Friday, November 07, 2008

அடுத்த சாவுக்கு போகும்வரை !

இன்று ஒரு இழவு வீட்டிற்கு சென்றிந்தேன்
இழவு என்பது நிகழ்வு என்பது போல்
நிஜத்தில் நடக்கும் நிகழக்கால நடப்புகள் !
ஆலயத்தில் உதிப்பதுதான் இறப்பு வீட்டிலும் ,
என்றும் எதிர்காலத்திலும் , இறந்த காலத்திலும்
வாழும் மனிதன் இறப்பில்தான் நிஜத்தில் வாழ்கிறான்
தன் இயலாமையை தான் உணரும் தருணம் அது !
ஒவ்வொரு இறப்பிலுமே , ஒவ்வொரு வைராக்கியம்
பிரசவத்தில் உதிப்பது போல் , உதிரும் எண்ணக் கோர்வை !
ஆனாலும் வள்ளுவர் கூறும் உலகின் பெருமை போல்
நாளை நமக்கு புதிய நாள் ! நாமே பெரியவர் !
உலகம் பிறந்தது எனக்காக ! அனுபவி ராஜா அனுபவி !
அடுத்த சாவுக்கு போகும்வரை !
அன்புடன் ,
ஏ. சுகுமாரன்

No comments: