசிய முறைகள் இன்னும் நம்மால் ஆராயப் படாமல் ,இருக்கிறது .இதை பதிவு செய்வதன் மூலம் அது அடுத்த தலைமுறைக்கும் கிடைக்கசெய்வதே முக்கிய நோக்கம் .மேலும் அதன் மூலம் சிதையாமலும் நான் தருவது ,பின்னால் இதை ஆராய்ச்சி செய்பருக்கு எந்த கருத்து வேறுபடும் வரக் கூடாது என்பதற்க்காகதான் .சித்தர்களது தத்துவ விளக்கங்களும் , பாடல்களும் ,வைத்திய முறைகளும் தமிழர்தம் சொத்துதான் . அவைகளும் ஒருவகை இல்லகியம் தான் . .அந்த முறைகளில் சில சுலபமானவை, பல மிகக் கடினமானவை .
சித்தர்களை பற்றிய வரலாறுகளையும் ,கதைகளையும்திரு இந்திரா சௌதர்ராஜன் அவர்கள் மிக அழகாக எழுதி நீண்ட நாட்களாக தமிழத்திற்கு அறிமுகம் செய்துள்ளார் .சித்தர்களை பற்றிய கதைகளையும் ,வரலாறுகளையும் தெரிந்துகொள்ள , http://chithargal.blogspot.com/ என்ற வலைப்பூவில் சித்தர்ககள் ராஜ்யம் என்ற பெயரில் இதுவரை 16 சித்தர்களை பற்றி எழுதிஉள்ளார் .இதைப் பற்றிகூட திருமதி சுபா ஒருமுறை கேட்டிருந்தார் . படித்து மகிழுங்கள் .
இனி உரோம ரிஷி என்னும் சித்தர் அருளிச்செய்த காயகல்ப்ப முறைகளைக் காண்போம் .----
இந்த ஆசரமத்திற்கு கிழப் புறம் , செங்க்கொடிவேலி என்ற ஒரு செடி இருக்கிறது .அச்செடியின் பூ பிச்சிப்பூ போலவும் ,நிறம் சிவப்பாகவும் ,வேர் ரத்த நிறமாகவும் இருக்கும் .அச்செடிக்கு சாபம் நீக்கி சமூலத்தையும் பிடிங்கி வந்து , இரும்பினால் செய்த ஒரு குழாயில் போட்டு ,அத்துடன் அமுரி சேர்த்து எட்டு நாள் உறிய பிறகு எடுக்க இரும்பு சுத்தியாகும் .அந்த இரும்பை உலையில் இட்டு தகடாக அடித்து , அத்தகடை ஆட்டு எருவில் புடமிட்டு ,ஏரஞ்சி தயலத்தில் சுருக்கிட பேதிக்கும் .அதை மறுபடி உலையில் காய்ச்சி செங்க்கொடிவேலி சாற்றில் சுர்க்கிட பத்து வயதாகும் .அதை சுண்ணம் செய்து பசுவின் நெய்யில் ஒரு வாரம் புசித்துவர தேக சித்தியாகும் .
மற்றொரு முறை அந்த செங்க்கொடிவேலி செடிக்குப் பக்கத்தில் ,கருங்கொடி வேலி என்ற ஒரு செடி இருக்கிறது .அதன் இலை நொச்சியிலை போல் இருக்கும் .அந்த இலையை பிடிங்கி வந்து கசக்கி சாறு பிழிந்து ,,வெந்த சோறில் ஒருக் கைப்பிடி எடுத்து ,அதில் அந்த சாரை முன்று துளியிட்டு அந்த சாதத்தை முன்று நாள் வரை சாப்பிட்டு வர தேகசிதியாகும் என்றார் .

1 comment:

Sivabaskaran said...

thanks for your post and i expect to post more like this, because now a days people doesn't such a think but some where some body will like to know, like me, so please post more