Friday, May 09, 2008

இன்று பிளஸ்டூ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாயின

இன்று பிளஸ்டூ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாயின -சுகுஜி
சென்னை மாணவி ஆஷா முதலிடம் -ஆதர்ஷ் எம்.எச்.எஸ்.எஸ். பள்ளியைச் சேர்ந்த ஆஷா கணேசன் 1,200க்கு 1,191 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்
சென்னை ஆதம்பாக்கம் எஸ்.டி.ஏ.வி. மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த எஸ்.முரளி கிருஷ்ணன் 1,188 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
டி.ஏ.வி. மேல் நிலைப் பள்ளியைச் ச்ர்ந்த ஹரிஷ் ஸ்ரீராம் 1,187 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்
புதுச்சேரியிலும் இன்று பிளஸ்டூ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாயினபெட்டைட் செமினரி உயர்நிலைப்பள்ளி மாணவர் ஸ்ரீவர்தன் 1,183 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தார். அதே பள்ளியைச் சேர்ந்த இப்ராஹிம் ஆசிப்-1,178, பாலாஜி-1,174 மதிப்பெண்கள் எடுத்து 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.
டான் பாஸ்கோ மற்றும் செயின்ட் பாட்ரிக் பள்ளியை சேர்ந்த இரு மாணவர்கள் 1,174 மதிப்பெண்கள் எடுத்து பாலாஜியுடன் 3வது இடத்தை பகிர்ந்துள்ளனர்.
இந்த முறையும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர்

No comments: